0 / 0
11/சபர்/1446 , 15/ஆகஸ்ட்/2024

சுவர்க்கம், நரகம் ஆகியவற்றின் படித்தரங்கள் என்ன? அவற்றில் நுழைவிக்கும் அமல்கள் என்ன?

கேள்வி: 27075

எத்தனை சுவர்க்கங்கள்? எத்தனை நரகங்கள்? உண்டு. அவற்றின் தராதரங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன? அனைத்து அந்தஸ்துக்களையும் அடந்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

முதலாவதாக:

எண்ணிக்கை அடிப்படையில், சுவர்க்கம் ஒன்று, நரகம் ஒன்றுதான். ஆயினும் ஒவ்வொன்றிலும் படித்தரங்களும் அந்தஸ்துக்களும் இருக்கிறது. நபிமொழிகளில் சுவர்க்கம் பன்மையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுவர்க்கத்தின் எண்ணிக்கை என்பது அதன் அர்த்தமல்ல. அதன் படித்தரங்களும் அந்தஸ்துக்களும் வகைகளும் என்பதுதான் அதன் அர்த்தமாகும். அல்லது அதில் நுழைபவரின் கூலியின் பிரமாண்டம் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவும் இருக்கலாம்.

இது பற்றி அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் பேசுகிறது. பராஉ என்பவரின் மகள் உம்முர் ரபீஃ ஆகிய ஸ{ராகத் பின் உம்மு ஹாரிஸா என்பவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி ஏதாவது சொல்வீர்களா? அவர் பத்ரு யுத்தத்தில் கொல்லப்பட்டார். அவரை ஒரு அம்பு தாக்கியது. அவர் சுவனவாதியாக இருந்தால் நான் பொறுமை காக்கிறேன். அஃதல்லாமல் (நரகவாதியாக) இருந்தால் அழுது மன்றாடி (மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க) முயற்சிக்கிறேன் என்றார். நபியவர்கள் சொன்னார்கள்: உம்மு ஹாரிஸாவே! சுவர்க்கங்கள் ஏராளம் உண்டு. உனது மகன் பிர்தவ்ஸ் அல் அஃலா எனும் உயர் ரக சுவர்க்கத்தை அடைந்துகொண்டார். (புகாரி: 2809)

இரண்டாவதாக:

நரகின் படுகுழிகள் பலதரப்பட்டவை உலகில் நரகவாசிகளின் நிராகரிப்பின் கடுமைக்கு ஏற்ப அது வேறுபடும். நயவஞ்சகர்கள் அதில் மிகவும் கீழ்த்தரமான படுகுழியில் இருப்பர்.

அல்லாஹ் கூறுகிறான்: 'நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகின் மிக மோசமான அதளபாதாளத்தில் இருப்பர். அவர்களுக்கு உதவியாக யாரையும் காண மாட்டீர். அந்நிஸா: 145.

நரகப் படுகுழிகளில் குறைவான வேதனை, நுஃமான் பின் பஷீர் அறிவிக்கக்கூடிய ஹதீஸில் வரும் நெருப்பினாலான இரண்டு பாதணிகள் அணிவிக்கப்படுவதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நரகவாசிகளில் சற்று இலகுபடுத்தப்பட்ட தண்டனைக்குரியவர் நெருப்பினாலான இரண்டு வார்களையுடைய இரண்டு பாதணிகள் அணிவிக்கப்படுபவராகும். பிறிதொரு அறிவிப்பில் அவரது உள்ளங்கால்களின் அடியில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். அதனால் அவரது மூளை உலோகத்திலான பானை கொதிப்பதைப் போல் கொதிக்கும். தன்னை விட கடுமையாக தண்டிக்கப்படுபவர் யாருமில்லை என அவர் நினைப்பார். ஆனால் அவர்தான் மிகக் குறைவான தண்டனைக்குரியவர். புகாரி: 6562. முஸ்லிம்: 212.

முஸ்லிமுடைய அறிவிப்புக்களில் ஒன்றில் அவர் நபியவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்று குறிப்பிட்டு வந்துள்ளது. இஸ்லாத்தின் ஆரம்பகால கட்டங்களில் அதனைப் பாதுகாப்பதில் அவருக்கிருந்த பங்கு காரணமாக அல்லாஹ் அவரது தண்டனையைக் குறைத்தான்.

