Table Of Contents
சொல், செயல், நம்பிக்கை ஆகியவை ஒன்றிணைந்ததே ஈமானாகும்
ஈமான் என்பது நாவினால் ஏற்றுக் கொண்டு, இதயத்தினால் நம்பி உடலுறுப்புக்களினால் செயற்படுத்துவதாகும் என்று குர்ஆன் ஸ{ன்னாவாதிகள் ஏகோபித்துக் கூறுகின்றனர். இமாம் ~hபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : “இதுவே நபித்தோழர்கள், தாபிஈன்கள் மற்றும் நாங்கள் சந்தித்தவர்களிடையே ஒருமித்த கருத்தாக இருந்தது. அவர்கள் கூறுவார்கள் “நம்பிக்கை என்பது சொல், செயல், எண்ணம் என்பனவாகும். இந்த மூன்றில் ஒன்று மற்றொன்று இல்லாமல் நிறைவேற மாட்டாது." (நூல் : உஸுலு இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னதி வல்ஜமாஅஹ் : 5ஃ956) ஃ மஜ்மூஉல் பதாவா : 7ஃ209)
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கூறுகையில் “ நான் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து நபிமொழிகளைப் பதிவு செய்துள்ளேன். எனினும், ஈமான் என்பது சொல்லும், செயலும் என்று கூறுபவர்களிடமிருந்தே அவற்றை பதிவு செய்தேன். ஈமான் என்பது சொல் மாத்திரம் என்று கூறுபவர்களது நபிமொழிகளை நான் பதிவு செய்யவில்லை." (நூல் : உஸூலு இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னதி வல்ஜமாஅஹ் : 5ஃ959)
இமாம் அபூ உபைத் அல்காஸிம் இப்னு ஸல்லாம் (ரஹ்) அவர்கள் “ ஈமான் என்பது சொல்லும், செயலுமாகும்; அது கூடிக் குறைகின்றது." என்று சொல்லிக் கொண்டிருந்த 133 அறிஞர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு விட்டு “இவர்கள் அனைவரும் “ஈமான் என்பது சொல்லும் செயலுமாகும். மேலும் அது கூடிக் குறைகின்றது." என்று கூறிக் கொண்டிருந்தனர். அதுவே எங்களதும் நடைமுறையாகும்." என்று கூறினார்கள். இச்செய்தியினை இப்னு பத்தா மற்றும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) தங்களது புத்தகங்களில் பதிவு செய்துள்ளார்கள். (பார்க்க : அல்இபானா : 2ஃ814-826 ஃ மஜ்மூஉல் பதாவா : 07ஃ309)
மேலும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : “ஈமான் என்பது சொல்லும், செயலுமாகும்" என்று சுன்னா, ஹதீஸ்வாதிகள் ஒருமித்துக் கூறியதை பலரும் அறிவிப்புச் செய்துள்ளனர். (மஜ்மூஉல் பதாவா : 07ஃ330)
ஈமான் என்பது சொல்லும், செயலுமாகும் என்பதற்கான சான்றுகள்
01) இஜ்மாவின் அடிப்படையான அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் ஆதாரங்கள் சொல், செயல் ஆகிய இப்பகுதிகள் ஈமானில் உள்ளடங்குபவையாகும் என கூறிக் கொண்டிருக்கின்றன. விரிவாக நோக்குகையில் அவை நான்கு அம்சங்களாகும்.
01) நாவினால் மொழிதல் : அல்லாஹ்வை வழிபடும் முகமாக கூறப்படும் வார்த்தைகள் அனைத்தும் ஈமானில் உள்ளடங்குகின்றன. எனினும் இஸ்லாத்தின் முழக்கமான “லாஇலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ( அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படத் தகுதியான வேறு நாயன் இல்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்.) எனும் வார்த்தையை மொழிவது ஈமானின் தூண் ஆகும். அது இல்லாமல் ஈமான் சரியாக மாட்டாது.
