0 / 0
13/சபர்/1446 , 17/ஆகஸ்ட்/2024

மஃமூமாக தொழுபவர் தனது இமாமை எவ்வாறு பின்துயர வேண்டும்?

கேள்வி: 33790

சில மனிதர்கள் தொழுகையில் இமாமை பின்துயருவதில் தாமதம் காட்டுவதைப் பார்க்கின்றோம். இன்னும் சிலர் ஸுஜூதிலும் சில வேளை ருகூஃவில் இமாமை முந்துகின்றனர். எனவே இமாமை முந்திச் செல்வது மற்றும் இமாமை தாமதித்து பின்துயர்வது ஆகியவற்றின் சட்டங்களை தயவுகூர்ந்து தெளிவுபடுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதன் மூலம் எங்களுக்கு பயனளிக்கச் செய்யவாhக!

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

ஷெய்க் இப்னு உஸைமீன் அவர்கள் 'ஷரஹ{ல் மும்திஉ" எனும் நூhலில் கூறும்போது:  'இமாமை பின்துயர்ந்து மஃமூமாக தொழுபவருக்கு நான்கு நிலைகள் உண்டு.

1.      முந்திச் செல்லல்.

2.      தாமதித்தல்.

3.      சரிசம விகிதத்தில் அவரோடு சேர்ந்து செல்லல்.

4.      பின்துயர்ந்து செல்லல்.

முதலாவது: இமாமை முந்திச் செல்லல்.

         பின்பற்றித் தொழும் மஃமூம்| தொழுகையின் அர்கான்களில் ஏதாவது ஒன்றில் தனது இமாமை முந்திச் செல்லும் நிலை பற்றியதாகும். உதாரணமாக இமாமுக்கு முன்னரே மஃமூம் ஸுஜூது செய்தல், அல்லது அவர் தலையை உயர்த்த முன்னர் இவர் தலையை உயர்த்துதல். அல்லது அவருக்கு முன்னர் ருகூஉ செய்தல், அல்லது அவருக்கு முன்னர் ருகூவிலிருந்து நிலைக்கு வருதல்.

         இது ஹராமான செயற்பாடாகும். அதற்கு பின்வரும் நபி மொழி ஆதாரமாக உள்ளது. 'அவர் ருகூஉ செய்யும் வரை நீங்கள் ருகூஉ செய்யாதீர்கள், அவர் ஸுஜூது செய்யும் வரை நீங்கள் ஸுஜூது செய்யாதீர்கள்".

ஒரு விடயத்தை தடை செய்வதில் 'ஹராம்" என்பது அடிப்படையாகும். அதையும் தாண்டி ஒருவர் இதை பெரும்பாவங்களில் ஒன்று என்று கூறுவாரானால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே! ஏனெனில் நபி () அவர்கள் கூறினார்கள்: 'இமாமுக்கு முன்னர் தலையை உயர்த்துபவர், அவரது தலை கழுதையின் தலையாக உருமாற்றப்படுவதை பயப்படவேண்டாமா? இது ஒரு எச்சரிக்கையாகும். எச்சரிக்கைப் பாணியில் தடை அமைவது அது பெரும்பாவம் என்பதற்கான அடையாளமாகும்.

இமாமை முந்தித் தொழுவதன் சட்டம்: அறிந்துகொண்டு, சுய நினைவுடன் தனது இமாமை முந்தி தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் தெரியாமல் அல்லது மறதியாக அவ்வாறு செய்தால் அந்தத் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும். அதேநேரம் முந்திச் சென்றவரை இமாம் அடையும் முன்னர் அவரது சலுகை (மறதி, அறிவீனம்) நீங்கிவிட்டால் அவர் திரும்பி வந்து இமாமுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். அறிந்துகொண்டு சுயநினைவுடன் அவ்வாறு செய்தால் தொழுகை பாழாகிவிடும்.

இரண்டாவது: இமாமை விட்டும் தாமதித்தல்:

தொழுகையின்போது இமாமை விட்டும் தாமதித்தல் இரண்டு வகைப்படும்.

1)     காரணத்துக்காக தாமதித்தல்.

2)     காரணமின்றி தாமதித்தல்.

முதலாவது வகை: காரணத்துக்காக தாமதித்தல்.

இப்படியானவர் இமாமை அடைந்து தாமதித்ததை இமாமோடு சேர்ந்து பூர்த்தி செய்வார். இதில் அவர் மீது குற்றமில்லை. அவர் தாமதித்தது முழுமையான ஒரு ருக்னாக அல்லது இரண்டு ருக்னாக (தூண்) இருந்தாலும் சரியே. ஒரு நபர் மறந்து அல்லது கவனயீனமாக அல்லது இமாமின் சப்தம் கேட்காமை காரணமாக அவரை விட்டும் இமாம் ஒரு ருக்னை அல்லது இரண்டு ருக்னுகளை முந்திச் செய்து விட்டால், குறித்த நபர்| விடுபட்டதை செய்து முடித்த பின்னர் இமாமை அடைந்து எஞ்சிய நிலைகளை இமாமுடன் பின்துயர்ந்து செய்வார்.

