0 / 0
07/சபர்/1446 , 11/ஆகஸ்ட்/2024

கடனை எழுதுவதும் அதற்கு சாட்சிகளை வைத்துக்கொள்வதும்

கேள்வி: 13180

கடன் கொடுக்கல் வாங்கல் செய்ய சரியான வழிமுறை என்ன ? ஒருவருக்கு நான் கடன் கொடுக்கும்போது சாட்சி இல்லை என்றால் நான் பாவியாக இருப்பேனா?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

கடன் கொடுக்கல் வாங்கல் செய்ய சிறந்த வழிமுறை சூரா பகரா 282, 283 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கடன் பற்றி கூறிய வழிமுறையாகும்.

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.

இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்

 கடன் கொடுப்பதற்கு சரியான வழிமுறை

 1.  கடன் தவனை நிர்ணயித்தல்.

(கடன் திரும்பப்பெறும) தவனை)

 2.  கடன் பெறுமதியையும் தவனையையும் எழுதிக் கொள்ளும்.

 3. கடனாளி இல்லாதவர் எழுதுவதாக இருந்தால், கடனாளி வாய்மொழி மூலம் கூற, அதனை எழுத வேண்டும்.

 4.  நோய் அல்லது வேறு காரணிகளால் கடனாளி வாய்மொழி மூலம் கூற முடியாமல் இருந்தால், பொறுப்பாளர் வாய்மொழி கூறுவார்.

 5.  இரண்டு ஆண்கள் அல்லது ஒரு ஆணும் இரண்டு பெண்களையும் சாட்சியாக வைத்தல்.

 6.  கடனுக்காக பெருமதியான ஒரு பொருளை அடகிற்காக கடன் கொடுப்பவருக்கு கேட்க முடியும்.  கடன் தவனை அடைந்தும் கடனாளி கடனை திருப்பிக் கொடுக்கவில்லையானால், அடகு பொருளை விற்று கடனை அடைத்துவிட்டு எஞ்சியதை கடனாளிக்கு கொடுத்து விட வேண்டும்.

எழுதி ஒப்பந்தமிடல், சாட்சி வைத்தல், அடகு வைத்தல், போன்ற இந்த மூன்று முறைகளில் கடனை உறுதிப்படுத்துவது முஸ்தஹப் ஆகுமே தவிர கடமை இல்லை.  சில அறிஞர்கள் கடனை எழுதி வைத்தல் கட்டாயம் (வாஜிப்) என்று கூறியிருந்தாலும், பெரும்பான்மை அறிஞர்கள் முஸ்தஹப் என்று கூறியுள்ளனர். (பார்க்க தப்ஸீர் குராத்துபி 3/ 383)

 இறையச்சம் இல்லாதவர்கள் ஏமாற்றாமல் இருக்கவும், மறதி ,  கடனை இழுபறி செய்து தள்ளிப் போடல், போன்ற அசௌகரியங்களிலிருந்து  கடனை கொடுத்தவர் தன் உரிமைகளை பாதுகாப்பதே கடனுறுதி வைப்பதன் நுட்பமாகும்.

கூறிய மூன்று முறைகளில் கடன் உறுதி செய்யப்படவில்லை  என்பதால் குற்றம் ஆகுவதில்லை பின்வரும் வசனம் அதற்கு ஆதாரமாக அமைகிறது

இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.

அதேபோன்று மேற்கூறிய முறைகளில் கடனுறுதி செய்யாது விடுத்து தான் காப்புறுதி அவசியமாகிறதுடன், இறையச்சமும் அல்லாஹ் மீதான பயமும் தேவையாகிறது.

 இதனால் தான் அல்லாஹ் அமானிதத்தை நிறைவேற்றுமாறும், கடனாளி மீதுள்ள பொறுப்பை நிறைவேற்றுமாறும் ஏவுகின்றான் .

(தப்ஸீர் அஸ்ஸஃதீ 168 - 172)

கடனுறுதி எழுதப்படாமல், கடனாளி கடனை மறுத்தாலோ, அல்லது திருப்பிக் கொடுக்காமல் இழுபெறி செய்தாலோ, கடன் கொடுத்தவர் தன்னையே கடிந்து கொள்ளட்டும்.  ஏனெனில் அவரே தனக்குரிய உரிமையை இழந்துவிட்டார். கடனுறுதி எழுதப்படாமல் கடனை தள்ளிப் போடும் போதும், அல்லது கடனை மறுத்துவிட்டாலோ கடன் கொடுத்தவர் கடனாளிக்கு சபிப்பது ஏற்றுக்கொள்ளப்படாது

 என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 மூன்று மனிதர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள் ஆனால் அவர்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர்களில்  கடன் கொடுத்து அதற்கு சாட்சி வைக்காதவரும் ஒருவர் என  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ  3075 )

இந்த சட்டங்களை கூர்ந்து அவதானிப்பவர் இஸ்லாத்தின் பூரணத்துவத்தையும், உரிமைகளை பாதுகாப்பதில் இஸ்லாம் காட்டும் அக்கறையையும் அறிந்து கொள்வார். அல்லாஹுத்தஆலா செல்வந்தர்களின் செல்வத்தை கொஞ்சமாக இருந்தாலும் பாதுகாக்கும் மாறும், அதை அழித்து விடாமல் இருக்குமாறும் ஏவுகின்றான்.

 .....

 இம்மை மறுமை இலாபங்களை ஒன்றிணைத்த மார்க்கம் இஸ்லாத்தை தவிர வேறு உண்டோ???? இதைவிட பரிபூரணமான  சட்டங்களை வேறு யாருக்கும் இயற்ற முடியுமா ???

மரணம் வரை அல்லாஹ் அவனது மார்க்கத்தில் உறுதியுடன் வாழ வைப்பானாக.

 அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
கடனை எழுதுவதும் அதற்கு சாட்சிகளை வைத்துக்கொள்வதும் - Islam Question & Answer