0 / 0
29/சபர்/1446 , 02/செப்டம்பர்/2024

இறை நம்பிக்கை என்றால் என்ன?

கேள்வி: 34630

இறைவனை உறுதியாக நம்பிக்கை கொள்வதன் சிறப்புக்களை பற்றி நான் அதிகமாக வாசித்தும் செவிமடுத்து உள்ளேன் இறை நம்பிக்கை என்றால் என்ன? அதனை உறுதி செய்து கொள்வதற்கு எனக்கு உதவி செய்யக் கூடியவை எவை? மேலும் எங்கள் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கும் சஹாபாக்களின் வழிகாட்டல்களுக்கும் முரணாக இருப்பவற்றை விட்டு தூரமாக இருப்பது எவ்வாறு? என்பதனைப் பற்றியும் நீங்கள் எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.

Summary of answer

இறை நம்பிக்கை என்பது அல்லாஹ்வின் இருப்போம் அவனது படைப்பாற்றல் அவனது தெய்வீகத்தன்மை அவனது பெயர்கள் மற்றும் அவரது பண்புகளைப் பற்றி உறுதியாக நம்பிக்கை கொள்வதாகும். மேலும் அல்லாஹ்வின் பண்புகளையும் பெயர்களையும் உறுதியாக நம்பிக்கை கொள்வதற்கு முரணாக இருக்கும் எச்சரிக்கைகளை விட்டும் தூரமாக இருத்தல் ஆகும் அதாவது அவற்றை தெளிவுபடுத்த மாற்றம் செய்தல் ஒப்பாக்குதல் சீரமைத்தல் போன்றவற்றை விட்டு

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

தூரமாகுதலாகும்.இறை நம்பிக்கை என்பதன் பொருள்:

இதை நம்பிக்கை என்பது அவனது இருப்பு அவனது படைப்பாற்றல் அவனது தெய்வீகத்தன்மை அவனது பெயர் மற்றும் பண்புகளை பற்றிய உறுதியான நம்பிக்கை ஆகும்.

இறை நம்பிக்கையை உறுதி செய்வதற்கு நான்கு விடயங்கள் அத்தியாவசியம் ஆகும்.

இறை நம்பிக்கை நான்கு விடயங்களில் உள்ளடக்கி உள்ளது அதனை யார் விசுவாசிக்கின்றாரோ அவரே உண்மையான இறை விசுவாசி ஆவார்.

முதலாவது - அல்லாஹ் இருக்கின்றான் என்று நம்பிக்கை கொள்ளல்.

இறைவன் இருக்கின்றான் என்பதற்கு பகுத்தறிவு இயற்கை உணர்வு என்பன ஆதாரமாக இருக்கிறது இதை சுட்டிக் காட்டக் கூடிய சட்ட ஆதாரங்களும் உண்டு.

1. அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கான மனிதனின் இயல்பான உணர்வை பொருத்தவரையில் ஒவ்வொரு மனிதனும் தன் படைப்பாளன் பற்றிய உள்ளார்ந்த நம்பிக்கையுடன் நீயே படிக்கப்பட்டுள்ளார் அதை பற்றி முதலில் சிந்திக்கவோ கற்பிக்கவோ அவசியமில்லை மேலும் தவறான வழிகாட்டல்களுக்கு ஆளானவர்களை தவிர இந்த உள்ளுணர்வுகளில் இருந்து யாரும் விலகிச் செல்ல மாட்டார்கள்.

இதனையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த ஒரு குழந்தையும் அதன் இயற்கை உணர்வு இன்றி பிறப்பதில்லை அதனது பெற்றோர்களை அவர்களை யஹூதிகளாகவும் கிறிஸ்தவர்களாகவும் நெருப்பு வணங்குகிறார்கள் உருவாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார்கள்.

(ஆதாரம் புகாரி: 1358 முஸ்லிம்: 2658)2. இறைவன் இருக்கின்றான் என்பதற்கான பகுத்தறிவின் ஆதாரங்கள்.

உயிரினங்கள் அவற்றிற்கு முன்னும் பின்னும் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியாது. அவற்றின் படைப்புக்கு ஒரு படைப்பாளன் இருப்பது அவசியம் ஆகும். அவை தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளாததால் அவை தானாக தோன்றுவது சாத்தியம் அற்றது. ஏனெனில் அது படைக்கப்பட முன்னர் அது ஒன்றும் இல்லாதது. எனவே அது எவ்வாறு ஒரு படைப்பாளனாக இருக்க முடியும்.

