0 / 0
26/சபர்/1446 , 30/ஆகஸ்ட்/2024

இஸ்லாமிய மார்க்கத்தின் படித்தரங்கள்

கேள்வி: 49023

இஸ்லாமிய மார்க்கத்தின் படித்தரங்கள் எத்தனை? அந்த ஒவ்வொரு படித்தரத்தினதும் நிலைமைகள் என்ன? இஸ்லாம்,  ஈமான்,  இஹ்ஸான் இவைகளுக்கிடையிலான வேறுபாடு என்ன? இஹ்ஸான் எனும் படித்தரத்தில் உள்ளவர்களின்  தரங்கள் என்ன?

Summary of answer

இஸ்லாமிய மார்க்கத்தின் படித்தரங்கள் மூன்று : இஸ்லாம், ஈமான் , இஹ்ஸான். ஒவ்வொரு படித்தரத்திற்கும் தனித்தனி அர்த்தங்கள் மற்றும் அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றை விரிவான விடையில் பார்ப்போம்.

சம்பந்தப்பட்ட தலைப்புகள்
Answer

முதலாவது படித்தரம்: இஸ்லாம்

இஸ்லாம் என்ற பதத்திற்கு அரபியில் மொழிரீதியாக அடிபணிதல் கட்டுப்படுதல் என பொருள்படும் .

மார்க்க அடிப்படையில் அதன் பிரயோகத்தை பொருத்து அதன் பொருள் மாறுபடும். அவ்வார்த்தை இரண்டு நிலைமைகளில் பிரயோகிக்கப்படும்.

முதலாவது நிலைமை: ஈமான் என்ற வாசகத்துடன் அல்லாது தனியாக பயன்படுத்தப்படுதல். உதாரணமாக  {நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்(3/19)}, {இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்(5/3)}  , {இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது(3/85)}. மேற்கூறப்பட்ட குர்ஆனிய வசனங்களில் கூறப்பட்டதை போன்று தனியாக வரும்பொழுது ,  மார்க்கத்திலுள்ள கொள்கை  மற்றும்  சொல்,செயல்ரீதியான  அடிப்படை  மற்றும் கிளைஅம்சங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக அதன் கருத்து  இருக்கும் . அதனால் தான் சில அறிஞர்கள் இஸ்லாம் என்பது :  அல்லாஹுதஆலாவின் தனித்துவத்தை உறுதிப்படுத்தியவராக அவனை   அடிபணிந்து, வணக்க வழிபாடுகள் மூலம் அவனுக்கு கட்டுப்பட்டு,  இணைவைத்தல் மற்றும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகியிருத்தல்  , என வரைவிலக்கணம் சொல்கின்றனர்.

இரண்டாவது நிலைமை: ஈமான் எனும் பதத்துடன் இணைந்து வருதல். இச்சந்தர்ப்பத்தில் அதன் கருத்தானது மார்க்கத்திலுள்ள வெளிரங்கமான சொல் , செயல் சார்ந்த அம்சங்களை மாத்திரமே குறிக்கக்கூடியதாக இருக்கும். அதனை தான் பின்வரும் இறைவசனம் குறிக்கிறது {“நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிப்பட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை..(49/14)}

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நான் அமர்ந்திருந்தபோது, அவர்கள் (மக்களில்) ஒரு குழுவினருக்கு (மட்டும் தர்மப் பொருட்களை) வழங்கினார் கள். அப்போது அவர்களில் எனக்குப் பிடித்த ஒருவருக்கு (ஏதும் வழங்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆகவே நான், “அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகின்றேன்” என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் (வெளித் தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்க” என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். “அவர் மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகிறேன்” என்றேன்.

அதற்கும் அலலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் என்று சொல்க” என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, முன்பு சொன்னதை மறுபடியும் சொன்னேன். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பழைய பதிலையே கூறி விட்டு, “சஅத்! நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், மற்றொருவர் அவரை விட என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப் பதற்குக்) காரணம், (கொடுக்காதிருந்து விட்டால் வறுமையால் குற்றம் இழைத்து அதனால்) அவரை அல்லாஹ் நரகத்தில் முகம்குப்புறத் தள்ளிவிடுவானோ என்ற அச்சம்தான்” என்றார்கள்.

ஸஃது ரழியல்லாஹு அன்ஹு “அவர் மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகிறேன்” என சொன்ன பொழுது

அலலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் என்று சொல்க” என சொன்னதானது அதனைத்தான் சுட்டிக்காட்டுகிறது. அதாவது நீர் அவரின்  உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட ஈமானை பற்றி அறியவில்லை மாறாக அவனின் வெளிரங்கமான செயல்களை வைத்து அவரின் இஸ்லாத்தை தான்  அறிந்திருக்கிறீர்கள் .

