முதலாவதாக:
அறிஞர்களும் ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியதன்படி கியாமத் நாளில் இடம்பெறும் நிகழ்வுகளின் வரிசைக் கிரமம் பின்வருமாறு.
01. மக்கள் எழுப்பப்பட்டு தமது மண்ணறைகளிலிருந்து வெளியாகிவிட்டால் ஒன்று திரட்டப்படும் திடலுக்கு (மஹ்ஷர்) செல்வார்கள். பின்னர் மஹ்ஷர் பூமியில் நீண்ட நெடிய நேரம் நின்றிருப்பர். அவர்களது தாகமும் நிலமையும் கடினமாக இருக்கும். நீண்ட நேரம் நின்றிருப்பதாலும் விசாரணை இடம்பெறுவது மற்றும் அல்லாஹ் அவர்களுக்கு எதை எதை நிகழ்த்தப்போகிறான் என்பது பற்றியும் உறுதியாக நம்புவதால் கடுமையாக அச்சப்படுவார்கள்.
02. ஒரு நாளின் கால எல்லை ஐம்பதினாயிரம் வருடங்களுக்கு சமமாகும். அந்நாளில் கடும் சிரமத்தோடு அகிலத்தாரின் அதிபதியை எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பது மற்றும் அங்கு நிலை கொண்டிருப்பது நீண்டுகொண்டே செல்லும்போது எல்லாம் வல்ல அல்லாஹ் தனது தூதருக்கு முதலாவதாக அவருக்கேயுரிய நீர்த்தடாகத்தை உயர்த்துவான். அப்போது அத்தடாகம் கியாமத்தின் வெளியில் இருக்கும். எனவே யார் மாற்றங்கள் செய்யாது, நூதனங்களை உருவாக்காது, பதிலாக வேறொன்றை கொண்டுவராது நபி வழியில் மரணிக்கின்றாரோ அவரிடம் நீர்த்தடாகம் வருகை தரும். அவர் அதிலிருந்து நீர் புகட்டப்படுவார். எனவே நபியவர்களின் நீர்த்தடாகத்திலிருந்து நீர் புகட்டப்படுவது மறுமையின் க~;டங்களிலிருந்து அவருக்குரிய முதலாவது பாதுகாப்பாக அமையும். பின்னர் ஒவ்வொரு நபிக்கும் அவரவரது தடாகங்கள் உயர்த்தப்படும், அவரவரது சமுதாயத்தின் நன்மக்கள் அதிலிருந்து நீர் புகட்டப்படுவர்.
03. பின்னர் மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பர். பின்னர் பிரதான பரிந்துரை - ஷபாஅதுல் உழ்மா - இடம்பெறும். அதாவது படைப்பினங்களுடைய விசாரணையை துரிதப்படுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் ஷபாஅத் செய்வதாகும். பிரபல்யமான நீண்ட ஹதீஸில் வருவதைப் போல்… அதாவது : 'மக்கள் ஆதம் நபியிடம் பின்னர் இப்ராஹீம் நபியிடம் …. இவ்வாறாக ஒவ்வொரு நபியிடமும் வந்து இறுதியில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே! என்றழைத்து தமது நிலையை எடுத்துச் சொல்வர். விசாரணையை அவசரப்படுத்துவதன் மூலம் கடினமான நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்றுமாறு இரைஞ்சும்படி கோருவர். உமது இரட்சகனிடம் எங்களுக்காக பரிந்துரைப்பீராக! என்று அவர்கள் வேண்டிக் கொண்டதன் பின் நபி (ஸல்) அவர்கள் 'நான் அதற்குரியவன்தான், நான் அதற்குரியவன்தான்" என்று கூறிக் கொண்டு அர்ஷிடம் வந்து ஸுஜூதில் விழுவார்கள். பின்னர் அல்லாஹ் உதிப்பாக ஏற்படுத்திய புகழாரங்களைக் கொண்டு அல்லாஹ்வைத் துதிப்பார்கள். பின்னர் 'முஹம்மதே! உனது தலையை உயர்த்து…, கேள் கொடுக்கப்படும்…, பரிந்துரை செய் ஏற்றுக்கொள்ளப்படும்…" என்று கூறப்படும். இதுவே விசாரணையை அவசரப்படுத்துமாறு செய்யப்படும் 'ஷபாஅதுல் உழ்மா" வாகும்.
