0 / 0
15/சபர்/1446 , 19/ஆகஸ்ட்/2024

மண்ணறை வேதனைக்கான காரணங்கள்

கேள்வி: 46068

மண்ணறையில் வேதனை செய்யப்படக் காரணமான பாவங்கள் எவை?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

 ஏற்கனவே 45325ஆம் இலக்கக் கேள்வியின் பதிலில் காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இங்கும் நாம் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஸுன்னாவின் ஆதாரங்களுடன் சில பாவங்களைக் கூறுகின்றோம்.

1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தலும், அவனை நிராகரித்தாலும்

அல்லாஹ் பிர்அவ்னின் குடும்பத்தைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான், “காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்;. மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்).” (ஸூரா ஙாபிர் 46)

அல்லாஹ் மேலும் இவ்வாறு கூறுகின்றான், ‘இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்). (ஸூரா அல்அன்ஆம் : 93)

அதாவது, இறை நிராகரிப்பாளர் மரண வேதனை அடைந்தால் மலக்குமார்கள் அவனுக்கு வேதனை, கைவிலங்குகள், நரகம், அல்லாஹ்வின் கோபம் என்பவற்றைக் கொண்டு நன்மாராயம் கூறுவர். எனவே, அவனது உடலில் உள்ள உயிர் பயந்து வெளியேற மறுத்து கொண்டிருக்கும். அதனால் அவ்வுயிர்கள் அவர்களது உடலில் இருந்து வெளியாகும் வரை மலக்குகள் அவர்களை அடித்துக்கொண்டே இருப்பார்கள். அதோடு இவ்வாறு கூறுவார்கள், “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்;. இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள்.’’ (ஸூரா அல்அன்ஆம் : 93)

இணைவைப்பு மண்ணறை வேதனையின் காரணிகளில் ஒன்று என்பதை ஸைத் பின் ஸாபித் அவர்களது பின்வரும் நபிமொழியும் அறிவிக்கின்றது

‘(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறு கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது.

அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறைகள் இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களைப் பற்றி யார் அறிவார்?" என்று கேட்டார்கள். ஒரு மனிதர், "நான் (அறிவேன்)" என்றார்.

நபி (ஸல்) அவர்கள், "இவர்கள் எப்போது இறந்தார்கள்?" என்று கேட்டார்கள். அவர், "இணைவைப்பு (கோலோச்சியிருந்த அறியாமை)க் காலத்தில் இறந்தனர்" என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்" என்று கூறினார்கள்.

பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, "நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்றார்கள். மக்கள், "நரக நெருப்பின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினர். (முஸ்லிம் : 2867)

“அவர்கள் இணைவைப்பில் மரணித்தார்கள்” என்ற வார்த்தை இணைவைப்பு மண்ணறை வேதனைக்கான ஒரு காரணம் என்பதற்கான ஆதாரமாகும்.

2. நயவஞ்சகத்தனம் கப்ருடைய வேதனையின் காரணிகளில் ஒன்றாகும்.

கப்ருடைய வேதனைக்கு மனிதர்களிலேயே மிகத் தகுதியானவர்கள் நயவஞ்சகர்கள் தான். நரகின் அடித்தட்டுக்குச் சொந்தக்காரர்களான அவர்கள் அதற்குத் தகுதியில்லாமல் இருப்பார்களா?

‘உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள். (ஸூரா அத்தவ்பா : 101)

‘இருமுறை வேதனை செய்வோம்’ என்ற வசனத்துக்கு இமாம் கதாதா, அர்ரபீஃ பின் அனஸ் (ரஹ்) ஆகியோர் இவ்வாறு விளக்கம் கூறியுள்ளார்கள், ‘அவ்விரண்டில் ஒன்று இவ்வுலகில் ஆகும், மற்றையது கப்ருடைய வேதனை ஆகும்’

இரு மலக்குகள் கேள்வி கேட்பது மற்றும் கப்ருடைய சோதனை பற்றிய ஹதீஸ்களின் பல அறிவிப்புகளில் ‘நயவஞ்சகர்கள்’ அல்லது ‘சந்தேகப்படுவார்கள்’ என்ற வார்த்தை தெளிவாகவே வந்துள்ளது. அனஸ் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்களைத் தொட்டும் புகாரியில் வந்துள்ள அறிவிப்பில் ‘நிராகரிப்பாளனுக்கும், நயவஞ்சகனுக்கும் கூறப்படும்’ என்று வந்துள்ளது புகாரி, முஸ்லிமில் வந்துள்ள அஸ்மா ரழியல்லாஹ{ அன்ஹா அவர்களின் ஹதீஸில் ‘நயவஞ்சகன் அல்லது சந்தேகப்படுபவன்’ என்று வந்துள்ளது.

3. அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கி அல்லது அவன் ஹராமாக்கியதை ஹலாலாக்கி அவனது மார்க்கத்தை மாற்றுதல்.

அல்லாஹ்வின் மார்க்கத்தில் மாற்றம் செய்வது கப்ரில் தண்டனை வழங்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று என்பதை நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது,

“அம்ர் (பின் ஆமிர் அல்குஸாஈ நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்றுகொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து) திரிய விட்டவர் அவர்தான்.’’ (புகாரி : 4623)

இந்த ஹதீஸில் வந்துள்ள, ‘ஸாஇபா’ என்பது அவர்கள் நேர்ந்துவிடும் ஒரு ஒட்டகம் அல்லது மாடு அல்லது ஆடு. எனவே அதில் பயணம் செய்யப்படமாட்டாது, அதை சாப்பிடப்படமாட்டாது, அதில் பொதிகள் ஏற்றப்படமாட்டாது. சிலர் தனது சொத்தில் சிலவற்றை அவ்வாறு நேர்ச்சைசெய்துவிடுவார்கள்.

இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹ{ல்லாஹ் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள், ‘இப்ராஹீம் மற்றும் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட கஃபாவின் அருகாமையில் வாழ்ந்த இஸ்மாயிலின் பிள்ளைகளாகிய அல்லது ஏனையோரின் பிள்ளைகளாகிய அரபிகள் இப்ராஹீம் நபியின் மார்க்கத்தைப் பின்பற்றிய ‘ஹனீபாக்களாக இருந்தார்கள் ஆனாலும் பின்னர் குஸாஆ கோத்திரத்தின் அம்ர் பின் லுஹய் எனப்படும் கவர்ணர் அம்மார்க்கத்தை மாற்றிவிட்டான். அவனே முதன்முதலாக இப்ராஹிம் நபியின் மார்க்கத்தை மாற்றி, இணைவைப்பைக் கொண்டுவந்தவன். அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கியவன். இதனால், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், “அம்ர் (பின் ஆமிர் அல்குஸாஈ நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்றுகொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து) திரிய விட்டவர் அவர்தான்.’’ (தகாஇகுத் தப்ஸீர் 2-71)

4. சிறுநீர் விடயத்தில் சுத்தத்தைப் பேணாமல் இருப்பதும் மக்கள் மத்தியில் கோள்மூட்டித் திரிவதும்.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் கூறினார்கள் ‘நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளுக்கு பக்கத்தால் நடந்து சென்றார்கள். அப்போது, “இவர்கள் வேதனை செய்யப்படுகின்றார்கள். ஆனாலும், அவர்கள் வேதனை செய்யப்படுவது பெரிய விடயமொன்றுக்காக அல்ல. அவர்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைவு எடுத்துக்கொள்ளமாட்டார். மற்றவர், கோள்கூறித் திரிந்துகொண்டிருந்தார்.’’ (புகாரி : 218, முஸ்லிம் 292)

நபி (ஸல்) அவர்பகள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் கூறினார்கள ‘பெரும்பாலான கப்ருடைய வேதனைகள் சிறுநீரின் காரணமாகவே! எனவே அதிலிருந்து பாதுகாப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.’ (நூல் : தாரகுத்னீ) (இமாம் அல்பானீ இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்)

5. புறம்

இமாம் புகாரி தங்களது ஸஹீஹ_ல் புகாரி கிரந்தத்தில் “சிறுநீர் மற்றும் புறம் காரணமாக கப்ரில் வேதனை” என்றொரு தலைப்பிட்டுள்ளார்கள். பின்பு ஏற்கனவே கூறப்பட்ட அந்த இருவர் வேதனை செய்யப்படுவது பற்றிய ஹதீஸைக் கூறியுள்ளார்கள். அந்த ஹதீஸில் புறம் கூறப்படவில்லை. கோள் மாத்திரமே கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அவருடைய வழமை என்னவென்றால் தலைப்பின் ஹதீஸின் வேறு அறிவிப்புக்களில் வந்துள்ள விடயங்களையும் சுட்டிக்காட்டுவார். சில அறிவிப்புகளில் “மற்றையவர் புறத்தின் காரணமாக வேதனை செய்யப்படுகிறார்” என்றும் கூறப்பட்டுள்ளது. (அஹ்மத் 5-35, இமாம் அல்பானீ இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்)