சுவர்க்கத்தின் படித்தரங்களது எண்ணிக்கையை இத்தனைதான் என்று வரையறுத்துக் கூற முடியாது. அது அல்குர்ஆனின் வசனங்களது எண்ணிக்கைக்கேற்ப இருக்கும் என்றும் ஒரு கருத்துக் கூறப்படுகிறது. அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்களது ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'குர்ஆனோடு வாழ்ந்தவருக்கு, நீ ஓதிக்கொண்டே உயர்ந்து செல்வீராக! உலகில் அல்குர்ஆனை இராகமிட்டு ஓதியதைப் போல் (இங்கும்) ஓதுவீராக. நிச்சயமாக உனது அந்தஸ்து, நீ ஓதும் இறுதி வசனத்தோடு இருக்கும். என்று கூறப்படும்." அபூதாவுத்: 1464, திர்மிதி: 2914. இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் அபூதாவுதில் இதை ஸஹீஹான ஹதீஸ் என்று பதிந்துள்ளார்.

'மறுமையில் சுவர்க்கத்தின் படித்தரங்களின் எண்ணிக்கைக்கு அமையவே குர்ஆன் வசனங்களின் எண்ணிக்கை அமைந்துள்ளது என்பதாக ஹதீஸில் வந்துள்ளது. நீ அல்குர்ஆன் வசனங்களை ஓதிக்கொண்டிருந்த அளவு அந்தஸ்துக்களில் உயர்ந்து செல்! என்று குர்ஆனோடு வாழ்ந்த மனிதருக்கு சொல்லப்படும். யார் குர்ஆன் முழுவதையும் ஓதுவதில் நிரப்பம் காண்கிறாரோ மறுமையில் அவர் சுவர்க்கத்தின் அதிமேன்மையான அந்தஸ்தை அடைவார். யார் அதில் ஒரு பிரிவை ஓதுகிறாரோ அதற்கேற்ப அவரது அந்தஸ்த்து உயர்ந்து செல்லும். எனவே குர்ஆனின் முழுமைதான் நற்கூலியின் முழுமையாக இருக்கும் என்று இமாம் கத்தாபி கூறியதாக இமாம் முன்திரி 'தர்கீபில்" கூறுகிறார்.     (அத்தர்கீப் வத்தர்ஹீப் : 2/228)

ஆனால் இந்தக் கருத்து விமர்சனத்துக்குரியது. ஏனெனில் இந்த ஹதீஸ் அல்குர்ஆனை மனனமிட்டோரின் தரங்களை விளக்குகிறதேயல்லாமல் அவர்களது அந்தஸ்துக்கள் குறித்துப் பேசவில்லை. உலகில் அமல் செய்தவர்களின் வேறுபாடுகளுக்கேற்ப அந்தஸ்துக்கள் வேறுபடும். மனிதர்களின் தராதரத்தை வேறுபடுத்தும், ஸித்தீகிய்யா, ஜிஹாத் போன்ற வேறு சில அமல்களும் உண்டு. இந்த அடிப்படையில் பொதுவாக அதி உயர் தரத்தை அடைவதற்கு, குர்ஆனோடு வாழ்ந்தவர் அதை முழுமையாக மனனமிட்டவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

சுவர்க்கத்தின் படித்ததரங்களில் மிக உயர்ந்தது பிர்தவ்ஸ் ஆகும். நபி () அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் கேட்பதாக இருந்தால் அவனிடம் பிர்தவ்ஸையே கேளுங்கள். அதுவே அதி உன்னதமும், அதி உயர்வும் உள்ள தரமாகும். அதற்கு மேல் அர்ரஹ்மானின் அர்ஷ் உள்ளது. அதிலிருந்துதான் சுவர்க்கத்தின் நதிகள் பீரிட்டுப் பாய்கின்றன." புகாரி: 2637, முஸ்லிம்: 2831.

மத்தியதர சுவர்க்கம் (அவ்ஸத்) என்பது மிக சிறந்ததும் அதி உன்னதமானதுமாகும். அல்லாஹ் கூறுவதைப்போல் :'அவ்வாறே உங்களை அதி உன்னதமான சமுதாயமாக ஆக்கினோம்."

சில அமல்களையும் அதை செய்வோரின் அந்தஸ்தையும் நபிமொழிகள் விவரிக்கின்றன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

1.            அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும் தூதர்களை உண்மைப்படுத்துவதும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸஈத் அல் குத்ரி (ரழி) அறிவிக்கிறார்கள்: 'சுவர்க்கவாசிகள் அறைகளை உடையோரை துருவ நட்சத்திரத்தைப் பார்ப்பதுபோல் மேல்நோக்கிப் பார்ப்பார்கள். அதாவது (கவ்கப் துர்ரி என்பது) கிழக்கு அல்லது மேற்கு அடிவானில் தென்படும் நட்சத்திரமாகும். அவர்களுக்கிடையில் அவ்வளவு அந்தஸ்து வேறுபாடு இருக்கும். அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களுடைய அந்தஸ்தை வேறு எவரும் அடைய முடியாதா? என்று கேட்கப்பட்டது. முடியும்! எனது ஆத்மா எவனது கை வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக அல்லாஹ்வை விசுவாசம் கொண்டு தூதர்களை உண்மைப்படுத்திய சில மனிதர்கள் அதை அடையலாம்." (புகாரி: 3083, முஸ்லிம்: 2831)

2.            அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: 'நிச்சயமாக சுவர்க்கத்தில் நூhறு படித்தரங்கள் உள்ளன. அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவோருக்காக அல்லாஹ் அதை தயார்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொரு இரண்டு அந்தஸ்துக்களுக்குமிடையே வானம் - பூமிக்கிடையிலான வித்தியாசம் உள்ளது."   (புகாரி: 2637.)

