0 / 0
16/ரபி/1446 , 19/செப்டம்பர்/2024

அல்லாஹ்வுக்கு அடிமையாதல் என்பதன் யதார்த்தம்

கேள்வி: 49016

11804 ஆம் இலக்கக் கேள்வியில் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம், வணக்கங்கள் மூலம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது தான் என்று வாசித்தேன். “வணக்கங்கள்” என்பதன் எதார்த்தத்தைத் தெளிவுபடுத்தமுடியுமா? 

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அரபுமொழியில் “இபாதத்” என்பது தாழ்மை, பணிவு என்பவற்றைக் குறிக்கும் அரபிகள், அதிகம் நடக்கப்பட்டதன் மூலமாக தாழ்ந்து போயுள்ள பாதைக்கு “தரீகுன் முஅப்பத்” என்று சொல்லுவார்கள்.

மார்க்கத்தில் இபாதத் என்பது இரண்டு விடயங்களுக்காகப் பயன்படுத்தப்படும்:

1. ஓர் அடியானின் தொழுகை, ஸகாத் கொடுத்தல் போன்ற செயல்கள். இவ்வாறு செய்வது இபாதாவாகும். இதனை அறிஞர்கள் இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகின்றனர், “அல்லாஹ்வை நேசித்தல், பயப்படல், ஆதரவு வைத்தல் என்பவற்றுடன் அவனது கட்டளைகளை எடுத்து நடப்பதும் அவனது தடைகளை தவிர்ப்பதும்” ஆகும்.

2. ஏவப்பட்ட செயல் - அவற்றை யாரும் செய்யாவிட்டாலும் சரியே – உதாரணமாக, தொழுகை, ஜக்காத் என்பவற்றை போல. உலமாக்கள் இதனை இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகின்றார்கள்:

“வணக்கம் என்ற பெயர், அல்லாஹ் விரும்பும், பொருந்திக் கொள்ளும் வெளிப்படையான, மறைமுகமான செயல்கள் மற்றும் சொற்கள் அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளும்” இக்கடமைகள் இபாதத்துக்கள் என அழைக்கப்படக் காரணம் என்னவென்றால், இவற்றை முஃமீன்கள் தமது ரப்பை நேசித்தவர்களாக, அவன் முன்னிலையில் தாழ்மையும், பணிவும் கொண்டவர்களாகவே செய்கின்றனர், எனவே, அல்லாஹ்வை வணங்குவதில், முழுமையாக நாம் அவனை நேசிப்பதும் முழுமையாக அவனிடம் எம்மைத் தாழ்த்திக் கொள்வதும் அவசியமாகும்.

எமது இரட்சகன், தான் மனிதர்களையும் ஜின்களையும் படைத்ததன் உயரிய இலக்கு மற்றும் பிரதான நோக்கம், எந்தவொரு இணையும் இன்றி அவனை மாத்திரம் வணங்குவதற்காகவே என்று தெளிவாக கூறியுள்ளான். அவன் கூறுகின்றான், “ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை” (அத்தாரியாத் : 56) 

இந்த இலக்கை நாம் எவ்வாறு அடைவது? இந்த நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுவது? 

பெரும்பாலான மனிதர்களின் எண்ணம் என்னவென்றால் வணக்கம் என்பது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற குறிப்பிட்ட சில நேரங்களில் நிறைவேற்றப்படும், அல்லாஹ் ஏவியுள்ள சில வணக்க வழிபாடுகள் மாத்திரம் தான்! அவற்றிற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை! இவ்வாறு இவர்கள் நினைப்பது போல் அல்ல!

இந்த வணக்க வழிபாடுகள் ஒரு நாளின் எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கின்றன? அதற்கும் அப்பால், ஒரு மனிதனின் வாழ்நாளில் எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கின்றன?

அப்படியாயின் வாழ்நாளில் மிஞ்சிய பகுதிகள் எங்கே? எஞ்சிய சக்தி எங்கே? எஞ்சிய நேரம் எங்கே? அவை எங்கு செலவழிக்கப்படுகின்றன? எங்கு செல்கின்றன? வணக்கங்களிலா அல்லது ஏனையவற்றிலா செலவழிக்கப்படுகின்றன? அவ்வாறு வணக்கம் அல்லாதவற்றில் செலவழிக்கப்பட்டால் மேற்கூறிய வசனம் வரையறுத்துக் கூறிய “அல்லாஹ்வை வணங்குதல்” என்ற மனித படைப்பின் நோக்கம் எவ்வாறு நிறைவேறும்? “எனது தொழுகை, குர்பானி, வாழ்வு, மரணம் (அனைத்துமே) அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது! என்று (நபியே) நீர் கூறுவீராக” (அல்அன்ஆம் : 162)  என்ற இறைவசனம் எவ்வாறு உண்மையாகும்?

