உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் குழந்தைக்கு அல்லாஹுத்தஆலா பரக்கத் செய்ய வேண்டும் என்றும் அவரை நல்லடியார்களுடனும் இறையச்சம் உள்ளவர்களுடனும் அல்லாஹ் சேர்க்க வேண்டும் என்றும் அதன்மூலம் உங்களது நன்மைகள் மீஸான் தட்டில் அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். « ஒரு மனிதன் மரணித்துவிட்டால் நிலையான தர்மம், பயன்தரக்கூடிய அறிவு, அவருக்காகப் பிரார்த்திக்கும் ஸாலிஹான பிள்ளை ஆகிய மூன்று விடயங்களைத் தவிர அவனது செயற்பாடுகள் அனைத்தும் நின்றுவிடுகிறது» என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்:1631.
இரண்டாவது :
பிள்ளை பிறப்பதற்கு ஓரிரண்டு தினங்களுக்கு முன் பிரத்தியேகமாக மேற்கொள்ள வேண்டிய மார்க்க விடயங்கள் என்று நாங்கள் அறிந்தவரை எதையும் காண முடியவில்லை. என்றாலும், பொதுவாக பிறக்கிற குழந்தைக்காக தேகாரோக்கியம், நேர்வழி, சாந்தி என்பவற்றைப் பிரார்த்திப்பது நல்லதாகும். அல்லாஹுத்தஆலா தனது வேதத்தில் ஸாலிஹான ஒரு பெண்ணின் பிரார்த்தனைகளைக் குறிப்பிட்டுள்ளான். அது தான் இம்ரான் உடைய மனைவியின் பிரார்த்தனையாகும்.
« இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) நன்கு செவியுறுபவன், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறியபின், அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்'' என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ்(தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு ‘மர்யம்' எனப் பெயரிட்டேன். அதையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!'' (என்றார்.)» (03:35-36)
பிள்ளை பிறக்கின்ற நாளன்றும் அதற்குப் பின்னரான நாட்களிலும் செய்யவேண்டிய சில விடயங்கள் உள்ளன.
அவ் வழிகாட்டல்கள் பின்வருமாறு:
அ) குழந்தைக்கு இனிப்பூட்டுவதும் அதற்காகப் பிரார்த்திப்பதும் விரும்பத்தக்கது.
அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :
«எனக்கு ஒரு பையன் பிறந்தான். அவரை எடுத்துக்கொண்டு நபியவர்களிடம் சென்றேன். அப்போது நபியவர்கள் அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் வைத்துவிட்டு, ஒரு ஈச்சம் பழத்தின் மூலமாக அவருக்கு இனிப்பு ஊட்டிவிட்டு, அவருக்காக அல்லாஹ்விடம் பறக்கத் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து, மீண்டும் என்னிடம் அவரை ஒப்படைத்தார்கள்».
புகாரி:5150, முஸ்லிம்: 2145
இனிப்பூட்டுதல் "அத்-தஹனீக்" என்பது , ஒரு குழந்தையின் வாயில் முதன்முதலாக பேரிச்சம்பழம்அல்லது தேன் போன்ற பொருட்களின் சுவையை வாயில் வைப்பதாகும்.
ஆ) பிறந்த குழந்தைக்கு முதலாம் நாளே பெயர் வைப்பது ஆகுமானதாகும். அல்லது ஏழாவது நாளிலும் வைக்கலாம்.
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : «ஒரு இரவு வேளையில் எனக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நான் எனது தந்தையின் பெயரான இப்ராஹீம் என்ற பெயரைச் சூட்டினேன்…… » முஸ்லிம்:3126
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: «நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸனுக்கும் ஹுசைனுக்கும் ஏழாம் நாளன்று பெயரிட்டார்கள்».
இப்னு ஹிப்பான்: 12/127, அல்-ஹாகிம்: 4/264, இந்த செய்தியை பஃத்ஹுல் பாரீ கிரந்தத்தில் இமாம் அல்ஹாஃபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸஹீஹ் என்று குறிப்பிடுகிறார்கள்.
இ) 'அகீகா' கொடுத்தலும் விருத்தசேதனம் (கத்னா) செய்தலும் :
- ஸல்மான் இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
«ஆண் பிள்ளைக்காக 'அகீகா' உண்டு. ஆகவே, அவருக்கான அம் மிருகத்தின் இரத்தத்தை ஓட்டுங்கள்; அவருக்கு ஏற்படவிருக்கும் தீங்கிலிருந்து அவரைப் பாதுகாத்து விடுங்கள்» என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ககூறினார்கள்.