மேலும் இது தற்செயலாக தோன்றுவதும் சாத்தியமற்றது ஏனெனில் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் இந்த படைப்பு ஒரு அற்புதமான மற்றும் துல்லியமான முறையில் செய்யப்படுகிறது மேலும் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் மற்ற படைப்புகளோடு இணங்கி செல்கின்றனர் மேலும் காரணத்திற்கும் விளைவிக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது இவை அனைத்தும் தற்செயலாக தோன்றியிருக்க முடியாது ஏனெனில் தற்செயலாக நடப்பவை துல்லியமாக மற்றும் சரியான முறையில் நடக்காது. எனவே அது எவ்வாறு துல்லியமாக சமநிலையில் இருக்க முடியும்?

எனவே படைப்புக்கள் தன்னைத்தானே உருவாக்கவும் அல்லது தற்செயலாக உருவாகவோ முடியாது எனில் அதற்கு ஒரு படைப்பான இருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும் அவன் தான் அல்லாஹ் அகிலத்தாரின் இரட்சகன்.

அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு அல்குர்ஆனில் இருந்துள்ள அறிவுப்பூர்வமான ஆதாரங்கள்.

அல்லாஹ் சூராத்தூரில் பகுத்தறிவு மற்றும் ஆதரப்பூர்வமான உறுதியான ஆதாரத்தை குறிப்பிட்டுள்ளான். அதாவது " அல்லது அவர்கள் எப்பொருளும் இன்றி (தாமாகவே) படைக்கப்பட்டுவிட்டனரா? அல்லது அவர்கள் தான் படைக்கின்றவர்களா? (சூரா தூர்:35)

நிச்சயமாக அவர்கள் படைப்பாளனின்றி படைக்கப்படவில்லை மேலும் அவர்கள் தன்னைத்தானே படிக்கவும் இல்லை என்பதே இதன் மூலம் கருதப்படுகிறது மேலும் அவர்களுக்கு ஒரு படைப்பாளர் இருக்க வேண்டும் அவனே அல்லாஹ். அதனால் தான் ஜுபைர் இப்னு முத்தும் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரா துரை ஓதிக் கொண்டிருக்கும் வேளையில் 'அல்லது அவர்கள் எப்பொருளும் இன்றி தாமாகவே படைக்கப்பட்டு விட்டனரா? அல்லது அவர்கள் தான் படைக்கின்றவர்களா? அல்லது வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல (இவைகளை எல்லாம் படைத்தவன் அல்லாஹ் தான் அவனை) இவர்கள் உறுதிகொள்ள மாட்டார்கள் . அல்லது அவர்களிடம் உமதிரட்சகனின் களஞ்சியங்கள் இருக்கின்றனவா? அல்லது அவர்களே அவற்றை ஆதிக்கம் செலுத்துபவர்களா? ' இந்த வசனத்தை அடையும்போது அந்நேரத்தில் இறை மறுப்பாளராக இருந்த ஜுபைர் இப்னு முத்இம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என் இதயம் ஏறக்குறைய பறந்தது இதுதான் என் இதயத்தில் நம்பிக்கை ஏற்பட்ட முதல் விடயமாகும் என்று கூறியதாக கூறினார்கள். இதனை தெளிவுபடுத்தக்கூடிய ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

ஆறுகள் ஓடும் தோட்டங்களால் சூழப்பட்ட தளபாடங்கள் மற்றும் படுக்கைகள் நிறைந்த அதன் கூறுகள் மற்றும் நிரப்புக்களின் அனைத்து வகையான அலங்காரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு உறுதியான அரண்மனையை பற்றி ஒருவர் உங்களிடம் கூறுகிறார் மேலும் அவர் உங்களிடம் இந்த அரண்மனை அதில் உள்ள பூரணத்துவம் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டது அல்லது தானாகவே உருவானது என்று கூறுகிறார். நிச்சயமாக நீங்கள் அதனை மறுத்து அதனை பொய்ப்பிக்க எத்தனை பேர் அவருடைய பேச்சை முட்டாள்தனமாக எண்ணி இருப்பீர்கள்.