இரண்டாவது படித்தரம்: ஈமான்

மொழிரீதியான கருத்து:  ஏற்றுக்கொள்ளல் மற்றும் கட்டுப்படுதல் போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய உண்மைப்படுத்துதல் .

மார்க்கரீதியாக பார்க்கும் பொழுது அதனுடைய பிரயோகங்களை பொறுத்து அதன் கருத்து வேறுபடும். அதுவும் இரண்டு நிலைமைகளில் பாவிக்கபடும்.

முதலாவது நிலைமை : இஸ்லாம் எனும் வார்த்தையுடன் இணையாது தனியாக வருதல். அச்சந்தரப்ப்த்தில் அதன் கருத்து மார்க்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இதனை தான் பின்வரும் இறை வசனங்களும்  நபிமொழியும் சுட்டிக்காட்டுகின்றன

{அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்(2/257)},

{நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் (உங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்(5/23).}

நபியவர்களின் பின்வரும் கூற்றும் அதனையே குறிக்கிறது " முஃமீன்களை(விசுவாசிகளைத்)தவிர யாரும் சுவர்க்கத்தில் நுழைய முடியாது. இதனால் தான் முன்சென்ற அறிஞர்களும் ஈமானுடைய வரைவிலக்கணம்: உள்ளத்தால் உண்மைப்படுத்தி-உள்ளம் சார்ந்த செயல்களும் அதில் உள்ளடங்கும்-நாவினால் மொழிந்து, உறுப்பக்களால் அவற்றை செயல்படுத்துவது,  மேலும் - ஈமான்- நல்லமல்களினால் அதிகரிக்கக்கூடியதும், பாவமான காரியங்களால் குறைவதுமாகும்" என்ற நிலைப்பாட்டில் ஏகோபித்த கருத்தில் இருந்தனர்.

எனவே தான் அல்லாஹுதஆலா பின்வரும் குர்ஆனிய வசனத்தில் யார் மார்க்கத்தின் அகம் புறம் என அனைத்து விடையங்களையும் சரியாக கடைபிடிக்கிறாரோ அவர்கள் மாத்திரம் தான் முஃமின்கள் என வரையறுத்திருப்பதை காணலாம்.

{உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்□அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்□இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு(9/2-4)}

அவ்வாறே உள்ரங்க வெளிரங்க செயல்களை மையப்படுத்தியே அல்லாஹுதஆலாவும் ஈமானை பின்வருமாறு  தெளிவுபடுத்துகிறான் : {கிழக்கு, மேற்கு ஆகியவற்றின் பக்கமாக உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மை செய்ததாக ஆகிவிடுவது இல்லை. எனினும் நன்மை உடையவர் (எவரெனில் உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும், மலக்குகளையும், வேதத்தையும், நபிமார்களையும் விசுவாசித்து, மேலும் செல்வத்தை தம் விருப்பத்தின் மீது பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகளிலும் (அவர்களை விடுவிப்பதற்காக) கொடுத்தவரும், மேலும் தொழுகையை நிறைவேற்றி ஜகாத்தையும் கொடுத்து, வாக்களித்தால் தங்களின் வாக்குறுதியை (ச்சரிவர) நிறைவேற்றக் கூடியவர்களும், (வறுமையின்போது) துன்பத்திலும் (நோய் நொடிகள் போன்ற) கஷ்டத்திலும், யுத்த நேரத்திலும் பொறுமையுடனிருந்தவர்களுமாவர்.}

இந்த தகைமைகளை சொன்னதன் பின்னால் அல்லாஹுதஆலா பின்வருமாறு கூறுகிறான்

{அத்தகையோர் தாம் உண்மை சொன்னார்களே அவர்கள் (ஆவர்). இன்னும் இவர்கள் தாம் பயபக்தியாளர்கள்.(2/177)}

அதனையே நபியவர்களும் அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக்குழுவினர்  சம்பந்தமான ஹதீஸிலும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் [1](புஹாரி -53,முஸ்லிம் 17)

அதேபோன்றுதான் நபியவர்கள் விசுவாசத்துடன் , நன்மையை எதிர்பார்த்து ரமழானில் நோன்பு வைப்பது,  லைலதுல் கத்ரு இரவில் நின்று வணங்குவது, அமானிதத்தை நிறைவேற்றுவது, ஜிஹாத் செய்தல்,  ஹஜ் செய்தல் , ஜனாஸாவை பின்துயர்ந்து செல்லல் போன்ற விடயங்கள்,  இன்னும்  பல விடயங்களையும் ஈமானைச் சார்ந்தது என சொல்லியிருக்கிருறார்கள் . நபியவர்கள் சொன்னார்கள் [2] (திர்மிதி 1024 (ஹஸனுன் ஸஹீஹ்) , இமாம் அல்அல்பானி அதனை ஸஹீஹ் என்று சொல்லியிருக்கிறார் )

அதாவது வாழும்பொழுது தான் உறுப்புகளினாலான அமல்களை செய்ய முடியும். ஆனால் மரணிக்கும் நேரம் உள்ளம் சார்ந்த அமல்கள் மாத்திரமே செய்ய முடியும்.