வணக்கம் என்பது ஒரு முஸ்லிமின் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கும் ஒரு விடயம். அவன் வாழ்வாதாரம் தேடி உலகில் சுற்றித் திரியும் போதும் அல்லாஹ்வை வணங்குகின்றான். ஏனெனில், அவனது ரப்பு அதனை ஏவியுள்ளான் அல்லாஹ் கூறுகின்றான், “ஆகவே, அதன் (பூமியின்) பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.” (ஸூரா அல் முல்க் - 15) அவன் உறங்கும் போதும் அல்லாஹ்வை வணங்குவதற்காக தன்னைப் பலப்படுத்தும் நோக்கிலேயே உறங்குகின்றான். முஆத் (ரழி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் “நான் நின்று வணங்குவதை வணக்கமாகச் செய்வது போல தூக்கத்தையும் வணக்கமாகவே செய்கின்றேன். (புகாரி: 4342) அதாவது அவர் தொழுகையில் நன்மையை எதிர்பார்ப்பது போல, தூக்கத்திலும் நன்மையை எதிர்பார்க்கின்றார். அதற்கும் மேலாக, ஒரு முஸ்லிம் உணவு, பானம், உடலுறவு என்பவையும் தனது நன்மைகளின் தட்டில் சேர வேண்டும் என்பதையே விரும்புவான். நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “உங்களில் ஒருவருடைய அபத்திலும் தர்மம் உள்ளது” அப்போது நபித்தோழர்கள், “எங்களில் ஒருவர் தனது இச்சையைத் தானே நிறைவேற்றுகின்றார். அதிலுமா நன்மையுள்ளது? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “அதனை ஹராமான விதத்தில் நிறைவேற்றிக் கொண்டால் பாவம் உள்ளதல்லவா? என்று கேட்டார்கள். அதற்கு தோழர்கள் “ஆம்” என்றார்கள். அப்போது நபியவர்கள் “அவ்வாறுதான், ஹலாலான விதத்தில் அதை நிறைவேற்றினால் நன்மையும் உண்டு” என்றார்கள். (முஸ்லிம் 1006)

இந்த மகத்தான அந்தஸ்தை அடைவதற்கான வழி என்னவென்றால், ஓர் அடியான் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் போதும் தனது இரட்சகனின் நினைவை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது, தான் இருக்கும் இவ்விடம் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துமா? அல்லது கோபப்படுத்துமா? எனத் தன்னிடமே கேட்டுக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் விதமாக இருந்தால் அவனைப் புகழ்ந்துவிட்டு மேலும் நன்மைகளை அதிகரித்துக் கொள்ளட்டும்! அவ்வாறு இல்லாவிட்டால் உடனே அல்லாஹ்விடம் மன்னிப்புக்கேட்டு பாவமீட்சி பெற்றுக் கொள்ளட்டும். அவ்வாறுதான் அல்லாஹ்வின் இறையச்சம் கொண்ட அடியார்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் “அவர்கள் மானக்கேடான பாவமொன்றைச் செய்துவிட்டால் அல்லது தமக்குத் தாமே அநீதமிழைத்துக்கொண்டால் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, தம் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யார்தான் பாவங்களை மன்னிப்பார்? மேலும், அவர்கள் அறிந்துகொண்டே தாம் செய்தவற்றில் தொடர்ந்து இருக்கமாட்டார்கள். அவர்களுக்கான கூலி அவர்களது ரப்பிடமிருந்து பாவமன்னிப்பும், சுவனங்களுமாகும். அவற்றிற்குக் கீழால் ஆறுகள் ஓடும். நல்லறம் புரிபவர்களுக்கு அதுவே சிறந்த கூலி” (ஆலு இம்ரான் : 135)

