0 / 0
11/முகர்ரம்/1446 , 17/ஜூலை/2024

வக்பு சார்ந்த சட்டங்கள்

கேள்வி: 13720

வக்பு தொடர்பாக இஸ்லாமிய சட்டம் என்ன?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

வக்பு என்பது அசல் சொத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதன் மூலம் வரும் பயன்களை அல்லாஹ்வின் பெயரில் (தர்மம் செய்தல்) வழங்குவதாகும்.

அசல் சொத்து என்பதன் அர்த்தம்; குறித்த சொத்து அழியாமல் இருப்பதோடு அதன் மூலம் கிடைக்கப் பெறும் பயன்களை அடையமுடியுமாக இருத்தல்.

வீடுகள் கடைகள் மற்றும் தோட்டங்கள் போன்றன.

பயன் என்பது ;  குறித்த அசல் சொத்தின் மூலம் கிடைக்கப் பெறும் சகலவிதமான பலன்கள். தங்குமிடம், வாடகை, பழங்கள் அறுவடை போன்றவை.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை வக்பு ஓர் விரும்பத்தக்க நற்காரியமாகும் . அதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ்கள் அமைந்துள்ளன. புஹாரி மற்றும் முஸ்லிம் கிரகந்தங்களில் பதிவாகிய செய்தி உமர் ரழி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! கைபரில் எனக்கு பெறுமதிமிக்க சொத்தாய் நிலமொன்று கிடைக்கப்பெற்றேன். அதனை நீங்கள் எனக்கு ஏவுகின்றபடி பயன்படுத்துகின்றேன் என வினவ நீர் விரும்பினால் அதன் அடிப்படையை நீங்கள் வைத்துக் கொண்டு, அதை (தர்மம்) வக்பு செய்வீராக! என விடை பகர்ந்தார்கள்.

அதற்கவர்கள் விற்கவோ, அன்பளிப்பாகவோ, வாரிசு சொத்தாகவோ எடுக்க முடியாதவாறு ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும், அடிமைகளின் விடுதலைக்கும், அறப்போர் புரிபவர்களுக்கும், அதனை நிர்வகிப்பவர் அதில் வரும் வருவாயைச் சேமிக்காமலும் செலவளிக்கப்படுவதோடு அதில் அவர் அறியப்பட்ட விதத்தில் உண்ணுவது குற்றமில்லை என்பதாக வக்பு (தர்மம்) செய்தார்கள்.)

முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகிய செய்தி, நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (ஆதமுடைய மகன் மரணித்து விட்டால் மூன்று விடயத்தை தவிர அவனது சகல செயல்பாடுகளும் துண்டிக்கப்பட்டு விடும்.

நிரந்தர தர்மம் அல்லது அவனுக்கு பின் பயன் தரக்கூடிய அறிவு அல்லது அவனுக்காக பிரார்த்தனை புரியும் நல்ல குழந்தை.)

ஜாபிர் ரழி அவர்கள் கூறினார்கள் நபி அவர்களுடைய தோழர்களில் வசதி உடையவர் யாராக இருந்தாலும் அதில் ஒருவர் கூட தனது சொத்தை வக்பு செய்யாமல் இருந்ததில்லை.

இமாம் குர்துபி (ரஹ்) கூறினார்கள்.

"குறிப்பாக நீர்நிலைகள் பாலங்கள் மற்றும் மசூதிகளின் வக்ஃப்கள் குறித்து அறிஞர்களிடையே எந்த சர்ச்சையும் இல்லை, ஆனால் மற்ற வகை வக்ஃப்கள் குறித்து அவர்கள் கருத்து வேறுபடுகிறார்கள்.

வக்பு செய்பவர், கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

அதாவது பருவமடைந்தவராகவும் சுதந்திரமாகவும் அறிவு முதிர்ச்சி உடையவராகவும் இருத்தல்.

சிறியவர் அறிவு குன்றியவர் அடிமை போன்றோர்களிடமிருந்து வக்பு செல்லுபடி ஆகாது.

பின்வரும் இரண்டில் ஒன்றின் மூலம் வக்பு செல்லுபடியாகும்.

1-  வக்பை குறிக்கும் நேரடி வார்த்தை.

உதாரணமாக இந்த இடத்தை நான் வக்பு செய்து விட்டேன் அல்லது இந்த இடத்தை பள்ளியாக ஆக்கிவிட்டேன் என்று கூறுவது.

2- சமூக வழமையில் வக்பை குறிக்கும் செயல்.