         ஆனால் இமாம் முந்திச் சென்று அடுத்த ரகஅத்தில் மஃமூமுடைய நிலையை அடைந்தால், இந்த நேரத்தில் மஃமூம் விடுபட்டதை செய்து இமாமை அடைய முயலக் கூடாது. மாறாக இமாமுடன் அதே நிலையில் இருக்க வேண்டும். இமாம் இரண்டு ரகஅத் முடித்திருந்தாலும் மஃமூம் ஒரு ரகஅத்தையே முடித்திருக்கிறார்.

         உதாரணமாக ஒருவர் இமாமுடன் தொழுகிறார். இமாம் ருகூஉ செய்து, நிலைக்கு வந்து, ஸுஜூது செய்து, இருப்பில் அமர்ந்து, இரண்டாவது ஸுஜூது செய்து எழுந்து நிலைக்கு வருகிறார். ஆனால் மின்சார துண்டிப்பு போன்ற காரணத்தால் இமாமுடைய தக்பீர் சப்தம் கேட்காததால் மஃமூம் முதலாவது ரகஅத்தில் அதே நிலையில் நிற்கிறார். இது ஒரு ஜும்ஆ தொழுகை என்று வைத்துக் கொள்வோம். இமாம் முதலாவது ரகஅத்தில் ஸுரதுல் பாத்திஹாவை ஓதியதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. எனவே இமாம் அந்த ரகஅத்தை முடித்து இரண்டாம் ரகஅத்தில் பாத்திஹாவின் பின்னர் 'ஹல் அதாக ஹதீஸுல் காஷியா…" ஓதும் போது மின்சாரம் வந்து மஃமூமுக்கு சப்தம் கேட்கிறது. ஆனால் மஃமூம் முதலாவது ரகஅத்தின் நிலையில் நின்று கொண்டிருக்கிறார். இப்போது என்ன செய்வது?

இப்போது இமாமின் இரண்டாவது ரகஅத்து மஃமூமுடைய முதலாவது ரஅத்தின் மீதியாக அமையும். எனவே இமாம் ஸலாம் கொடுத்தால் மஃமூம் எஞ்சிய ரகஅத்தை எழுந்து தொழுவார்.

         இதை அறிஞர்கள் கூறும்போது: 'இமாமின் இரண்டு ரகஅத்தில் சேர்க்கப்பட்டதாக மஃமூமுடைய ஒரு ரகஅத் அமைகிறது. ஏனெனில் அவர் முதலாவது மற்றும் இரண்டாவது ரகஅத்துகளில் தனது இமாமை பின்துயர்ந்திருந்தார்". என்று கூறுவர்.

இமாம் அவரது நிலையை அடையும் முன்பு தான் தாமதித்ததை உணர்ந்துவிட்டால் அவர் அதை முடித்துக் கொண்டு இமாமை பின்துயர்வார்.

உதாரணமாக: ஒரு மனிதர் இமாமுடன் நின்று தொழுகிறார். இமாம் ருகூஉ செய்ததை மஃமூம் செவியுறவில்லை. பின்னர் இமாம் ஸமிஅல்லாஹ{ லிமன் ஹமிதா என்று சொல்வதை மஃமூம் செவியுறுகிறார். இந்த நிலையில் அவர் உடனடியாக ருகூஉ செய்து பின்னர் தலையை உயர்த்தி இமாமோடு சேர்ந்து தொழுகையை தொடர்வார். இவர் ரகஅத்தை அடைந்து கொண்டார். ஏனெனில் இங்கு இமாமை விட்டு பின்தங்கியதற்கு ஏற்கத்தக்க நியாயம் உள்ளது.

இரண்டாவது வகை: காரணமின்றி தாமதித்தல்.

இது ஒரு ருக்னில் தாமதிப்பதைக் குறிக்கும், அல்லது ஒரு ருக்னை தாமதிப்பதைக்குறிக்கும்.