3.            உண்மையகவே ஷஹாதத் அந்தஸ்தை அல்லாஹ்விடம் கேட்பவர்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஸஹ்ல் பின் ஹனீப் (ரழி) அறிவிக்கிறார்கள்: 'யார் அல்லாஹ்விடம் உண்மையாகவே அறப்போரில் உயிர் நீத்த ஷஹாதத் அந்தஸ்தை கேட்கிறாரோ அவர் தனது படுக்கையில் மரணித்தாலும் உயிர்த்தியாகிகளது அந்தஸ்தை அல்லாஹ் அளிப்பான்." புகாரி: 1909.

4.            அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தல்.

அபூஹுரைரா (ரழி)அறிவிக்கிறார்கள்: ஏழைகள் நபியவர்களிடம் வந்து 'செல்வந்தர்கள் தங்களது செல்வத்தினூடாக உயர்ந்த ஸ்தானங்களையும் நிரந்தர இன்பங்களையும் கொண்டு சென்றுவிடுகிறார்கள். நாங்கள் தொழுவதைப் போல் தொழுகிறார்கள், நாங்கள் நோன்பு வைப்பதைப் போலவே நோன்பும் வைக்கிறார்கள், அதை விட மேலதிகமாக அவர்களது செல்வங்களால் ஹஜ், உம்ராவும், அறப்போர் மற்றும் தானதர்மங்களும் செய்துகொள்கிறார்கள்…," புகாரி: 807, முஸ்லிம்: 595

5.            வுழுவை பரிபூரணமாக செய்வதும், அதிக எட்டுக்கள் வைத்து மஸ்ஜிதுக்கு நடந்து செல்வதும் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் அடுத்த தொழுகையை எதிர்பார்த்து காத்திருப்பதும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் உங்களது பாவங்களை மன்னிப்பதற்கும், அந்தஸ்தை உயர்த்துவதற்கும் நீங்கள் செய்யவேண்டிய ஒன்றை சொல்லித்தரட்டுமா?

ஆம் அல்லாஹ்வின் தூதரே! 

சிரமமான இடத்திலும் தண்ணீரை போக வைத்து வுழு செய்தல், அதிக பாத எட்டுக்களை வைத்து மஸ்ஜிதுக்கு செல்லுதல், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் அடுத்த தொழுகையை எதிர்பார்த்து காத்திருத்தல்.

அதுதான் அறப்போராட்டமாகும், அதுதான் அறப்போராட்டமாகும்." முஸ்லிம்: 251

6.            அல்குர்ஆனை மனனமிடல்.

நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அறிவிக்கிறார்கள்: 'குர்ஆனிய வாழ்க்கை வாழ்ந்வருக்கு, ஓதிக்கொண்டே உயர்ந்து செல்வீராக! என்று கூறப்படும். உலகில் அல்குர்ஆனை இராகமிட்டு ஓதியதைப் போல் (இங்கும்) ஓதுவீராக. நிச்சயமாக உனது அந்தஸ்து நீ ஓதும் இறுதி வசனத்தோடு இருக்கும்." அபூதாவுத்: 1464, திர்மிதி: 2914. இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் அபூதாவுதில் இதை சரிகண்டுள்ளார்.

யார் முன்னேறுவதற்கும், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்கும், ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தை அடைவதற்கும் விரும்புகிறாரோ இதோ அவருக்கே இந்த நல்லறங்கள். அதை செய்பவருக்கு அல்லாஹ் உயரிய அந்துக்களை வாக்களித்துள்ளான்.

அதற்காக ஆசையோடு முயற்சிக்கும் எத்தனையோ மனிதர்களுக்கிடையில்… அது எமக்கு தேவையில்லை என்று ஒதுக்கிவிடும் எவ்வளவு மனிதர்கள் வாழ்கிறார்கள்..

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
சுவர்க்கம், நரகம் ஆகியவற்றின் படித்தரங்கள் என்ன? அவற்றில் நுழைவிக்கும் அமல்கள் என்ன? - Islam Question & Answer