உதாரணமாக ஒருவர் தனது வீட்டை பள்ளியாக மாற்றி அதில் தொழுவதற்கு மக்களுக்கு பொதுவான அனுமதியை வழங்குவது. அல்லது ஒருவர் தனக்கு சொந்தமான காணியை மையவாடியாக மாற்றி அதில் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி வழங்குதல்.

வக்பு செய்வதற்கான வார்த்தைகள் இரண்டு பங்குகளாக வகைப்படுத்தலாம்.

1- நேரடியான சொற்பிரயோகங்கள். உதாரணமாக நான் வக்பு செய்து விட்டேன், குறித்த சொத்தை வைத்துக்கொண்டு அதன் பயன்களை தர்மம் வழங்கி விட்டேன் போன்ற வார்த்தைகள்.

இவ்வாறான வார்த்தை பிரயோகங்கள் நேரடியானவையாகும். வக்பை தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொள்ளாது. இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை கூறிவிட்டால் வேறு எந்த கூடுதல் அம்சங்களும் இன்றி உடனடியாக அது வக்பாக மாறிவிடும்.

2-  மூடலான வார்த்தைகள்.

தர்மம் செய்து விட்டேன், எனக்கு நான் தடுத்து விட்டேன், நிரந்தரம் ஆக்கிவிட்டேன். போன்ற வார்த்தைகள். இவை மூடலானவை என்று சொல்லப்படுவதற்கான காரணம் வெறுமனே வக்பை மாத்திரம் உள்ளடக்காது வக்பு அல்லாதவற்றையும் உள்ளடக்கக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தும்போது வக்பு உடைய நிய்யத்தையும் அதனோடு சேர்த்து வைக்க வேண்டும். அல்லது நேரடியாக நாடப்படும் வார்த்தையை சேர்க்க வேண்டும். அல்லது ஏனைய மூடலான வார்த்தைகளை இதனோடு சேர்க்க வேண்டும்.

மூடலான வார்த்தையோடு நேரடியான வார்த்தை சேருவதற்கு உதாரணம்.

நான் இதை வக்பு செய்யப்பட்ட சதக்காவாக வழங்குகிறேன்  அல்லது அதன் அசல் சொத்தை வைத்துக்கொண்டு பயன்களை தர்மம் செய்கிறேன் அல்லது அதன் பயன்களை எனக்கு தடை செய்கிறேன் அல்லது அதன் பயன்களை நிரந்தரமாக தர்மம் செய்கிறேன் என்று ஒருவர் கூறுவதைப் போல.

மூடலான வார்த்தை பிரயோகத்தோடு மேலும் ஒரு மூடலான வார்த்தை சேர்வதற்கு உதாரணம்.

நான் இதை விக்க முடியாத மற்றும் அனந்தரச் சொத்தாக எடுக்க முடியாத வகையில் தர்மம் செய்கிறேன் என்று கூறுவதைப் போல.

வக்பு செல்லுபடியாக அதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன.

1- வக்பு செய்பவர் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டவராக இருத்தல்.

2- வக்பு செய்யப்படும் பொருள் அதன் அடிப்படை இருப்பதோடு அதன் மூலமாக வரும் பயன்கள் தொடர்ச்சியாக உபயோகிக்க முடியுமானதாக இருத்தல். பயன் அடைந்த பின்னர் அழிந்து போகக்கூடிய பொருளில் வக்பு செல்லுபடி ஆகாது. உதாரணமாக உணவை எடுக்கலாம்.

3- வக்பு செய்யப்படும் பொருள் குறிப்பிடப்பட்டதாக இருத்தல் வேண்டும். குறிப்பிடப்படாத பொருளில் வக்பு செல்லுபடி ஆகாது.

உதாரணமாக எனது அடிமைகளில் ஒரு அடிமையை வக்பு செய்து விட்டேன் அல்லது எனது வீடுகளில் ஒரு வீட்டை வக்பு செய்து விட்டேன் என்று கூறுவது.

4- நல்ல காரியங்களுக்காக வக்பு செய்ய வேண்டும். ஏனெனில் இதன் மூலம் அல்லாஹ்வை நெருங்குவது நோக்கமாகும். பள்ளிவாயல்கள் பாலங்கள் ஏழைகளுக்காக, நீர் புகட்டும் திட்டம் நூற்கள் உற்றார் உறவினர்களுக்காக என கூறலாம். நற்காரியம் இல்லாத வகையில் வக்பு செய்வது செல்லுபடி ஆகாது. காபிர்களின் வணக்கஸ்தலங்களுக்கு வக்பு செய்தல் நயவஞ்சகர்களின் நூல்களை வக்பு செய்தல், சடலங்களை பராமரித்து மணப்புகை காட்டி விளக்கு வைப்பதற்காக வக்பு செய்தல்.