ஒரு ருக்னில் தாமதிப்பது என்பது இமாமை பின்துயர்வதிலிருந்து தாமதித்தலாகும். ஆனால் இமாம் தொழுகையின் எந்த ருக்னை அடைந்தாரோ அதில் இமாமை அடைந்துகொள்வாய். உதாரணமாக: இமாம் ருகூஉ செய்கிறார். அப்போது நீ ஓதிக்கொண்டிருக்கும் ஸுராவில் ஒன்று அல்லது இரண்டு வசனங்கள் மீதமாக உள்ளது. எனவே அதை ஓதி முடிப்பதற்காக இமாமோடு ருகூஉ செய்யாது சற்று தாமதிக்கிறாய். ஆனால் ஓதி முடித்துவிட்டு ருகூவிலே இமாமை அடைந்து கொண்டாய். இங்கு ருகூஉ சரியானதாகும். ஆனால் அவ்வாறு செய்வது ஸுன்னாவுக்கு முரணாகும். ஏனெனில் இமாம் ருகூவுடைய நிலையை அடையும்போது நீ ருகூஉ செய்ய ஆரம்பிக்க வேண்டும். தாமதிப்பது கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: '(இமாம்) ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉ செய்யுங்கள்."

ஒரு ருக்னை தாமதித்தல் என்பது| இமாம் ஒரு ருக்னால் உன்னை முந்திவிடுவதாகும். அதாவது, இமாம் ருகூஉ செய்து நீ ருகூஉ செய்வதற்கு முன்னர் அவர் தலையை உயர்த்திவிடுவதாகும். பிக்ஹ் கலை அறிஞர்கள் கூறுகிறார்கள்: நீ இமாமை முந்தி ருகூஉ செய்தால் எவ்வாறு தொழுகை பாத்திலாகுமோ அதே போல் ருகூஉ செய்யாமல் தாமதித்தாலும் தொழுகை பாத்திலாகும். ஸுஜூது செய்யாமல் தாமதித்தால் பிக்ஹ் கலை அறிஞர்களின் கூற்றுக்கு ஏற்ப அது சரியானதாகும். ஏனெனில் அது ருகூஉ செய்யாமல் தாமதிப்பதல்ல, ருக்னை விட்டும் தாமதிப்பதாகும்.

ஆனால் சரியான கருத்து: காரணமின்றி ஒரு ருக்னை செய்யாமல் இமாமை விட்டும் தாமதித்தால் அவரது தொழுகை பாத்திலாகிவிடும். ருக்னு| ருகூவாக இருந்தாலும் சரி ருகூவாக இல்லாவிட்டாலும் சரி. இந்த வகையில் இமாம் முதலாவது ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி இரண்டாவது ஸஜ்தாவுக்கு வரும்வரை மஃமூம் ஸஜ்தாவில் பிரார்த்தித்துக் கொண்டிருந்தால்| அவரது தொழுகை பாத்திலாகிவிடும். ஏனெனில் இது ஒரு ருக்னை தாமதிப்பதாகும். இமாம் ஒரு ருக்னால் மஃமூமை முந்திச் சென்றால் இங்கு 'பின்துயர்தல்" இல்லாமலாகிவிடுகிறது.

மூன்றாவது : சரிசமவிகிதத்தில் இமாமோடு சேர்ந்து செல்லல்.

இமாமோடு ஒன்றாக இணைந்து செய்வது, வார்த்தைகளிலாக இருக்கலாம் அல்லது செயலிலாக இருக்கலாம். இது இரண்டு வகைப்படும்.

முதலாவது வகை: வார்த்தைகளில் இமாமோடு இணைந்து ஒன்றாக செய்தல்.

ஆரம்பத் தக்பீர் மற்றும் ஸலாம் ஆகிய இடங்கள் தவிர வேறு இடங்களில் இதனால் பாதிப்பில்லை. ஆரம்பத் தக்பீரைப் பொறுத்தவரையில், இமாம் ஆரம்பத் தக்பீரை சொல்லி முடிக்கும் முன் நீங்கள் தக்பீர் சொன்னால் அடிப்படையிலேயே உங்களது தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. ஏனெனில் இமாம் ஆரம்பத் தக்பீரை சொல்லி முடித்ததன் பின்னரே உங்களது ஆரம்பத் தக்பீர் அமைய வேண்டும்.

ஸலாம் கொடுப்பதில் இமாமோடு இணைந்ததாக, ஒன்றாகச் செய்வதைப் பொறுத்தவரையில், உலமாக்கள் இது விடயத்தில் பின்வருமாறு பேசுகின்றனர்: முதலாவது மற்றும் இரண்டாவது ஸலாம் கொடுத்தல் இமாமோடு ஒன்றித்ததாக இடம்பெறுவது மக்ரூஹ் ஆகும். இமாம் முதலாவது ஸலாம் கொடுத்ததன் பின்னர் நீங்கள் கொடுப்பதும், இமாம் இரண்டாவது ஸலாம் கொடுத்ததன் பின்னர் நீ கொடுப்பதும் பரவாயில்லை. ஆனால் இமாம் இரண்டு ஸலாம்களையும் முடித்ததன் பின்னரே நீ ஸலாம் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதே சிறப்பானதாகும்.

