0 / 0
19/முகர்ரம்/1446 , 25/ஜூலை/2024

அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கான அத்தாச்சிகளும் படைப்பினங்களை அவன் படைத்ததற்கான நோக்கமும்

கேள்வி: 26745

பிற மதத்தில் இருக்கக்கூடிய எனது நண்பன், அல்லாஹ் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தி கூறும் படியும், எதற்காக எமக்கு இந்த வாழ்வை அவன் வழங்கி இருக்கிறான் என்பதையும், அதற்குப் பின்னால் இருக்கக்கூடியவற்றையும்  தெளிவுபடுத்தும் படி வினவினார்.

எனது பதில் அவரை திருப்தி படுத்தவில்லை, ஆகவே இது தொடர்பான அடிப்படை விடயங்களை கூறும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

இஸ்லாமிய சகோதரரே!  இறைவனின் பக்கம் அழைத்தல் மற்றும் இறைவன் இருக்கிறான் என்பதை தெளிவுபடுத்தல் சார்ந்த உங்களது இந்த நகர்வு உன்மையில் எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

அல்லாஹ்வை புரிந்து கொள்வதென்பது,  இயற்கை மற்றும் நேரான சிந்தனையுடன் இணைந்து போகக் கூடியதுதான்.

பலர் உண்மை அவர்களுக்கு தென்பட்ட உடனே இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் எங்களில் ஒவ்வொருவரும்  மார்க்கத்திற்காக அவரவர் கடமைகளை சரிவர செய்தால் பல நலன்கள் ஏற்படும்.

ஆக நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களின் பணியை செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். அத்தோடு நபியவர்கள் ) (அல்லாஹ் உன் மூலமாக ஒருவருக்கு நேர் வழி வழங்குவது சிவப்பு ஒட்டகை கிடைப்பதை விட சிறந்தது )) (புகாரி : 3/133)  || (முஸ்லிம் : 4/1872) என்று கூறிய மிகப்பெரிய கூலிக்கு உரித்தாகுறீர்கள்.

‌ஒட்டகங்களில் சிறந்த வகை சிவப்பு ஒட்டகை

அடுத்ததாக அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கான அத்தாட்சிகள்,  சிந்திப்பவர்களுக்கு தெளிவானவை

அதற்காக அதிக ஆய்வுகளோ நீண்ட  சிந்தனைகளோ அவசியமற்றவையாகும்.

அல்லாஹ்வின் உள்ளமை சார்ந்த அத்தாட்சிகள் பற்றி சிந்திப்போமேயானால் அது மூன்று பிரிவுகளாக வகுக்கலாம்.

1.இயற்கை சார்ந்த அத்தாட்சிகள் .

2. புலன் சார்ந்த அத்தாட்சிகள் .

3. மார்க்கம் சார்ந்த ஆதாரங்கள்.

01. இயற்கை சார்ந்த அத்தாட்சிகள்:

அறிஞர் இப்னு உதைமீன் கூறியுள்ளார்:

ஷைத்தான்களின் ஆதிக்கம் இல்லாதவர்களுக்கு  இயற்கை சார்ந்த அத்தாட்சி; ஏனைய அத்தாட்சிகளை விட வலுவானதாக இருக்கும்.

அதனால் தான் அல்லாஹ்

[1] என்ற வசனத்தை கூறிய பிறகு

 [2]

(அல்குர்ஆன் : 52:35)

[3]

(அல்குர்ஆன் : 52:35)

பின்னர் இந்த படைப்புகள் எப்போதிலிருந்து இருக்கின்றன, இத்தனை வருடங்களையும்  யார் இந்த பூமியில் அவைகள் இருக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து  அவை இருப்பதற்கான காரணிகளையும் அவற்றோடு உண்டாக்கி வைத்திருப்பது.!?

பதில் : அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கு பொருத்தமானவற்றை வழங்கி, பூமியில் இருப்பதற்கான உத்தரவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறான்.