இவ்வாறான விடயங்கள் பாவம் இணைவைப்பு நிராகரிப்பு போன்றவற்றிற்கு உதவி செய்வதாகும்.

5- வக்பு செல்லுபடியாகுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று குறித்த நபர் ஒருவருக்காக இருந்தால் அவர் முழுமையாக உரிமை எடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும் ஏனெனில் வக்பு என்பது ஒப்படைப்பதாகும்.

உரிமை எடுக்க முடியாதவர் மீது வக்பு செய்வது செல்லுபடி ஆகாது. இறந்தவர் மற்றும் மிருகங்களுக்கு வகுப்பு செய்வதை போல.

6- வக்பு செல்லுபடியாகும் நிபந்தனைகளில் ஒன்று அது உடனடியாக வழங்கப்பட வேண்டும். தற்காலிகமாகவோ அல்லது ஏதோனுமொன்றுடன் சம்பந்தபடுத்தியோ வக்பு செய்ய முடியாது. ஒருவர் அவருடைய இறப்புடன் சம்பந்தப்படுத்தி வக்பு செய்தாலே தவிர. அவ்வாறு செய்வது அனுமதிக்கப்பட்டது அதாவது ஒருவர், தான் மரணித்து விட்டால் எனது வீடு குறித்த இந்த ஏழைகளுக்கு வக்பு ஆகிவிடும். என்று கூறுவதைப் போல.

அபூதாவுதில்  இடம் பெற்ற செய்தி உமர் ரழி அவர்கள் கூறினார்கள் "ஏதாவது எனக்கு ஏற்பட்டால் (மரணம்) இந்த பூமி தர்மமாக ( வக்பாக)மாறிவிடும்"  இந்த செய்தி பிரபல்யம் அடைந்தது யாரும் அதை மறுக்கவும் இல்லை அது இஜ்மா என்ற ஏகோபித்த சட்டத்தின் கீழ் மாறிவிட்டது. மேலும் மரணத்தின் மீது சம்பந்தப்படுத்தி வக்பாக செய்வதை பொருத்தவரை தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை வக்பாக வழங்க வேண்டும். அது வசியத் என்னும் சட்டத்தில் அமைந்து விடும்.

வக்பின் சட்டங்களில், வக்பு செய்தவரின் நிபந்தனைகளை  மார்க்கத்துக்கு  முரண் இல்லாத சந்தர்ப்பத்தில் நிறைவேற்றுவது அவசியம் ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் முஸ்லிம்கள் (ஹராத்தை ஹலாலாக்கக்கூடிய அல்லது ஹலாலை ஹராமாக்கக்கூடிய நிபந்தனையை தவிர்த்து ஏனைய நிபந்தனைகளில் பேணுதலாக இருப்பார்கள்.) ஏனெனில் உமர் ரழி அவர்கள் வக்பு செய்துவிட்டு அதில் நிபந்தனையும் செய்திருந்தார்கள். அவ்வாறு நிபந்தனை செய்யப்பட்ட விடயத்தை நிறைவேற்றவில்லை என்றால் எந்த ஒரு பயனும் இல்லாமல் போய்விடும். ஒரு அளவை நிர்ணயம் செய்து நிபந்தனை வைத்தால் அல்லது சிலரை விட சிலருக்கு முன்கூட்டி நிபந்தனைகள் வைத்தால்  அல்லது பயன்பெறும் நபரை பொறுத்தவரை குறித்த பண்பு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தால் அல்லது இருக்கக் கூடாது என்று நிபந்தனை வைத்தால் அல்லது கண்காணிக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தால் அந்த நிபந்தனைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரணாக இல்லாத வரைக்கும் அவற்றை நிறைவு செய்து விடுவது கடமையாகும்

இவ்வாறான நிபந்தனைகள் இல்லாமல் பொதுவாக வக்பு செய்தால் அந்த வக்பில் பயன்களை அடைவோர் செல்வந்தனாகவும் இருக்கலாம் ஏழையாகவும் இருக்கலாம் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்.