இதன் பிறகு இந்த பரந்த மற்றும் அற்புதமான சமநிலையான பிரபஞ்சம் அதன் பூமி வானம் மற்றும் நட்சத்திரங்கள் என்பன தன்னைத்தானே தானாக உருவாக்கியவை அல்லது ஆதாரம் இன்றி தற்செயலாக நிகழ்ந்தவை என்று கருதலாமா?

நிச்சயமாக இந்த அறிவுபூர்வமான ஆதாரத்தை ஒரு பாலைவனத்தில் வசிக்கக்கூடிய அரபியால் விளங்கிக் கொள்ளப்பட்டது. அவரிடம் உங்களுடைய இரட்சகனே நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள் என்று அவனிடம் கேட்கப்பட்ட போது  அவரது சொந்த மொழி நடையில் அதனை தெளிவு படுத்தினார்.

நீங்கள் ஒட்டகத்தின் சாணத்தை கண்டால் ஒட்டகம் சென்ற பாதை உங்களுக்கு விளங்கும். மேலும்  காலடி தடயங்களைக் கண்டால் ஒருவர் இவ்வழியில் சென்றுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே கோபுரங்களை உடைய வானமும் பள்ளங்களை உடைய நிலமும் அலைகளையும் உடைய கடலும் யாவற்றையும் கேட்பவனும் யாவற்றையும் பார்ப்பவனும் ஆகியவனை அறிவிக்குமல்லவா

?இரண்டாவது: அல்லாஹ்விற்குரிய இறையாண்மையை ஈமான் கொள்வது.

அதாவது இறைவன் தனித்தவன் அவனுக்கு இணையாகவோ உதவியாகவோ எவரும் இல்லை.

இறைவன்: படைப்பவனும் அரசனும் ஒழுங்கமைப்பாளனும் அவனே அல்லாஹ்வைத் தவிர வேறு படைப்பாளர் இல்லை அல்லாவை அன்றி வேறு அரசன் இல்லை அல்லாஹு அன்றி விடயங்களை ஒழுங்கமைப்பவனும் இல்லை. அல்லாஹ் அல்குர்ஆனில் சூரா அல் அஃராஃப்: 54வசனத்தில்

'படைத்தலும் கட்டளையையும் அவனுக்கே உரியதென தெரிந்து கொள்ளுங்கள்'  என்றும்

சூரா யூனுஸ் : 31 வசனத்தில்

'வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லது செவிப்புலனையும் பார்வைகளையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பவன் யார்? இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துபவனும் உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளிப்படுத்துபவனும் யார் ? அகிலத்தாரின் சகல காரியங்களைத் திட்டமிட்டு நிகழ்த்துபவனும் யார்? என நபியே நீர் அவர்களைக் கேட்பீராக! அதற்கு அவர்கள் அல்லாஹ் தான் என்று கூறுவார்கள். அவ்வாறாயின் அவனுக்கு நீங்கள் பயப்பட மாட்டீர்களா என்று நீர் கூறுவீராக! '

என்றும்

சூரா சஜதா 05ம் வசனத்தில்

'வானத்திலிருந்து பூமி வரை உள்ள காரியத்தை அவன் நிர்வகிக்கின்றான்' என்றும்

சூரா பாதிர் 13ம் வசனத்தில்

'அவன்தான் உங்கள் இரட்சகன் ஆகிய அல்லாஹ்; அரசாட்சி அவனுடையது. இன்னும் அவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள் ஒரு வித்தின்  தொலி அளவும் அதிகாரம் பெற மாட்டார்கள்' என்று குறிப்பிட்டு காட்டியுள்ளோம்.

சூரத்துல் பாத்திஹாவில் உள்ள சர்வ வல்லமை உள்ள இறைவனின் வார்த்தைகளை சிந்தியுங்கள்.

مالك يوم الدين

தீர்ப்பு நாளின் உரிமை யாளன். சூரா ஃபாத்திஹா:3 மேலும் இன்னும் ஒரு மாற்று வாசிப்பும் உண்டு  ملك يوم الدين  தீர்ப்பு நாளின் அரசன்.