பசுமையான விதைகளை நீங்கள் பார்க்கவில்லையா

அவற்றுக்கு அல்லாஹ் நீரை தடுத்து விட்டால் அவை முளைப்பதற்க்கு முடியுமா.?:ஒருபோதும் முடியாது, காய்ந்து போய்விடும். எல்லா விடையங்களையும் சற்று சிந்தித்தால் அனைத்தும் அல்லாஹ்வுடன் தொடர்புபட்டவையாகவே  இருக்கும். அல்லாஹ் இல்லை என்றால் எந்த ஒன்றும் இருக்காது.

மேலும் படைப்புகளை சீர்படுத்தி அவற்றுக்கு பொருத்தமான அமைப்பில் வைத்திருக்கிறான்.

உதாரணமாக ஒட்டகை, பிரயாணத்திற்கு உருவாக்கப்பட்டமை.

அல்லாஹ் கூறுகிறான்;

[4]

(அல்குர்ஆன் : 52:35)

மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.

(அல்குர்ஆன் : 36:72)

இந்த ஒட்டகயை பிரயாணத்திற்கு ஏதுவானதாகவும், ஏனைய மிருகங்கள் சுமக்க முடியாத சுமைகளை சுமப்பதற்கு  முதுகுப் பகுதியை நேரான வடிவிலும், உறுதியான விலங்காகவும் அல்லாஹ்  எவ்வாறு  படைத்திருக்கிறான் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இதே போன்று தான் படைப்பினங்களின் பக்கம் உமது கவனத்தை திருப்பினால், அவை ஒவ்வொன்றும் எதற்காக படைக்கப்பட்டிருக்கின்றனவோ அவை அனைத்தும் பொருத்தமானவை தான் என்பதை உணர்வாய்.

புலன் சார்ந்த அத்தாட்சிகளில் உள்ளவை :

சில காரணிகளுக்காக ஏற்படக்கூடிய புதிய நிகழ்வுகள், அல்லாஹ் இருக்கிறான் என்பதை உணர்த்தக் கூடியதாக இருக்கும்.

உதாரணமாக அல்லாஹ்விடம் துவா கேட்டு பின்னர் அந்த துவாவிற்கு அல்லாஹ் பதில் அளிப்பது அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கான அத்தாட்சி.

அறிஞர்  இப்னு உதைமீன் கூறியுள்ளார் :  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படைப்பினங்களுக்கு  மழை தேடி அல்லாஹ்விடம் "அல்லாஹ் எமக்கு மழை பொழியச்செய், எமக்கு மழை பொழியச்செய்"என கேட்டபோது மழை மேகம் உருவாகியது. மிம்பரில் இருந்து நபியவர்கள் இறங்க முன்பு மழையை பொழியச் செய்தான்.

இதுவும் அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குரிய அத்தாட்சி. (ஷர்ஹு ஸபாரினிய்யா)

03. மார்க்கம் சார்ந்த ஆதாரங்கள்:

இவ்வுலகில் இருக்கும் மார்க்கங்கள்

அறிஞர் இப்னு உதைமீன்  கூறியுள்ளார்: எல்லா மார்க்கங்களும் படைப்பாளன் ஒருவன் இருப்பதையும் அவனது பூரணமான அறிவு ஞானம் பரிவு இருப்பதையும் சான்று பகர்கிறது.

எல்லா மார்க்கங்களுக்கும் அவற்றை உருவாக்கிய ஒருவர் அவசியம் இருக்க வேண்டும்.  அவைகளை உருவாக்கியவன் அல்லாஹ். ( ஷர்ஹு ஸபாரினிய்யா)

"அல்லாஹ் ஏன் எங்களை படைத்திருக்கிறான்.!?" என்ற உமது கேள்விக்கான பதில்

அவனை வணங்கி, நன்றி செலுத்தி, ஞாபகம் கூறுவதற்காகவும், அவன் எமக்கு அளித்த கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவும்.

