Table Of Contents
முதலாவது வேறுபாடு : தோற்றத்திலாகும்.
ஆண்களின் விந்தைப் பொறுத்தவரையில் அது கடினமான வெள்ளை நிறத் திரவப் பொருளாகும். பெண்களது விந்து மஞ்சள் நிறத்தையுடைய கடினமில்லாத திரவமாகும். இந்த அடிப்படையை நபிகளாரது நபிமொழியிலிருந்து நமக்குக் கற்றுக் கொள்ளலாம்.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள் : “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி (அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று) கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார்கள். (இவ்வாறு நான் கேட்டுவிட்டு) அதற்காக நானே வெட்கப்பட்டேன். மேலும் இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்கலிதம்) ஏற்படுமா? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் குழந்தையில் ஏற்படுகிறது? ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விரு(வரின்) நீரில் எது மேலோங்கிவிடுகிறதோ அல்லது முந்திக்கொண்டுவிடுகிறதோ அந்தச் சாயலில் தான் குழந்தை பிறக்கிறது என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் : 363> இந்நபிமொழி புகாரி கிரந்தத்திலும் சிறுசிறு வாரத்தை மாற்றங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
இந்த நபிமொழியை விளக்குகையில் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “விந்தின் தோற்றத்தை விளங்கிக் கொள்வதற்கு இந்நபிமொழியே பெரியதொரு அடிப்படையாகும். சாதாரணமாகவும், பெரும்பாலும் இது தான் அதனுடைய தோற்றமாகும். அறிஞர்கள் கூறுகின்றார்கள் : “மனிதன் ஆரோக்கியமாக இருக்கும் போது அவனது விந்து வெள்ளை நிறமாகவும் கனமானதாகவும் இருக்கும்; தெறித்துத் தெறித்து பாய்ச்சலுடன் வெளிவரும்;. காமத்துடன் வெளிவருவதோடு அதில் ஒரு சுகமும் இன்பமும் இருக்கும். வெளியேறி முடிந்ததன் பின்னால் சோர்வும் ஈத்த மரத்தின் மலர்த்தாதுகளின் வாசனையும் நிலவும். மலர்த்தாதுகளின் வாசனையானது குலைந்த மாவுடைய வாசனையைப் போன்றதாகும். (சிலவேளை சில காரணங்களால் விந்தின் நிறம் மாற்றமுறலாம்.) நோய்வாய்ப்பட்டதனால் மஞ்சள் நிறமானதாக, கடினமற்றதாக இருத்தல் அல்லது விந்துப் பை சோர்வுற்றதால் காம உணர்வின்றி, இன்பமின்றி விந்து வெளியேறல், அதிகமாக உடலுறவில் ஈடுபடுவதால் சிவப்பு நிறத்துக்கு அது மாற்றமடைதல் என்பன அவற்றில் சிலவாகும். சிலவேளை விந்தானது தூய இரத்தமாகவும் வெளிவர வாய்ப்புண்டு. அடுத்ததாக விந்தை விந்தென அடையாளம் கண்டுகொள்வதற்காக அதற்கென தனித்துவமான அடையாளங்கள் மூன்றாகும். ஒன்று : இச்சையுடன் வெளிவருவதுடன் அதனைத் தொடர்ந்து சோர்வு ஏற்படல். இரண்டாவது : ஏற்கனவே கூறப்பட்டது போல ஈத்தமர மலர்த்தாதுகளின் வாசனையை ஒத்த வாசனை காணப்படல். மூன்றாவது : பாய்ச்சலுடன் தெறித்துத் தெறித்து வெளியேறல். இந்த மூன்று விடயங்களில் ஏதாவதொன்று இருப்பது அத்திரவத்தை விந்து என அடையாளப்படுத்துவதற்கு போதுமாகும். மூன்று விடயங்களும் ஒன்றுசேர இருக்க வேண்டும் என எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால் அந்த மூன்றில் ஏதேனும் ஒன்று கூட இல்லாத பட்சத்தில் அதனை விந்து எனத் தீர்ப்பு செய்ய முடியாது. அப்போது அது விந்து அல்ல என்பதே பெரும்பாலும் சரியானதாக இருக்கும். இவ்வனைத்தும் ஆண்களது விந்து தொடர்பிலாகும். பெண்களின் விந்தைப் பொருத்தவரையில் அது மஞ்சள் நிறமானதாக, கடினத் தன்மையற்றதாக காணப்படினும் சிலவேளை அதன் பலத்தினால் வெள்ளை நிறமாக மாற்றமடைய வாய்ப்புண்டு. அதனை அறிந்து கொள்வதற்கும் தனித்துவமான இரண்டு அடையாளங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று காணப்படின் அது பெண்ணின் விந்தாகும். ஒன்று ஆணின் விந்தினது வாசத்தை ஒத்த வாசனை, மற்றையது விந்து வெளியேறும் போது ஏற்படும் சுகமும் வெளியேறியதன் பின்னர் உண்டாகும் சோர்வு நிலையுமாகும். இச்சை நீரைப் பொருத்தமட்டில் அது ஒட்டும் தன்மை கொண்ட வெள்ளை நிற நீராகும். உடலுறவு கொள்வதற்கு விரும்பும் போது அல்லது அதைப் பற்றி சிந்திக்கும் போது இந்நீர் வெளிப்படும். இது வெளிவரும் போது காம உணர்வோ> இன்பமோ> துள்ளிப் பாயும் நிலையோ இருக்க மாட்டாது. வெளியேறியதன் பின்னர் சோர்வு ஏற்படவும் மாட்டாது. இந்நீர் ஆண்கள், பெண்கள் அனைவரிடமிருந்தும் வெளிப்படும். எனினும் பெண்களிடத்தில் இது அதிகமாகும்." (பார்க்க : ர்ஹ{ ஸஹீஹ் முஸ்லிம் : 3/213)
இரண்டாவது வேறுபாடு : இவை வெளியேறுவதன் விளைவாக ஏற்படும் மார்க்கத் தீர்ப்பு தொடர்பிலாகும்.