இஸ்லாம், ஈமான் ஒவ்வொன்றும் தனித்தனியாக பயன்படுத்தப்படும் பொழுது எவ்வித வித்தியாசமுமின்றி இரண்டு வார்த்தைகளும் மார்க்கத்தின் அனைத்து அம்சங்களையும் குறிப்பதாக அமையும். ஆனால் இரண்டு வார்த்தைகளும் வெவ்வேறு அர்த்தங்களில் வரும் போது ஏற்கனவே சொல்லப்பட்டதை போன்று இஸ்லாம் உடலால் செய்யக்கூடிய வெளிரங்கமான அம்சங்களை மாத்திரமே குறிக்கக்கூடியதாகவும், ஈமான் உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட உள்ரங்கமான அமல்களை மாத்திரம் குறிக்கக்கூடியதாகவும் இருக்கும். அதனை தான் முஸ்லிமில் வரும்  ஹதீஸுஜிப்ரீல் எனும் நபிமொழியும் சுட்டிக்காட்டுகிறது . உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சக்தியிருந்தால்  இறையில்லம் கஅபாவில் ஹஜ்" செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்" என்றார்.

அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்றார்.

அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.

அம்மனிதர்,மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர்.என்று கூறினார்கள்.

அம்மனிதர்,மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்" என்று கூறினார்கள்.

பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நான் சில  நேரம் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்" என்று சொன்னார்கள்.))

மூன்றாம் படித்தரம்: இஹ்ஸான் (அழகிய முறையில் செயலாற்றல்)

மொழிரீதியான கருத்து: ஒவ்வொரு செயலையும் உளத்தூய்மையுடன் திறம்பட செய்தல்

மார்க்கரீதியான விளக்கம்: அதனுடைய பிரயோகங்களை பொறுத்து அதன் அர்த்தம் வேறுபடும் அதுவும் இரண்டு நிலைமைகளில் வரும்.

முதலாவது நிலைமை: இஸ்லாம், ஈமான் என்பவற்றுடன் இணைந்து வராது தனியாக பிரயோகிக்கப்படும் பொழுது,  இஸ்லாம், ஈமான் என்பவை போன்று  மார்க்கத்தை முழுமையாக குறிக்கும்.

இரண்டாவது நிலைமை: ஈமான், இஸ்லாம் எனும் வார்த்தைகளுடனோ அல்லது அவ்விரண்டில் ஒன்றுடனோ இணைந்து வருதல். இந்நேரம் அது அகத்தையும் புறத்தையும் அழகுற வைத்திருப்பது என்ற கருத்தை தரும்.இதனை தான் நபியவர்கள், அல்லாஹுதஆலா அளித்த சொல்வளத்தினால் வேறு யாராலும் இயலாத ஒரு விளக்கத்தை இஹ்ஸான் என்ற வார்த்தைக்கு அளித்தார்கள் .

"இஹ்ஸான் என்பது அல்லாஹுதஆலாவை பார்ப்பது போன்று வணங்குவதாகும் , நீங்கள் அவனை பார்க்க வில்லையென்றாலும் அவன் உங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான் " இது தான் மார்க்கத்தின் மிக உயர்ந்த மற்றும் ஆபத்தான படித்தரமாகும். அதே சமயம் இந்த தன்மையை உடையவர்கள் தான் நன்மைகள்மமூலம் முன்னிலையில் இருப்பவரகளும் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்ளாகவும் இருப்பார்கள்.

அழகிய முறையில் செயலாற்றல் இரண்டு படித்தரங்களை கொண்டது மற்றும் அவ்வாறு செயலாற்றுபவர்கள் இரண்டு வெவ்வேறு நிலைமைகளையுடையவர்கள்  என நபியவர்கள்  கூறியிருக்கிறார்கள்

முதல் நிலை:

