தௌஹீத் ருபூபிய்யா என்பது படைத்தல், பரிபாலித்தல், ஆட்சி செய்தல், வாழ்வாதாரம் வழங்கல், உயிர்ப்பித்தல், மரணிக்கச் செய்தல், மழை பொழிவித்தல் போன்ற செயற்பாடுகளை அல்லாஹ் தனியாகவே மேற்கொள்கின்றான் என அவனை ஒருமைப்படுத்துவதாகும். எனவே அல்லாஹ்வே அனைத்து வஸ்துக்களினதும் அதிபதி;, அவனே அவற்றைப் படைத்தவன், அவற்றுக்கு ரிஸ்க் வழங்குபவன்; உயிர்ப்பிப்பவனும், மரணிக்கச்செய்பவனும், நன்மை பயப்பவனும், கெடுதி விளைவிப்பவனும், பிராத்தனைக்கு பதிலளிப்பவனும் அவன் மாத்திரN;ம, அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உள்ளது, அவனிடமே நலவுகள் யாவும் உள்ளன, அவன் நாடியதைச் செய்வதற்கு பேராற்றல் உடையவன் என ஒரு அடியான் ஏற்றுக் கொள்ளும் வரை அவனது ஈமான் பூரணமடைய மாட்டாது.
இவ்வகைத் தவ்ஹீதில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட மக்கத்து முஷ்ரிக்கள் கூட முரண்படவில்லை. மாறாக அவர்கள் பொதுவாக அதனை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்றான் : “ (நபியே!) நீர் அவர்களிடம் : “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்." (அத்தியாயம் : அஸ்ஸ{க்ருப் - வசனம் : 09) எனவே அல்லாஹ்வே காரியங்களை நிர்வகிப்பவன்; வானங்கள், பூமியின் ஆட்சி, அதிகாரம் அவன் கையிலேயே உள்ளது என அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இதன் மூலம் ஒரு அடியான் உண்மையான முஸ்லிமாக இருப்பதற்கு படைத்துப் பரிபாலிப்பதில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது மாத்திரம் போதாது. மாறாக அதனுடன் சேர்த்து தவ்ஹீதுர் ருபூபிய்யா வேண்டி நிற்கக் கூடிய தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க, வழிபாட்டில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தல்) எனும் பண்பும் அவனிடம் இருக்க வேண்டும் என அறிய முடிகின்றது.
இவ்வகைத் தவ்ஹீதை அதாவது தவ்ஹீதுர் ருபூபிய்யாவினை ஆதம் (அலை) அவர்களின் பிள்ளை பிச்சளங்களில் அறியப்பட்ட எவரும் புறக்கணிக்கவில்லை. மனிதர்களில் யாருமே இவ்வுலகை சிருஷ்டித்த சம ஆற்றல்பெற்ற இரு கடவுள்கள் இருப்பதாகக் கூறவில்லை. எனவே தவ்ஹீதுர் ருபூபிய்யாவினை ஃபிர்அவ்னைத் தவிர வேறு யாரும் நிராகரிக்கவில்லை. ஃபிர்அவ்ன் மாத்திரம் அகங்காரம், பிடிவாதத்தனத்தின் காரணமாக அதனை மறுத்து தானே இரட்சகன் என வாதிட்டான். அல்லாஹ் அவனது கூற்றை அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான் : “நான்தான் உங்களுடைய மேலான இறைவன்." (அத்தியாயம் : அந்நாதிஆத் - வசனம் : 24) “தலைவர்களே! என்னைத் தவிர வேறொரு இறைவன் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை." (அத்தியாயம் : அல்கஸஸ் - வசனம் : 38) இது அவனிடம் காணப்பட்ட அகங்காரத்தின் விளைவாகவே காணப்பட்டது. ஏனெனில,; அவனுக்கு அவனல்லாது வேறொருவனே இரட்சகன் என நன்றாகத் தெரிந்திருந்தது. இதனையே அல்லாஹ் கூறுகிறான் : “அவர்களுடைய இதயங்கள் அதனை (உண்மையென) உறுதிகொண்ட நிலையில் அநியாயமாகவும், அகம்பாவத்தாலும் அதனை அவர்கள் மறுத்தார்கள்." (அத்தியாயம் : அந்நம்ல் - வசனம் : 14) மேலும் மூஸா (அலை) ஃபிர்அவ்னுடன் இது குறித்து வாதிட்ட போது கூறிய வாசகத்தையும் அல்குர்ஆனில் அல்லாஹ் எடுத்தியம்புகின்றான் : “(அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்." (அத்தியாயம் : அல்இஸ்ரா - வசனம் : 17) எனவே ஃபிர்அவ்ன் கூட இரட்சகன் அல்லாஹ் என தனது உள்ளத்தில் ஏற்றிருந்திருக்கின்றான்.
