0 / 0
19/ரபி/1446 , 22/செப்டம்பர்/2024

இஸ்லாத்தின் தனிச் சிறப்பம்சங்கள்

கேள்வி: 219

முஸ்லிம்கள் ஏன் அவர்களது மார்க்கம் தான் சத்தியம் என்ன எண்ணுகிறார்கள்? அவர்களிடம் நியாயமான காரணங்கள் உண்டா?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

மதிப்புக்குரிய சகோதரியே! உங்களுக்கு சபசோபனம் உண்டாகட்டும்

உங்கள் கேள்வியைப் பார்க்கும்போது இஸ்லாத்தில் நுழையாத ஒருவரின் கேள்வி போல் உள்ளது. இந்த மார்க்கத்தை செயற்படுத்தி, அதில் உள்ளவற்றை கற்றுக் கொண்டிருப்பவர்கள் இம்மார்க்கத்தில் நிழலின் கீழ் வாழும் தான் எவ்வளவு பெரிய அருட்கொடையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறிவார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு.

1. ஒரு முஸ்லிம் அழகிய திருநாமங்களையும், உயர்வான பண்புகளையும் கொண்ட இணையற்ற ஒரே கடவுளையே வணங்குகின்றான். எனவே முஸ்லிமின் இலக்கும் நோக்கமும் ஒன்றாகவே இருக்கும். படைப்பாளனாகிய இரட்சகன் மீது நம்பிக்கை வைத்து அவனிடமே அனைத்தையும் பொறுப்பு சாட்டுவார். உதவி, வெற்றி, ஆதரவு என அனைத்தையும் அவனிடமே எதிர்பார்ப்பார். தனது இரட்சகன் அனைத்துக்கும் சக்தி பெற்றவன் என்றும், மனைவி, பிள்ளைகள் அவனுக்குத் தேவையில்லை என்றும் அவன் ஈமான் கொள்வான். அவனே பூமி, வானங்களைப் படைத்தவன், மேலும் அவனே உயிர்ப்பிப்பவன், மரணிக்கச் செய்பவன், படைப்பவன், வாழ்வாதாரம் வழங்குபவன் என்றும் அவன் ஈமான் கொள்வான். எனவே அவனிடமே வாழ்வாதாரத்தைக் கேட்பான். அவன் செவியுறுபவன் பதிலளிப்பவன். எனவே அடியான் அவனையே அழைப்பான். பதிலையும் எதிர்பார்ப்பான். பாவங்களை மன்னித்து, இரக்கம் காட்டுபவன். எனவே அடியான் பாவம் செய்தாலும், தன் ரப்பை வழிப்படுவதில் குறை செய்தாலும் அவனிடமே பாவ மன்னிப்பு கேட்பான். அவன் நன்கறிந்தவன், ஆழமாகப் புரிந்துள்ளவன், அனைத்தையும் காண்பவன், எண்ணங்களையும் இரகசியங்களையும் உள்ளங்களுக்குள் இருப்பவற்றையும் அறிந்தவன், எனவே தனக்குத் தானே அநீதமிழைத்துக் கொண்டு அல்லது படைப்புகளுக்கு அநீதமிழைத்துக் கொண்டு, ஒரு பாவத்தைச் செய்ய அவன் வெட்கப்படுவான், ஏனெனில் அவனது ரப்பு அவனைப் பார்க்கின்றான், அவதானித்துக்கொண்டு இருக்கின்றான்,

தனது இரட்சகனின் மறைவை அறிந்த, ஞானம்மிக்கவன் என்பதை அவன் அறிவான், அதனால் அல்லாஹ் அவனுக்குத் தெரிவுசெய்திருப்பதிலும், விதித்திருப்பதிலும் அவன் திருப்தி காண்பதோடு இரட்சகன் தனக்கு அநீதமிழைக்கவில்லை என்றும் அவன் தனக்கு விதித்த ஒவவொரு விதியும் - அதன் நுட்பம் புலப்படாவிட்டாலும் - அவனது நன்மைக்கே என்பதை உறுதியாக நம்புவான்.

2. இஸ்லாமிய வணக்கங்கள் முஸ்லிமின் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்,

தொழுகை அவனுக்கும் அவனது இரட்சகனுக்கும் இடையே உள்ள தொடர்பு.  உள்ளச்சத்தோடு அவன் அதில் நுழைந்தால் நிம்மதியையும் அமைதியையும் ஆறுதலையும் உணர்வான். ஏனெனில் அல்லாஹ்வாகிய அந்த சக்திமிக்க இரட்சகனிடமே அவன் ஒதுங்குகின்றான். இதனால்தான் நபி ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்கள் “தொழுகை(க்கு இகாமத் கூறுவது)கொண்டு எமக்கு நிம்மதியைத் தாருங்கள்” என்று (பிலாலிடம்) ஏவினார்கள். இக்கட்டான நிலைமைகள் ஏதாவது ஏற்பட்டால் உடனே தொழுகைக்கு விரைந்து விடுவார்கள். கஷ்டங்கள் ஏற்பட்ட யாராவது தொழுது பார்த்தால் அதற்கு ஆறுதல், பொறுமை என உதவிகள் கிடைப்பதை அவன் உணர்வான். அவர் தொழுகையில் தனது ரப்புடைய வார்த்தைகளை ஓதுவதே அதன் காரணமாகும். இரட்சகனின் வார்த்தைகளை ஓதுவதன் தாக்கத்தோடு படைப்புகளில் யாருடைய பேச்சையும் வாசிப்பதன் தாக்கத்தை ஒப்பிடமுடியாது. சில உளநல மருத்துவர்களின் பேச்சுக்களில் அமைதியும் ஆறுதலும் கிடைக்கின்றது என்றால், அவர்களைப் படைத்தவனின் பேச்சு எவ்வாறு இருக்கும்!!