நாவினால் மொழிவதும் ஈமானில் உள்ளடங்கும் என்பதை பின்வரும் சான்றுகள் விளக்குகின்றன. அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்றான் :
(நம்பிக்கையாளர்களே!) நீங்களும் கூறுங்கள்: “அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பட்ட அனைத்தையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அன்றி அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிப்படுவோம்." (அத்தியாயம் : பகறா, வசனம் : 136)
மேலும் “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை” என்று கூறும் வரை மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். 'வணக்கத்திற்குரியவன் (இறைவன்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை” என்று கூறுகிறவர் நியாயமான காரணம் இருந்தாலே தவிர தன் உயிரையும், உடைமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார். அவரிடம் கேள்விகணக்குக் கேட்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி : 2946, ஸஹீஹ் முஸ்லிம் : 21)
நபிகளார் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “ஈமான் எனும் இறைநம்பிக்கை எழுபதுக்கு -அல்லது அறுபதுக்கு- மேற்பட்ட கிளைகளைக் கொண்டது. அவற்றில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது பாதை விட்டும் நோவினை தரக்கூடியதை அகற்றுவதாகும். வெட்கம் ஈமானின் ஒரு கிளையாகும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி : 09, ஸஹீஹ் முஸ்லிம் : 35)
02) உள்ளத்தால் ஏற்று உண்மைப்படுத்தல் : உள்ளத்தால் ஏற்று உண்மைப்படுத்துவது ஈமானில் உள்ளடங்குகின்றது என்பதை பின்வரும் சான்றுகள் நிரூபிக்கின்றன. அல்லாஹ் அத்தியாயம் முஜாதலா - 22 ஆம் வசனத்தில் “அவர்களின் இதயங்களில் அல்லாஹ் ஈமானைப் பதித்து வைத்துவிட்டான்." என்றும் அத்தியாயம் ஹுஜுராத் - 15 ஆம் வசனத்தில் “(உண்மையான) விசுவாசிகள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசங்கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய செல்வங்களாலும், தம் உயிர்களாலும் (ஜிஹாத் எனும்) அறப்போர் செய்தார்களே அத்தகையோர்தாம், அவர்களே (தங்கள் விசுவாசத்தில்) உண்மையாளர்கள்." என்றும் அருளியுள்ளான்.
நபிகளார் (ஸல்) இறைநம்பிக்கையைப் பற்றிக் கூறுகையில் “நீர் அல்லாஹ்வையும், வானவர்களையும், இறைவேதங்களையும், இறைத்தூதர்களையும், மறுமை நாளையும் மேலும் நன்மை, தீமை ஆகிய அனைத்தையும் இறைவிதிப்படியே இடம்பெறுகின்றன என்று விசுவாசிப்பதாகும்." என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் : 08 - அறிவிப்பாளர் : உமர் (ரழி) , ஸஹீஹுல் புகாரி : 50 - அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரழி))
மேலும் (ஷபாஅத்) பரிந்துரையைப் பற்றிய நபிமொழியில் “அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்பேன். அப்போது, 'செல்லுங்கள்;. எவருடைய உள்ளத்தில் ஓர் கடுகு விதையின் எடையளவேனும் இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்” என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன்." என்று கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 7510, ஸஹீஹ் முஸ்லிம் : 193)
03) உள்ளத்தால் செயற்படுத்தல் : அதாவது உளத்தூய்மை, இறைக் கட்டளைகளுக்குக் கட்டுப்படுதல், அல்லாஹ்வின் மீது அச்சமும், ஆதரவும், அன்பும் வைப்பது என்பனவாகும்.
இதுவும் ஈமானில் உள்ளடங்குகின்றது என்பதற்கான சான்றுகள் பின்வருமாறு :-
அல்லாஹ் கூறுகின்றான் : “உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்;. அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். அவர்கள் தொழுகையையும் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். இத்தகையோர்தாம் உண்மையாகவே விசுவாசிகள், அவர்களுக்கு அவர்கள் இரட்சகனிடத்தில் பல உயர் பதவிகளும், மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு." (அல்அன்பால் 02 - 04)
மேற்குறித்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயம் என்பது உளச் செயற்பாடாகும்.