திர்மிதி: 1515, நஸாயி: 4214 , அபூதாவூத்: 2839, இப்னுமாஜா:3164. அஷ்-ஷேக் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ‘அல்-இர்வாஉ’ என்ற தனது கிரந்தத்தில் (4/396) ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
- சமுரத் இப்னு ஜுன்துப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
«எல்லா பிள்ளைகளுக்கும் அவருக்கான 'அகீகா' கொடுக்கப்பட வேண்டும். அவருக்காக ஏழாம் நாள் அது அறுக்கப்பட வேண்டும். அந்த நாளில் அவருக்குப் பெயர் சூட்டப்பட வேண்டும். மேலும் அவரது தலைமுடியும் மழிக்கப்பட வேண்டும்» என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
திர்மீதி:1522, அன்-நஸாஈ : 4220, அபூதாவூத்: 2838, இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ‘அல்-இர்வா’ கிரந்தத்தில் (4/ 385) ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் இப்னுல்-கய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், 'அகீகா' பற்றிய தகவல்களைப் பின்வருமாறு சுருக்கித் தருகின்றார்கள்:
- 'அகீகா' வின் பயன்களில் உள்ளது தான், ஒரு குழந்தை உலகத்திற்கு வந்ததும் முதன்முதலாக அது அல்லாஹ்வை நெருங்குவதற்கான ஒரு 'இபாதா' காவாக இந்த 'குர்பான்' அமைகிறது.
- 'அகீகா'காவின் மற்றொரு பயனாக, குழந்தை மீது பொறுப்புச் சாட்டப்படுகிறது. குழந்தை தனது பெற்றாருக்காக 'ஷபாஅத்' செய்வதற்கு அது பொறுப்பாக இருக்கிறது.
- 'அகீகா' வின் மற்றொரு பயனாக, அல்லாஹுத்தஆலா இஸ்மாஈல் அலைஹிஸ்-ஸலாம் அவர்களுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைப் பகரமாக கொடுத்தது போல் ஒவ்வொரு குழந்தைக்கும் 'அகீகா' பகரமாக அமைகிறது. துஹ்பஃதுல்-மௌலூது- பக் : 69
- 'அகீகா' வின் இன்னொரு பயனாக உறவுகளும் நட்புகளும் ஒரு விருந்தில் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஈ) விருத்தசேதனம் (கத்னா) என்பது, மார்க்கத்திலுள்ள இயற்கையான வழிமுறைகளில் ஒன்றாகும். அது சிறுவனுக்காக செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றாகவும் மேலும் அது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றான சுத்தத்தோடு தொடர்புபட்ட ஒன்றாகவும் காணப்படுகிறது.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். «ஐந்து விடயங்கள் மார்க்கத்தில் உள்ளதாகும். விருத்தசேதனம் செய்தலும், மர்மஸ்தானங்களில் உள்ள முடிகளை இறக்குவதும், கக்கத்தில்கதில் உள்ள முடியை இறக்குவதும், நகங்களை வெட்டுவதும், மீசையைக் கத்தரிப்பதுமகும்» என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
புகாரி: 5550, முஸ்லிம்: 257
மூன்றாவதாக :
அறிஞர் பெருமக்கள் பிறந்த குழந்தையின் வலது காதில் 'அதான்' பங்கையும் இடது காதில் 'இக்காமத்'தையும் ஓதி ஊதுவது இந்த உலகில் அந்தக் குழந்தைக் குழந்தை கேட்கும் முதலாவது 'தவ்ஹீத்' வார்த்தையாக இருப்பது நல்லது என்ற அடிப்படையில் 'ஸுன்னத்' எனக் குறிப்பிடுகின்றனர். அதில் பெரும் பரக்கத் உண்டு எனவும் குறிப்பிடுகின்றனர். என்றாலும் அந்த செய்தி உறுதிப்படுத்தப்படாத செய்தியாகும்.
பார்க்க : அஸ்-ஸில்ஸிலத்துல் ழஈஃபா (1 /491)
நான்காவதாக :
குழந்தையின் முடியை மழிப்பதும் தலைக்கு எண்ணெய் தடவுவதும் அதன்பின் சாம்பிராணிகள் பிடிப்பதும் மருத்துவ ரீதியான பலன்களைத் தரக்கூடியதாகும். பின்னர் குழந்தையின் முடியின் நிறையின் அளவுக்கு தங்கம் அல்லது வெள்ளியினை தர்மம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. என்றாலும் முடி நிறுக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக்கப்படவில்லை. அவ்வாறு தங்கம் கொடுப்பது சிரமமாக இருக்குமானால் அந்தத் தங்கத்தின் அல்லது வெள்ளியின் விலைக்கு ஏற்ற பணத் தொகையையும் கொடுக்க முடியும். முடியின் நிறையை அளவீடாகக் கொண்டு, நன்மையை நாடி குறிப்பிட்ட பணத்தொகை தர்மம் செய்யப்பட வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மையும் எமது பிள்ளைகளையும் எல்லா தீங்குகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என்றும் இந்த உலகத்திலும் மறுமையிலும் எங்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரவேண்டும் என்றும் அல்லாஹ்விடம் பிரார்த்திகிறோம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.