இஸ்லாத்தின் இன்னுமொரு தூண்களில் ஒன்றாகிய ஸகாத்தைப் பார்த்தால், அது மனித உள்ளத்தை, உலோபித்தனம், பேராசை என்பவற்றிலிருந்து பாதுகாக்கின்றது. கொடை கொடுக்கவும், ஏழைகள் மற்றும் தேவையுள்ளோர்களுக்கு உதவும் பயிற்றுவிக்கின்றது. ஏனைய வணக்கங்கள் போன்று மறுமையிலும் அதற்குக்கூலி உண்டு. மனிதர்கள் விதிக்கும் வரிகள் போல சிரமப்படுத்தக் கூடியதாகவோ, அதிகம் அறவிடக் கூடியதாகவோ இந்த ஸகாத் இல்லை. மாறாக ஒவ்வொரு 1000 ரூபாய்களிலும் 25 ரூபாய் மாத்திரமே கடமையாகின்றது. உண்மையான முஸ்லிம் மனமுவந்து அதை வழங்குவாரே  தவிர, யாருமே கேட்டு வராவிட்டாலும் அதைக் கொடுக்காமல் பின்வாங்கிக் கொள்ளமாட்டார்.

நோன்பு என்பது உணவையும் தாம்பத்தியத்தையும் தவிர்ப்பது. அல்லாஹ்விற்கான ஒரு வணக்கமாகவும், பசித்தவர்கள் மற்றும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களின் பசியை உணர்வதற்காகவும், அல்லாஹ் மக்களுக்கு செய்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவதற்காகவும் கடமையாக்கப்பட்டுள்ளது. எண்ணிலடங்காத கூலியும் அதற்கு உண்டு.

3. இஸ்லாம் எல்லா நன்மைகளையும் ஏவியுள்ளது. எல்லாத் தீமைகளையும் தடுத்துள்ளது. உண்மை, நிதானம், அமைதி, மென்மை, பணிவு, வெட்கம், வாக்கை நிறைவேற்றல், கண்ணியம், அன்பு, நீதம், வீரம், பொறுமை, இரக்கம், மனதிருப்தி, பேணிப்பு, உபகாரம் புரிதல், விட்டுக்கொடுப்பு, அமானிதம், உபகாரங்களுக்கு நன்றி செலுத்துதல், கோபத்தை அடக்குதல் போன்ற நல்லொழுக்கங்களையும் நற்பண்புகளையும் ஏவியுள்ளது. பெற்றோருக்கு உபகாரம் புரியுமாறும், உறவுகளை சேர்ந்து நடக்குமாறும், க~;டத்தில் உள்ளவனுக்கு உதவுமாறும், அயலவனுக்கு உபகாரம் புரியுமாறும், அநாதையின் சொத்துக்களைப் பேணிப் பாதுகாக்குமாறும், சிறியோருக்கு இரக்கம் காட்டுமாறும், பெரியோரை மதிக்குமாறும், பணியாட்கள் மற்றும் மிருகங்களுடன் மிருதுவாக நடந்து கொள்ளுமாறும், பாதையில் நோவினை தருபவற்றை அகற்றுமாரும், நல்ல வார்த்தைகளைப் பேசுமாறும் அதிகாரம் இருக்கும் போதும் மன்னித்து விட்டுவிடுமாறும் ஏவுகின்றது.

அதே போன்று ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுக்கு நன்மை நாடுவதை, முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதை, கடனாளிக்கு மேலும் தவணை கொடுப்பதை, அடுத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை, ஆறுதல் அளிப்பதை, மக்களைப் பார்த்து புன்னகைப்பதை, கஷ்டவாளிகளுக்கு உதவுவதை, நோயாளியை நோய் விசாரிக்கச் செல்வதை, அநீதமிழைக்கப்பட்டவனுக்கு உதவுவதை, நண்பர்களுக்கு மத்தியில் அன்பளிப்புக்களைப் பரிமாறிக் கொள்வதை, விருந்தாளியை உபசரிப்பதை, மனைவியிடம் நல்ல முறையில் இணைந்து வாழ்வதை, அவளுக்கும் பிள்ளைகளுக்கும் செலவழிப்பதை, ஸலாத்தைப் பரப்புவதை, ஒரு வீட்டில் உள்ளவர்களின் மறைவுகள் வெளிப்படாமல் இருக்க, வீட்டுக்கு நுழையுமுன் அமைதி கேட்பதை எல்லாம் மார்க்கம் ஏவுகின்றது.

முஸ்லிமல்லாத சிலர் இவற்றை செய்தாலும், பொது ஒழுக்கங்கள் என்ற அடிப்படையில்தான் செய்கின்றார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து நன்மையையோ கூலியையோ எதிர்பார்ப்பதில்லை. மறுமையில் வெற்றியை எதிர்பார்ப்பதும் இல்லை.