04. அதன் பிறகு மனித செயற்பாடுகள் எடுத்துக் காட்டப்படும்.
05. பின்னர் விசாரணை இடம்பெறும்.
06. விசாரணையின் பின்னர் ஏடுகள் புறட்டப்படும். முதலாவது விசாரணையானது, மனித செயல்கள் எடுத்துக் காட்டப்படுவதோடு இடம்பெறும். ஏனெனில் அதில் வாதப்பிரதிவாதங்களும் மன்னிப்புக்கோரல்களும் இடம்பெறும். பின்னர் ஏடுகள் புறட்டப்படும். வலதுபுறத்தாரின் (நன்மக்களின்) பட்டோலைகள் வலது புறமாகக் கொடுக்கப்படும். இடது புறத்தாரின் (தீயவர்களின்) பட்டோலைகள் இடது புறமாகக் கொடுக்கப்படும். பின்னர் பட்டோலைகள் வாசிக்கப்படும்.
07. பட்டோலைகள் வாசிக்கப்பட்டதன் பின்னர் காரணம் சொல்லி தப்பிக்க முடியாத வண்ணம் மீண்டும் ஒரு விசாரணை இடம்பெறும். பட்டோலைகளில் உள்ளது வாசிக்கப்படுவதன் மூலம் ஆதாரம் நிரூபிக்கப்படும்.
08. பின்னர் மீஸான் எனப்படும் செயல்களை நிறுக்கும் தராசு நிறுவப்படும். மேலே கூறியவாறு விடயங்கள் நிறுக்கப்படும்.
09. மீஸானின் பின்னர் மக்கள் குழுக்களாகவும் ஜோடிகளாகவும் பிரிந்துவிடுவர். ஜோடிகள் என்பது ஒவ்வொரு அமைப்பும் அதன் அமைப்பிலேயே இருக்கும். மேலும் கொடிகள் தூக்கப்படும் அதாவது நபிமார்களின் கொடிகள். முஹம்மத் நபியின் கொடி, இப்ராஹீம் நபியின் கொடி, மூஸா நபியின் கொடி …. இப்படியாக. மக்கள் தமது குழுவுக்கு அமைவாக வெவ்வேறு வகையினராக இருப்பர். அனைத்து தோற்றமும் அதனதனது பிரத்தியேக தோற்றத்தில் இருக்கும்.
அநியாயக்காரர்களும் இறை நிராகரிப்பாளர்களும் கூட ஜோடி ஜோடியாக எழுப்பப்படுவர். அதாவது ஒன்றை ஒன்று ஒத்ததாக. 'அநீதி இழைத்தோரையும் அவர்களுக்கு துணை நின்றவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்தவற்றையும் ஒன்று திரட்டுங்கள், அவர்களுக்கு நரகின் பாதையைக் காட்டுங்கள்." ஸாப்பாத் : 22-23 அதாவது அவர்களின் ஜோடிகளுடன் : அவர்களைப் போன்றவர்கள், அவர்களுக்கு ஒப்பானவர்கள். இணைவைப்பாளர்களின் அறிஞர்கள் இணைவைப்பாளர்களின் அறிஞர்களுடன், அநியாயக்காரர்கள் அநியாயக்காரர்களுடன், மறுமையில் மீளவும் எழுப்பப்படுவதை மறுப்பவர்கள், அவ்வாறு மறுப்பவர்களுடன், …. இவ்வாறே.