மேலும் நபிகளார் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “ஈமான் எனும் இறைநம்பிக்கை எழுபதுக்கு -அல்லது அறுபதுக்கு- மேற்பட்ட கிளைகளைக் கொண்டது. அவற்றில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது பாதை விட்டும் நோவினை தரக்கூடியதை அகற்றுவதாகும். வெட்கம் ஈமானின் ஒரு கிளையாகும்” (ஸஹீஹுல் புகாரி : 09, ஸஹீஹ் முஸ்லிம் : 35) மேற்குறித்த நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வெட்கமானது உளச்செயற்படுகளில் ஒன்றாகும். அத்துடன் முன்னர் கூறப்பட்டதைப் போல நாவால் மொழிதல், உடலுறுப்புக்களால் செயற்படுத்தல் என்பனவும் ஈமானில் உள்ளடங்குகின்றன என்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாகும்.
மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது என்பனவாகும்." (ஸஹீஹுல் புகாரி : 16, ஸஹீஹ் முஸ்லிம் : 43)
அன்பும், வெறுப்பும் உளச்செயற்பாடுகள் என்பது நாமறிந்த விடயம். அதனை இந்நபிமொழி ஈமானில் ஒரு அம்சமாக, ஏன் ஒரு அடியான் ஈமானின் ரசணையை சுவைப்பதற்கான வழியாகக் குறிப்பிடுகின்றது.
04) உடலுறுப்புக்களால் செயற்படுத்தல் :
சுத்தம், தொழுகை, நோன்பு, ஹஜ்,.அறப்போர் புரிதல் போன்றன அதில் உள்ளடங்கக் கூடியன.
உடலுறுப்புக்களால் செயற்படுத்துவதும் ஈமானில் உள்ளடங்கும் என்பதற்கு பின்வருவன சான்றாக அமைகின்றன.
அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்றான் : “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.” (அத்தியாயம் : பையினா, வசனம் : 05)
“(உண்மையான) விசுவாசிகள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசங்கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய செல்வங்களாலும், தம் உயிர்களாலும் (ஜிஹாத் எனும்) அறப்போர் செய்தார்களே அத்தகையோர்தாம், அவர்களே (தங்கள் விசுவாசத்தில்) உண்மையாளர்கள்." (அத்தியாயம் : ஹுஜுராத், வசனம் : 15)
இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜிஹாத் (,இறைப்பாதையில் போர்புரிவது) ஈமானில் அடங்கக் கூடியதாகும்.
அவ்வாறே அல்லாஹ் அத்தியாயம் அன்பால், 2 - 4 வசனங்களில் கூறுகின்றான் :
“உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். அவர்கள் தொழுகையையும் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். இத்தகையோர்தாம் உண்மையாகவே விசுவாசிகள், அவர்களுக்கு அவர்கள் இரட்சகனிடத்தில் பல உயர் பதவிகளும், மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு."
தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் வழங்குவது என்பன உடலுறுப்புக்களின் செயற்பாடுகளாகும். அவற்றை அல்லாஹ் இங்கு இறைநம்பிக்கையாகக் குறிப்பிட்டுள்ளான்.
மேலும் அத்தியாயம் : பகறா, வசனம் : 143 இல் அல்லாஹ் கூறுகையில் “அல்லாஹ் உங்களுடைய ஈமானை (நம்பிக்கையை) ஒருபோதும் வீணாக்கி விடமாட்டான்." என்று கூறுகிறான். அதாவது நீங்கள் இதற்கு முன்னர் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுத தொழுகையையாகும். இந்த இறைவசனத்திற்கு இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது ஸஹீஹுல் புகாரி கிரந்தத்தில் தலைப்பிடுகையில் “ தொழுகை ஈமானில் உள்ளதாகும்." எனத் தலைப்பிட்டுள்ளார்கள்.
மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள் அப்து கைஸ் கூட்டத்தினருக்கு கூறியதும் இதனையே உணர்த்துகின்றது. “அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்ளும்படி உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சான்று பகர்வதும் தொழுகையை நிலைநாட்டுவதும் ஸகாத் கொடுப்பதும் போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும். (ஸஹீஹுல் புகாரி : 7556, முஸ்லிம் : 17)
இதற்கான சான்றுகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இஸ்லாமிய சான்றோர் இது விடயத்தில் ஏகோபித்துள்ளது பிரபல்யமான செய்தியாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்