இஸ்லாம் தடுத்திருப்பவற்றைப் பார்த்தால் சமூக மற்றும் தனிநபர் நலன்களுக்காக அத்தடைகள் இருப்பதைக் காணலாம். எல்லாத் தடைகளுமே அடியானுக்கும் ரப்புக்குமிடையிலான தொடர்பு, அடியானுக்கும் அவனது உள்ளத்துக்குமிடையிலான தொடர்பு, அவனுக்கும் ஏனைய அடியார்களுக்குமிடையிலான தொடர்பு என்பவற்றை பாதுகாக்கவே அமைந்துள்ளன. இதனை மேலும் தெளிவுபடுத்த பின்வரும் காரணங்களைத் தருகின்றோம்.

அல்லாஹ்வுக்கு இணை வைப்பதையும், அல்லாஹ் அல்லாதோரை வணங்குவதையும் தடுத்துள்ளது இஸ்லாம். அவ்வாறு வணங்குவது துர்ப்பாக்கியம், நட்டம் என்கிறது. குறிசொல்பவர், சகுனம் பார்ப்பவர் ஆகியோரிடம் செல்வதையும் அவர்களை உண்மைப்படுத்துவதையும் தடுத்துள்ளது. இருவரை ஒன்றிணைக்கவோ, பிரித்துவிடவோ பயன்படுத்தப்படும் சூனியத்தையும் தடுத்துள்ளது. மனித வாழ்விலும் நிகழ்வுகளிலும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் தாக்கம் செலுத்துவதாக நம்புவதையும் தடுத்துள்ளது. காலத்தை ஏசுவதையும் தடுத்துள்ளது. ஏனெனில் அல்லாஹ்வே அதனை வழிநடத்துகின்றான். பறவைச்சகுனம் அதாவது துற்சகுனம் பார்ப்பதைத் தடுத்துள்ளது. முகஸ்துதிக்காக, புகழுக்காக, பெருமை பேசுவதற்காக அமல்களைச் செய்து அவற்றை வீணாக்கிக் கொள்வதையும் தடுத்துள்ளது.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக சிரம்பணிவதேயோ, தலைசாய்ப்பதையோ தடுக்கின்றது. நயவஞ்சகர்களுடனோ, பாவிகளுடனோ அவர்களிடம் ஆறுதல் பெரும் நோக்கிலோ அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவோ உட்கார்ந்திருப்பதை தடை செய்கின்றது. அல்லாஹ்வின் சாபம், அவனது கோபம், நரகம் என்பவற்றைக் கூறிச் சபித்துக் கொள்வதையும் தடுக்கின்றது.

தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிப்பது, பாதையோரங்கள், மக்கள் நிழல் பெரும் இடங்கள், நீர் நிலைகள் போன்றவற்றில் மலசலம் கழிப்பது, மசலசலம் கழிக்கும் போது கிப்லா முன்னோக்குவது அல்லது பின்னோக்குவது, சிறுநீர் கழிக்கும் போது வலது கையால் அபத்தைப் பிடிப்பது, மலசலம் கழித்துக்கொண்டிருப்பவருக்கு ஸலாம் கூறுவது, உறக்கத்தில் இருந்து எழும்பியவர் தன் கைகளைக் கழுவமுன்னர் பாத்திரத்தில் இடுவது என்பவையெல்லாம் தடுக்கப்பட்டுள்ளன.

சூரியன் உதிக்கும் போதும், உச்சியில் இருந்து சாயும் போதும், மற்றும் மறையும் போதும் உபரியான தொழுகைகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. அது உதிப்பதும், மறைவதும் ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு மத்தியிலாகும் என்பதே அதன் காரணமாகும்.

உணவு தயாராகவும், பசியும் இருக்கும் நேரத்தில் தொழுவது, மலம், சலம், காற்று என்பவற்றை அடக்கிக்கொண்டு தொழுதல் அனைத்துமே தடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் தொழுகையாளியை எதிர்பார்க்கப்படும் உள்ளச்சத்தை விட்டும் திசைதிருப்பிவிடும் என்பதே அதன் காரணமாகும்.

தொழுகையாளி தொழுகையில் தன் சப்தத்தை உயர்த்தி ஏனைய முஃமின்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்கின்றது. தூக்க உணர்வுடன் இரவுத் தொழுகையைத் தொடர்வதைத் தடை செய்துள்ளதுடன், உறங்கி விட்டு பின்பு தொழுமாறு ஏவுகின்றது. இரவு முழுதும் நின்று வணங்குவதை, குறிப்பாக தொடர்ச்சியாக அவ்வாறு வணங்குவதைத் தடுத்துள்ளது. தொழுகையாளி தனக்குக் காற்றுப் பிரிந்துவிட்டதாக சந்தேகப்பட்டால், அதன் சப்தத்தைக் கேட்டாலே தவிர, அல்லது வாடையை உணர்ந்தாலே தவிர தொழுகையை விடுவதையும் தடுத்துள்ளது. பள்ளிவாசல்களில் விற்பதையும், வாங்குவதையும், காணாமல் போனவற்றை அறிவிப்பதையும் தடுத்துள்ளது. பள்ளிவாசல்கள் அல்லாஹ்வை வணங்கவும், நினைவு கூறவும் வைக்கப்பட்டவை. எனவே உலக விடயங்களை அங்கு செய்வது பொறுத்தமாகமாட்டாது.