10. அதன் பின்னர் நரகிற்கு முன்னர் எல்லாம் வல்ல அல்லாஹ் இருள் ஒன்றை ஏற்படுவத்துவான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். எனவே மக்கள் தமக்கு வழங்கப்படும் ஒளியின் துணையுடன் நடந்து செல்வர். இந்த உம்மத்தும் நடந்து செல்லும், அவர்களுடன் முனாபிக்குகளும் செல்வார்கள். அவர்கள் தமது ஒளியின் துணையுடன் செல்லும் போது பிரபல்யமான அந்த மதில் நிறுவப்படும். 'எங்களைக் கவனியுங்கள்! உங்களது ஒளியில் நாங்களும் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறோம் என்று முஃமின்களிடம் முனாபிக்குகளான ஆண்களும் பெண்களும் அந்நாளில் கூறுவார்கள். உங்கள் பின்புறமாகத் திரும்பிச் சென்று ஒளியைத் தேடுங்கள் எனக் கூறப்படும். அவர்களுக்கிடையே ஒரு தடுப்புச் சுவர் அமைக்கப்படும். அதற்கு வாயிலும் இருக்கும். அதன் உட்புறத்தில் அருள் இருக்கும், அதன் வெளிப்புறத்தில் இருந்து வேதனை இருக்கும்." ஹதீத்: 13-14. அல்லாஹ் முஃமின்களுக்கு ஒளியைக் கொடுப்பான். அதன் மூலம் ஸிராத்தின் பாதையைக் காண்பர். முனாபிக்கீன்களுக்கு ஒளி கொடுக்கப்படமாட்டாது. அவர்கள் காபிர்களுடன் நரகில் வீழ்வார்கள். முன்னால் நரகை நோக்கி அவர்கள் நடந்து செல்வர். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
11. பின்னர் நபி (ஸல்) அவர்கள் முதலாவதாக வருவார்கள். ஸிராத்தில் நின்று கொண்டு 'யா அல்லாஹ் காப்பாற்றுவாயாக! காப்பாற்றுவாயாக!.... யா அல்லாஹ் காப்பாற்றுவாயாக! காப்பாற்றுவாயாக! என்று அவருக்காகவும் அவரது உம்மத்துக்காகவும் பிரார்த்திப்பார்கள். நபியவர்களும் அவரது உம்மத்தும் ஸிராத்தைக் கடப்பார்கள். ஒவ்வொருவரும் தத்தமது அமலுக்கு ஏற்ப (எளிதாகவும், விரைவாகவும்) கடந்து செல்வர். அவரவரது அமலுக்கு ஏற்ப அவர்களுக்குரிய ஒளியும் கொடுக்கப்படும். அல்லாஹ் யாருக்கு மன்னிப்பு வழங்குகிறானோ அவர் கடந்து முடிப்பார். ஏகத்துவவாதிகளின் பட்டிலில் யாரை அல்லாஹ் தண்டிக்க நாடுகிறானோ அவர் நரகில் விழுவார்.
நரக வேதனையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டால் முஃமின்களில் ஒருவரை ஒருவர் பழி தீர்ப்பதற்காக அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கும் சுவர்க்கத்தின் வளாகத்தில் ஒன்று சேர்வர். குரோதங்கள் களையப்பட்டு தூய்மைப்படுத்தப்படும். பின்னர் உள்ளத்தில் குரோதங்கள் அற்ற பரிசுத்தமான நிலையில் சுவனம் நுழைவர்.
12. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு முதலாவதாக ஏழை முஹாஜிரீன்களும், ஏழை அன்சார்களும் பின்னர் இந்த உம்மத்தில் ஏழைகளாக இருந்தவர்களும் சுவனத்தில் நுழைவர். பணக்காரர்கள் அவர்களுக்கும் ஏனைய படைப்புகளுக்கும் இடையில் கணக்குத் தீர்ப்பதற்காகவும் அது தொடர்பாக விசாரிப்பதற்காகவும் பிற்படுத்தப்படுவர்.
ஷரஹுத் தஹாவியா பக்:542 - ஷாமிலா நூலக இலக்கமிடலின்படி – அஷ்ஷெய்க் ஸாலிஹ் ஆலுஷ்ஷெய்க் (சிறிய மாற்றங்களுடன்).
(மேலதிக விளக்கங்களுக்கு 34719 மற்றும் 203411 இலக்க கேள்விகளுக்கான பதிலை பார்வையிடவும்.)