இவ்விரண்டு வார்த்தைகளையும் இணைத்தால் ஒரு அற்புதமான பொருள் தோன்றும். அரசன் என்பது உரிமையாளரை விட சக்தி கட்டுப்பாடு என்பவற்றில் உயர்வானதை குறிக்கும் என்றாலும் அரசன் சிலவேளை பெயரளவில் மட்டுமே அரசனாக இருப்பார் செயலில் அல்ல  அதாவது அவர் எந்த விடயத்திலும் சொந்தமாகமாட்டார். அவர் அரசனாக இருப்பார் என்றாலும் அவர் உரிமையாளர் அல்ல. எனவே சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் அரசன் உரிமையாளர் எனும் இரண்டு விடயங்களையும் ஒன்றிணைத்தால் அவர் அரசன் ஒழுங்கமைப்பாளர் எனும் இரண்டு விடயங்களும் பூரணமாகும்.

الإيمان بألوهيته

மூன்றாவது அவரது தெய்வீகத்தை நம்பிக்கைக் கொள்ளல்.

அதாவது அவனே வணக்கத்திற்குரியவன் அவனுக்கு நிகராக எவருமில்லை.

(வணக்கத்திற்குரியவன்) என்றால் (வணங்கப்படக் கூடியவன்) அதாவது ஆதரவுடன் மகத்துவத்துடனும் வணங்கப்பட கூடியவன் என்று பொருள்படும்.

இதுவே வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதன் பொருளாகும் அதாவது அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படக்கூடியவன் வேறு யாருமில்லை. அல்லாஹ் கூறுகிறான்..

(மனிதர்களே!) மேலும், உங்கள் (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே ஒரு (வணக்கத்திற்குரிய) நாயன் தான் அளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் உடைய அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை.

சூரா அல்பகரா:163)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்..

"(நபியே!) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்:' நிச்சயமாக அவன் அவனைத் தவிர (வேறு) வணக்கத்திற்குரியவன் இல்லை'.( அவ்வாறே) மலக்குகளும், வேத ஞானம் பெற்ற கல்விமார்களும் (சாட்சி கூறுகின்றனர்) நீதத்தை நிலை நிறுத்தியவனாக (அல்லாஹ் சாட்சி கூறுகிறான்)  "அவனைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் இல்லை அவனே யாவரையும் மிகைத்தோன் தீர்க்கமான அறிவுடையோன்"அல்லாஹ்வுடன் சேர்த்து கடவுளாக எடுத்துக் கொள்ளப்படும் அவனுக்கு பதிலாக வணங்கப்படும் அனைத்து பிழையானதாகும். அல்லாஹ் கூறுகிறான்.. (இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைவிக்கும் மாபெரிய ஆற்றலாகிய) அது, (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் உண்மையானவன் மற்றும் நிச்சயமாக அவனை அன்றி (வேறு) எதை அவர்கள் பிராத்திக்கின்றார்களோ அதுவே பொய்யானதாகும் இன்னும் நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் மிக உயர்ந்தவன் மிகப்பெரியவன் என்பதினாலுமாகும்.

சூரா அல்ஹஜ் : 62

அவை வணக்கத்திற்குரியவனின் பெயரால் அழைக்கப்பட்டாலும் அவற்றிற்கு தெய்வீகத்தின் உரிமை கொடுக்கப்பட மாட்டாது. (அல்லாத், அல்மனாத் , அல் உஸ்ஸா) அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்...

'இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக்கொண்ட வெறும் பெயர்களை தவிர இல்லை அவை தெய்வங்கள் என்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு யாதொரு சான்றையும் முந்திய எந்த வேதத்திலும் இறக்கி வைக்கவில்லை" (சூரா அன் நஜ்ம்:23)

மேலும் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரது சிறைத் தோழர்களிடம் கூறியதை அல்லாஹ் கூறுகிறான்.."பல்வேறு தெய்வங்கள் மேலா? அல்லது யாவற்றையும் அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா? அவனை அன்றி நீங்கள் வணங்குபவை வெறும் (கற்பனை) பெயர்களைத் தவிர (வேறொன்றும்) இல்லை;நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அவற்றை பெயர்களாக வைத்துக் கொண்டீர்கள்; அல்லாஹ் இதற்கு யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை;

(சூரா யூசுப்:39-40)

வணங்குவதற்கு வழிப்படுவதற்கும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் தகுதியானவர்கள் இல்லை. இந்த உரிமையை எந்த ஒருவரும் எந்த ஒரு நெருக்கமான மணக்கும் எந்த ஒரு அனுப்பப்பட்ட தூதரும் அவருடன் பகிர்ந்து கொள்ளவில்லை. இதனாலேயே ஆரம்பம் முதல் இறுதியானவர் வரையுள்ள அனைத்து தூதர்களின் அழைப்பும் "அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை" என்று இருந்தது.

