0 / 0
12/சபர்/1446 , 16/ஆகஸ்ட்/2024

திருமணத்தின் கடமைகள், நிபந்தனைகள், பெண் பொறுப்புதாரரின் நிபந்தனைகள் பற்றிய முக்கிய சுருக்கம்

கேள்வி: 2127

திருமண ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சங்கள் என்ன? அதன் நிபந்தனைகள் என்ன? 

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

 இஸ்லாத்தில் திருமணத்தின் அடிப்படை அம்சங்கள் மூன்றாகும்.

1. ஆண் பெண் என இருவர் இருத்தல். திருமணம் நிறைவேறுவதற்கு தடையாக உள்ள காரணிகள் எதுவும் அவர்களிடம் இருக்கக் கூடாது. உதாரணமாக, இரத்தஉறவு, பால்குடியுறவு மூலம் ஏற்படும் “மஹ்ரமிய்யத்” போன்றவை அல்லது ஆண் காபிராகவும் பெண் முஸ்லிமாகவும் இருத்தல்.

2. ஈஜாப் செய்தல். அதாவது “இன்ன பெண்ணை நான் உங்களுக்குத் திருமணம் செய்து தந்துவிட்டேன்” என பெண்ணின் பொறுப்புதாரியோ அல்லது அவருக்குப் பதிலாக இருப்பவரோ கூறல்.

3. கபூல் செய்தல். அதாவது கணவனோ அல்லது அவருக்கு பதிலாக நிற்கும் ஒருவரோ “நான் அதனை ஏற்றுக் கொள்கின்றேன்” போன்றதொரு வார்த்தையைக் கூறுதல்.

திருமணம் நிறைவேறுவதற்கான நிபந்தனைகள் பின்வருவனவாகும்:-

1. சைக்கினை மூலமோ பெயரைக் குறிப்பிடுவதன் மூலமோ அல்லது வர்ணிப்பின் மூலமோ கணவன், மனைவி ஆகிய இருவரும் குறிக்கப்பட்டல்.

2. கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் பொருந்திக் கொள்ளல். நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “விதவைப் பெண் அவளது நேரடி அனுமதியைக் கொண்டே தவிர திருமணம் செய்துவைக்கப்படலாகாது. குமரிப் பெண்ணுக்கு அவள் அனுமதியின்றி திருமணம் செய்துவைக்கப்படலாகாது. அப்போது, “அவளது அனுமதியை எவ்வாறு அறிந்துகொள்வது?” எனக் கேட்கப்பட்ட போது, “அவளது மௌனத்தைக் கொண்டுதான்” என்று பதிலளித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். (புகாரி : 4741)

3. பெண்ணுக்காக ஒப்பந்தத்தை அவளின் பொறுப்புதாரி செய்தல். ஏனெனில், அல்லாஹ் அல்குர்ஆனில் திருமண விடயத்தில் பெண்ணின் பொறுப்புதாரிகளையே விழித்துப் பேசியுள்ளான்.  “உங்களில் விதவையான பெண்களைத் திருமணம் முடித்து வையுங்கள்.” நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள,; “தனது பொறுப்புதாரியின் அனுமதியின்றி எந்தப் பெண் திருமணம் செய்து கொள்கின்றாளோ அவளது திருமணம் செல்லுபடியற்றது! செல்லுபடியற்றது! செல்லுபடியற்றது! (திர்மிதி : 1021 இது ஆதாரப் பூர்வமான ஹதீஸாகும்.)