 நீ அல்லாஹுதஆலாவை  பார்ப்பது போன்று அவனை வணங்குவதாகும் இது மிக உயர்ந்த நிலையாகும்.  இதனை தான் சில அறிஞர்கள் مقام المشاهدة என்பார்கள் அதாவது ஒரு அடியான் அல்லாஹுதஆலாவை நேரடியாக காண்பது போன்று அமல்செய்வதாகும் அதனால் அவனது உள்ளம் ஈமானால் பிரகாசமடைந்து மறைவான விடயங்களை கண்கூடாக காண்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். யாரொருவர் தான் அல்லாஹுதஆலாவை காண்பது போன்று அவனை  முன்னோக்கியவராக அவன் தனக்கு நெருக்கமாக இருக்கிறான்  ,  தான் அவனிடத்தில் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் வணங்கும்பொழுது தான் அவருக்கு அந்த வணக்கத்தில் அல்லாஹுதஆலாவை பற்றிய அச்சமும் மகத்துவமும் கண்ணியமமும் ஏற்படும்

இரண்டாம் நிலை

உளத்தூய்மையி (முராகபாவி)ன் நிலை: அதுதான் ஒரு அடியான் அல்லாஹுதஆலா தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான், தனக்கு மிக நெருக்கமாக இருக்கிறான் எனும் உணர்வோடு அவனை வணங்குவதாகும். அந்த உணர்வானது அவனை அல்லாஹுதஆலாவை தவிர்த்து ஏனையவர்களின் பால் திரும்புவதை விட்டும் தடுப்பதனால்   அவன தனது  வணக்கத்தை இறைவனுக்காக மாத்திரமே உளத்தூய்மையுடன்  செய்யக்கூடியவனாக இருப்பான் .  ஓர் அடியான் இந்நிலையை சரியாக அடைந்து விட்டால் முதல் நிலையை அடைந்து கொள்வது அவனுக்கு இலகுவாகி விடும். அதனால் நபியவர்கள் இந்நிலையை   "ஏனெனில் நீ அவனை(அல்லாஹ்வை) பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான் " என காரண அடிப்படையில்  சொல்லியிருக்கிறார்கள் . எனவே ஓர் அடியான் தனது வணக்கத்தின் பொழுது அல்லாஹுதஆலா தன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் தனது இரகசியம் , பரகசியம், உள்ரங்கமான , வெளிரங்கமான என எல்லா விடயங்களையும் அறிந்தவன் என்பதை சரியாக புரிந்துகொள்ளும்பொழுது, அல்லாஹுதஆலா எப்பொழுதும்  தனக்கு நெருக்கமாக  தன்னுடனே இருக்கிறான் என்ற உணர்வு உண்டாகும் அதனால் அல்லாஹுதஆலாவை அவன் நேரடியாக பார்ப்பது போன்ற அந்த அடுத்த நிலையை அடைவது அவனுக்கு இலகுவாகி விடும்.     அல்லாஹ்வின் அருளை வேண்டுகின்றோம்.

மேலதிக விடயங்களை அறிந்துகொள்ள பத்வா இலக்கங்கள்  (219  ) (14055 ) ஆகியவற்றைப் பார்க்கவும்.

துணை நூட்கள்

^1 அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, “அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத்தெரியுமா ?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது; 3. ஸகாத் வழங்குவது; 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. (இவையன்றி) போரில் கிடைக்கும் பொருட்களி லிருந்து ஐந்தில் ஒரு பாகத்தை நீங்கள் வழங்க வேண்டும்.

^2 ஈமான் என்பது எழுபது சொச்சம் கிளைகளைக் கொண்டதாகும், அவைகளில் மிகவும் உயர்ந்தது லாஇலாஹ இல்லல்லாஹு என்று சொல்வதாகும் அவைகளில் மிகவும் தாழ்ந்தது (மக்களுக்கு) நோவினை தருபவற்றை பாதையை விட்டும் அகற்றுவதாகும் .

இவ்விடயத்தில் அதிகமான இறைவசன்ஙகளும், நபிமொழிகளும் காணப்படுகின்றன.

இரண்டாவது நிலைமை: இஸ்லாம் எனும் வார்த்தையுடன் இணைந்து வரும் பிரயோகம், இங்கு ஈமான் என்ற வசனம் நம்பிக்கை சார்ந்த விடயங்களை குறித்து நிற்கும் . அதனை தான் ஹதீஸு ஜிப்ரீல் மற்றும் மையத்து தொழுகையில் நபியவர்கள் ஓதிய பின்வரும் பிரார்த்தனைகள் குறிக்கின்றன: யாஅல்லாஹ் எங்களில் யாரை உயிர்வாழச்செய்கிறாயோ அவர்களை இஸ்லாத்தில் உயிர் வாழச்செய்வாயாக மேலும் எங்களில் யாரை மரணிக்கச்செய்கிறாயோ அவர்களை ஈமானுடன் மரணிக்கச்செய்வாயாக

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

answer

சம்பந்தப்பட்ட தலைப்புகள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
இஸ்லாமிய மார்க்கத்தின் படித்தரங்கள் - Islam Question & Answer