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் விரைந்து வேகமாகச் செல்வதைத் தடுத்துள்ளது. மாறாக, அமைதியாகவும் கௌரவமாகவும் நடந்தே செல்லவேண்டும். பள்ளிவாசல்களை வைத்துப் பெருமையடிப்பதையும், சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்கள் கொண்டோ அல்லது தொழுகையாளிகளைத் திசைதிருப்பும் விதத்தில் வேறு வழிகளிலோ அலங்கரிப்பதையும் மார்க்கம் தடுக்கிறது. நோன்பைத் துறக்காமல், ஒரு நாளை இன்னொரு நாளுடன் இணைத்துப் பிடிப்பதும், ஒரு பெண் தன் கணவர் இருக்கும் தருவாயில் அவரது அனுமதியின்றி உபரியான நோன்புகளை நோற்பதும் தடுக்கப்பட்டுள்ளன.

மண்ணறைகள் மீது கட்டிடம் அமைப்பது, அவற்றை உயர்த்திக் கட்டுவது, அவற்றின் மேல் அமர்வது, செருப்புக்களுடன் மேலால் நடந்து செல்வது, அங்கு விளக்கேற்றுவது, அதன் மேல் எழுதுவது, மண்ணறையைத் தோண்டி பிரேதத்தை வெளியே எடுப்பது, மண்ணறைகளைத் தொழுமிடங்களாக எடுத்துக்கொள்வது அனைத்துமே தடுக்கப்பட்டவையாகும். ஒருவர் மரணித்ததற்காக ஒப்பாரி வைப்பது, ஆடைகளைக் கிழித்துக் கொள்வது, தலைமுடியை விரித்துப் போடுவது என்பவற்றையும் மார்க்கம் தடைசெய்துள்ளது. ஜாஹிலிய்யாக் கால மரண அறிவிப்பு முறையைத் தடைசெய்துள்ளது. சாதாரணமாக ஒருவர் மரணித்ததை அறிவிப்பதில் குற்றம் கிடையாது.

வட்டி சாப்பிடுவது தடுக்கப்பட்டுள்ளது. ஏமாற்றம், அறியாமை உள்ளடங்கியுள்ள அனைத்து வியாபார முறைகளையும் தடுத்துள்ளது. இரத்தம், பன்றி, மது, சிலைகள் போன்றவற்றை விற்பது தடுக்கப்பட்டுள்ளது. தடுக்கப்பட்டுள்ள எந்த ஒன்றையும் விற்பது மற்றும் வாங்குவது தடுக்கப்பட்டதாகும். “நஜ்ஷ்” வியாபாரத்தைத் தடுத்துள்ளது. அதாவது, - இன்று பெரும்பாலான ஏல விற்பனை இடங்களில் நடப்பதுபோல – வாங்கும் எண்ணம் இல்லாத ஒருவர் (வாங்குபவருக்கை நட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில்) பொருளின் விலையை கூட்டி கேட்பதே நஜ்ஷாகும். ஒரு பொருளை விற்கும்போது இருக்கும் குறையைச் சொல்லாமல் அல்லது காட்டாமல் மறைத்து வைப்பது கூடாது. தனக்கு சொந்தமில்லாத ஒரு பொருளை விற்பது, ஒரு பொருளை கையகப்படுத்த முன் விற்பது, தன் சகோதர முஸ்லிமின் விற்பனையை பாதிக்கும் விதத்தில் விற்பது, சகோதர முஸ்லிமை வாங்க விடாமல்  தான் வாங்குவது, அவன் பேசும் விலைக்கு எதிராக விலைபேசுவது என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன. மரத்தில் இருக்கும் பலஙகள் உண்ணமுடியுமான நிலமைக்கு வந்து, ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கப்படும் வரை விற்பதும், விற்பதும் அளவை நிறுவைகளில் மோசடி செய்வது தடுக்கப்பட்டுள்ளது பதுக்கல் வியாபாரம் முறையும் கூடாது.

இருவருக்கு சொந்தமான ஒரு பூமியிலோ மரத்தோட்டம் போன்றதிலோ தன் பங்கை விற்க முற்படும் போது அடுத்தவரிடம் முதலில் கேட்காமல் விற்பது தடுக்கப்பட்டுள்ளது. அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாகச் சாப்பிடல், சூதாடிப் பெற்றவற்றை சாப்பிடல் என்பவை தடுக்கப்பட்டுள்ளன. சூதாடுதல், பிறர் சொத்தைப் பறித்தல், இலஞ்சம் வாங்குதல், கொடுத்தல், மக்கள் பணத்தை கொள்ளையடித்தல், தவறான வழியில் அதைச் சாப்பிடல், சேதப்படுத்தும் நோக்கில் அவற்றை எடுத்தல் அனைத்துமே தடுக்கப்பட்டவையாகும். மக்களுக்குக் கொடுக்க வேண்டியதை குறைத்துக் கொடுத்தல், புறக்கியெடுக்கப்பட்ட பொருட்களை மறைத்தல், ஒளித்து வைத்தல், தேடிக் கொடுக்கும் நோக்கிலேயே அன்றி அவ்வாறானவற்றை எடுத்தல் என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன. அனைத்துவிதமான ஏமாற்றங்களும் தடுக்கப்பட்டுள்ளன. திருப்பிக் கொடுக்கும் நோக்கமில்லாமல் கடனெடுப்பது, சகோதர முஸ்லிமின் மனவிருப்பமின்றி அவனது சொத்துக்களை எடுப்பது என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன. ஒருவனது வெட்கத்தைப் பயன்படுத்தி அவரது உடைமைகளை எடுப்பதும் ஹராமாகும். சிபாரிசு செய்த செய்தமைக்காக வழங்கப்பட்ட அன்பளிப்பு தடுக்கப்பட்டதாகும்.

