நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதற்கமைய மண்ணறைகளைத் தரிசிப்பது ஆண்களைப் பொருத்தமட்டில் விரும்பத்தக்க ஒரு அம்சமாகும். நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா இப்னு ஹுஸைப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “நிச்சயமாக நான் உங்களுக்கு மண்ணறைகளைத் தரிசிப்பதைத் தடுத்திருந்தேன். (ஆனால்) நீங்கள் அவற்றைத் தரிசியுங்கள்." (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் - 977) மற்றொரு அறிவிப்பில் “ ஏனெனில் நிச்சியமாக அது உங்களுக்கு மறுமையை ஞாபகமூட்டும்." என்று நபிகளார் தொடர்ந்து கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது. (ஆதாரம் : முஸ்னத் அஹ்மத் - 1240, இப்னு மாஜா - 1569) (அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பு ஆதாரபூர்வமானது என ஸஹீஹ் இப்னு மாஜாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.)
அதன்படி ஒரு மனிதன் மண்ணறையைத் தரிசிக்கச் சென்றால் நபிகளார் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்த பிரகாரம் மண்ணறைவாசிகளுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வதும் விரும்பத்தக்கதாகும். ஆயிஷா (ரழி) அவர்கள் நபிகளாரிடம் மண்ணறைவாசிகளுக்கு எவ்வாறு (ஸலாம்) கூற வேண்டும் என வினவிய போது “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன வயர்ஹமுல்லாஹ{ல் முஸ்தக்திமீன மின்னா வல்முஸ்தஃகிரீன் வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லலாஹிகூன் " என்று கூறுமாறு வழிகாட்டியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (பொருள் : முஃமினான, முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! எங்களில் முந்திவருபவர்களுக்கும், பிந்திவருபவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே!) (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 974)
மேலும் புரைதா இப்னு ஹ{ஸைப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபிகளார் (ஸல்) அவர்கள் தோழர்களோடு மண்ணறைகளுக்கு அருகில் சென்று அவர்களுக்கு “ அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லலாஹிகூன் அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆபியஹ்." என்று கூறுமாறு கற்றுக் கொடுப்பார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் - 975)
நபித்தோழர்களின் மண்ணறைகளைப் பொருத்தவரையில் அவற்றுக்கு அருகாமையில் இருக்கும் போதும் மேலே கூறப்பட்ட பிராத்தனைகளையே கூற வேண்டும். அதற்கென்று விசேடமான வேறு பிராத்தனைகள் இல்லை.
ஆனால் நபிகளார் (ஸல்) மற்றும் அவரது இரு சகபாடிகளான அபூபக்கர், உமர் (ரழி) அவர்களது மண்ணறைகளைத் தரிசிக்கும் போது (மேலே கூறப்பட்ட வாழ்த்துமுறைக்கு மாற்றமாக ஸலாம் கூறும் நடைமுறையே ஸஹாபாக்களைத் தொட்டும் அறிவிப்புக்களில் இடம்பெற்றுள்ளது. இப்னு உமர் (ரழி) அவர்கள் “அஸ்ஸலாமு அலைக்க யா ரஸுலல்லாஹ். அஸ்ஸலாமு அலைக்க யா அபா பக்ர். அஸ்ஸலாமு அலைக்க யா அபதி." என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்று விடுவார்கள். (இந்தச் செய்தியை இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் ஆதாரபூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.)
மேலும் சில அறிஞர்கள் அதற்கு மேலதிகமாக “அஸ்ஸலாமு அலைக்க யா கய்ரதல்லாஹி மின் கல்கிஹீ (அல்லாஹ்வின் படைப்புக்களில் சிறந்தவரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.), அஸ்ஸலாமு அலைக்க யா ஸய்யிதல் முர்ஸலீன்.... அஷ்ஹது அன்னக கத் பல்லக்தர் ரிஸாலஹ். (இறைத்தூதர்களின் தலைவரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.... நீங்கள் இறைத்தூதை எத்திவைத்ததாக சாட்சி கூறுகின்றேன்.) போன்ற வார்த்தைகளையும் கூறியுள்ளார்கள். (பார்க்க : நவவி (ரஹ்) அவர்களது அல்-அத்கார் - பக்கம் : 174, அல்-முக்னி - 5ஃ466)
தபரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : (அவ்வாறு நபிகளார் மற்றும் அவரது இரு தோழர்களினதும்) மண்ணறையைத் தரிசிக்கக் கூடிய ஒருவர் மேலே கூறப்பட்ட நீண்ட வார்த்தைகளை கூறுவது தவறு கிடையாது. ஆனால் நபித்தோழர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளவற்றை மாத்திரம் கூறுவது மிக மேலானது.
ஹஜ், உம்றா கிரியைகளைப் பற்றிக் கூறுகையில் அறிஞர் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் “ அவர் (ஹஜ், உம்றா செய்பவர்) மஸ்ஜிதுந் நபவிக்கு வந்ததும் அல்லாஹ் நாடிய படி அவரால் தொழ முடியுமான அளவு தொழுததன் பின்னர் நபிகளார் மற்றும் அவரது சகபாடிகளாகிய அபூபக்கர், உமர் (ரழி) ஆகியோருக்கு ஸலாம் சொல்வதற்காகச் செல்வார். " என்று குறிப்பிட்டார்கள்.