தொழுகையில் சொல்லப்படும் ஏனைய வாசகங்களைப் பொறுத்தவரையில்| இமாமோடு சேர்ந்து செய்வதும், அவரை முந்தி செய்வதும், அவரை விட்டு தாமதித்து செய்வதும் ஆகுமானதாகும். இமாம் அத்தஹிய்யாத்து ஓதுவதை நீ செவிமடுக்கிறாய், அவரை முந்தி அத்தஹிய்யாத்து ஓதுகிறாய் என்று வைத்துக் கொண்டாலும் அதனால் பாதிப்பில்லை. ஏனெனில் ஆரம்பத் தக்பீரையும் ஸலாம் கொடுப்பதையும் தவிர வார்த்தைகளால் இமாமை முந்திச் செல்வது பாதிப்பில்லை.

பாத்திஹா ஸூரா ஓதுவதில் இமாமை முந்துவதும் அவ்வாறுதான். உதாரணமாக ளுஹர் தொழுகையில் இமாம் 'இய்யாக நஃபுது… ஓதும்போது நீங்கள் 'வலாழ்ழால்லீன்…" ஓதுகிறீர்கள். இதில் எந்தப் பிரச்சனையுமில்லை. (ளுஹர், அஸர் தொழுகைகளில் சிலவேளைகளில் வசனங்கள் மஃமூம்களுக்கு கேட்கும்படியாக இமாம் ஓதுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்).

இரண்டாவது வகை: செயல்களில் இமாமோடு நேர்ந்து ஒரே நேரத்தில் செய்தல்.

உதாரணமாக ருகூஉ செய்வதற்காக இமாம் தக்பீர் கூறி குனியும்போது இமாமோடு சரிசம விகிதத்தில் நீங்களும் குனிவது மக்ரூஹ் ஆகும். ஏனெனில் நபி (ஸல்) கூறினார்கள்: 'இமாம் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉ செய்யுங்கள், அவர் ருகூஉ செய்யும் வரை நீங்கள் ருகூஉ செய்யாதீர்கள். அதே போல் ஸுஜூதுக்காக இமாம் தக்பீர் கூறி அவர் நிலத்தில் உறுப்புக்களை வைக்கும் அதே நேரத்தில் நீங்களும் செய்வது மக்ரூஹ் ஆகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இமாம் ஸுஜூது செய்யும் வரை நீங்கள் ஸுஜூது செய்யாதீர்கள்."

நான்காவது: இமாமை பின் துயர்தல்:

தொழுகையில் இமாமை (முந்தாது, பிந்தாது) பின்துயர்ந்து தொழுவதுதான் ஸுன்னாவாகும். இமாம் தொழுகையின் ஒரு செயலை செய்வதற்கு ஆரம்பிக்கும்போதே மஃமூமாக தொழுபவரும் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இமாமோடு சரிசம விகிதத்தில் இல்லாமல் இமாமுக்குப் பின்னால் தொடர வேண்டும்.

உதாரணமாக: அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉ செய்ய வேண்டும். முஸ்தஹப்பான ஓதல்களை நீ ஓதி முடிக்காவிட்டாலும் சரியே! ஓதுவதற்கு ஒரு வசனம் பாக்கியிருந்தாலும் சரியே. ஏனெனில் அதை முடித்துவிட்டு ருகூஉ செய்தால் இமாமை விட்டும் தாமதிக்க வேண்டி வரும். ஸுஜூதிலிலிருந்து அவர் எழுந்தால் இமாமை பின் துயர்ந்து நீயும் எழ வேண்டும். நீ ஸுஜூதிலிருந்து பிரார்த்தித்துக் கொண்டிருப்பதை விட இமாமை பின்துயர்ந்து எழுந்து விடுவது சிறப்பானதாகும். ஏனெனில் உனது தொழுகை இமாமுடன் பிணைக்கப்பட்டுள்ளது. உனது இமாமை பின்துயருமாறு நீ ஏவப்பட்டுள்ளாய். (சிறு மாற்றங்களுடன் 'ஷர்ஹுல் மும்திஃ" 4-275):

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது, இமாம் அந்த நிலையை சென்றடைய முன்பு, நிலை மாறும் நகர்வை மஃமூம் ஆரம்பிக்கக் கூடாது. உதாரணமாக: இமாம் நிலத்தில் நெற்றியை வைப்பதற்கு முன் மஃமூம் குனிய ஆரம்பிக்கக் கூடாது.

பராஉ இப்னு ஆஸிப் அறிவிக்கிறார்: நபி (ஸல்) அவர்கள் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" சொல்லி ஸுஜூதில் விழும் வரை எம்மில் எவரும் முதுகை வளைக்க மாட்டார். அவருக்குப் பின்னரே நாம் ஸுஜூதில் விழுவோம். (புகாரி: 690, முஸ்லிம்: 474)

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
மஃமூமாக தொழுபவர் தனது இமாமை எவ்வாறு பின்துயர வேண்டும்? - Islam Question & Answer