0 / 0
13/ரபி/1446 , 16/செப்டம்பர்/2024

மண்ணறை வேதனை அல்லாஹ்வை ஒருமைப்படுத்தியோரில் பாவம் புரிந்தோருக்கும் சிலவேளை கிடைக்கலாம். ஆனால் மண்ணறையின் நெருக்குதல் அனைவருக்கும் பொதுவானதே.

கேள்வி: 175666

மண்ணறை வேதனை மற்றும் அதன் நெருக்கும் தன்மை பற்றியும் அது இறைவிசுவாசிகளுக்கும் ஏற்படும் எனவும் நான் சில பதில்களைப்  படித்துள்ளேன். ஆனால் இதற்கு நேர்மாறான பல நபிமொழிகள் உள்ளன. உதாரணமாகச் சொல்வதாயின், ஒரு மனிதன் மண்ணறைக்குச் சென்றதன் பின்னர் முன்கர், நகீர் ஆகிய இரு வானவர்களும் அவனிடம் வந்து ஈமானைப் பற்றி  கேட்பர். அவன் இறைவிசுவாசியாக இருந்தால் (அதற்கு சரியான பதில் கூறவே) அவனது மண்ணறை 70 முழங்கள் அளவுக்கு விசாலமாகும். (ஒவ்வொரு முழமும் ஆறு அங்குலம் கொண்டதாகும்.) அங்கே வெளிச்சம் பரவும். பின்னர் அவனை அல்லாஹ் மறுமை நாளில் எழுப்பி அவனது நல்லமல்களுக்கு கூலி வழங்கும் வரை புது மணவாளனைப் போன்று அவன் தூங்குவான் என அறிவுப்புச் செய்யப்படும். ஆனால் அந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனது விலா எலும்புகள் வேறு பிரியும் வரைக்கும் அவனை அழுத்துமாறு அவனது மண்ணறைக்கு ஏவப்படும் என முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

முதலாவதாக : அல்லாஹ்வின் அருளால் மண்ணறையின் வேதனை மற்றும் அதன் இன்பங்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள நபிமொழிகளுக்கிடையில்  எவ்வித முரண்பாடும் இல்லை. அவை அனைத்தும் உண்மையானதே. திர்மிதீ (ரஹ்) அவர்கள் தனது கிரந்தத்தில் 1071 ஆம் இலக்கத்தின் கீழ் பதிவு செய்து அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் 'மி~;காதுல் மஸாபீஹ்” எனும் கிரந்தத்தில் ஹஸன் என்று குறிப்பிட்ட நபிமொழியானது அதாவது : ஒரு இறைவிசுவாசியின் மண்ணறை 70 முழங்கள் அளவு விரிவிபடுத்தப்படும்; அவனுக்கு அதில் பிரகாசம் வழங்கப்படும்; பின்னர் “அவனது குடும்பத்தில் அவனுக்கு மிகவும் பிடித்தவர் மாத்திரமே எழுப்பக் கூடிய ஒரு மணவாளன் தூங்குவதை போல தூங்கு." என்று கூறப்படும் என்று கூறும் நபிமொழியானது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதில் விரைவாகவும், அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் தாமதாகவும் செயற்படும்  ஒரு பரிபூரண விசுவாசியின் விடயத்திலும், உயிர்த்தியாகிகள் போன்ற அல்லாஹ்வினால் மண்ணறையின் குழப்பங்கள், வேதனைகளை விட்டும் விடுதலை வழங்கப்பட்டவர்கள் விடயத்திலேயே இடம்பெற்றுள்ளது.