4. திருமண ஒப்பந்தத்திற்கு சாட்சியம் வைத்தல். நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “வலி (பொறுப்புதாரி) மற்றும் இரு நீதமான சாட்சியாளர்கள் இன்றி எந்த ஒரு திருமணமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.” தபரானீ, ஸஹீஹுல் ஜாமிஃ : 7558)

திருமணத்தைப் பகிரங்கப்படுத்துவது முக்கியமாகும். நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “திருமணத்தை பகிரங்கப்படுத்துங்கள்” (அஹ்மத், ஸஹீஹுல் ஜாமிஃ : 1072) 

பொறுப்புதாரியின் விடயத்தில் பின்வரும் நிபந்தனைகள் பேணப்பட வேண்டும்:

1. புத்தி சுயாதீனம்

2. பருவ வயதை அடைந்திருத்தல்

3. சுதந்திரமானவராக இருத்தல்

4. மார்க்கம் ஒன்றுபடல். ஒரு முஸ்லிமான ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ ஒரு காபிர் பொறுப்புதாரியாக முடியாது. அவ்வாறே ஒரு காபிரான ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு முஸ்லிம் பொறுப்புதாரியாக முடியாது. ஒரு காபிரான பெண்ணுக்கு ஒரு காபிரான ஆண் - அவர்களுக்கிடையில் மதம் வேறுபட்டாலும் - பொறுப்புதாரியாகலாம். முர்த்தத் (இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்) யாருக்கும் பொறுப்புதாரியாக முடியாது.

5. நம்பகத்தன்மை. அதாவது, தீயவன் அல்லாமல் இருத்தல். சில அறிஞர்களிடம் இது நிபந்தனையாகும். இன்னும் சிலர் வெளிப்படையில் நம்பகமானவனாக விளங்கினால் போதும் என்கின்றனர். இன்னும் சிலர் அம்மனிதர் யாரைத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பில் உள்ளாரோ, அப்பெண்ணின் நலவுகள் பற்றி அக்கறை உள்ளவராக இருந்தால் போதும் என்றனர்.

6. ஆணாக இருத்தல். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். “ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் முடித்துவைக்கமாட்டாள். ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளவும் முடியாது. விபச்சாரியே அவ்வாறு தானாகத் திருமணம் செய்து கொள்வாள்.  (இப்னுமாஜா)

7. ரு~;த் எனும் புரிதல் இருத்தல். அதாவது திருமணத்தின் நலன்கள் மற்றும் பொருத்தமானவர்கள் யார் என்பது பற்றி அறிந்திருத்தல்.

சட்ட அறிஞர்களிடம் பொறுப்புதாரிகளுக்கு ஒரு வரிசைமுறை உள்ளது. நெருங்கிய ஒரு பொறுப்புதாரியைத் தாண்டி வேறொருவருக்குச் செல்வதாக இருந்தால், அவர் இல்லாவிட்டால் அல்லது அவரின் நிபந்தனைகள் பூரணமாக இல்லாவிட்டால் மாத்திரமே முடியும். ஒரு பெண்ணின் பொறுப்புதாரி முதலில் அவளது தந்தையாகும். பின்பு தந்தையால் வஸிய்யத் செய்து நியமிக்கப்பட்டவர். பின்பு தந்தை வழி பாட்டினார்கள், பின்பு பெண்ணின் மகன், அவ்வாறே ஆண்பிள்ளைகள் வழியான பேரன்கள், பின்பு அவளது கூடப்பிறந்த சகோதரன், பின்பு தந்தை வழிச்சகோதரன், பின்பு அவர்களின் ஆண்மக்கள், பின்பு தந்தையின் கூடப்பிறந்த சகோதரன், பின்பு அவரது தந்தைவழிச் சகோதரன், பின்பு அவர்களது ஆண்மக்கள் என அனந்தரச் சொத்துப் பங்கீட்டில் வருவது போல அடுத்தடுத்து நெருக்கமானவர்கள் வருவார்கள். எந்தவொரு பொறுப்புதாரிகளுமே இல்லாத பட்சத்தில், முஸ்லிமான மன்னர், அல்லது அவருக்குப் பதிலாக வரும் நீதிபதி போன்றவர்கள் பொறுப்புதாரிகளாக வருவாhகள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
திருமணத்தின் கடமைகள், நிபந்தனைகள், பெண் பொறுப்புதாரரின் நிபந்தனைகள் பற்றிய முக்கிய சுருக்கம் - Islam Question & Answer