இதனையே அல்லாஹ் கூறுகிறான்..

"மேலும் (நபியே!) உமக்கு முன்னர் எந்த தூதரையும் 'நிச்சயமாக என்னை தவிர (வணக்கத்திற்குரிய) வேறு நாயனில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று அவர் பால் நாம் வஹி அறிவித்தே தவிர நாம் அனுப்பவில்லை.'

(சூரா அள் அன்பியா:25)

ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பி இருக்கிறோம்; அல்லாஹ்வையே வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் சைத்தான்களாகியதாக அனைத்து) தாகூத்களில் இருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.'

(சூரா அந்நஹ்ல்:36)

என்றாலும் இறை மறுப்பாளர்கள் இதனை மறுக்கிறார்கள். அல்லாஹ்வுக்கு பதிலாக வேறு கடவுள்களை எடுத்துக் கொண்டார்கள் அல்லாஹ்வுடன் அவற்றையும் சேர்த்து வணங்கி அவற்றிடம் உதவி தேடுகின்றனர்.الرابع،: الإيمان بأسماء وصفاتها

நான்காவது:அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனது பண்புகளையும் நம்பிக்கை கொள்ளல்.

அதாவது இறைவன் தனது வேதத்தில் அல்லது அவனது தூதரின் சுன்னாவில் உறுதிப்படுத்தி உள்ள அவனது பெயர்கள் மற்றும் பண்புகளை சிதைக்காமல், மறுக்காமல், ஒப்பிடாமல், எவ்வாறு என்று ஆராயாமல் அதற்ககே உரிய முறையில் உறுதிப்படுத்துவதாகும். இதனையே அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்..

'இன்னும், அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன.ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள்; அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்; அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்குரிய கூலியை கொடுக்கப்படுவார்கள்.

(சூரா அல் அஃராப்:180)

மேலும் இந்த வசனம் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை உறுதி செய்வதற்கு ஆதாரமாக உள்ளது.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்..

'மீதும் வானங்களிலும் பூமியிலும் மிக்க மேலான வர்ணனை (பண்பு) அவனுக்கு உரியதே; மேலும், அவனே (யாவற்றையும்) மிகைத்தவன் தீர்க்கமான அறிவுடையவர்.

(சூரா அர்ரூம்:27)

மேலும் இந்த வசனம் அல்லாஹ்வின் பூரணமான பண்புகளை உறுதிப்படுத்தக் கூடிய ஆதாரமாக உள்ளது. ஏனெனில் ( மேலான வர்ணனை) என்பது பூரணமான பண்புகளை குறிக்கும்.

இவ்விரண்டு வசனங்களும் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் பண்புகளை பொதுவான முறையில் உறுதிப்படுத்துகின்றன இதற்கான விபரங்கள் அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் ஏராளமாக உள்ளன.

இந்த அத்தியாயம் அறிவின் அத்தியாயங்களில் ஒன்றாகும். அதாவது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் பண்புகள் சமூகத்தினர் இடையே பல கருத்து வேறுபாடுகள் மற்றும் பிளவுகள் ஏற்பட்ட துறைகளில் ஒன்றாகும். மேலும் அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பண்புகளை குறித்து சமூகத்தினர் பல பிரிவுகளாக பிரிந்துள்ளனர்.

இந்த வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் பற்றிய எமது நிலைப்பாடு என்னவெனியில் அது அல்லாஹ் அல்குர்ஆனில் எனக்கு கட்டளையிட்டுள்ளதாகும். அதாவது; அல்லாஹ் கூறுகிறான்...

' யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக் கொண்டால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் திருப்பி ஒப்படைத்து விடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக்கொள்ளுங்கள்) மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால்; இதுதான் நன்மையாக மிக அழகான முடிவாகவும் இருக்கும்'

(சூரா அந்நிஸா:59)

இந்த சர்ச்சைகளுக்கான பதில்களை நாங்கள் அல்குர்ஆனில் இருந்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவில் இருந்தும் குறிப்பிடுகிறோம். இது சஹாபாக்களில் முன்னோர்கள் மற்றும் இந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் பின்பற்றியவர்களை புரிந்து கொள்வதன் மூலம் வழிநடத்தப்படுகிறது நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதை சமுதாயத்தில் மிக அறிந்தவர்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சஹாபாக்களை பற்றி கூறும் போது உண்மையை பேசினார். உங்களில் யார் ஒரு பாதையை பின்பற்ற விரும்புகிறாரோ அவர் இறந்தவர்களின் பாதையை பின்பற்றட்டும் இன்னும் உயிரோடு இருப்பவர் பிரச்சினைப்பட மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அவர்கள் தான் சஹாபாக்கள் நபியவர்களின் தோழர்கள் இந்த சமூகத்தில் நேர்மையான உள்ளம் கொண்டவர்கள் ஆழமான அறிவுடையவர்கள். அவர்கள் தான் அவரது மார்க்கத்தை நிலை நாட்டவும் நபியவர்களின் தோழர்களாகவும் அல்லாஹுவால் தெரிவு செய்யப்பட்ட கூட்டத்தினர் .அவர்கள் உரிமையை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் நேர்வழியை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் தான் நேரான வழியில் இருப்பவர்கள்.

மேலும் இந்த விடயத்தில் முன்னோர்களின் வழியை விட்டு விலகும் ஒவ்வொருவரும் நிச்சயமாக தவறு இழைத்த வழி தவறிய முஸ்லிம்களின் வழி அல்லாததே பின்பற்றியவர்கள் ஆவார்கள் அல்லாஹ்வின் வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கைக்கு உரித்தானவர்கள். அல்லாஹ் கூறுகிறான்...

'இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர் நம்முடைய தூதருக்கு மாறு செய்து விசுவாசிகளின் வழி அல்லாத வேறு வழியானது பின்பற்றுகிறாரோ அவரை நாம் அவர் திரும்பி தவறான வழியிலேயே திருப்பி விடுவோம் பின்னர் அவரை நரகத்தில் புகுத்தி விடுவோம் அது சென்றடையும் இடத்தில் மிக கெட்டது.

(சூரா அந்நிஸா:115)

மேலும் சரியாக வழி நடாத்தப்படுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாமும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் விதித்துள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:'ஆகவே விசுவாசம் கொண்டவரே நீங்கள் எதை விசுவாசம் கொண்டீர்களோ அது போன்றதை அவர்களும் விசுவாசம் கொண்டுவிட்டால் திட்டமாக அவர்கள் நேர்வழியை அடைந்து விடுவார்கள்' (சூரா பகரா : 137)

எனவே முன்னோர்களின் வழியிலிருந்து தன்னை விளக்கிக் கொள்பவர்கள் அவர்கள் முன்னோர்களின் வழியை விட்டு விலகிச் சென்ற அளவு அவர்களது வழிகாட்டலை இழந்து விட்டார்கள்.

இதைப் பொறுத்தவரையில்  அல்லாஹ் தன்னைத்தானே உறுதிப்படுத்திய அல்லது அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறுதிப்படுத்திய மேலும் அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் வெளிப்படையாக வந்திருக்கும் அவனது பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை உறுதி செய்வது கடமை ஆகும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தோழர்கள் ஈமான் நம்பிக்கை கொண்டது போல நம்பிக்கை கொள்வது அவசியமாகும். அவர்கள் தான் இந்த சமூகத்தில் மிகச்சிறந்தவர்கள் மேலும் மிக அறிந்தவர்கள்.அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவரது பண்புகளை உறுதி செய்வதற்கு முரணாக இருக்கும் நான்கு விடையங்கள்.

இவ்விடத்தில் நான்கு எச்சரிக்கைகள் உண்டு என்பதை அறிந்திருப்பது அவசியம் ஆகும். அவற்றில் ஒன்றிலே எனும் எவரேனும் இருந்தால் அல்லாஹ்வின் பெயரில் மற்றும் அவரது பண்புகளை கடமையாக்கியது போன்று அவரது ஈமான் சீராகவில்லை. இந்த நான்கு எச்சரிக்கைகளும் இல்லாதவரை அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் மற்றும் அவரது பண்புகளை நம்புவது செல்லுபடி ஆகாது. அவை: சிதைத்தல் மறுத்தல் ஒப்பாக்குதல் விவாதித்தல்.