ஆனால் முஸ்லிம்களில் சிலர் மண்ணறையில் வேதனை செய்யப்படுவர் எனக் கூறும் நபிமொழிகளைப் பொறுத்தவரையில் அவை நல்ல செயல்களுடன் சேர்த்து கெட்ட செயல்களையும்  புரிந்து வாழ்ந்த பாவிகள் விடயத்திலேயே இடம்பெற்றுள்ளன.  அவர்களை அல்லாஹ்  அவர்களது மண்ணறைகளிலும், மறுமை நாளில் நரகத்திலும் சிலவேளை வேதனை செய்வான்.  அவர்கள் நெறிப்படுத்தப்பட்டு, பாவங்களிலிருந்து தூய்மையானதன் பின்னர் சுவனத்தில் நுழைய அனுமதிக்கப்படுவர். இதற்குச் சான்றாக கடமையான தொழுகையை நிறைவேற்றாமல் தூங்குபவன், ஸகாத் வழங்காதவன், வட்டி சாப்பிடுபவன், நாலா திசைகளுக்கும் பரவக்கூடிய பொய் கூறுபவன் போன்ற பாவங்களைப் புரிந்த அல்லாஹ்வை ஓர்மைப்படுத்தியோர்  தண்டிக்கப்படுவது சம்பந்தமாக ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழியைக் குறிப்பிடலாம். (ஆதாரம் : புகாரி - 7047)

மேற்கண்ட நபிமொழியை விளக்குகையில் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுகின்றார்கள் : “ இந்த நபிமொழியின் மூலம் மண்ணறை வாழ்வில் பாவிகள் தண்டிக்கப்படுவர் என்பதைப் புரிய முடிகின்றது." (நூல் : பத்{ஹல் பாரி - 12ஃ445)

மேலும்  சிறுநீர் கழிக்கும் போது மறைவு எடுத்துக் கொள்ளாதவன் மற்றும் மக்களுக்கு மத்தியில் கோள் சொல்லித் திரிபவனுக்கும் மண்ணறை வேதனை இருப்பதாக நபிமொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (ஸஹீ{ஹல் புகாரி : 216, ஸஹீஹ் முஸ்லிம் : 292)

இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறை வேதனை இருவகைப்படுகின்றது.

ஒன்று : நிலையான, தொடர்ச்சியான வேதனை. அவர்களுக்குக்கான தண்டனை நிலையானதாகும். ஆனாலும் சில நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளதற்கமைய இரண்டு ஸ_ர்களுக்கு மத்தியில் மாத்திரம் அது அவர்களுக்கு சற்றுத் தளர்த்தப்படும். இத்தகையவர்கள் தங்களது மண்ணறையிலிருந்து எழுந்தால் “ எங்களுடைய நாசமே! எங்களை, எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எழுப்பியவர் யார்? ” என்று கேட்பார்கள். இவர்களுக்கான தண்டனை நிலையானது என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம்  பறைசாற்றுகின்றது. “ அந் (நரக) நெருப்பு அதன் மீது காலையிலும், மாலையிலும் அவர்கள் எடுத்துக் காட்டப்படுகிறார்கள்." (அத்தியாயம் : அல் முஃமின் - வசனம் : 46)

இரண்டாவது வகையானது குறிப்பிட்ட காலம் தண்டிக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்படுவதாகும். இது சிறிய பாவங்கள் செய்து அல்லாஹ்வுக்கு மாறுசெய்தோரின் தண்டனையாகும். அத்தகையோர் அவர்கள் செய்த குற்றத்திற்கு ஏற்ப தண்டிக்கப்பட்டு பின்னர் அவர்களது தண்டனை தளர்த்தப்படும். நரகத்தில் நுழைவிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவோரும் இத்தகையோரே. ஆனால் சிலவேளை பிராத்தனை, தானதர்மம், பாவமன்னிப்புக் கோரல், ஹஜ் போன்ற நற்காரியங்களினூடாகவும் இவர்களுக்குரிய தண்டனை துண்டிக்கப்படும். (நூல் : அர்ரூஹ் - பக்கம் :  89)

மண்ணறையில் தண்டிக்கப்படும் முறைகள் சம்பந்தமாக கேள்வி இலக்கம் 8829 இற்கான பதிலில் பார்வையிடலாம்.

இரண்டாவதாக : மண்ணறையில் சில பாவிகள் தண்டிக்கப்படுவதும், இறைவிசுவாசிக்கு சோதனையாக அமையக்கூடிய மண்ணறையின் நெருக்குதல், மலக்குமார்களின் வருகை போன்றனவும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. ஏனெனில் இது தண்டனை கிடையாது. மண்ணறையின் நெருக்குதல், அதில் ஏற்படும் அகோரமான நிலை என்பன அனைவருக்கும் பொதுவானது. எந்தளவுக்கெனில் இறைவிசுவாசிகளில் நல்லடியார்களுக்கே இவை ஏற்படும்.