இரண்டாவதாக:
மரணத்தின்போது இரண்டு ஷைத்தான்கள் தனது தந்தை மற்றும் தாயின் ரூபத்தில் அமர்ந்து கொண்டு யூத, கிறிஸ்தவர்களின் மதத்தைப் பின்பற்றுமாறு ஏவிக்கொண்டிருப்பார்கள் என்பது தொடர்பாக எந்தவொரு ஸஹீஹான ஹதீஸையும் நாம் காணவில்லை. ஆனால் 'தத்கிரா" எனும் நூலின் 185ம் பக்கத்தில் இமாம் குர்துபி (ரஹ்) கூறியிருப்பதானது: 'நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகிறது: 'ஒரு அடியான் மரணத்தறுவாயில் இருக்கின்றபோது இரண்டு ஷைத்தான்கள்;, ஒருவர் அவரது வலப் புறத்திலும், இன்னொருவர் அவரது இடப்புறத்திலுமாக அமர்வார்கள். அவரது வலப்புறத்தில் தந்தை ரூபத்தில் அமர்ந்திருப்பவர் 'எனதருமை மகனே! நான் உன் மீது இரக்கமும் பாசமும் உள்ளவனாக இருந்தேன். ஆனால் நீ கிறித்தவர்களின் மதத்தில் மரணத்தைத் தழுவு. அதுதான் மிகச் சிறந்த மதமாக இருக்கிறது" என்று கூறுவார். அவரது இடப்புறத்தில் தாயுடைய ரூபத்தில் அமர்ந்திருப்பவர் 'எனதருமை மகனே! எனது வயிறு உன்னை சுமந்த பாத்திரமாக இருந்தது. எனது மார்பகங்கள் உனக்கு பால் புகட்டியாக இருந்தது. எனது தொடை நீ மிதித்து நிற்கும் தளமாக இருந்தது, ஆனால் நீ யூத மதத்தில் மரணத்தைத் தழுவு அதுதான் மிகச் சிறந்த மதமாக இருக்கிறது" என்று கூறுவார்.
(இப்னு அபீ ஸைதுடைய நூலுக்கான தனது விரிவுரையில் அபுல் ஹஸன் அல்காபிஸி இதை பதிவு செய்கிறார். இதன் கருத்தை ஒத்த அமைப்பில் க~;பு உலூமில் ஆகிரா எனும் நூலில் அபூ ஹாமித் குறிப்பிடுகிறார்.)
நாம் அறிந்த வகையில் இது ஒரு அடிப்படையற்ற செய்தியாகும். எனவே இதை ஆதாரம் கொள்ள முடியாது.
ஆனால் ஆதமுடைய மகனின் மரணத் தறுவாயின்போது வழிகெடுப்பதற்காக ஷைத்தான் இவ்வாறு அல்லது வேறு அமைப்புக்களில் குறுக்கிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அபுல் யஸர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்திக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்: 'யா அல்லாஹ் இடிபாடுகளில் சிக்கிக் கொள்வதை விட்டும், உயரத்திலிருந்து வீழ்வதை விட்டும், நீரில் மூழ்குவதை விட்டும், நெருப்பில் கருகுவதை விட்டும், தள்ளாத வயது முதிர்ந்த நிலையை அடைவதை விட்டும், மரணத்தறுவாயில் ஷைத்தான் என்னை வழிகெடுப்பதை விட்டும் உனது பாதையில் புறமுதுகிட்ட நிலையை விட்டும் வி~ ஜந்துக்களால் தீண்டப்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்." அபூதாவுத்: 1552, நஸாஈ 5531. இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் அபூதாவுதில் இதை பதிவு செய்துள்ளார்.
இமாம் கத்தாபி (ரஹ்) கூறுகிறார்:'; மரணத்தறுவாயில் ஷைத்தான் தீண்டுவதை விட்டும் பாதுகாப்புத் தேடுவதானது, உலகை விட்டும் பிரியும்போது ஷைத்தான் அவர் மீது ஆதிக்கம் செலுத்தி வழிகெடுப்பதை விட்டும் தப்பித்துக் கொள்வதற்காகும். அவ்வாறு அவன் வழிகெடுத்தால் தவ்பா செய்யவிடாது அவன் இடையில் குறுக்கிடுவான், அல்லது தனது நிலையினை சீரிபடுத்திக் கொள்வதை விட்டும், அநியாயம் புரிவதிலிருந்து வெளியேறுவதை விட்டும் தடுப்பான். அல்லது அல்லாஹ்வின் அருளிலிருந்து நம்பிக்கையிழக்க வைப்பான். உலக வாழ்வை பிரிவதை கைசேதமாக எண்ண வைப்பான், மரணத்தை வெறுக்க வைப்பான்.