இதனாலேயே நாம் அவனது அழகிய திருநாமங்களையும் அவனது பண்புகளையும் நம்பிக்கை கொள்வது என்றால் அது அல்லாஹ் தன்னைத்தானே தனது வேதத்திலும் அவரது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவிலும் எவ்வாறு கண்ணியமான முறையில் உறுதி செய்துள்ளானோ அவ்வாறே எந்த சிதையும் மறுப்பும் சீரமைப்பும் வாதாட்டமும் இன்றி அவ்வாறே உறுதி செய்தல் என்று கூறினோம்.

இந்த நான்கு எச்சரிக்கைகளுக்குமான சுருக்கமான விளக்கம்.

التحريف சிதைவு

இதன் பொருள் என்னவெனில் அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் உள்ள அர்த்தத்தை அவை குறிப்பிடும் உண்மையான பொருள் இருந்து மாற்றுவதாகும். அது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் அல்லாஹ்வுக்குரிய உயரிய பண்புகளை உறுதி செய்யும் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறாத இன்னொரு அர்த்தமாகும்.

உதாரணமாக பல ஆதாரங்களுடன் வந்திருக்கக்கூடிய அல்லாஹ்வின் உறுதியான கருத்தின் பண்பின் பொருளை சிதைத்து அவர்கள் அது அவனது அருள் மற்றும் ஆற்றலை குறிக்கிறது என்று கூறுகிறார்கள்.

التعطيل மறுத்தல்

அதாவது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் பண்புகளை மறுப்பதாகும் அவற்றில் சில அவனுக்கு உரியதல்ல என்று கூறுவதாகும்.

அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அல்லாஹ்வின் திருநாமங்களில் இருந்து ஒரு பெயரையோ அல்லது அவனது பண்புகளில் இருந்து ஒரு பன்பையோ மறுத்தால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனது பண்புகளையும் சரியாக நம்பிக்கை கொள்ளவில்லை.

 التمثيل ஒப்பாக்குதல்

அதாவது அல்லாஹ்விற்குரிய பண்பை படைப்பினங்களின் பண்புக்கு ஒப்பாக்குதலாகும். உதாரணமாக அல்லாஹ்வின் கை படைப்பினங்களின் கையை போன்றது அல்லது அல்லாஹ் படைப்பினங்கள் செவி மடுப்பது போல் அவனும் செவிமடுக்கிறான். அல்லது நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் கதிரையில் நிலை நிறுத்தப்படுவது போன்று அர்ஷில் நிலையாகியுள்ளார் போன்றவற்றை குறிப்பிடலாம். சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் பண்புகளை அவனது படைப்பின் பண்புகளோடு ஒப்பிடுவது பிழையானது மறுக்கப்படக்கூடியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனையே அல்லாஹ் அல்குர்ஆனில்... 'அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவனே (யாவற்றையும்) செவியேற்கின்றவன் பார்க்கிறவன்.( சூரா அஷ்ஷுரா:11) என்று குறிப்பிட்டுள்ளான்.

للتكييف சீரமைத்தல். வாதாடுதல்

அதாவது அல்லாவின் பண்புகளில் உண்மை தன்மை மற்றும் அது எவ்வாறு என்பதை தீர்மானித்தல் ஆகும். மனிதன் அல்லாஹ்வின் பண்புகள் எதை என்பதனை குறிப்பிட அவனது உள்ளத்தால் நிர்ணயிக்க அல்லது நாவாய் மொழிய முயற்சிக்கிறான் நிச்சயமாக இது பிழையானதாகும். மனிதர்களால் அதனை அறிய முடியாது. இதனையே அல்லாஹ் அல்குர்ஆனில் 'அவர்கள் அவனை (தங்கள்) கல்வியால் தீர அறிந்து கொள்ள மாட்டார்கள்.(சூரா தாஹா: 110) என்று கூறியுள்ளான்.

இந்த நான்கு விடயங்களையும் யார் பூரணப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ்வை சரியான முறையில் நம்பிக்கை கொள்கிறார்.

இறை நம்பிக்கையில் எம்மை உறுதி செய்து அதனுடனேயே எம்மை மரணிக்க செய்வாயாக என்று அல்லாஹ்விடம் வேண்டுகிறோம் அனைத்தையும் அறிந்தவன் அவனே

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
இறை நம்பிக்கை என்றால் என்ன? - Islam Question & Answer