அதே போன்று நெருப்பு வணங்கிகளாகிய மஜுஸிகளும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் பாணியில் தௌஹீதுர் ருபூபிய்யாவினை மறுத்தனர். அவர்கள் கூறுகையில் இவ்வுலகை இருள், வெளிச்சம் ஆகிய இரு தெய்வங்களே படைத்தன என்கின்றனர். ஆனாலும் அவர்கள் அவ்விரு தெய்வங்களையும் சமஆற்றல் வாய்ந்தவையாக நினைக்கவில்லை. அவர்கள் கூறுகின்றனர் : வெளிச்சம் இருளை விடவும் சிறந்தது. ஏனெனில் அது நல்லதைப் படைக்கின்றது. இருளோ கெடுதியையே படைக்கின்றது. எனவே கெடுதியைப் படைக்கக் கூடியதை விட நல்லதைப் படைக்கக் கூடியது சிறந்தது. மேலும், இருள் என்பது ஒளியேற்றாத ஒன்றுமில்லாதது. ஒளி என்பது பிரகாசிக்கும் இருக்கக் கூடிய ஒன்று. எனவே அது தன்னிலேயே முழுமையானது.
அத்தோடு தவ்ஹீதுர் ருபூபிய்யாவினை மக்கத்து மு~;ரிக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறுவதனால் அவர்கள் அதனை பூரணமான முறையிலேயே நம்பினார்கள் என அர்த்தம் கிடையாது. மாறாக, முந்தைய வசனங்களில் அல்லாஹ் அவர்களைப் பற்றிக் கூறிக் காட்டியது போல அவர்கள் பொதுப்படையாக அதனை ஒப்புக்கொண்டிருந்தனர். ஆனாலும் அதற்கு முரணான, அதனை சீர்குலைக்கும் அம்சங்களிலும் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நட்சத்திரங்களே மழையைப் பொழிவிக்கின்றன் சூனியக்காரர்கள், ஜோதிடர்கள் மறைவான விடயங்களை அறிகின்றார்கள் போன்ற படைத்துப் பரிபாலித்தலில் இணைகற்பிக்கும் அவர்களது நம்பிக்கைகள் அதற்கு எடுத்துக்காட்டாகும். ஆனாலும் வணக்க வழிபாடுகள் விடயத்தில் அவர்களிடம் நிலவிய இணைவைப்புடன் ஒப்பிடுகையில் அது குறைந்ததாக, மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்டுள்ளது.
நாம் அல்லாஹ்வை சந்திக்கும் வரைக்கும் அவனது சன்மார்க்கத்தில் நிலையாக இருப்பதற்கு அல்லாஹ்வை வேண்டுவோம்.
அல்லாஹ் மிக அறிந்தவன்
(மேலதிகப் பார்வைக்கு நூல் : தய்ஸீருல் அஸீஸில் ஹமீத் (பக்கம் : 33) மற்றும் அல்கவ்லுல் முபீத் (பாகம் : 01 - பக்கம் : 14) இனைப் பார்வையிடவும்.)