உங்களுக்கு தெரியும், மனிதர்களில் நிராகரிப்பாளனும் இருக்கிறான், நம்பிக்கையாளனும் இருக்கிறான், அதனால் அல்லாஹ்  தனது அடியார்கள்; அவனை வணங்குகிறார்களா அல்லது பிறரை வணங்குகிறார்களா  என்பதை சோதித்துப் பார்க்கவும் செய்கிறான். அதுவும் ஒவ்வொருக்கும் அல்லாஹ் நேரான வழியை தெளிவுபடுத்தி விட்டு தான் இவ்வாறு சோதிக்கிறான். அல்லாஹ் கூறுகிறான்

[5]

(அல்குர்ஆன் : 67:2)

[6]

(அல்குர்ஆன் : 51:56)

அல்லாஹுத்தஆலா எனக்கும் உங்களுக்கும் அவன் விரும்பக்கூடிய பொருந்தக்கூடிய விடயங்களில் உதவி புரிவானாக! அதிகம் அதிகம் மார்க்கத்திற்காக அழைப்பு பணி மற்றும் நற்கருமங்களில் ஈடுபடுவதற்கு அருள் புரிவானாக

 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

^1 ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக..!
^2 எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்;...) என்று கூறினான்

(அல்குர்ஆன் : 30:30)

எனவே இயற்கை, அல்லாஹ் இருக்கிறான் என்பதை சான்று பகர்கிறது. சைத்தானிய ஆதிக்கம் பெற்றவர்களை அன்றி இந்த இயற்கையைக்கு அப்பால் யாரும் விலகி (சிந்திக்க) முடியாது. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் இந்த அத்தாட்சியை புறக்கணித்து விடுவார்கள். (ஷர்ஹு ஸபாரினிய்யா)

ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு ஒரு படைப்பாளி,  பரிபாலிக்கக்கூடிய இறைவன் இருக்கிறான் என்பதை உணருகிறான் அவன் பக்கம் தேவை காண்பதையும் உணருகிறான். எப்பொழுதாவது அவன் தீர்வில்லாத பிரச்சனையில் சிக்கினால் உடனே அவனது இரு கைகளும் கண்களும் உள்ளமும் அல்லாஹ்விடம் உதவி தேடி வானத்தின் பக்கம் உயர்ந்துவிடும்.

02: புலன் சார்ந்த ஆதாரங்கள் :

 உலக நிகழ்வுகள் இடம்பெறுதல் .

எம்மைச் சூழ உள்ள உலகில் அவசியம் பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இந்நிகழ்வுகளில் முதன்மையானது படைத்தலாகும். படைப்புகளை உருவாக்குதல். அதாவது மரம் கற்கள் மனிதன் பூமி வானம் கடல்கள் ஆறுகள் போன்றன.

இந்நிகழ்வுகள் மற்றும் இது போன்ற ஏனையவை அதிகமாக இருக்கின்றன. அவ் அனைத்தையும் உருவாக்கி பரிபாலிப்பது யார்...!?  என்று கேட்டால்

பதில் : ஒன்று, எக் காரணமுமின்றி திடீரென தோன்றியிருக்கலாம் என்றால் ,எப்பொழுது  எவ்வாறு உருவாகியது என்பதை அறிந்தவர் யாரும் இல்லை. இது ஒரு சாத்திய கூறாக வைத்துக் கொள்வோம் ன.

இரண்டாவது,  படைப்புகள் அனைத்தும் தன்னைத்தானே உருவாக்கி தன் தேவைகளை மேற்கொள்வது.

மூன்றாவது, படைப்புகளுக்கெல்லாம் ஒரு படைப்பாளன் இருப்பது.

இந்த மூன்று சாத்தியக்கூறுகளையும் நுணுக்கமாக சிந்திக்கும் போது மேற்குறிப்பிடப்பட்ட முதலாவது மற்றும் இரண்டாவது சாத்தியக் கூறுகள் சாத்தியமற்றதாக மாறிவிடும். இந்த இரண்டும் சாத்தியமற்றதாக மாறினால் மூன்றாவது சரியானதாகவும் தெளிவானதாகவும் மாறிவிடும். அதுதான் அந்த படைப்புகளுக்கு ஒரு படைப்பாளன் இருப்பதாகும். அவனே அல்லாஹ் அதுதான் குர்ஆனிலும் வந்திருப்பதை காணலாம்

((அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?

^3, ^4 அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
^5 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
^6 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கான அத்தாச்சிகளும் படைப்பினங்களை அவன் படைத்ததற்கான நோக்கமும் - Islam Question & Answer