அஷ்ஷேக் ஹாபில் அல் ஹகமீ ரஹிமஹுமுள்ளாஹ் அல்லாஹ் அவர்கள் தனது சுல்லமுல் வசூல் என்ற அகீதா (அடிப்படையில்) அமைந்த கவிதொகுப்பு நூலில் கூறுகிறார் :
அறிதல், நம்புதல், ஏற்றுக் கொள்ளல், அடிபணிதல், என்பவற்றை அறிந்து கொள்
உண்மைப்படுத்தல், ஊளத்தூய்மையாய் நடத்தல், விரும்புதல் ஆகியவற்றில் அல்லாஹ் உனக்கு அருள்பாளிக்கட்டும்.
1. அறிதல் : அல்லாஹ் மாத்திரம் தான் வணங்கத் தகுதியானவன் என்று உறுதியாக அறிவதுடன் அவன் அல்லாத ஏனைய கடவுள்கள் தகுதியற்றவை என நிராகரித்து அறிய வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் "வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரம் தான் என அறிந்து கொள்வீராக".
“அல்லாஹ்வை அவர்களது நாவால் மாத்திரம் மொழிந்து ஏற்காமல் உள்ளத்தால் அறிந்து ஏற்றார்கள்”..
ஒரு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதாவது.
" எவர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்று அறிந்து ஏற்றவராக மரணிப்பாரோ அவர் சுவனத்தை அடைந்து விட்டார்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸை உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2. நம்புதல் : நம்புதல் என்பது இந்த கலிமா பொதிந்துள்ள விடயங்களை உறுதியாக நம்புதலாகும். ஈமான் என்பதும் , யூகத்தில் நம்பாமல் உறுதியான அறிவுடன் நம்புதலாகும். அல்லாஹுத்தஆலா கூறுகிறான் "அல்லாஹ்வையும் அவனது தூதரையும் சந்தேகம் ஏதுமின்றி உறுதியாக நம்பி, பின்பு தன் சொத்துக்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்கிறார்களே, இவர்களே உண்மையான விசுவாசிகளாவர்."
இந்த வசனத்தில் “சந்தேகம் ஏதுமின்றி” என்ற சொல் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவதில் நிபந்தனையாக கணிக்கப்பட்டுள்ளது..
இந்த கலிமாவில் சந்தேகிக்கின்றவன் நயவஞ்சகர்களின் உள்ளவன் ஆவான்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் " எவன் ஒருவன் அல்லாஹ்வையும் அவன தூதரையும் எந்தவித சந்தேகமும் இன்றி, உறுதியாக நம்பி, நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கின்றானோ அவன் சுவனம் நுழைந்து விட்டான் . என்ற ஹதீஸை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்..
மற்றொரு அறிவிப்பில் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உறுதியாக நம்பி, எவ்வித சந்தேகமும் இன்றி, நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கவில்லையோ அவன் சுவனம் நுழைவது தடுக்கப்படும் என பதியப்பட்டுள்ளது இன்னொரு நீண்ட ஹதீஸில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரண்டு பாதனிகளையும் அனுப்பி இந்த தோட்டத்திற்கு வெளியே யார் இந்த கலிமாவை உளமாற ஏற்றவர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கு சுவனத்தை கொண்ட நன்மாரியும் கூறுங்கள் என்று கூறிய ஹதீஸை அபூஹூரை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் இந்த கலிமாவை மொழிந்தவர் சுவனம் நுழைய உளமாற ஏற்று இந்த கலிமாவில் சந்தேகமற்றவராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக்கப்பட்டுள்ளது. எனவே நிபந்தனையை இழந்தால் நிபந்தனை இடப்பட்ட விடயமும் இழக்கப்படும்..
3 : ஏற்றுக் கொள்ளுதல்.
இந்த கலிமாவை உள்ளத்தால் ஏற்று நாவால் மொழிவதுடன்,
முன் சென்ற சமுதாயத்தினர் இதை ஏற்றுக் கொண்டதன் விளைவாக அவர்கள் பாதுகாக்கப்பட்டதையும், இன்னும் சிலர் அதனை மறுத்ததினால் அவர்கள் தண்டிக்கப்பட்டதையும் எமக்கு அல்லாஹ் குர்ஆனிலே செய்திகளாக குறிப்பிடுகின்றான்
ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ
. அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் நீங்கள் ஒன்று சேர்த்து,
مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ
‘‘அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்''
وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ
‘‘அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கிறது'' (என்றும் கூறப்படும்).
சூரா ஸாப்பாத் ( 22 - 24)
என்று கூறி மேலும் அவர்கள்,
إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ
‘‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் அறவே இல்லை (ஆகவே, அவனையே வணங்குங்கள்)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொள்கின்றனர்,
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ
‘‘என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சூரா ஸாப்பாத் ( 35,36)
இவ்வாறு அவர்கள் தண்டிக்கப்பட்டதற்கான காரணத்தை அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அவர்கள் இந்த கலிமாவை ஏற்காமல் கர்வம் கொண்டதும் அதை ஏத்தி வைத்தவரை பொய்ப்பித்ததுமாகும்.
