0 / 0
07/முகர்ரம்/1446 , 13/ஜூலை/2024

பெண்கள் தம்மைத் திறக்க அனுமதிக்கப்பட்ட மஹ்ரமான ஆண்கள் யார்?

கேள்வி: 5538

யாரின் முன்னிலையில் ஒரு முஸ்லிமான பெண் தனது ஹிஜாபை களைவது ஆகுமாகும்.??

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

பெண்ணுக்கு அவளுக்கு மகரமான ஆண்களின் முன்னிலையில் தனது ஹிஜாபை களைய முடியும்.

ஒரு பெண்ணுக்கு நிரந்தரமாக திருமணம் செய்ய முடியாத பின்வருபவர்களே மஹ்ரம்களாகக் கருதப்படுவர்.

இரத்த உறவுகள்

அவர்கள்: தந்தை அவரிலிருந்து மேல் நோக்கி செல்லும் உறவுகள் (உ+ம்-தந்தையின் தந்தை...) மகன் அவருக்கு கீழ் உள்ளவர்கள் (உ+ம்-மகனின் மகன்), தந்தையின் சகோதரர்கள் தாயின் சகோதரர்கள் சகோதரர்களின் மகன் சகோதரியின் மகன்

பால்குடியால் ஏற்பட்ட உறவுகள்

பால் குடி சகோதரர்கள், பாலூட்டிய பெண்ணின் கணவர்)

திருமணத்தால் ஏற்பட்ட உறவுகள்

(தாயின் கணவன் ,கணவனின் தந்தை அவர்களுக்கு மேல் உள்ள தலைமுறையினர், கணவனின் மகன் அவர்களின் கீழ் உள்ள தலைமுறைகள்)

அது பற்றிய தெளிவான விளக்கம் பின்வருமாறு:-

1:வம்சத்தின் காரணமாக மஹ்ரமாதல்.

அவர்களை இறைவன் சூரா நூரில் குறிப்பிடுகிறான்.

மேலும் அவர்கள் தம் அலங்காரத்தை) தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர் அல்லது தம் கணவர்களின் தந்தையர் அல்லது தமது மகன்மார் அல்லது தம் கணவர்களின் மகன்மார் அல்லது தங்கள் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள் அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள் …… ஆகியவர்களை தவிர (மற்றெவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். (நூர்:31)

தப்ஸீர் ஆசிரியர்கள் கூறுகிறார்கள் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள பிரகாரம் ஒரு பெண்ணிற்கான வம்ச அடிப்படையில் மஹ்ரமாகக் கூடியவர்கள் கீழ் வருமாறு:

தந்தைகள் (பெண்களின் தந்தைகள் ஆண் பக்கத்தில் இருந்தும் பெண் பக்கத்திலிருந்தும் மேல் நோக்கி செல்பவர்கள், தந்தையின் தந்தைமார்கள், தாயின் தந்தைமார்கள்.

கணவன்மார்களின் தந்தைமார்களைப் பொருத்தவரை அவர்கள் திருமண உறவு மூலம் மஹ்ரமானவர்கள் என்பது பின்னர் இடம்பெறும்.

இரண்டாவது: மகன்மார்கள் .

அதாவது பெண்களின் மகன்மார்கள்

இதில் மகனின் மகன்மார்கள் இன்னும் மகள்களின் மகன்மார்கள் அவர்களது மகன் என ஆண் புறத்திலிருந்தும் பெண் புறத்திலிருந்தும் கீழ்நோக்கி செல்லும் தலைமுறையில் உள்ளோர்.

இவ்வசனத்தில் கணவன்மார்களின் மகன்மார் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது வேறு பெண்கள் மூலம் அவர்களது கணவன்மாருக்குக் கிடைத்த மகன்மார்களாவர். அவர்கள் திருமண உறவின் மூலம் மஹ்ரமானவர்களே தவிர வம்ச அடிப்படையில் மஹ்ரமானவர்கள் அல்லர்.

மூன்றாவது: பெண்களின் சகோதரர்கள். அது உடன்பிறந்த சகோதரனாகவோ, தந்தைவழி அல்லது  தாய் வழி மூலம் மாத்திரம் வரும் சகோதரர்களாகவோ இருக்கலாம்.

