ஐவேளைத் தொழுகைகளின் நேரங்கள் யாது?
ஐவேளைத் தொழுகைகளுக்கான நேரங்களை நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். « லுஹர் தொழுகைக்கான நேரமானது, சூரியன் உச்சியிலிருந்து விலகியதும் ஆரம்பமாகிறது. ஒரு மனிதனது நிழலானது அவனது நீளத்திற்கு சம அளவான நிழலாகும் வரைக்கும் அந்த நேரம் தொடர்கிறது. இது அஸர் வரை நீடிக்கிறது. அடுத்து, அஸருக்கான நேரமானது சூரியன் மஞ்சள் நிறமாகும் வரை நீடிக்கிறது. ‘மஃக்ரிபு’க்கான நேரமானது, அடிவானத்தின் சென்னிறம் மறையும் வரை நீடிக்கிறது. இஷா தொழுகைக்கான நேரமானது, இரவின் அரைப்பகுதி வரைக்கும் நீடிக்கிறது. ஸுபஹு தொழுகையின் நேரமானது, ‘ஃபஜ்ர்’ உதயமானதிலிருந்து சூரியன் உதிக்கும் வரைக்குமான நேரம் வரை நீடிக்கிறது. சூரியன் உதித்துவிட்டால் எந்தத் தொழுகையும் தொழக்கூடாது. ஏனென்றால், சூரியன் ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் உதிக்கிறது ».