வக்பு செய்பவர் குறித்த நபரை வக்பிற்கு அடையாளப்படுத்தவில்லை  (நிர்வாகம் செய்ய) என்றால் அல்லது அடையாளப் படுத்திய நபர் மரணித்து விட்டால். அவர் (மரணித்தவர்) குறிப்பிட்டு அடையாளப்படுத்திய நபருக்கு வக்பு நிர்வகிப்பது உரிமையாகிவிடும்.  அவ்வாறே வக்பு ஒரு பகுதிக்கு வழங்கப்பட்டிருந்தால் உதாரணமாக பள்ளிவாயல்கள்  எண்ணிக்கை குறிப்பிடப்படாத ஏழைகள் போன்ற பகுதிகளுக்கு வக்பு செய்தல். நீதிபதி நிர்வாகிக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்வார். அல்லது அவருக்கு பகரமாக அவரால் நியமிக்கப்படும் ஒருவர் அப்பொறுப்பை ஏற்றுக் கொள்வார்.

நிர்வகிப்பதற்கு நியமிக்கப்பட்டவர் அல்லாஹ்வைப் பயந்து வக்பு சொத்தை  நிர்வாகிப்பதில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அது அவருக்கு கொடுக்கப்பட்ட அமானிதம் ஆகும்.

தனது பிள்ளைகளுக்கு வக்பு செய்தால் ஆண்களும் பெண்களும் உரிமை கொண்டாடுவதில் சமமானவர்களாக கருதப்படுவர். அது அவர்களுக்கு மத்தியில் இணைந்த ஒரு அம்சமாகும் பொதுவாக இணைபங்கு இருப்பது என்பது உரிமை கொண்டாடுவதில் சமத்துவத்தை வேண்டினிற்கும்.   பிள்ளைகளுக்கு பொதுவாக வக்பு செய்யப்பட்டால், பிள்ளைகளுக்கு பின்னால் அந்தப் பிள்ளைகளில் ஆண் குழந்தைகளின் பிள்ளைகளுக்கு செல்லும். பெண் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு வகுப்பு செல்லாது.

ஏனெனில் அவர்கள் மற்றுமொரு ஆணுடைய குழந்தைகளாகும். அவர்கள் அவர்களது தந்தையின் பக்கம் இணைக்கப்படுவார்கள் அதே போன்று (உங்கள் பிள்ளைகளின் விடயத்தில் ..... அல்லாஹ் உபதேசிக்கிறான்) என்ற குர்ஆனிய வசனத்தில் அவர்கள் இடம்பெறவும் இல்லை. என்றாலும் சில அறிஞர்கள் குர்ஆனிய வசனத்தை வைத்து பெண் பிள்ளைகளின் பிள்ளைகளும் இதில் உள்ளடங்குவர் என்று குறிப்பிடுகிறார்கள் அல்லாஹ் நன்கறிந்தவன்.

பொதுவாக ஒருவர் எனது ஆண்பிள்ளைகளுக்கு வக்பு  செய்கிறேன் அல்லது குறித்த நபர் உடைய ஆண் பிள்ளைகளுக்கு வக்பு செய்கிறேன் என்று கூறினால் அது ஆண்களை மாத்திரமே குறிக்கும். என்றாலும் ஒரு கோத்திரத்தை பார்த்து வக்பு செய்தால் அங்கே ஆண்களும் பெண்களும் உள்ளடங்குவார்கள். உதாரணமாக ஹாஷிமின் பிள்ளைகள் தமீமின் பிள்ளைகள் என்று சொல்வதை போல. அதில் பெண்களும் அடங்குவார்கள் ஏனெனில் கோத்திரமாக பார்க்கும் பொழுது ஆண்களும் பெண்களும் உள்ளடங்குகின்றார்கள். 

அதே போன்று எண்ணிக்கை வரையறை செய்து ஒரு கூட்டத்திற்கு வகுப்பு செய்தால் அவர்கள் அனைவருக்கும் சமமாக கொடுப்பது கட்டாயம் ஆகும் ‌. எண்ணிக்கை அளவீடு செய்ய முடியாத ஒரு சமூகத்திற்கு வக்கப்பு செய்தால் உதாரணத்திற்கு ஹாசிபின் குடும்பத்தார் தமீமின் குடும்பத்தார் என்று பொதுவாக சொல்வதை போல. அந்த சந்தர்ப்பத்தில் எல்லோருக்கும் சமமாகக் கொடுப்பது சாத்தியமில்லாமல் போய்விடும் எனவே சிலருக்கு கூட்டியும் குறைத்தும் ஏற்றத்தாழ்வோடு வழங்குவதில் தடை இல்லை.