நான்காவது: அவர்களது சகோதரர்களின் மகன்மார்களும் ஆண்கள் மூலமோ பெண்கள் மூலமோ கீழிறங்கிச் செல்லும் மகன்மார்களும். சகோதரியின் மகள்மாரின் மகன்கள் போன்றவர்கள்.

ஐந்தாவது: தாயின் சகோதரர்கள் தந்தையின் சகோதரர்கள் என்போர் வம்ச அடிப்படையில் மஹ்ரமானவர்கள். ஆனால் அவர்கள் இவ்வசனத்தில் குறிப்பிடப்படாமைக்குக் காரணம் அவர்கள் பெற்றோரின் இடத்தில் உள்ளவர்கள் என்பதனாலாகும்.

தந்தையின் சகோதரருக்கும் தந்தை என்ற பிரயேகாத்திற்கு பின்வரும் வசனம் ஆதாரமாகும்.

அல்லது யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (யூதர்களே  அவரருகில்)நீங்கள் பிரசன்னமாக இருந்தீர்களா?அவர் தம் மைந்தர்களிடம் எனக்குப் பின்னர் எதனை நீங்கள் வணங்குவீர்கள் என கேட்டதற்கு உம்முடைய வணக்கத்திற்குரியவனும் உம்முடைய தந்தைமாரான இப்ராஹீம் இஸ்மாயில் இஸ்ஹாக் ஆகியோரின் வணக்கத்திற்குரியவனுமாகிய ஒரே ஒரு வணக்கத்திற்குரியவனையே நாங்கள் வணங்குவோம், அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாகவும் இருப்போம் எனக் கூறினார்கள். (அல் பகறா:133)

இஸ்மாயில் அலை அவர்கள் யஃகூபுடைய மகன்மாருக்கு பெரிய தந்தையாக இருந்தார். தப்ஸீர் அர்ராஸி 23/ 206 , தப்ஸீர் குர்துபி 232, 233, தப்ஸீருல் அலூஸி18/143, பத்ஹுல் பயான் பீ மகாஸிதுல் குர்ஆன் 352/6 (ஸித்தீக் ஹஸன் கான்)

பால்குடி உறவின் மூலம் மஹ்ரமானவர்.

பால்குடி உறவின் மூலம் பெண்களுக்கு மஹ்ரமாகுபவர்களும்  உண்டு.

தப்ஸீர் ஆலூஸியில் வந்துள்ளதாவது...

அலங்காரத்தை வெளிப்படுத்த ஆகுமாக்கப்பட்ட மஹ்ரமானவர்கள் வம்ச அடிப்படையில் இருப்பது போன்று பால்குடி மூலமும் மஹ்ரமாவார்கள்.

இமாம் ஜஸ்ஸாஸ் இவ் வசனத்திற்கான விளக்கத்தில் கூறுகிறார்: அல்லாஹ் தந்தைமார்களுடன் இணைத்து நிரந்தரமாக மணமுடிக்கத் தடைசெய்யப்பட்ட மஹ்ரம்களையும் குறிப்பிட்டிருப்பது அதே அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும் அதே சட்டம்தான் என்பதையே காட்டுகின்றது. மனைவின் தாய் மற்றும் பால்குடியினால் மஹ்ரமானவர்களைப் போன்று. அஹ்காமுல் குர்ஆன் ஜஸ்ஸாஸ் 3/317

வம்சத்தின் அடிப்படையில் மஹ்ரமாகுபவர்கள் பால்குடி மூலமும் மஹ்ரமாவார்கள்.

ஹதீஸில் வந்துள்ளதாவது அம்சத்தின் மூலம் மஹ்ரமானவர்கள் பால்குடி மூலமும் மஹ்ரமாவார்.

அதாவது ஒரு பெண்ணுக்கு வம்ச அடிப்படையில் மஹ்ரம்கள் இருப்பது போன்று பால்குடி உறவின் மூலமும் மஹ்ரம்கள் இருக்கின்றனர்.

புகாரியில் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மூலமாக இடம்பெறும் அறிவிப்பில்.

