முதலாவதாக:
நிலையில் நிற்றல், ருகூஉ, ஸ_ஜூது ஆகியவை தொழுகையின் தூண்களில்(அர்கான்) உள்ளவையாகும். அதை செய்வதற்கு முடியுமானவர்கள், அதை அதற்கேயுரிய அமைப்பில் செய்யவது வாஜிபாகும். சுகயீனம், வயது முதிர்வு போன்ற காரணங்களால் இயலாதவர்கள் பூமியிலோ கதிரையிலோ அமர்ந்து தொழுது கொள்ள முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: 'தொழுகைகளையும் (குறிப்பாக) நடுநேரத் தொழுகையையும் பேணித் தொழுது கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்தவர்களாக எழுந்து நில்லுங்கள்." பகரா: 238
இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: எனக்கு மூல வியாதி இருந்தது. எனவே (அதனோடு) தொழுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு 'நின்ற நிலையில் தொழுவீராக! உன்னால் முடியாது விட்டால் இருந்த நிலையில் (தொழுது கொள்!) (அதற்கும்) உன்னால் முடியாது போனால் ஒரு பக்கம் சாய்ந்த நிலையிலாவது (தொழுது கொள்). புகாரி: 1066
இப்னு குதாமா அல் மக்திஸி கூறுகிறார்: 'எழுந்து நின்று தொழ முடியாதவர் அமர்ந்தவாறு தொழுதுகொள்ளலாம் என்பதில் அறிஞர்கள் ஏகோபித்த முடிவில் உள்ளனர்." அல் முக்னி: (1/443)
இமாம் நவவி (ரஹ்) கூறும்போது: 'கடமையான தொழுகையில் எழுந்து நின்று தொழ முடியாதவர் அமர்ந்து கொண்டு தொழ முடியும். அதே நேரம் அதை மீட்டித் தொழத் தேவையில்லை. உம்மத் இதில் ஏகோபித்த கருத்தில் உள்ளது. மேலும் எமது அறிஞர்கள் கூறும்போது: 'அவர் நின்ற நிலையில் தொழுதபோது கிடைக்கும் கூலியை விட அமர்ந்த நிலையில் தொழும்போது கிடைக்கும் கூலி குறையமாட்டாது, ஏனெனில் அவரது சூழ்நிலை காரணமாகவே அவர் அமர்ந்து தொழ வேண்டி ஏற்பட்டது.
ஸஹீஹ் புகாரியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது: 'ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டால் அல்லது பிரயாணியாக இருந்தால், அவர் சுகதேகியாக அல்லது ஊரில் இருக்கும் போது செய்ததைப் போன்ற கூலி பதியப்படும்." அல் மஜ்மூஉ: (4/226)
இமாம் ஷவ்கானி (ரஹ்) கூறும்போது: 'யாருக்காவது எழுந்து தொழ முடியாத வகையில் ஏதாவது சங்கடம் ஏற்பட்டால் அவர் அமர்ந்து தொழ முடியும், அமர்ந்து தொழ முடியாத வகையில் சங்கடம் ஏற்பட்டவருக்கு சாய்ந்த வண்ணம் தொழ முடியும் என்பதையே இம்றான் அவர்களுடைய ஹதீஸ் சொல்லுகின்றது. நய்லுல் அவ்த்தார்: (3/243)
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா கூறுகிறார்: 'எழுந்து நிற்றல் அல்லது ஓதுதல் அல்லது ருகூஉ செய்தல், அல்லது ஸுஜுது செய்தல் அல்லது அவ்ரத்தை மறைத்தல் அல்லது கிப்லாவை முன்னோக்குதல் அல்லது தொழுகையின் வேறு ஒரு கடமையை மேற்கொள்ள முடியாத நிலை தொழுகையாளிக்கு ஏற்பட்டால் அவருக்கு எதை செய்ய முடியாது போனதோ அந்தக் கடமை அவரை விட்டும் எடுக்கப்பட்டுவிடுகிறது என்பதில் முஸ்லிம்கள் ஏகோபித்த முடிவில் உள்ளனர். (மஜ்மூஉல் பதாவா : (8/437)
அந்த அடிப்படையில் கடமையான தொழுகையை எழுந்து நின்று தொழ முடியுமாக இருந்தும் கூட யார் அமர்ந்து தொழுகிறாரோ அவரது தொழுகை பாழாகிவிட்டது (பாத்தில்).