வக்பு வெறுமனே சொல்லின் மூலம்  கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய உடன்படிக்கையாகும். அதை இடையில் முறித்து விடுவது அனுமதிக்கப்பட்ட விடயம் கிடையாது.

(அதற்கவர்கள் விற்கவோ, அன்பளிப்பாகவோ, வாரிசு சொத்தாகவோ எடுக்க முடியாதவாறு) இமாம் திர்மிதி ரஹ் அவர்கள்  இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் அறிஞர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று கூறினார்கள்.

அந்த வகையில் அதை இடையில் முறித்து விடுவது ஆகுமானது அல்ல. ஏனெனில் அது நிரந்தரமாக்கப்பட்டதாகும் அதை விற்பதற்கோ வேறொரு இடத்தில் கொடுப்பதற்கோ முடியாது.

எப்பொழுது வக்பு சொத்தின் பலன்கள் முழுமையாக இல்லாமல் போகுமோ உதாரணமாக வக்பு செய்யப்பட்ட வீடு தரைமட்டமாகுதல் அந்த வீட்டை மீள்கட்டி எழுப்புவது வக்புடைய பணத்தில் இருந்து கூட முடியாமல் போய் விட்டது என்று வைத்துக் கொள்வோம். அல்லது விவசாய பூமி நாசமாக போய்விட்டது அதை மீள உருவாக்குவது வக்புடைய பணத்தில் இருந்து கூட முடியாமல் போகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே நிலையில் அந்த வக்பு சொத்து விற்கப்படல் வேண்டும். விற்ற பெறுமதியை அது போன்ற விடயங்களில் செலவு செய்யப்பட வேண்டும் அதுவே வக்பு செய்தவரின் நோக்கத்திற்கு நெருக்கமானதாக அமையும். முழுமையாக செலவு செய்யப்படுவது இயலாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவைகளில் சிலவற்றில் செலவு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் இந்த மாற்றீடு வக்பாக அமைந்து விடும்.

வக்பு செய்யப்பட்ட சொத்து பள்ளி வாயிலாக இருக்கும் போது அது அமைந்திருக்கும் இடம் சிதைவடைந்து விட்டால் அதை விற்றுவிட்டு வேறொரு பள்ளிவாயிலுக்கு அதன் பெறுமதி செலவு செய்யப்பட வேண்டும். அதே போன்று ஒரு பள்ளிக்கு குறித்த சொத்து வக்பு செய்யப்பட்டு அந்தப் பள்ளியின் தேவையை காட்டிலும் அதிகமாக வருமானம் வரும் பொழுது மேலதிகமானதை வேறொரு பள்ளிக்கு வழங்கலாம். ஏனெனில் அது எதற்காக வக்பு செய்யப்பட்டு இருக்கிறதோ அதற்காகவே பயன் பெறுகிறது. மேலும் மேலதிகமானது பள்ளி உடைய வகுப்பில் இருந்து ஏழைகளுக்கும் வழங்க முடியும்.

குறித்த ஒரு நபருக்கு வக்பு செய்யப்பட்டிருந்தால் உதாரணமாக ஒருவர், ஸெய்துக்குறியது  ஒவ்வொரு வருடமும் 100 அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறினால் வக்பின் மூலமாக வரும் வருமானமும் இந்த அளவு இருந்தால். மேலதிகமாக வரக்கூடிய வருமானத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஷெய்க் தகியுதீன் ரஹ் கூறினார்கள் "வக்பு உடைய வருமானம் வழமையாக அதிகரித்தால் அதை கட்டாயம் செலவு செய்து விட வேண்டும் ஏனெனில் அவ்வருமானம் தங்குவது கெடுதியை விளைவிக்கும்."

ஒரு குறித்த சொத்து பள்ளிக்கு வக்பு செய்யப்பட்டிருந்து பள்ளி இடிந்து விட்டால் அப்பள்ளிக்கு குறித்த சொத்தில் இருந்து வருமானம் வழங்க முடியாமல் போய்விடும் ஏனைய பள்ளிகளுக்கு அது செலவு செய்யப்படும்.

மூலம்

அஷ்ஷெய்க் ஸாலிஹ் பவ்ஸானின் அல்முலக்கஸுல் பிக்ஹி எனும் நூலின் பக்கம் 158

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
வக்பு சார்ந்த சட்டங்கள் - Islam Question & Answer