புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே
1: உங்களை நீங்களே சீர்திருத்திக் கொள்வதற்கான முதற்கட்ட வேலை உமது குறைபாடுகளை தெரிந்து கொள்வதாகும்.
யார் ஒருவர் தான் குறைபாடு உடையவராக இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்கிறாரோ அவர் தன்னை சீர்திருத்திக் கொள்ளும் வழிமுறையில் முதல் அடியை எடுத்து வைத்திருக்க ஆரம்பிப்பார். இந்த அறிவே என்னை சீர்திருத்திக் கொள்ள வலியமைப்பதுடன் தொடர்ந்தும் நாம் அதை செய்யவும் வழியமைக்கிறது. இவ்வாறு ஒருவர் தன்னை சீர்திருத்திக் கொள்வதற்கு முன் தனது குறைகளை அறிந்து கொள்வதானது அடியான் தன்னை சீர்திருத்தி சரியான பாதையில் செல்வதற்கான இறைவனின் நல்லுதவிக்கான அடையாளமாகும்.
நிச்சயமாக அல்லாஹ் எந்த ஒரு சமுதாயமும் அவர்கள் தங்களுக்குரிய (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல், அவனுக்கு கீழ்ப்படிந்து நடுத்தல் போன்ற நிலைகளான)தை மாற்றிக் கொள்ளாத வகையில் நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்கு புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை.
ஸுரா அர்ரஃத்:11
யார் அல்லாஹுவுக்காக மாற முயற்சிக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் மாற்றத்தைக் கொடுப்பான். ஒவ்வொரு தனி மனிதனும் தனிப்பட்ட வகையில் தனக்கான பொறுப்புதாரி ஆவார். அவர் தனிப்பட்ட ரீதியில் அவரைப் பற்றி வினவப்படுவார்.
(ஏனென்றால், வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகின்றது. அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கின்றான். அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் எவருடைய உதவியுமின்றி அவனிடம் தனித்தனியாகவே வரும்.
ஸுரா மர்யம் 93/94/95
ஒரு மனிதர் தான் ஒரு விடயத்தில் ஆர்வமும் ஆசையும் கொள்ளாத வரை எந்த ஒரு நன்மையானவற்றாலும் பயனடைய முடியாது, நூஹ் மற்றும் லூத் நபியின் மனைவிமார்களை நீர் கவனிக்கவில்லையா? அவ்விருவரும் இரு நபிமார்களின் வீடுகளில்தான் இருந்தார்கள். அதில் ஒருவர் உறுதிமிக்கவர்கள் எனும் சிறப்பை பெற்ற ஐந்து நபிமார்களின் ஒருவர். தமது மனைவிமார்கள் விடயத்தில் அவ்விருவரும் எந்த அளவு முயற்சிகளை மேற்கொண்டு இருப்பார்கள் என்றும் எவ்வளவு சிறந்ததொரு வழிகாட்டுதலை அந்த மனைவிமார்கள் பெற்றிருப்பார்கள் என்பதையும் கற்பனை செய்து பாருங்கள்! எனினும் தாம் சரியான வழியில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் இல்லாதிருந்தமையால் அவர்களுக்கு இறைவனால் பின்வருமாறு கூறப்படுகிறது.
நரகத்தில் நுழைப்பவர்களுடன் நீங்கள் இருவரும் நுழையுங்கள்
ஸுரா தஹ்ரீம்-10
முஸ்லிம் தன்னைத்தானே சீர்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளாவன:
1: இறைவனை வணங்கி அவனுடன் தொடர்பை பேணி இருப்பதுடன் அவனுக்கு முற்றிலும் அடிபணிந்து இருத்தல். கட்டாய கடமைகள் விடயத்தில் அவதான அவதானமாக இருப்பதன் மூலமும் அல்லாஹ் அல்லாதவர்களுடன் உள்ளம் இணைந்திருப்பதை விட்டும் உள்ளத்தை தூய்மைப்படுத்துவதன் மூலமும் அது சாத்தியமாகும்.
2: அதிகமாக குர்ஆன் ஓதுதல் அதனை ஆராய்தல் அதிலுள்ள விடயங்கள் தொடர்பாக சிந்தித்தல்.
3: உள்ளத்திற்கு மருந்தாக அமையக்கூடியவை என சொல்லப்படும் பயனுள்ள அறிவுரை நூல்களை வாசித்தல் உதாரணம்:-முக்தஸரு மின்ஹாஜுல் காஸிதீன்.
தஹ்தீபு மதாரிஜுஸ் ஸாலிகீன்.
முன்னோர்களின் வரலாறுகள், பண்பாடுகள் என்பவற்றை பார்த்தல் அது தொடர்பாக இமாம் இப்னு ஜவ்ஸி உடையு ஸப்வதுஸ்ஸப்வா எனும் நூலிலும் அய்ன் நஹ்னு மின் அஹ்லாகிஸ் ஸலப்(பஹாஉத்தீன் அகீல்,நாவிதர் ஜலீல்) இனம் நூல்களே பார்வையிடலாம்
4: பாடநெறிகள், கருத்தரங்குகள் போன்ற சீர்திருத்த வழிகாட்டல்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டுதல்.
5: நேரம் பேணுதலில் கவனம் செலுத்துதல். இன்னும் இம்மைக்கும் மறுமைக்கும் அடியானுக்கு பயன் அளிக்க கூடியவற்றில் நேரத்தை செலவிடல்.
6: அனுமதிக்கப்பட்ட விடயங்களில் என்றாலும் (உ+ம் தூக்கம்,உண்ணுதல்) அதிக ஈடுபாடு காட்டுவதும் அதற்கு பெரியதொரு முக்கியத்துவம் அளிப்பதும் கூடாது.
7: நன்மையானவற்றில் உதவக்கூடிய நல்ல நண்பர்களை தேடி தோழமை கொள்ளுதல் தனிமையில் வசிப்பவர்கள் பொறுமை பரோபகாரம் போன்ற சகோதரத்துவத்திற்கான பெரும்பாலான விடயங்களை இழந்து விடுகிறார்கள்
8: தான் கற்ற விஷயங்களின் பிரகாரம் செயல்பட முயற்சித்தல்.
9: தன்னைத்தான் மிக ஆழமாக சுயவிசாரணை செய்தல்
10: இறைவன் மீதான நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை ஏனெனில் தன்னம்பிக்கையை இழந்தவன் செயற்பட முடியாது.
11: இறைவனுக்காக தான் செய்யும் அமல்களில் தன்னை குறை காணுதல். இது மேற்கூறப்பட்ட விடயத்திற்கு முரணாக அமையாது. அதாவது நாம் இறைவனுக்காக செய்யும் விடயங்கள் குறைவாகவே இருப்பதாக எண்ணுவதானது நாம் அதில் மென்மேலும் முயற்சி செய்வதற்கு உதவும்.
12: மார்க்க ரீதியான தனிமை பேனல் எல்லா நேரங்களிலும் மனிதர்களுடன் கலந்து இருக்கக் கூடாது மார்க்கத்தில் சொல்லப்பட்ட பிரகாரம் வணக்க வழிபாடுகள், இறை சிந்தனை போன்றவற்றிற்காகவும்ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் எங்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவன் விரும்பியதை செய்யக்கூடியவர்களாக எங்களை ஆக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்.