இரண்டாவதாக:
நாம் அவதானமாக இருக்க வேண்டிய மிக முக்கிய விடயம் என்னவென்றால்: எழுந்து நிற்காமல் (அமர்ந்தோ சாய்ந்து கொண்டோ) தொழுவதற்கு உள்ள அனுமதியை கொண்டு தனது ருகூவையோ ஸ{ஜூதையோ கதிரையில் அமர்ந்த வண்ணம் நிறைவேற்ற முடியாது.
அதேபோன்று ருகூஉ மற்றும் ஸுஜூது ஆகியவற்றை அதற்கேயுரிய முறையில் செய்யாமல் விடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டவர் நின்று தொழாமல் இருப்பதற்கோ கதிரையில் அமர்வதற்கோ அனுமதி கிடைத்தவரல்ல.
எனவே தொழுகையின் கடமைகளில் (வாஜிபாத்) முக்கியமான அடிப்படை யாதெனில்: 'தொழுகையாளி செய்ய முடியுமானவற்றை செய்வது அவரது கடமையாகும், அவரால் செய்ய இயலாமலானவை அவர் மீது கடமையாகாது."
அந்த வகையில் எழுந்து நின்று தொழுவதற்கு முடியாதவர், நிலையின்போது கதிரையில் அமர்ந்து கொள்ள முடியும். ஆனால் ருகூஉ, ஸ{ஜூதை அதற்குரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். எழுந்து நிற்க முடியும், ஆனால் ருகூஉ, ஸுஜூதை உரிய அமைப்பில் நிறைவேற்றுவது சிரமமாக இருக்கிறதென்றால் அவர் நின்று தொழ வேண்டும் ருகூஉ, ஸுஜூதின் போது கதிரையில் அமர்ந்துகொள்ள முடியும். அதன்போது ருகூவை விட ஸுஜூதில் அதிகம் குனிய வேண்டும்.
இப்னு குதாமா அல் மக்திஸி அவர்கள் கூறுகிறார்கள்: 'எழுந்து நின்று தொழ முடியும் ஆனால் ருகூஉ அல்லது ஸுஜூதை செய்ய முடியாது என்ற நிலையில் உள்ளவருக்கு நின்று தொழுவதை விட்டுவிட அனுமதியில்லை. அவர் நின்று தொழ வேண்டும் ருகூவை சைக்கினையால் செய்து கொள்ளலாம். பின்னர் அமர்ந்து ஸுஜூதையும் சைக்கினையால் செய்து கொள்வார். இதே கருத்தைத்தான் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள்…
ஏனெனில் 'அல்லாஹ்வுக்காக பணிவுடன் எழுந்து நிற்பீராக" என்று அல்லாஹ் கூறுகிறான். அதே போல் நபி (ஸல்) அவர்கள் கூறும்போது: 'நின்ற நிலையில் தொழுவீராக" என்று கூறியுள்ளார்கள். ஏனெனில் தொழுகைக்காக எழுந்து நிற்பது சக்தியுள்ளவருக்கு கட்டாயக் கடமையாகும். எனவே ஓதுவது எப்படி கடமையாக செய்யப்படுகிறதோ அதேபோல் இதையும் செய்ய வேண்டும். வேறு ஒரு கடமையை செய்ய முடியாத நிலை, இதற்கு காரணமாக ஏற்கப்படாது. கிராஅத் ஓத முடியாத நிலை ஏற்படுவதைப்போல… " சுருக்கம் - முக்னி: (1/444)
இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹ்) கூறுகிறார்: 'தரையில் அல்லது கதிரையில் அமர்ந்து தொழுபவர் ருகூவை விட ஸ{ஜூதில் அதிகம் குனிவது கடமையாகும். ருகூஉ செய்யும்போது தனதிரு கைகளையும் தனதிரு முட்டங்கால்களில் வைப்பதும், ஸ{ஜூது செய்யும்போது முடிந்தால் இரு கைகளையும் பூமியில் வைப்பதும் முடியாத பட்சத்தில் முழங்கால்களிலேயே வைப்பதும் நபிவழியாகும். ஏனெனில் நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்: 'ஏழு உறுப்புக்கள் மீது ஸ{ஜூது செய்ய நான் பணிக்கப்பட்டுள்ளேன். நெற்றி - அதன்போது தனது மூக்கையும் சுட்டிக் காட்டினார்கள், இரு கைகள், இரு முட்டங்கால்கள், இரண்டு கால்களின் விரல்கள்."