நபித்தோழர்கள் உட்பட எமது முன் சென்ற நன்மக்கள் வணக்கம் என்பதை இவ்வாறு தான் உணர்ந்திருந்தார்கள். வழிபாடுகள் என்பவற்றில் மாத்திரம் அதனைச் சுருக்கிக்கொள்ளவில்லை. அவ்வாறு என்றால் அந்த வழிபாடுகள் மாத்திரமே வணக்கங்களாகவும் அவர்களது வாழ்வில் ஏனைய நேரங்கள் வணக்கங்களுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்திருக்கும். மாறாக, அவர்களது உணர்வில் வாழ்க்கை முழுவதுமே வணக்கமாக இருந்தது. அந்த வழிபாடுகள் என்பவை எதிர்பார்க்கப்படும் ஏனைய வணக்கங்களை நிறைவேற்ற உதவும் ஈமானின் பலத்தைப் பெற்றுத்தரும், ஆழ்ந்த கவனக்குவிப்புடன் கூடிய நொடிப்பொழுதுகளாக இருந்தன. அதனாலேயே அவர்கள் அவற்றில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். ஒரு பயணி தன் பயணத்துக்கு உதவும் கட்டுச் சாதனங்களை கவனிப்பது போன்றும் அதனை பெற்றுக் கொள்ளும் நிமிடங்களில் மிக கவனமாக இருப்பது போன்றும் ஆனது அது.

“அவர்கள் அல்லாஹ்வை நின்ற நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும், விலாப்புறங்களில் சாய்ந்த நிலையிலும் நினைவுகூர்வார்கள்”(ஆலு இம்ரான் 191) என்று அவர்களது ரப்பு கூறுவது போன்று, எல்லா நிலைமைகளிலும் இருந்தார்கள். நாவினால் திக்ர் செய்வதுடன் உள்ளத்தாலும் செய்தார்கள். அவர்கள் எச்செயலை செய்தாலும், என்ன வார்த்தை பேசினாலும் அல்லாஹ்வின் மகத்துவம் மற்றும் பயபக்தி என்பவை அவர்களது உள்ளத்தில் எப்போதும் முன்னிலையில் இருந்தது. ஏதாவது தவறுதலாக தவறிழைத்து விட்டால் ஏற்கனவே சூரா ஆலு இம்ரானின் வசனங்களில் கூறப்பட்டது போன்று தான் அவர்களின் நிலை இருக்கும்.

அறிந்துகொள்! - அல்லாஹ் உனக்கு அருள் புரியட்டும் - ஒவ்வொரு மனிதனும் இயல்பிலேயே வணங்குபவனாகத் தான் இருக்கின்றான். அதாவது, வணங்குதல் என்பது அவனது இயல்புகள் ஒன்று. எனவே, ஒன்றில் எந்த ஒரு இணையும் இன்றி அல்லாஹ்வை மாத்திரம் வணங்குபவனாக இருப்பான். அல்லது அல்லாஹ்வைத் தவிர அவனுடனோ, அவன் அன்றியோ இன்னொருவனை வணங்குபவனாக இருப்பான். (அல்லாஹ்வை விட்டுவிட்டு வணங்குதல், அல்லாஹ்வுடன் வணங்குதல்) ஆகிய இரண்டுமே சமனானது தான்! இந்த வணக்கத்திற்கே அல்லாஹ் “ஷைத்தானை வணங்குதல்” எனக் கூறுகின்றான் அங்கு i~த்தானின் அழைப்புக்கு பதில் அளிக்கப்படுவதுதான் அதன் காரணம். அல்லாஹ் கூறுகின்றான், “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?” (ஸூரா யாஸீன் : 60) அல்லாஹ்வை வணங்கும் மனிதனின் வாழ்வும், i~த்தானை வணங்கும் மனிதனின் வாழ்வும் சமமாகமாட்டாது. அல்லாஹ் கூறுகின்றான், “முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.” (ஸூரா அல்முல்க் : 22) “மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? (ஸூரா அர்ரஃத் : 16)

மனிதனை அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் தூரமாக்க i~த்தான் படிப்படியாக முயற்சிப்பான். சில போது தற்காலிகமாக அவனை தூரமாக்குவதில் வெற்றிபெறுவான். உதாரணமாக, பாவத்தைக் கொண்டு தூரமாக்குவது போல. “விபச்சாரம் செய்பவன் முஃமினாக இருக்கும் நிலையில் விபச்சாரம் செய்யமாட்டான். திருடுபவன் முஃமினாக இருக்கும் நிலையில் திருடமாட்டான்.” (புகாரி : 2475, முஸ்லிம் : 57) சில போது முழுமையாகவே தூரமாக்கி விடுவான். அப்போது அவனுக்கும் அவனது ரப்புக்கும் இடையிலான தொடர்பு முறிந்து, அவன் இணைவைக்கவும், மறுக்கவும், நிராகரிக்கவும் செய்வான்.