விந்து வெளிப்படுமாயின் பெருந்தொடக்கிலிருந்து கட்டாயமாக குளிக்க வேண்டிய நிலை ஏற்படும். அது தூக்கத்தில் ஸ்கலிதமானதன் விளைவாக இருந்தாலும் அல்லது விழித்திருந்து உடலுறவில் ஈடுபட்டதனால் அல்லது வேறு காரணிகளினாலாக இருந்தாலும் சமமே.
ஆனால் இச்சை நீர் வெளிப்படுமாயின் வுழூ செய்து கொள்வதே கடமையாகும். இதற்கு ஆதாரமாக அலி (ரழி) அவர்களின் அறிவிப்பைக் குறிப்பிடலாம். அலி (ரழி) அவர்கள் கூறினார்கள் : “நான் அதிகம் இச்சை நீர் (மதி) வெளிப்படும் ஒரு மனிதனாக இருந்தேன். அதனால் மிக்தாதிடம் (ரழி) இது பற்றி நபிகளார் (ஸல்) அவர்களிடம் வினவுமாறு வேண்டிக் கொண்டேன். மிக்தாத் நபிகளாரிடம் வினவவே நபிகளார் (ஸல்) அவர்கள் “இச்சை நீர் வெளிப்பட்டால் வுழூ செய்து கொள்ள வேண்டும்." எனப் பதில் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி> முஸ்லிம்)
இப்னு முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் தனது 'அல்முக்னி' எனும் கிரந்தத்தில் பின்வருமாறு பதிவு செய்கின்றார்கள் : 'மனிதனது பின்புறத்திலிருந்து மலம் வெளியேறுவதும்> ஆண்> பெண்களது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் வெளியேறுவதும்> இச்சை நீர் வெளிப்படுவதும்> பின்பகுதியிலிருந்து காற்று வெளியேறுவதும் வுழூவை முறிக்கக் கூடிய அம்சங்கள் என சான்றோர் அனைவரும் ஏகோபித்துள்ளனர். (பார்க்க : அல்முக்னி – 1/168)
மூன்றாவது வேறுபாடு : அவைகளது சுத்தம், அசுத்தம் தொடர்பிலாகும்.