இயலாமை காரணமாக கதிரையில் அமர்ந்து தொழுதால் அவர் மீது குற்றமில்லை. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: 'உங்களால் முடிந்த மட்டும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்". நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களுக்கு நான் ஏதாவதொரு ஏவலை விடுத்தால் உங்களால் முடிந்த மட்டு;ம் அதை எடுத்து நடங்கள்". இது ஸஹீஹ் என்பதில் ஏகோபித்த கருத்து உள்ளது." பதாவா இப்னு பாஸ்: 12/ 245இ 246
மூன்றாவதாக:
வரிசையில் (ஸப்பில்) கதிரையை வைப்பதைப் பொறுத்தவரை, அமர்ந்து தொழுபவரது பிற்தட்டுக்கள் அல்லது அமரும் பகுதி வரிசையில் (ஸப்பில்) அமைய வேண்டும் என்பதே இங்கு அளவுகோலாகும். எனவே இருக்கும் பகுதியான பிற்தட்டுக்கள் ஒரு போதும் வரிசையை விட்டும் முன், பின் ஆகிவிடக் கூடாது. ஏனெனில் உடல், நிலைகொள்ளும் இடம் அதுதான்.
மேலதிக வாசிப்புக்காக: அஸ்னல் மதாலிப்: (1/222)இ துஹ்பதுல் முஹ்தாஜ் (2/157)இ ஷரஹ் முன்தஹல் இராதாத்: (1/279)இ மவ்ஸ_அதுல் பிக்ஹிய்யா: (6/21)இ
இமாமை மஃமூம் பின்துயர்ந்து செல்லுதலின் சரியான அமைப்பிற்குரிய நிபந்தனை: பின்பற்றித் தொழுபவர், தான் நிற்கும் இடத்தில் (பாதம் இருக்கும் இடம்) இமாமை முந்தி நிற்கக்கூடாது. இது பெரும்பான்மை சட்டக்கலை அறிஞர்களின் நிலைப்பாடாகும். (ஹனபிய்யா, ஷாபிஇய்யா, ஹனாபிலா)
இமாமை முந்தி நிற்றல், முந்தாது நிற்றல் என்பதற்குரிய அளவுகோல், குதிகாலாகும். அதாவது பாதத்தின் பின்பகுதி. எனவே இமாம், ம/மூமின் பாதங்கள் ஒரே நேரில் இருந்து ம/மூமுடைய கால் விரல்கள் அவரது பாதத்தின் நீளம் காரணமாக இமாமை முந்தியிருந்தாலும் அதனால் பாதிப்பில்லை.
அதே நேரம் அமர்ந்து தொழுபவர்களுக்கான வரிசை நிலைக்கான அளவுகோல் பிற்தட்டுகளாகும். சாய்ந்துகொண்டிருப்பவரது வரிசை நிலைக்கான அளவு கோல் பக்கவாட்டு ஆகும்…"
தொழுகையாளி ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதிரையில் அமர்ந்தே தொழுபவராக இருந்தால் அவர் தனது இருக்கும் இடத்தை (பிற்தட்டுக்களை) வைத்தே வரிசையை நேர்ப்படுத்த வேண்டும். ஆனால் அவர் நின்று தொழுது ருகூஉ, ஸுஜூதின்போது கதிரையில் அமர்பவராக இருந்தால் இங்கு அளவு கோல் நிலையாகும். எனவே எழுந்து நிற்கும்போது வரிசைக்கு நேராக நிற்க வேண்டும். இது அறிஞர் அப்துர் ரஹ்மான் அல் பர்ராக் அவர்களிடம் நாம் கேட்டதற்கு அவர் அளித்த பதிலாகும்.
இந்த அடிப்படையில் கதிரை, வரிசையின் பின்னால் இருக்கும். எனவே பின்னால் தொழுபவருக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் அது அமைய வேண்டும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்!