அபூகுஅய்ஸ் உடைய சகோதரனான அப்லஹ் ஹிஜாப் பற்றிய வசனம் இறங்கிய பின் ஆயிஷா நாயகியிடம் நுழைய அனுமதி கேட்டார். அவர் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பால்குடி உறவின் மூலம் சிறிய தந்தையாவார். நான் அவருக்கு அனுமதி அளிக்க மறுத்தேன். நபியவர்கள் வந்த போது நான் செய்த செயலை நபியவர்களிடத்தில் கூற நபி அவர்கள் அவருக்கு அனுமதி அளிக்குமாறு கூறினார்கள். (புகாரிக்கான கஸ்தல்லானியின் விரிவுரை 9/150)

இந்த ஹதீஸை இமாம் முஸ்லிமும் அறிவித்துள்ளார்கள். அதன் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது. உர்வா என்பவர் ஆயிஷா ரழி அவர்களிடமிருந்து கூறுகின்றார்கள்: பால்குடி மூலமான தனது சிறிய தந்தை தன்னிடம் வர அனுமதி கேட்ட பொழுது அவரைத் தடத்துவிட்டார்கள். பின்னர் அதனை நபியவர்களிடம் கூறியபோது அவரை விட்டும் நீர் மறைய வேண்டியதில்லை வம்ச அடிப்படையில் சிறிய தந்தை மஹ்ரமாவதை போன்று பால்குடி உறவிலும் மஹ்ரமாக அமைவார் எனக் கூறினார்கள்.

(இமாம் நவவியின் முஸ்லிமிற்கான விளக்க நூல்.10/22

குர்ஆனும் ஹதீஸும் வம்ச அடிப்படையில் மஹ்ரமாகுபவர்கள் பால்குடி உறவிலும் மஹ்மாகுவார்கள் என்று கூறுவதை சட்ட வல்லுனர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். வம்ச அடிப்படையில் மஹ்ரமானவர்கள் முன்னிலையில் எவ்வாறு அலங்காரத்தை வெளிக்காட்ட முடியுமோ அதே போல பால்குடி உறவிலும் அமையும் மஹ்ரமானவர்கள் முன்னிலையிலும் தங்களது அலங்காரத்தை பெண்களுக்கு காட்ட முடியும். வம்ச அடிப்படையில் மஹ்ரமானவர்களுக்கு எவ்வாறு பெண்களின் உடம்பை பார்க்க முடியுமோ அவ்வாறு பால்குடி உறவின் மூலம் மஹ்ரமானவர்களுக்கும் அவர்களைப் பார்க்க முடியும்.

திருமண உறவின் மூலம் மஹ்ர மானவர்கள்

தந்தையின் மனைவி, மகனின் மனைவி, மனைவியின் தாய் போன்றோர் நிரந்தரமாக திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட மஹ்ரமிளாவர். ஷரஹுல் முன்தஹா 3/7

தந்தையின் மனைவி, தனது கணவனுக்கு வேறு பெண்ணின் மூலம் கிடைத்த மகனுக்கும், மகனின் மனைவி அவளது கணவனின் தந்தைக்கும், மனைவியின் தாய்  தனது மகளின் கணவனுக்கும் மஹ்ரமாவார்கள்.

மகனின் மனைவி மகனின் தந்தையை க்கு மஹ்ரமாகுவார் கணவருக்கு தனது மனைவியின் தாய் மஹ்ரமாவார்.

 

அந்நூர் அத்தியாயத்தில் அல்லாஹ் கூறியுள்ளான்.

(அவர்கள் தங்களது கணவன்மார்களுகோ அல்லது தந்தைமார்களுக்கு அல்லது கணவன்மார்களின் தந்தைமார்களுக்கு அல்லது தங்களது மகன்களுக்கோ கணவனின் மகன்களுக்கோ......தவிர வேறு யாருக்கும் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்)

கணவன்மார்களின் தந்தைமார்கள், கணவன்மார்களின் மகன்மார்கள் என்போர் திருமண உறவின் மூலம் ஏற்பட்ட  மஹரமாகுபவர்களாவர்.

தந்தைமார்கள் மகன்மார்கள் ஆகியோருடன் இணைத்து அவர்களை அல்லாஹ் குறிப்பிட்டு தமது அலங்காரத்தை பெண்கள் காட்டுவதில் அவர்கள் அனைவரையும் சமமாக்கியுள்ளான்.  அல்முங்னீ  6/555

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
பெண்கள் தம்மைத் திறக்க அனுமதிக்கப்பட்ட மஹ்ரமான ஆண்கள் யார்? - Islam Question & Answer