6. பொய்

ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், “அப்படியே நாங்கள் சென்று, மல்லாந்து படுத்திருந்த ஒரு மனிதரை அடைந்தோம். அவரது தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரது முகவாயைப் பிடரிவரை கிழித்தார்; (அவ்வாறே) அவரது மூக்குத் துவாரத்தையும் கண்ணையும் பிடரிவரை கிழித்தார். -அல்லது பிளந்தார்.- பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார்.

இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், “அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?” என்று கேட்டேன்.

“அந்த மனிதன் அதிகாலையில் தமது வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.” என்று என்னிடம் கூறப்பட்டது.” (புகாரி : 7074)

7. அல்குர்ஆனைக் கற்றபின் அதைப் புறக்கணிப்பது, கடமையான தொழுகைகளை விட்டுவிட்டு உறங்குவது.

ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், “நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரது தலைமாட்டில் ஒரு பாறாங்கல்லை வைத்துக்கொண்டு மற்றொரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். அவர் அந்தக் கல்லைப் படுத்திருக்கும் மனிதரின் தலையில் போட, அது அவரது தலையை நசுக்கிவிடுகிறது. பின்னர் அந்தக் கல் அடித்தவரை நோக்கி உருண்டு வர, அவர் பின்தொடர்ந்து சென்று கல்லை எடுத்துக்கொள்கிறார்.மறுபடியும் அவர் வந்து சேர்வதற்குள் படுத்திருந்தவரின் தலை முன்பிருந்ததைப் போன்றே நல்ல நிலைக்கு மாறிவிடுகிறது. அப்பால் மீண்டும் வந்து முதல் தடவை செய்ததைப் போன்றே அவர் மீண்டும் செய்கிறார்.

நான் அவர்கள் இருவரிடமும், “அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?” என்று கேட்டேன்.

 “அந்த மனிதன் குர்ஆனை (மனனம்செய்து) எடுத்துக்கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான்.” என்றார்கள் அவர்கள்.

இன்னொரு அறிவிப்பில், “தலை நசுக்கப்படும் அம்மனிதர் தான், அல்குர்ஆனைக் கற்றுவிட்டு, அதைப் புறக்கணித்தவர். மேலும், கடமையான தொழுகையை விட்டு உறங்கியவர்” என்று வந்துள்ளது. (புகாரி : 7076)

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் முதல் அறிவிப்பை விட இது தெளிவாக உள்ளது என்று கூறுகின்றார்கள். “முதல் அறிவிப்பு அவர் இரவில் அல்குர்ஆன் ஓதாமல் இருந்ததால் தண்டிக்கப்படுவதாகவும், மற்றையதில், கடமையான தொழுகையை விட்டுவிட்டு உறங்கியதால் தண்டிக்கப்படுவதாகவும் வந்துள்ளது.

அல்குர்ஆனை ஓதுவதை விடல், அமல் செய்வதை விடல் ஆகிய இரண்டு காரணங்களுக்காகவும் தண்டிக்கப்பட வாயப்புமுள்ளது.

இப்னு ஹ{பைரா (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், “அல்குர்ஆனை மனனமிட்ட பின் அதைப் புறக்கணிப்பது மோசமான குற்றமாகும். அவர் அல்குர்ஆனைப் புறக்கணிக்க நியாயமான ஒன்றை அதில் கண்டது போன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகின்றார். மிகக் கண்ணியமான அம்சமாகிய அல்குர்ஆனை அவர் புறக்கணித்தமையினால், அவருடைய மிகக் கண்ணியமான உறுப்பாகிய தலையில் தண்டிக்கப்படுகின்றார்.” (பத்ஹுல் பாரி 3-251)

8. வட்டி சாப்பிடல்.

ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், “அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவன் நீந்திக்கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒரு மனிதர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்துவைத்துக்கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தமது வாயைத் திறக்கின்றான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகின்றான்.

அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தனது வாயை அவன் திறந்துகாட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக்கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.)

ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக்கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர் களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான்.” (புகாரி : 7074)

9. விபச்சாரம்

ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், “அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல்பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப்பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து தீப்பிழம்பு ஒன்று (மேலே) வருகிறது. அந்தப் பிழம்பு அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகின்றார்கள்.

நான் (என்னுடன் வந்த) அவ்விரு (வான)வரிடம், “இவர்கள் யார்?” என்று கேட்டேன்.

அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களும் ஆவர்.” (புகாரி : 7074)

10. மக்களுக்கு நன்மையை ஏவிவிட்டு தன்னை மறத்தல்.

நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹ_ அன்ஹ{ அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் விண் பயணம் (மிஃராஜ்) சென்ற இரவில் சில மனிதர்களைக் கண்டேன். அவர்களது உதடுகள் நெருப்பாலான கத்தரிக்கோலால் வெட்டப்பட்டுக்கொண்டிருந்தன. ‘ஜிப்ரீலே! இவர்கள் யார்?’ என்று நான் கேட்டேன். ‘அவர்கள் உங்கள் சமுதாயத்தின் பேச்சாளர்கள். மக்களுக்கு நன்மையை ஏவிவிட்டு தங்களை மறந்தவர்கள் அவர்கள் வேதங்களை ஓதிக் கொண்டு தான் இருந்தார்கள். அவர்கள் சிந்திக்க வேண்டாமா?’ (அஹ்மத் 3-120, இமாம் அல்பானீ இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்)

பைஹகியின் அறிவிப்பு இவ்வாறு உள்ளது “நான் விண்பயணம் சென்ற இரவில் ஒரு கூட்டத்தினரிடம் சென்றேன். அவர்கள் உதடுகள் நெருப்பாலான கத்தரியால் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. வெட்டப்பட்ட உதடு மீண்டும் சரிசெய்யப்படும். ‘இவர்கள் யார?’; என்று கேட்டேன். ‘இவர்கள் தாம் உங்கள் சமுதாயத்தின் பேச்சாளர்கள். அவர்கள் செய்யாதவற்றைக் கூறுவார்கள். அல்லாஹ்வின் வேதத்தை ஓதுவார்கள் ஆனால் அதைக் கொண்டு அமல் செய்யமாட்டார்கள்.” (இமாம் அல்பானீ இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்)

11. நியாயமான காரணமின்றி ரமலானில் நோன்பு விடுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறியதைத்தான் கேட்டதாக அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில் என்னிடம் இரு மனிதர்கள் வந்தார்கள். அவர்கள் என் இரு தோள்புஜங்களையும் பிடித்துக்கொண்டு ஒரு மலையிடம் சென்றார்கள். பின்பு ‘ஏறுங்கள்’ என்றார்கள.; ‘எனக்கு முடியாது’ என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள் ‘நாம் அதை உங்களுக்கு இலகுபடுத்துகின்றோம்’ என்றார்கள். நான் மலையின் நடுப்பகுதிக்கு வந்தபோது சப்தங்களை கேட்டேன் ‘இவை என்ன சப்தங்கள்?’ என்று நான் கேட்டபோது, ‘இது நரகவாதிகளின் சப்தம்’ என்று அவர்கள் கூறிவிட்டு என்னை அழைத்துக்கொண்டு சென்றார்கள். அப்போது நான் பின் பாதங்களால் தொங்கவிடப்பட்ட. வாய்கள் பிழக்கப்பட்ட ஒரு கூட்டத்தைக் கண்டேன் அவர்களது வாயிலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. ‘இவர்கள் யார்?’ எனக் கேட்டேன். ‘இவர்கள்தான் நோன்பு நோன்பு திறக்கும் நேரத்துக்கு முன்னர் நோன்பை விட்டவர்கள்’ என்றார்கள். (இப்னு ஹிப்பான், ஹாகிம். இமாம் அல்பானீ இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்)

12. போர்ச் செல்வங்களை (கனீமத்) பங்குவைக்க முன்னர் திருடுதல். 

