மூதறிஞர் சபையின் அமர்வு கீழ்வருமாறு தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது.
1. மார்க்க ரீதியான நியாயங்களுக்காக, அல்லது மிக மிக நெருக்கடியான சூழ்நிலையில் தவிர கருவை அதன் பல்வேறு கட்டங்களில் எதிலும் கலைப்பது கூடாது.
2. மார்க்க ரீதியான நலன் அல்லது ஏதாவது அசம்பாவிதங்களை தவிர்த்தல் போன்ற நியாயங்கள் இருந்தால் மாத்திரம், கரு முதலாவது கட்டமான 40 நாட்கள் கால எல்லையில் இருந்தால் அதை கலைப்பதில் குற்றமில்லை. ஆனால் பிள்ளை வளர்ப்பு பற்றிய அச்சம் அல்லது வாழ்க்கைச் செலவு, கல்வி மற்றும் அவர்களது எதிர்காலம் பற்றிய பயம் அல்லது இருக்கும் பிள்ளைகள் போதுமானது என்ற மனோநிலை காரணமாக கருவைக் கலைப்பது அனுமதிக்கப்பட்டதல்ல.
3. நம்பகமான வைத்திய அறிக்கை 'தாயின் வயிற்றில் சிசு அவ்வாறே நீடிப்பது தாயின் நலத்திற்கு ஆபத்தானது, மரணத்தை ஏற்படுத்தும்" என்று கூறுமாயின் அட்டை போன்று ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் அல்லது சதைப் பிண்டமாக இருக்கும் நிலையிலும் (இரண்டாவது, மூன்றாவது நாட்பது நாட்கள்) அந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கு முடியுமான அனைத்து வழிகளிலும் முயற்சித்த பின் கருவைக் கலைக்கலாம்.
4. மூன்றாவது கட்டத்தின் பின் நான்கு மாதங்கள் நிறைவடைந்த பின் நம்பகமான நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள் 'சிசு தாயின் வயிற்றில் இருப்பது தாயின் மரணத்திற்கு காரணமாகும்" என்று பரிந்துரை செய்தால் மாத்திரம் கருவைக் கலைக்கலாம். அதுவும் சிசுவின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முடியுமான அனைத்து வழிவகைகளையும் கையாண்டதன் பின்னால் அவ்வாறு செய்யலாம். இந்த நிபந்தனைகளுடன் கருவைக் கலைக்க அனுமதிக்கப்படுவது, 'இரு தீங்குகளில் பெரிய தீங்கை தவிர்ப்பதற்கும், இரு நலவுகளில் பெரிய நலவை பெறுவதற்கும்" ஆகும்.