எனவே குறுகிய அர்தத்தத்தில் தண்டனை என்பது நாம் இங்கே முதலாவது பந்தியில் சுட்டிக் காட்டியதைப் போன்று அது குறிப்பிட்ட சில பாவங்களுக்கான தண்டனையாகும். அது அனைவருக்கும் பொதுவானதன்று.

ஸ{யூதி (ரஹ்) அவர்கள் நஸாஈ கிரந்தத்திற்கு அடிக்குறிப்பு எழுதுகையில் நஸபி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டதாகக் கூறுகின்றார்கள் : “ அல்லாஹ்வைக் கட்டுப்பட்டு வாழக் கூடிய இறைவிசுவாசிக்கு மண்ணறை வேதனை கிடையாது; மண்ணறையின் நெருக்குதல் உண்டு." (4ஃ103)

இதனை மேலும் விளக்கும் முகமாக முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது. நபிகளார் நவின்றதாக  ஆஇ~h (ரழி) அவர்கள் கூறினார்கள். “ மண்ணறை மனிதர்களை நெருக்கக் கூடியது. யாராவது அதிலிருந்து தப்புவார்கள் என்றிருந்தால் ஸஃத் இப்னு முஆத் தப்பியிருப்பார்." (மஸ்னத் அஹ்மத் :  1695)  இந்நபிமொழியை அல்பானி (ரஹ்) அவர்கள் ஆதாரபூர்வமானது என தனது ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா கிரந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இத்தகைய மண்ணறையின் நெருக்குதலையே எந்தவொரு ஜனாஸாவும் மண்ணறையில் முதன் முதலில் முகங்கொடுக்கும். அது மண்ணறை தண்டனையோ, வேதனையோ அல்ல. ஏனெனில் தனது மரணத்துக்காக அல்லாஹ்வின் அர~; நடுங்கியது என சிறப்புப் பெற்ற ஸஃத் இப்னு முஆதுக்கே அது ஏற்பட்டிருக்கிறது. (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி - 3803, ஸஹீஹ் முஸ்லிம் - 2466)

மூன்றாவது அம்சம் யாதெனில் இங்கே கேள்வி கேட்டவர் “ ஒவ்வொரு முழமும் ஆறு அங்குலமுடையது. " என்று கூறியதைப் பற்றியானது. அதாவது அந்த நபிமொழியிலே இடம்பெற்றுள்ள “ அவரது மண்ணறையிலே 70 முழமளவு விசாலப்படுத்தப்படும் " என்பதனை அளவிடுவது எவ்வித ஆதாரமுமற்ற கூற்றாகும்." ஏனெனில் மண்ணறை வாழ்வு என்பது ஒரு மறைவான அம்சம் என நாம் விசுவாசம் கொண்டுள்ளோம். அதனை உலக அளவீடுகளால் அளவிட மாட்டோம். எனவே நாம் நபிமொழியில் இடம்பெற்றுள்ள படி முஃமினது மண்ணறை 70 முழமளவு விசாலப்படுத்தப்படும் என ஈமான் கொள்வோம். அந்த முழம் எவ்வளவு நீளமானது என நாம் கதைக்க மாட்டோம். ஏனெனில் அது மறைவான விடயமாகும். இதற்குச் சான்றாக அல் பராஃ (ரழி) அவர்கள் இது தொடர்பில் அறிவித்த நபிமொழியைக் குறிப்பிடலாம். அதிலே “ அவனது மண்ணறை அவனது கண்பார்வை எட்டுமளவு விசாலப்படுத்தப்படும்." என இடம்பெற்றுள்ளது. (ஆதாரம் : முஸ்னத் அஹ்மத் - 18063, இந்நபிமொழி ஆதாரபூர்வமானது என அல்பானி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ : 1676)

அல்லாஹ் மிக அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
மண்ணறை வேதனை அல்லாஹ்வை ஒருமைப்படுத்தியோரில் பாவம் புரிந்தோருக்கும் சிலவேளை கிடைக்கலாம். ஆனால் மண்ணறையின் நெருக்குதல் அனைவருக்கும் பொதுவானதே. - Islam Question & Answer