யுத்தமொன்றில் இவ்வாறு போர்ச்செல்வமொன்றைத் திருடிய மனிதன் பற்றி அபூ ஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் இவ்வாறு வந்துள்ளது. “என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவற்றிலிருந்து கைபர் அன்று அவர் எடுத்துக்கொண்டுவிட்ட போர்வை அவர்மீது நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது” (புகாரி : 4234, முஸ்லிம் : 115)

13. பெருமைக்காக ஆடைகளை தரையில் பட இழுத்துச் செல்லுதல்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “ஒரு மனிதர் பெருமைக்காக ஆடைகளை இழுத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்த போது, பூமியில் சுழிவாங்கப்பட்டார். அவர் மறுமை வரை பூமியில் அடியில் சென்றுகொண்டே இருப்பார்.” (புகாரி : 3485, முஸ்லிம் : 2088)

14. ஹாஜிகளிடம் திருடதல். 

ஜாபிர் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாக உள்ளது, அதில் இவ்வாறு உள்ளது, “நரகம் என் (கண்)முன்னே கொண்டுவரப்பட்டது. அதன் தீச்சுவாலை என்னைத் தாக்கிவிடுமோ என நான் அஞ்சினேன். அதன் காரணமாகவே நான் பின்வாங்கியதை நீங்கள் கண்டீர்கள். அ(ந்த நரகத்)தில் முனை வளைந்த கைத்தடி வைத்திருந்த ஒருவன் தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவன் கைத்தடியின் முனையால் ஹஜ் பயணிகளிடம் திருடிவந்தான். திருட்டு அம்பலமாகிவிட்டால் "எனது கைத்தடியில் (எப்படியோ இந்தப் பொருள்) மாட்டிக்கொண்டது" என்று கூறுவான். யாருக்கும் தெரியாவிட்டால் அதைக் கொண்டு சென்றுவிடுவான்.” (முஸ்லிம் : 904)

15. மிருகங்களை அடைத்து வைப்பது, கொடுமை செய்வது இரக்கம் காட்டாமல் இருப்பது.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கூறிய ஹதீஸின் தொடரில் இவ்வாறு நபியவர்கள் கூறினார்கள் “மேலும், நரகத்தில் நான், பூனை வளர்த்த பெண்ணையும் கண்டேன். அவள் அதற்குத் தீனி போடாமல் கட்டிப்போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து)விடவுமில்லை. அது பசியாலேயே செத்துப்போய்விட்டது.”

‘மண்ணறை வேதனையை நிறுவுதல்’ என்னும் நூலில் இமாம் பைஹகீ இவ்வாறு கூறுகின்றார்கள் “நபி ஸல் அவர்கள் கிரகணத் தொழுகையின் போது தங்களது குடலை இழுத்துச் சல்பவர்களையும், திருட்டுக்காகத் தண்டிக்கப்படுபவர்களையும், பூனையின் காரணமாகத் தண்டிக்கப்பட்ட பெண்ணையும் கண்டுள்ளார்கள். அக்கால மக்களின் பார்வையில் அவர்கள் மண்ணறைக்குள் இத்துப் போய் விட்டார்கள். நபி ஸல் அவர்களுடன் வேறு யாரும் இதைக் காணவில்லை” (பக்கம் : 97)

16. கடன்

மரணித்தவருக்கு மண்ணறையில் தீங்கிழைக்கும் காரணிகளில் கடனும் ஒன்றாகும். ஸஃத் இப்னுல் அத்வல் என்ற நபித்தோழர் இவ்வாறு கூறுகின்றார், ‘என்னுடைய சகோதரர்கள் மூன்று தீனார்களை மாத்திரம் விட்டுவிட்டு மரணித்து விட்டார். அவருக்கு சிறு பிள்ளைகளும் இருந்தனர். அவர்களின் செலவுகளைப் பொறுப்பேற்;க முன்வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரன் அவரது கடன் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதனை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார்கள். நானும் சென்று கடன்களை எல்லாம் நிறைவேற்றி விட்டு நபியவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே கடன்களை நிறைவேற்றி விட்டேன். ஒரு பெண் மாத்திரம் தான் எஞ்சியுள்ளார். இரு தீனார்கள் தர இருப்பதாக அவள் கூறுகின்றாள். ஆனாலும் அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள், “அவளுக்குக் கொடுத்துவிடு! அவர் கூறுவது உண்மை” என்று கூறினார்கள். (அஹ்மத் : 16776, இப்னு மாஜஹ் : 2-82. இமாம் அல்பானீ இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்)

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
மண்ணறை வேதனைக்கான காரணங்கள் - Islam Question & Answer