0 / 0
22/சபர்/1446 , 26/ஆகஸ்ட்/2024

தொடர் சிறுநீர் கசிவு கொண்டவரின் சுத்தமும் தொழுகையும்

கேள்வி: 39494

நான் சிறுநீர் சொட்டுகள் கசிவதாக உணருகிறேன். பின்னர் தொழுகை பற்றிய சட்டத்தை கேட்டேன் அதற்கு  ஒவ்வொரு தொழுகை நேரத்திற்கும் வுழு செய்து நீ விரும்பியவாறு தொழுதுகொள் , அடுத்த தொழுகை நேரம் வந்துவிட்டால் மீண்டும் புதிதாக வுழு செய்துகொள் என்று சொல்லப்பட்டது.

Summary of answer

தொழுகை நேரம் வருவதற்கு முன் நான் வுழு செய்துகொள்ள முடியுமா? உதாரணமாக (ஜமாஅத் தொழுகையை மஸ்ஜிதில் அடைந்து கொள்வதற்காக)
அதேபோல் நான் வீட்டிற்கு வெளியில் இருந்தால் நேரம் வந்த தொழுகைகளுக்கான வுழுவில் வேறு தொழுகை தொழ முடியுமா? அவ்வாறு அனுமதி இல்லையெனில் வுழு செய்து தொழுவதற்காக எப்படி நான் எனது உள்ளாடைகளை சுத்தம் செய்வேன்?
ஒரு வுழுவில் நீண்ட தொழுகை தொழ முடியுமா? உதாரணமாக (இஷா தொழுகை முடிந்ததும் தராவீஹ் தொழுகையையும் தொழுவது போல)
-அல்லாஹ் உங்களுக்கு கூலி வழங்குவானாக-

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

1- யாருக்கு தொடக்கு தொடர்ச்சியாக இருக்கிறதோ - தொடர் காற்று மற்றும் சிறுநீர் கசிவு உடையவரைப் போல-

அவர் எல்லா தொழுகைக்கும் வுழு செய்து கொள்வார். அடுத்த தொழுகை நேரம் வரும் வரை, அந்த வுழுவின் மூலம் அவர் விரும்பிய கடமையான சுன்னத்தான தொழுகைகளை தொழுதுகொள்ளலாம்.

அதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை கூறலாம்.

பாத்திமா பின்த் அபீஹுபைஷ்  என்ற பெண்மணி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; (தொடர்ந்து உதிரம் கசிவதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை! (தொழுகையைவிட்டுவிடாதே!) இது இரத்தக் குழா(யிலிலிருந்து வருவதே)யாகும். மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு ; அது நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி(குளித்து)விட்டுத் தொழுதுகொள்!” என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மனியிடம்) “பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ அங்கசுத்தி (உளூ) செய்துகொள்!” என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி  (226) முஸ்லிம் (333)

அறிஞர்களின் பார்வையில் தொடர் சிறுநீர் கசிவு உடையவர் தொடர் உதிரப்போக்கு பெண்ணுடன் சேர்க்கபப்படுகிறார்.

இருப்பினும் ஒருவர் சிறுநீர் நின்றபின் சுத்தமாகி தொழுவதற்கான நேரமளவு இருக்கிறது என்று அறிந்தால் அவருக்கு, தொழுகையை அந்த நேரம் வரை தாமதப்படுத்துவது அவசியமாகும்.

ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹ் கூறுகிறார் ;

தொடர் சிறுநீர் கசிவால் பாதிக்கப்பட்டவருக்கு இரு நிலைகள் இருக்கின்றன.

01- ஒருவருக்கு முடிவில்லாமல் தொடர்ச்சியாக சிறுநீர் கசிவு ஏற்படுமானால், அதாவது சிறுநீர் பையில் சிறுநீர் சேர்ந்ததும் இறங்கிவிடும்.

இவர், நேரம் நுழைந்ததும் வுழு செய்துகொள்வார், தனது மறைவிடத்தில் துணியை வைத்துக் கொண்டு தொழுவார், பின்னர் மறைவிடத்தில் இருந்தது வெளியேறக்கூடியவற்றால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

2- சிறுநீர் கழித்த பின்னர் கசிவு நின்றுவிடுகிறது என்றிருந்தால் -அது பத்து நிமிடங்களோ அல்லது கால்மணி நேரமோ-

ஜமாஅத் தொழுகை தவறினாலும் சரி, முழுமையாக நிற்கும் வரை எதிர்ப்பார்த்து விட்டு, பின்பு வுழுச் செய்து தொழுது கொள்வார்.