எனவே மரணத்தறுவாயை அடைந்த மனிதன் அல்லாஹ் விதித்த முடிவையும் மறுமையை நோக்கி பயணிப்பதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இவ்வாறு அமைந்தால் அவனது முடிவு மோசமானதாக அமைந்துவிடும் அல்லாஹ் கோபித்த நிலையில் அவனை சந்திக்க வேண்டி ஏற்படும். ஷைத்தானை எதிர்கொள்ளும் நிலைகளில் மரணத்தறுவாயை விட கடினமானதொரு நிலை மனிதனுக்கு இருக்காது.
ஒரு செய்தியில் பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது: 'மனிதனது மரணத்தறுவாயில் வைத்து ஷைத்தான் தனது தோழர்களிடம் கூறுவான்: இவனை இப்போதே பிடித்துக் கொள்ளுங்கள். இன்று தவறி விட்டால் அதன் பிறகு அவனை பிடிக்கவே முடியாது". மஆலிம் ஸ{னன் (1ஃ296) தத்கிரா : பக் 185
இமாம் அஹ்மதுடைய மகன் ஸாலிஹ் கூறுகிறார்: எனது தந்தைக்கு மரணத்தறுவாய் வந்தபோது எனது கையில் ஒரு புடவைத் துண்டுடன் அவரது தாடியை கட்டுவதற்காக அவரிடம் அமர்ந்தேன். அப்போது அவருக்கு வியர்க்க ஆரம்பித்தது, பின்னர் நிலமை க~;டமாக இருந்தது. அவர் தனது கண்களைத் திறந்து தனது கைகளால் :'இல்லை… நான் செய்ய மாட்டேன்" என்று மூன்று முறை கூறினார். நான் கூறினேன்: தந்தையே!இந்த நேரத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? தந்தை கூறினார்: மகனே! உனக்கு தெரியாதா? நான் இல்லை என்றேன். தந்தை கூறினார்: இப்லீஸ் - அல்லாஹ் அவனை சபிப்பானாக! – எனது பாதணிஇருக்கும் இடத்தில் நின்று கொண்டு தனது விரல் நகத்தை பற்களால் கடித்துக் கொண்டு : அஹ்மதே என்னைப் பின்பற்று என்று கூறிக்கொண்டிருந்தான். அதற்கு நான்: மரணிக்கும் வரைக்கும் நான் செய்ய மாட்டேன் என்று கூறினேன். தகபாதுல் ஹனாபிலா: (1ஃ175)
இமாம் குர்துபி கூறுகிறார்: எனது ஆசான் இமாம் அபுல் அப்பாஸ் அஹ்மத் பின் உமர் அல் குர்துபி இஸ்கந்தரிய்யா போர் களத்திலிருந்து பின்வருமாறு கூறக் கேட்டேன்: எனது ஆசான் அபூ ஜஃபர் அஹ்மத் பின் முஹம்மத் இப்னு முஹம்மத் அல் குர்துபி அவர்களது சகோதரர் குர்துபாவில் மரணத் தறுவாயில் இருக்கும்போது லா இலாஹ இல்லல்லாஹ் கூறுமாறு அவரிடம் கூறப்பட்டது. அப்போது அவர் : இல்லை… இல்லை… என்று கூறினார். அவர் சுயநினைவுக்கு வந்தவுடன் அதை அவரிடம் கூறினோம். அவர் கூறினார்: வலதும் இடதுமாக இரண்டு ஷைத்தான்கள் வந்து யூதனாக மரணத்தைத் தழுவு அதுதான் சிறந்த மதம் என்று அவர்களில் ஒருவரும், கிறித்தவராக மரணத்தைத் தழுவு அதுதான் சிறந்த மதம் என்று அடுத்தவரும் கூறினார்கள். நான் அதை மறுத்து இல்லை… இல்லை என்று கூறினேன்.
நல்லடியார்கள் பற்றி இது போன்ற நிறைய செய்திகள் உள்ளன. அவர்கள் ஷைத்தானுக்கு மறுப்புக் கூறினார்கள், கலிமா சொல்லிக் கொடுத்தவருக்கல்ல. தத்கிரா: பக்187
அல்லாஹ் மிக அறிந்தவன்.