இவ்வாறு i~த்தானை வணங்குவதில் மனோ இச்சையை வழிப்படுவதும் அடங்கும். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான், “தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா? ?” (ஸூரா அல்புர்கான் : 43) தன் மனோ இச்சையின் ஏவலுக்கு கட்டுப்படும் அடியான் தான் இவன். அது அழகாகக் காண்பதை செய்வான். அது அசிங்கமாகக் காண்பதை விட்டுவிடுவான். அவன் தன் மனோ இச்சைக்கு வழிபடுபவன். அது எதை நோக்கி அழைக்கின்றதோ அதற்குக் கட்டுப்படுவான். எனவே எவ்வாறு ஒரு மனிதன் தன் கடவுளை வணங்குவானோ அதுபோன்று இவன் இங்கு தன் மனோ இச்சையை வணங்குகின்றான்.

சிலபோது திர்ஹமையும் தீனாரையும் வணங்குவதாகவும் இருக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “தீனாரின் அடிமைக்குக் கேடு உண்டாகட்டும்! திர்ஹமின் அடிமைக்குக் கேடு உண்டாகட்டும்! கமீஸா எனும் போர்வையின் அடிமைக்குக் கேடு உண்டாகட்டும். அவனுக்குக் கொடுக்கப்பட்டால் திருப்தி காண்பான். கொடுக்கப்படாவிட்டால் திருப்தியடையமாட்டான்.” (புகாரி : 2887) இவ்வாறுதான் மனோ இச்சை மூலமாக அல்லாஹ் அல்லாத வேறு எதிலாவது யாருடைய உள்ளம் தொடர்பாகிவிட்டால் உள்ள நிலைமை. அது அவருக்குக் கிடைத்தால் திருப்தி காண்பார். கிடைக்காவிட்டால் கோபம் கொள்வார். எனவே, அவன் தனது மனோ இச்சையின் அடிமை. ஏனெனில் உண்மையில் அடிமைத்தனம் என்பது உள்ளம் அடிமையாவதே!

அத்துடன் இந்த மனோ இச்சைகள் எந்த அளவு அவனை அடிமைப்படுத்துகின்றனவோ, அந்தளவு அல்லாஹ்விடம் அவன் அடிமையாவது பலவீனப்பட்டுப் போகும். இவ்விச்சைகளுக்கு அவன் முழுமையாக அடிமையாகி முழுமையாகவே மார்க்கத்தை விட்டும் அவனை அவை திருப்பி விட்டால் அவன் இணை வைத்தவன் மற்றும் இறைவனை நிராகரித்தவனாகும். அந்த மனோஇச்சைகள் சில கடமைகளை விட்டும் திருப்பி விட்டால் அல்லது மார்க்கத்தை விட்டு வெளியேற்றாத அளவு சில பாவங்களை செய்யத் தூண்டினால், எந்த அளவுக்கு அவன் திருப்பப்படுகின்றானோ அந்த அளவுக்கு அவனிடம் அல்லாஹ்விடமான அடிமைத்தனம் குறையும். அல்லாஹ் எமக்கு அவனுக்கு முழுமையாக அடிபணியும் தன்மையைத் தர வேண்டும் எனவும், அவனது உளத்தூய்மைமிக்க அடியார்களாகவும், நெருங்கிய நேசர்களாகவும் எம்மை ஆக்க வேண்டும் எனவும் கேட்போம். அவன் செவிமடுப்பவன், நெருக்கமானவன,; பதிலளிப்பவன்.

அல்லாஹ்வே அதிகம் அறிந்தவன்.

மேலதிகமாக அறிந்து கொள்ள இப்னு தைமியா அவர்களின் “அல்உபூதிய்யா” எனும் நூலை வாசிக்கவும்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
அல்லாஹ்வுக்கு அடிமையாதல் என்பதன் யதார்த்தம் - Islam Question & Answer