அஸ்இலதுல் பாபில் மப்தூஹ் (கேள்வி 17 : லிகா 67)

தொடர் உதிரப்போக்கு பெண் (வுழு) சுத்தமாகும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில்,

குறித்த தொழுகை நேரம் முடிந்தவுடன் அவளது  சுத்தம் முறிந்து விடுமா  அல்லது அடுத்து வரும் தொழுகை நேரம் நுழைந்தவுடன் சுத்தம் முறிந்துவிடுமா என்ற கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.

அதாவது ஒரு  தொடர் இரத்தப்போக்கு உள்ள பெண் சுபஹ் தொழுகைக்காக வுழுச் செய்துள்ளாள் என்றால், அவளுக்கு அந்த வுழு மூலம் ளுஹா மற்றும் பெருநாள் தொழுகைகளை தொழ முடியுமா.?

யாரெல்லாம் அவளது சுத்தம் குறித்த நேரம் முடிந்தவுடன் சுத்தம் நீங்கிவிடும் என்று கூறுகின்றார்களோ அவர்கள் தொழுவது கூடாது என்பர். ஏனெனில் சூரிய உதயத்திற்கு பின் அவளது சுத்தம் நீங்கிவிட்டது.

யாரெல்லாம் அடுத்த தொழுகை நேரம் நுழைந்ததும் அவளது சுத்தம் நீங்கிவிடும் என்று கூறுகின்றார்களோ அவர்கள், அவளுக்கு ளுஹா மற்றும் பெருநாள் தொழுகைகளை தொழ அனுமதி வழங்குவர்.

ஏனெனில் அவளது சுத்தம் ளுஹர் நேரம் வரும் வரை நீங்காமல் இருக்கும்.

இந்த இரண்டும் கூற்றுகளும் இமாம் அஹ்மத் மற்றும் ஏனைய அறிஞர்களின் மத்ஹபில் உள்ளன.

நூல்: அல்இன்ஸாப் 1/378

அல்மவ்ஸூஅ அல்பிக்ஹிய்யா 3/212

என்றாலும் பேணுதல் என்ற வகையில் ளுஹா மற்றும் பெருநாள் தொழுகைகளுக்காக புதிதாக வுழு செய்துகொள்வது சிறப்பு.

இவ்வாறு தான் ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹ் அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இது தொடர்பாக பின்வரும் கேள்வி இலக்கத்தை பார்க்கவும்‌ 22843.

2- மேல் கூறிய விடயங்களுக்கிணங்க உங்களுக்கு நேரம் நுழைய பின்னர் தொழுவதற்காக நேரம் நுழைய முன்பு வுழு செய்வது அனுமதி கிடையாது.

அது ஜமாஅத் தொழுகையை அடைந்து கொள்ள இருந்தாலும் சரி ஏனைய காரணங்களுக்காக இருந்தாலும் சரி.

ஏனெனில் உங்கள் சுத்தம் அடுத்த தொழுகை நேரம் நுழைந்தவுடன் நீங்கிவிடும்.

மாறாக நாம் உணர்த்தும் விடயம் யாதெனில் இச்சட்டம் தொடர் தொடக்குடன் சம்பந்தப்பட்டது. அத்துடன் தொடர் சிறுநீர் கசிவு உள்ள நபர் வுழு செய்து அதன் பின்னர் தொடக்கு வெளியாகாத நிலையில் அடுத்த தொழுகை நேரம் நுழைந்து விட்டால் மீண்டும் அவர் வுழு செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவர் முதல் வுழுவின் மூலமே தொழலாம்.

ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் வுழு செய்ய வேண்டும் என்ற மார்க்க அறிஞர்களின் கூற்றானது ஏதும் (தொடக்கு) வெளியேரும் சந்தர்ப்பங்களிலாகும்.

இமாம் புஹுதி கூறுகிறார் (தொடர் இரத்தப்போக்கு உள்ள பெண் மற்றும் அவளைப் போன்றோர்) தொடர் சிறுநீர் கசிவு மற்றும் தொடர் காற்று, தொடர் மதி வெளியாகும் நபர்கள்..... (இவர்கள் அனைவரும்) தொடக்கு ஏதும் வெளியேறினால், ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் வுழு செய்ய வேண்டும். அந்நேரம் முடியும் வரை கட்டாயமான மற்றும் சுன்னத்தான தொழுகைகளை தொழுது கொள்ளலாம். ஏதும் வெளியேறாதவிடத்து மீண்டும் வுழு செய்வது அவசியம் இல்லை. (57)

ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹ் கூறினார்கள் " தொடர் இரத்தப்போக்கு உள்ள பெண் இரத்தம் வெளியேறினால் ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் வுழு செய்ய வேண்டும். அவ்வாறு ஒன்றும் வெளியேறவில்லை என்றால் ஆரம்ப வுழுவில் அவள் இருந்து கொள்வாள்.