திருமணமுடிக்காமல் இருப்பது, இச்சை நீக்கம் செய்துகொள்வது, இரு சகோதரிகளை சமகாலத்தில் மனைவியாக வைத்துக் கொள்வது, ஒரு பெண்ணையும் அவளது சாச்சியையும் அல்லது மாமியையும் சமகாலத்தில் மனைவியாக வைத்துக் கொள்வது, அல்லது ஒரு பெண்ணையும் அவளது சகோதரியின் மகளையுமோ, சகோரனின் மகளையுமோ சமகாலத்தில் முடிப்பது என்பவையும் குடும்பங்களுக்கு இடையில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் தடுக்கப்பட்டுள்ளன.

‘சிஙார்’ திருமண முறை தடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உனது மகளை அல்லது சகோதரியை எனக்கு திருமணம் செய்து தா. பதிலுக்கு, எனது மகளை அல்லது சகோதரியை நான் உனக்குத் திருமணம் செய்து தருகிறேன் என்று கூறுவதுதான் அத்திருமணமாகும். இங்கு (மஹர் இல்லாமல்) ஒருவருக்குப் பதிலாக மற்றவர் திருமணம் செய்து வைக்கப்படுகிறார். இது ஹராமாகும். அநியாயமுமாகும்.

‘முத்ஆ’ திருமணம் தடுக்கப்பட்டுள்ளது. அதாவது இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, குறிப்பிட்ட ஒரு தவணைக்கு திருமணம் செய்வதாகும், தவணை முடிந்ததும் ஒப்பந்தமும் முறிந்துவிடும். மாதவிடாய்க் காலத்தில் பெண்ணுடன் தாம்பத்தியம் புரிவதும் தடுக்கப்பட்டுள்ளது. சுத்தமான பின்னரே உறவில் ஈடுபடமுடியும். மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. சகோதர முஸ்லிமின் திருமணப் பேச்சுவார்த்தையில் (அவர் கைவிட்டாலோ அல்லது அனுமதி தந்தாலோ தவிர) இன்னொருவர் பேச முன்வருவது, விதவைப் பெண்ணின் வாய்மொழி ஒப்புதலின்றி அவளுக்கு திருமணம் செய்துவைப்பது, கன்னிப் பெண்ணின் அனுமதியின்றி அவளுக்கு திருமணம் செய்து வைப்பது என்பவையெல்லாம் தடுக்கப்பட்டவை ஆகும். (சந்தோசமாக வாழ்நது, ஆண்மக்களைப் பெற்றெடுங்கள் என்ற அர்த்தத்தில்) ‘பிர்ரிபாஇ வல்பனீன்’ என வாழ்த்துச் சொல்வது தடுக்கப்பட்டதாகும். அது ஜாஹிலிய்யாக் கால வாழ்த்து முறையாகும். அக்கால மக்கள் பெண்மக்களை வெறுத்தார்கள். மணவிலக்கு செய்யப்பட்ட பெண் தன் கருவில் அல்லாஹ் படைத்துள்ளதை மறைப்பது, கணவன் மனைவியர் தமக்கு மத்தியில் நடைபெற்ற உடலுறவு சம்பந்தமாக வெளியில் கதைப்பது, ஒரு பெண்ணை கணவனுக்கு எதிராகத் தூண்டி விடுவது, மணவிலக்கு வார்த்தைகளில் விளையாடுவது, ஒரு பெண் ஒருவரிடம் சென்று அவரது மனைவியையோ அல்லது நிச்சயிக்கப்பட்டவரையோ, தன்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக மணவிலக்கு செய்யுமாறு வேண்டுவது, கணவன் அனுமதியின்றி மனைவி அவரது பணத்தை செலவழிப்பது என்பவையெல்லாம் தடுக்கப்பட்டுள்ளன. கணவனின் படுக்கையை விட்டு ஒரு பெண் வெறுத்து ஒதுங்கலாகாது. மார்க்க அனுமதியின்றி அவ்வாறு செய்தால் மலக்குமார்கள் அவளை சபிப்பார்கள். ஓர் ஆண் தன் தந்தையின் மனைவியை திருமணம் முடிப்பது, வேறு ஆணின் மூலம் கர்ப்பம் அடைந்த பெண்ணுடன் உறவு கொள்வது, தனது சுதந்திரமான மனைவியுடன் அவள் அனுமதியின்றி அஸ்ல் (அஸ்ல் என்பது உடலுறவில் ஈடுபடும் போது, விந்து வெளியேறும் தருவாயில் அதை வெளியே விட்டுவிடுவதாகும்.) செய்வது என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதன் பயணத்தில் இருந்து வந்து இரவு நேரத்தில் திடீரென வீட்டுக்கதவைத் தட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வரும் நேரத்தை அறிவித்திருந்தால் குற்றம் கிடையாது. மனைவியின் மனவிருப்பமின்றி அவரது மஹரில் இருந்து கணவன் எடுப்பது கூடாது. அவளிடம் இருந்து பணம் பெற்று “குல்உ” செய்துகொள்வதற்காக அவளுக்கு அநியாயம் செய்து கொண்டிருப்பதும் கூடாது.