விந்தானது அறிஞர்களின் கூற்றுக்களில் மிகவும் ஏற்றமான கூற்றின் படிக்கு சுத்தமானதாகும். இதற்கு ஆதாரமாக ஆஇ~h (ரழி) அவர்களின் பின்வரும் கூற்றைக் குறிப்பிடலாம். 'நபிகளார் (ஸல்) அவர்கள் (தனது ஆடையில்) பட்ட விந்தைக் கழுவி விட்டு அதே ஆடையில் தொழுகைக்காகப் புறப்பட்டுச் செல்வார்கள். நான் அவ்வாடையில் கழுவியதற்குரிய தடயத்தைப் பார்ப்பேன்." (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்) முஸ்லிமின் மற்றுமொரு அறிவிப்பில் 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள்." மற்றுமொரு அறிவிப்பில் 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்டுக் காய்ந்துவிட்டிருந்த இந்திரியத்தை நான் என் நகத்தால் சுரண்டித் தான் விடுவேன்" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது. எந்தளவுக்கெனில் அது (காயாது) ஈரமாக இருந்தால் நபிகளார் அதனைக் கழுவாமல் ஒரு குச்சியினால் தடவிக் கொள்வார்கள் என்றும் ஒரு அறிவிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஹ்மத் (ரஹ்) அவர்கள் தனது முஸ்னத் எனும் கிரந்தத்தில் 6/243 எனும் இலக்கத்தின் கீழ் பின்வருமாறு பதிவு செய்கின்றார்கள். ஆயி~h (ரழி) அவர்கள் குறிப்பிட்டார்கள் : நபிகளார் (ஸல்) அவர்கள் 'இத்கிர்” எனும் தாவரத்தின் வேரைப் பயன்படுத்தி தனது ஆடையில் பட்ட விந்தை நீக்கி விடுவார்கள். பின்பு அதே ஆடையை அணிந்து தொழுவார்கள். விந்து காய்ந்திருக்கும் பட்சத்தில் அதனை சுரண்டி விட்டு அதே ஆடையில் தொழுவார்கள்." (இந்தச் செய்தியை இப்னு குதைமா (ரஹ்) அவர்களும் தனது நபிமொழிக் கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்கள். இதனை அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் தனது அல்இர்வாஃ எனும் கிரந்தத்தில் 'ஹஸன்” என்று கூறியுள்ளார்கள் - அல்இர்வாஃ : 1/197)
ஆனால் இச்சை நீரை (மதியைப்) பொறுத்தவரையில் அது அசுத்தமானது என நாம் ஏற்கனவே எடுத்துக் கூறிய அலி (ரழி) அவர்களது அறிவிப்பு உணர்த்துகின்றது. அத்தோடு இன்னும் சில அறிவிப்புக்களில் அவரது ஆணுறுப்பையும், விதைகளையும் கழுவி, வுழூச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவியதாகவும் இடம்பெற்றுள்ளது. இதனை இமாம் அபூ அவானா தனது 'முஸ்தக்ரஜ்” எனும் கிரந்தத்தில் பதிவு செய்துள்ளதுடன் இதனைப் பற்றி இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் 'தல்கீஸ்” எனும் கிரந்தத்தில் குறிப்பிடுகையில் “இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையில் எந்தக் குறைபாடுகளும் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே இச்சை நீரானது அசுத்தமானதாகும். அது வெளிப்படுவது வுழூவை முறிப்பதுடன் ஆணுறுப்பு விதைகளைக் கழுவி விட்டு மீண்டும் வுழூச் செய்ய வேண்டும்.
விந்து அல்லது இச்சை நீர் பட்ட ஆடையின் சட்டம் :-
விந்து சுத்தமானது என நாம் கூறியதன் படிக்கு அது ஆடையில் படுவதனால் அவ்வாடை அசுத்தமானதாக மாறுவதில்லை. அந்த ஆடையை அணிந்து கொண்டு தொழுவதில் பிரச்சினை ஏதும் கிடையாது. இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : “அது (விந்து) சுத்தம் என்று நாங்கள் கூறியிருந்தாலும் அதனை சுரண்டி விடுவது வரவேற்கத்தக்கதாகும். ஆயினும் அவ்வாறு சுரண்டாமல் தொழுதாலும் அது நிறைவேறும்." (அல்முக்னி : 1/763)
இச்சை நீரைப் பொருத்தமட்டில் அதிலுள்ள சிரமத்துக்காக வேண்டி அவ்வாடையில் நீரைத் தெளித்து விடுவது மாத்திரம் போதுமானது. இதற்கு ஆதாரமாக ஸஹ்ல் இப்னு ஹ{னைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “ நான் இச்சை நீரினால் கடும் சிரமப்பட்டேன். அதற்காக நான் அதிகம் குளித்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு தடவை இது குறித்து நபிகளார் (ஸல்) அவர்களிடம் வினவிய போது “நீங்கள் அதற்காக வுழூ செய்து கொண்டால் போதும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அதில் ஏதாவது என்னுடைய ஆடையில் பட்டால் என்ன செய்வது?" என்று நான் திருப்பிக் கேட்டேன். அதற்கு நபிகளார் “நீர் ஒரு கை அள்ளு நீரை எடுத்து ஆடையில் அது (இச்சை நீர்) பட்டிருப்பதாக விளங்கும் இடங்களில் தெளித்துக் கொண்டால் போதும். இதனை இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் தனது கிரந்தத்தில் பதிவு செய்து விட்டு “இது ஹஸனான> ஸஹீஹான நபிமொழியாகும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
திர்மிதீ கிரந்தத்தின் விளக்கவுரையான 'துஹ்பதுல் அஹ்வதி” கிரந்தத்தின் நூலாசிரியர் குறிப்பிடுகையில் “இந்நபிமொழி ஆடையில் இச்சை நீர் பட்டால் அதன் மீது தண்ணீரைத் தெளித்து விடுவது போதுமானது; அதனைக் கழுவுவது கடமையல்ல என்பதற்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது." எனத் தெரிவித்துள்ளார்கள்.
(துஹ்பதுல் அஹ்வதி:1/373)
அல்லாஹ் மிக அறிந்தவன்.