நூல்: அஷ்ஷர்ஹுல் மும்திஃ : 1/438

3- நீங்கள் வீட்டிற்கு வெளியில் இருக்கும் போது உங்கள் சுத்த கால எல்லையும் முடிவடைந்து விட்டது அப்போது நீங்கள் தொழ நாடினால் நீங்கள் மறைவிடத்தை கழுவி விட்டு கட்டாயம் வுழு செய்தாக வேண்டும். அத்துடன் இயன்றளவு ஏதும் வெளியேறாமல் தடுக்க துணியை வைத்துக்கொள்ள வேண்டும்.

உள்ளாடைகளை சுத்தம் செய்வது, அவற்றை கழுவுவதாகும். மேலும் தொழுகைக்காக சுத்தமான அடை ஒன்றை வைத்திருந்தால் உங்களுக்கு இலேசாக இருக்கும். ஆடைகளை கழுவுவதோ மாற்றுவதோ கடினமான இருப்பின் அதே நிலையில் தொழுதுகொள்ளுங்கள்.

ஷெய்க் பின் பாஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள் " தொடர் சிறுநீர் கசிவு மூலம் பாதிக்கப்பட்டவர், சிகிச்சை எடுத்தும் பயனளிக்கவில்லை என்றால், ஒவ்வொரு தொழுகைக்கும் அதன் நேரம் நுழைந்த பிறகு வுழுச் செய்து கொள்ளவேண்டும்.  உடலில் பட்டிருக்கும் சிறுநீர் கசிவுகளை கழுவ வேண்டும். சிரமம் இல்லையெனில் தொழுகைக்காக மாத்திரம் ஆடை ஒன்றை வைத்துக் கொள்ளல். சிரமம் என்றால் மன்னிக்கப்பட்டுவிடும்.

அல்லாஹ் கூறுகிறான் (மார்க்கத்தில் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தவில்லை)  மற்றுமோர் வசனம் (அல்லாஹ் உங்களுக்கு நல்லவை மாத்திரம் நாடுகிறான் மாறாக உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (நான் உங்களுக்கு ஏதேனும் ஒன்றை கட்டளையிட்டால் உங்களுக்கு இயன்றளவு அதை கடைபிடியுங்கள்...) இயன்றவரை சிறுநீர், தொழும் இடத்திலோ உடலிலோ ஆடையிலோ படாதவாறு பேணிக் கொள்ளுங்கள்.

பதாவா இஸ்லாமிய்யா 1/192

உமக்கு வுழு செய்வதும் ஆடையை கழுவுவதும் சிரமமாக இருப்பின் ளுஹர் மற்றும் அஸர் தொழுகையை ஏதாவது இரண்டின் ஒரு நேரத்தில் ஒரே வுழுவில் சேர்த்து தொழுது கொள்ளலாம். அவ்வாறே மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளையும் சேர்த்து தொழுது கொள்ளலாம்.

வீட்டிற்குள் இருந்தாலும் சரி வெளியில் சென்றாலும் சரி. 

ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹ் கூறினார்கள்" நோயாளி மற்றும் தொடர் உதிரப்போக்கு உள்ள பெண் இருவரும் தொழுகையை சேர்த்து தொழுது கொள்ளலாம்.

மஜ்மூஉல் பதாவா  24/14

ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹ் கூறினார்கள் " தொடர் இரத்தப்போக்கு உள்ள பெண்ணுக்கு ளுஹர் மற்றும் அஸர் மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளை சேர்த்து தொழ அனுமதி உள்ளது. காரணம் ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்வது அவளுக்கு சிரமமாக இருக்கும் என்பதால்.

அஷ்ஷர்ஹுல் மும்திஃ 4/559

4- உங்களுக்கு இஷாவுடைய வுழு மூலம் தராவீஹ் தொழுகை தொழ முடியும். நடுநிசி தாண்டினாலும் பிரச்சினை இல்லை.

ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது;

தொடர் இரத்தப்போக்கு உள்ள பெண் நடுநிசிக்கு பின்னர் இஷாவுடைய வுழுவுடன்  இரவுத் தொழுகை தொழுவதன் சட்டம் என்ன.

பதில்: இந்த விடயத்தில் கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.

சில அறிஞர்கள் நடுநிசியுடன் முடிந்து விடும். எனவே அவள் புதிதாக வுழு செய்து கொள்ளவேண்டும்‌.

இன்னும் சிலர் அவளுக்கு வுழுவை மீண்டும் செய்ய அவசியமில்லை என்று கூறுகின்றனர். இக்கருதே ஏற்றமானதும் கூட.

பதாவத் தஹாரா (286)

அல்லாஹ் நன்கறிந்தவன்

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
தொடர் சிறுநீர் கசிவு கொண்டவரின் சுத்தமும் தொழுகையும் - Islam Question & Answer