பெண்கள் அலங்காரங்களைக் காட்டிக் கொண்டு வெளியே செல்வது, பெண் விருத்தசேதனம் விடயத்தில் அளவு கடந்து செல்வது என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன. கணவன் அனுமதியின்றி வீட்டில் யாரையும் நுழைய வைப்பது கூடாது. மார்க்கத்துக்கு முரணாகாத விதத்தில் அவரது பொது அனுமதி போதுமானது. தாயையும் பிள்ளையையும் பிரித்து விடுவது, மனைவி மானக்கேடானவற்றில் ஈடுபட அனுமதிப்பது, அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பது, அந்நியப் பெண்ணை நோக்கிப் பார்வையை செலுத்துவது, ஒரு பார்வைக்குப் பின்னர் மீண்டும் பார்வையை செலுத்துவது என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன. இறந்த பிராணிகள் தடுக்கப்பட்டுள்ளன. அது மூழ்கியோ, கழுத்து நெரிக்கப்பட்டோ, மின் பாய்ச்சப்பட்டோ, உயர்ந்த இடத்தில் இருந்து விழுந்தோ மரணத்திருக்கலாம். இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை, சிலைகளுக்கு அறுக்கப்பட்டவை எல்லாம் தடுக்கப்பட்டுள்ளன.

அசுத்தங்கள், அழுக்குகளை சாப்பிடும் பிராணியின் (الجلالة) இறைச்சியை சாப்பிடுவது, அதன் பாலைக் குடிப்பது, வேட்டைப் பல் உள்ள மிருகங்களைச் சாப்பிடுவது, வேட்டை நகம் உள்ள பறவைகளைச் சாப்பிடுவது, கழுதை இறைச்சி சாப்பிடுவது, பிராணிகளைப் பிடித்து அவற்றின் மீது ஏதாவதொன்றை வீசிக் கொள்வது, உணவு கொடுக்காமல் அடைத்துவைப்பது, நகம், பற்கள் போன்றவற்றால் அறுப்பது, ஒரு மிருகத்தை இன்னொன்றின் முன்னால் அறுப்பது, அதன் முன்னிலையில் கத்தியைக் கூர்மையாக்குவது என அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன.

ஆடை அலங்காரங்களில், ஆடைகளை வீண்விரயம் செய்வது, ஆண்கள் தங்கம் அணிவது, நிர்வாணமாக இருப்பது, நிர்வாணமாக நடந்து செல்வது, தொடைகளை வெளிக்காட்டுவது என்பவையெல்லாம் தடுக்கப்பட்டுள்ளன. ஆடைகளை கரண்டை காலுக்கு கீழ் ஆகும் வரை நீட்டமாக அணிவது, பெறுமைக்காக ஆடைகளை நிலத்தில் படுமாறு இழுத்துச் செல்வது, பிரபல்யத்தைத் தரும் ஆடைகளை அணிவது என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன. பொய்ச்சாட்சியம் கூறுவது, ஒழுக்கமான பெண் மீது படுதூறு கூறுவது, குற்றமற்றவன் மீது இட்டுக்கட்டுவது ஆகியவையும் தடுக்கப்பட்டுள்ளன.

நாவினாலோ, செயலினாலோ அடுத்தவரைத் தரம் தாழ்த்திக் குத்திக்காட்டுவது, பட்டப் பெயர்களைச் சூட்டுவது, புறம் பேசுவது, கோள் கூறித் திறிவது, முஸ்லிம்களை ஏளனம் செய்வது, வம்சங்களை வைத்துப் பெருமை பேசுவது, குடும்பங்களை இகழ்ந்து பேசுவது, ஏசிக் கொள்வது, கெட்ட வார்த்தைகளைப் பேசுவது, அநீதமிழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாராவது கெட்ட விடயங்களை பகிரங்கமாகக் கூறுவது என அனைத்துமே தடுக்கப்பட்டுள்ளன.

பொய் தடுக்கப்பட்டுள்ளது அவற்றில் மிக மோசமான ஒன்று, கனவில் போய் கூறுவதாகும் அதாவது ஒரு சிறப்பையோ அல்லது ஓர் உலக இலாபத்தையோ, அல்லது தனது எதிரிகளை அச்சுறுத்தும் நோக்கிலோ கனவுகளைக் கற்பனை செய்து கூறுவதாகவும். ஒரு மனிதன் தன்னையே தூய்மைப் படுத்திப் பேசுவது, ஒரு முஃமினை சபிப்பது, சாபத்திற்கு தகுதியற்றவர்களை சபிப்பது என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன மூன்று பேர் இருக்கும்போது இருவர் மாத்திரம் இரகசியம் பேசுவதும் தடுக்கப்பட்டுள்ளது. அது மூன்றாம் நபரை கவலைக்குள்ளாக்கும் என்பதே அதன் நோக்கம் ஆகும்

மரணித்தவர்களை ஏசுவது, தனக்கேற்பட்ட ஒரு துன்பத்திற்காக மரணத்தைக் கேட்டு துஆச் செய்வது, அல்லது மரணத்தை ஆசைப்படுவது, தனக்கெதிராக, தன் பிள்ளைகள், சொத்து மற்றும் பணியாளர்களுக்கு எதிராக துஆக் கேட்பது அனைத்துமே தடுக்கப்பட்டதாகும்.