01) எனவே நபிகளாரது மண்ணறையைத் தரிசிக்கச் செல்பவர் நபிகளாரது மண்ணறையை முன்னோக்கியவாரும், கிப்லா திசையை பின்னோக்கியவாரும் நின்று “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ" என்று கூறுவார். “அஸ்ஸலாமு அலைக்க யா கலீலல்லாஹ் வஅமீனஹ_ அலா வஹ்யிஹீ வகய்ரதஹ_ மின் கல்கிஹீ அஷ்ஹது அன்னக கத் பல்லக்தர் ரிஸாலஹ் வஅத்தய்தல் அமானஹ் வநஸஹ்தல் உம்மஹ் வஜாஹத்த பில்லாஹி ஹக்க ஜிஹாதிஹ்" (பொருள் : அல்லாஹ்வின் நண்பரே, அவனுடைய வஹ்யின் அறங்காவலரே, அவனுடைய படைப்புகளில் மிகச் சிறந்தவரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். நீங்கள் இறைத்தூதை எத்திவைத்தீர்கள், அமானிதத்தை நிறைவேற்றினீர்கள், சமுதாயத்துக்கு அறிவுரை கூறினீர்கள், அல்லாஹ்வுக்காக உரிய முறையில் பாடுபட்டீர்கள் என்று நான் சாட்சியமளிக்கிறேன்.) போன்ற பொருத்தமான வார்த்தைகளை அதிகரித்துச் சொல்வதில் பிரச்சினை கிடையாது.
ஆயினும் முதலாவதாக நாம் இங்கு கூறியதை மாத்திரம் சொல்வதே நல்லதாகும். ஏனெனில் இப்னு உமர் (ரழி) அவர்கள், அவர்களுக்கு ஸலாம் சொல்கையில் “அஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ். அஸ்ஸலாமு அலைக்க யா அபா பக்ர். அஸ்ஸலாமு அலைக்க யா அபதி." என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்று விடுவார்கள்.
02) பின்னர் அவர் வலப்புறமாக கொஞ்சம் நகர்ந்து சென்று அபூபக்கர் (ரழி) அவர்களது மண்ணறைக்கு நேரில் நின்று “அஸ்ஸலாமு அலைக்க யா அபா பக்ர், அஸ்ஸலாமு அலைக்க யா கலீபத ரஸுலில்லாஹி வஸல்லம பீ உம்மதிஹீ, ரழியல்லாஹு அன்க வஜஸாக அன் உம்மதி முஹம்மதின் கய்ரா." (பொருள் : அபூபக்ரே! நபிளாரது பிரதிநிதியே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்வானாக. முஹம்மத் (ஸல்) அவர்களது சமுதாயத்தின் சார்பாக உங்களுக்கு நல்ல கூலி வழங்குவானாக.) என்று கூறுவார்.
03) பின்னர் அவர் வலப்புறமாக கொஞ்சம் நகர்ந்து சென்று உமர் (ரழி) அவர்களது மண்ணறைக்கு நேரில் நின்று “அஸ்ஸலாமு அலைக்க யா உமர்! அஸ்ஸலாமு அலைக்க யா அமீரல் முஃமினீன்! ரழியல்லாஹு அன்க வஜஸாக அன் உம்மதி முஹம்மதின் கய்ரா" என்று கூறுவார்.
மேலும் அவர் நபிகளாருக்கும், அவரது இரு தோழர்களுக்கும் ஸலாம் சொல்லும் போது ஒழுக்கத்தைப் பேணி, சத்தத்தைத் தாழ்த்தி ஸலாம் சொல்ல வேண்டும். ஏனெனில் பள்ளிவாயலில் குறிப்பாக நபிகளாரது பள்ளிவாயலிலும், அவரது மண்ணறைக்கு அருகாமையிலும் சத்தத்தை உயர்த்துவது தடுக்கப்பட்ட அம்சமாகும். (பார்க்க : மனாஸிகுல் ஹஜ்ஜி வல்உம்றா வல்மஷ்ரூஉ பிஸ் ஸியாரஹ் - பக்கம் : 107,108)
மேலும் இங்கே வினாத் தொடுத்தவர் “நபிகளாரது மண்ணறையைத் தரிசிக்கும் போது “அஸ்ஸலாமு அலைக்க யா ரஸ_லல்லாஹ்" என்றும் பொதுவான மண்ணறைகளைத் தரிசிக்கும் போது “அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூர்" என்றும் சொல்வது இணைவைப்பாகுமா?" என்று கேட்டுள்ளார். உண்மையில் இது இணைவைப்புக் கிடையாது. ஏனெனில் இது மரணித்தவர்களை அழைப்பதோ, அவர்களிடம் பிராத்தனை செய்வதோ அல்ல. மாறாக, மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு அடியானும் எதிர்கொள்ளும் மண்ணறை வேதனை, மறுவாழ்வு, விசாரணை மற்றும் மறுமையின் பயங்கரங்கள் போன்ற அனைத்து ஆபத்துகளிலிருந்தும் அல்லாஹ் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என அவர்களுக்காக அல்லாஹ்விடம் வேண்டுவதாகும்.
இம்மையிலும் மறுமையிலும் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை சர்வவல்லமையுள்ள அல்லாஹ்விடம் நாங்கள் கேட்கிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
(பார்க்க : ஸாதுல் முஸ்தக்னிஃ : 5ஃ473, கலாநிதி யூஸ{ப் அல்-வாபில் அவர்களது அஷ்ராதுஸ் ஸாஅஹ் - பக்கம் : 337)