அடுத்தவர்களுக்கு முன்னாள் இருப்பவற்றை சாப்பிடுவது, உணவுத் தட்டின் மத்தியிலிருந்து சாப்பிடுவது கூடாதவையாகும். மாறாக, ஓரத்திலிருந்தே சாப்பிடுவார். உணவின் மத்தியிலேயே பரக்கத் (அபிவிருத்தி) இறங்குகின்றது. பாத்திரத்தின் உடைந்த பகுதியால் அருந்தி தன்னை நோவித்துக்கொள்வது, பாத்திரத்தில் வாயை வைத்துக் குடிப்பது, அதில் மூச்சுவிடுவது, வயிற்றை நிலத்தில் ஒட்டிய வண்ணம் சாய்ந்து கொண்டு சாப்பிடுவது, மது பரிமாறப்படும் உணவு மேசையில் உட்காருவது என்பவையும் தடுக்கப்பட்டவையாகும்.

நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் உறங்குவது, கையில் உணவுக்கொழுப்புக்கள் இருக்க உறங்குவது, முகம் குப்புறப் படுப்பது, அருவருப்பான கனவுகளை அடுத்தவர்களிடம் கூறுவது, அல்லது அதற்கு விளக்கம் கூறுவது என்பவையெல்லாம் தடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறான கனவுகள் i~த்தானின் விளையாட்டுக்களில் ஒன்றாகும்.

நியாயமின்றி ஓர் உயிரைக் கொல்வது, வறுமையைப் பயந்து பிள்ளைகளை கொலை செய்வது, தற்கொலை செய்துகொள்வது, விபச்சாரம் மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, மது அருந்துவது, அதைத் தயாரிப்பது, சுமந்து செல்வது மற்றும் விற்பது, அல்லாஹ்வைக் கோபத்துக்கு உள்ளாக்கிக் கொண்டு மனிதர்களை திருப்திப்படுத்துவது, பெற்றோர்களைக் கடிந்து கொள்வது, அவர்களைப் பார்த்து “சீ” என்றாவது கூறுவது, ஒரு மனிதன் தனது தந்தை அல்லாத ஒருவனை தன் தந்தை என்பது, நெருப்பால் வேதனை செய்வது, உயிருள்ளவர்களையோ உயிரற்றவர்களையோ நெருப்பால் எரிப்பது, மரணித்தவர்களை சித்திரவதை செய்வது, உடல்களை சிதைப்பது, அசத்தியத்திற்கும் பாவங்களுக்கும் வரம்பு மீறல்களுக்கும் உதவுவது, அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் யாருக்காவது வழிப்படுவது, பொய்ச் சத்தியம் செய்வது, ஏமாற்றுச் சத்தியம் செய்வது, ஒரு கூட்டத்தினரின் பேச்சை அவர்கள் அனுமதி இன்று கேட்டுக் கொண்டிருப்பது, மறைவான இடங்களை எட்டிப் பார்ப்பது, தனக்கில்லாததை தனக்காக வாதிடுவது, தனக்கு இல்லாத சிறப்பொன்றை இருப்பதாகக் கூறிக்கொள்வது அனைத்துமே தடுக்கப்பட்டவையாகும்.

தான் செய்யாத ஒன்றுக்காக புகழை அடைய முயற்சிப்பது, ஒரு கூட்டத்தினரின் வீட்டை அவர்கள் அனுமதி இன்றி எட்டிப்பார்ப்பது, வீண் விரயம் செய்வது பாவத்தில் சத்தியம் செய்வது, துருவித் துருவி ஆராய்வது, நல்ல ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றி தப்பெண்ணம் வைப்பது, பொறாமை கொள்வது, விரோதம் பாராட்டுவது, உதவி செய்யாமல் பின்வாங்குவது அனைத்துமே தடுக்கப்பட்டவையாகும். அசத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, பெருமை, கர்வம், அகம்பாவம், தற்பெருமை, அகம்பாவ மகிழ்ச்சி என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதன் தான் தர்மமாக வழங்கியதை மீளப்பெறுவது, கூலிக்காரனிடமிருந்து வேலையை முழுமையாக வாங்கிய பின் கூலியை கொடுக்காமல் விடுவது, பிள்ளைகளுக்கு மத்தியில் அன்பளிப்புக்கள் வழங்குவதில் நீதம் செலுத்தாமல் இருத்தல் என்பவையும் தடுக்கப்பட்டவையாகும். தனது சொத்துக்களை முழுமையாக வஸியத் (மரண உயில்) செய்துவிட்டு தன் பிள்ளைகளை ஏழைகளாக விட்டுச் செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது அவ்வாறு செய்தால் அந்த உயிலில் மூன்றில் ஒரு பகுதி மாத்திரமே செயற்படுத்தப்படும்.

அயல் வீட்டாருடன் மோசமாக நடந்துகொள்வது, வஸியத்தில் யாருக்காவது பாதிப்பை ஏற்படுத்துவது, ஒரு முஸ்லிமை மார்க்கக் காரணம் இன்று மூன்று நாட்களுக்கு மேல் விரோதித்து நடப்பது என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன. இரு விரல்களுக்கு மத்தியில் கற்களை வைத்து எறிவது (சொட்டுவது) தடுக்கப்பட்டுள்ளது. பற்கள் உடைக்கப்படல், கண்கள் குருடாகல் போன்ற பாதிப்புக்களை அது ஏற்படுத்த வாய்ப்புள்ளது. வாரிசுகளுக்கு (தனது மரணத்தின் பின் தனது சொத்துக்களிலிருந்து வழங்குமாறு) வஸிய்யத் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. காரணம், அவர்களுக்கு அல்லாஹ் ஏற்கனவே அவர்களது உரிமைகளை கொடுத்துள்ளான் என்பதுவாகும். அண்டை வீட்டாரை நோவினை செய்வது தடுக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு முஸ்லிம் தன் சகோதரனை நோக்கி வாளை உருவுவது, அவ்வாறு வாளை உருவிய நிலையில் அதனைப் பரிமாறிக்கொள்வது ஆகியவையும், ஏதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் தடுக்கப்பட்டுள்ளன. ஒன்றாக இருக்கும் இருவரை அவர்களது அனுமதி என்று பிரித்து அமர வைப்பது, மார்க்க ரீதியான எந்த ஒரு தடையும் இல்லாத அன்பளிப்புக்களை திருப்பி அனுப்புவது, வீண் விரயம் செய்வது, புத்தி குறைந்தவர்களிடம் பணத்தை கையளிப்பது, ஆண் பெண்களில் அல்லாஹ் ஒருவருக்கு வழங்கியுள்ள சிறப்புக்களை அடுத்தவர் ஆசைப்படுவது, சொல்லிக் காட்டல் மற்றும் தொல்லை கொடுத்தல் என்பவற்றின் மூலம் தர்மத்தை பாலாக்கிவிடல், சாட்சியத்தை மறைப்பது, அனாதைகளை அடக்கி ஆள்வது, யாசகனை விரட்டுவது என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன.

அசுத்தமான மருந்துகளைக் கொண்டு மருத்துவம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது ஏனெனில் இந்த சமுதாயத்தின் ஆரோக்கியத்தை தடுக்கப்பட்டவற்றில் அல்லாஹ் வைக்கவில்லை. சிறுவர்கள் மற்றும் பெண்களை யுத்தகளத்தில் கொள்வது, ஒருவர் இன்னொருவரை விட தன்னை உயர்த்தி பெருமை பேசுவது, வாக்குக்கு மாறு செய்வது, அமானிதத்தில் மோசடி செய்வது, தேவையின்றி மக்களிடம் உதவி கேட்பது, ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமை அச்சுறுத்துவது அல்லது அவனது பொருட்களை உண்மையாகவோ விளையாட்டாகவோ எடுப்பது என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன. ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு வழங்கிய அன்பளிப்பை மீளவும் பெறுவதைத் தவிர யாரும் தான் கொடுத்த அன்பளிப்பை மீளப்பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. அனுபவம் இன்றி வைத்தியம் செய்வது, எறும்பு, தேனீ, ஹுத்ஹுத் பறவை (கொண்டலாத்தி) போன்ற பிராணிகளைக் கொல்வதும் ஒரு ஆண் இன்னொரு ஆணின் அவ்ரத்தைப் பார்ப்பதும், ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அவ்ரத்தைப் பார்ப்பதும், இருவருக்கு மத்தியில் அவர்கள் அனுமதியின்றி அமர்வதும் தடுக்கப்பட்டுள்ளது. அறிந்தவர்களுக்கு மாத்திரம் சலாம் சொல்வது தடுக்கப்பட்டுள்ளது. மாறாக, அறிந்தவர் அறியாதவர் இருவருக்கும் சொல்வது அவசியமாகும். சத்தியத்தை நல்லறங்கள் செய்வதற்கு தடையாக வைத்திருப்பதும் தடுக்கப்பட்டதாகும் மாறான நல்ல காரியத்தை செய்து விட்டு தான் முறித்த சத்தியத்திற்காக குற்றப்பரிகாரம் வழங்குவார்.

கோபத்தோடு இருக்கும் தருவாயில் இருவருக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவது, ஒருவரின் குற்றச்சாட்டை மாத்திரம் விசாரித்துவிட்டு அவருக்கு சார்பாகத் தீர்ப்பு வழங்குவது, ஒருவர் சந்தையில் நடந்து செல்லும் போது, கூர்மையான, திறந்த கருவிகள் போன்ற, முஸ்லிம்களுக்கு நோவினை தரும் பொருட்களைக் கையில் கொண்டுசெல்வது, ஒரு மனிதனை அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுப்பிவிட்டு தாம் அமர்வது, ஒருவருடன் அமர்ந்துகொண்டிருக்கும் போது அவரது அனுமதி கேட்காமல் எழுந்துசெல்வது என்பவையும் தடுக்கப்பட்டுள்ளன.

இது போன்ற ஏவல்கள், தடைகள் அனைத்துமே ஒட்டுமொத்த மனிதகுலத்தின் சுபீட்சத்திற்காகவே வழங்க்ப்பட்டுள்ளன. அன்புள்ள சகோதரியே! இது போன்ற ஒரு மார்க்கத்தை நீங்கள் கண்டுள்ளீர்களா? அல்லது அறிந்துள்ளீர்களா?

மீண்டும் இப்பதிலை வாசித்துப் பாருங்கள். இம்மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களில் ஒருவராக நீங்கள் இல்லாமல் இருந்தால் அது நட்டமில்லையா?

அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான், ‘யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எடுத்துக்கொள்கின்றாரோ, அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.’ (ஸூரா ஆலு இம்ரான் : 85)

இறுதியாக, உங்களுக்கும் இப்பதிலை வாசிக்கும் அனைவருக்கும் சத்தியத்தைப் பின்பற்றவும், சரியான பாதையை அடையவும் அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் கேட்கின்றேன். அல்லாஹ் எங்கள் அனைவரையும் அனைத்துவிதமான கெடுதிகளிலிருந்தும் பாதுகாப்பானாக!

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
இஸ்லாத்தின் தனிச் சிறப்பம்சங்கள் - Islam Question & Answer