மேலும் அந்த கலிமா நிராகரிக்கக் கோரியவைகளை அவர்கள் நிராகரிக்கவுமில்லை, ஏற்குமாறு ஏவியதை ஏற்றகவுமில்லை, மாறாக அவர்கள் கர்வத்துடன் மறுத்துக்கூறிய
வார்த்தைகள் இவைகளாகும்.
أَجَعَلَ ٱلۡأٓلِهَةَ إِلَٰهٗا وَٰحِدًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عُجَابٞ
‘‘என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே ஓர் இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்'' (என்று கூறி,)
وَٱنطَلَقَ ٱلۡمَلَأُ مِنۡهُمۡ أَنِ ٱمۡشُواْ وَٱصۡبِرُواْ عَلَىٰٓ ءَالِهَتِكُمۡۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٞ يُرَادُ
அவர்களிலுள்ள தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி, ‘‘இவரை விட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்)இவ்விஷயத்தில் ஏதோ (ஒரு சுயநலம்தான்) கருதப்படுகிறது'' என்று கூறிக் கொண்டே சென்று விட்டனர்.
مَا سَمِعۡنَا بِهَٰذَا فِي ٱلۡمِلَّةِ ٱلۡأٓخِرَةِ إِنۡ هَٰذَآ إِلَّا ٱخۡتِلَٰقٌ
‘‘முன்னுள்ள வகுப்பார்களிலும், இதை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே தவிர வேறில்லை'' என்றும்,
மறுத்துக்கூறினார்கள்.
அல்லாஹ் இவர்களுக்கு, அவனின் தூதரின் மூலமே பதிலடி கொடுத்து அவர்களை பொய்ப்பித்தான்.
بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ
‘‘(அவர் பைத்தியக்காரர் அல்ல.) மாறாக, அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்.)
அத்தோடு
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
கலப்பற்ற, மனத்தூய்மையுடைய அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.
أُوْلَٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ
அவர்களுக்கு (அல்லாஹ்வின் புறத்திலிருந்து உயர்ரக) பழக்கமான உணவு தயார் செய்யப்பட்டிருக்கும்.
فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ
(இன்னும், சுவையான) கனிவர்க்கங்கள் அவர்களுக்கு உண்டு. அவர்கள் (இவ்வாறு) கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்.
என்று இந்த கலிமாவை ஏற்றவர்களை பற்றி கூறி அவர்கள் நாளை மறுமையிலே அடையும் வெகுமதிகளையும் கூறியிருக்கிறான்.
அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்தில் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள், நீரை ஏற்று, ஏராளமான புற்களையும், செடி, கொடிகளையும் முளைக்க செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்கு பயன்படுத்த செய்தான். அதனை மக்கள் அருந்தினர். தம் கால்நடைகளுக்கும் புகட்டினர். விவசாயமும் செய்தனர். அந்த பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் இருந்தது. அது ஒன்றுக்கும் உதவாத வெரும் கட்டாந்தரை அது தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவும் இல்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து, பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்ந்தவனுக்கும் உவமையாகும் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூமூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்.
4. அடிபணிதல்
எவர் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி, பணிந்து நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு வளயத்தைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
உர்வதுல் வுஸ்கா ( பலமான வளையம்) என்பது கலிமா லா இலாஹ இல்லல்லாஹ் ஆகும்.
முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்புதல் என்பது அடிபணிதல் ஆகும் .
முஹ்ஸின் என்பது அல்லாஹ்வை ஓர்மை படுத்தல் ஆகும்.
எவர் அல்லாஹ்வுக்கு அடிபணியாமலும், அவனை ஓர்மைபடுத்தாமலும் இருப்பானோ , அவன் இந்த கலிமாவை பற்றிப்பிடிக்கவில்லை.
(நபியே!) எவரேனும் (உம்மை) நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உம்மைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் நம்மிடமே வரவேண்டும். அச்சமயம் அவர்களுடைய (இச்)செயலைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.
(நபியே!) எவரேனும் (உம்மை) நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உம்மைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் நம்மிடமே வரவேண்டும். அச்சமயம் அவர்களுடைய (இச்)செயலைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்
*நான் கொண்டு வந்த தூதிற்கு உள்ளம் முழுமையாக அடிபணியாதவரை உங்களில் எவரும் பூரண விசுவாசியாக மாட்டீர்கள்* என ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதுவே பூரண அடிபணிதல் ஆகும்.
5. உண்மைப்படுத்தல் இது பொய்யிற்கு முரணானதாக இருக்கும்.
இதை உள்ளத்தாலும் நாவாலும் ஒன்றித்து உண்மையாக மொழிய வேண்டும். நாவால் மொழிவதை உள்ளம் உண்மைப்படுத்த வேண்டும்.
அல்லாஹ் அல் குர்ஆனில் கூறுகிறான்..
மனிதர்கள் ‘‘ நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்.
சூரா அன்கபூத் ( 2,3)
இதற்கு முரணாக முனாஃபிக்குகள் நயவஞ்சகர்கள் இந்த கலிமாவை பொய்யாக முடிந்த விதத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் பொழுது......
(நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதர்களில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.
அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையே தவிர (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்
ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு (அந்)நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். (இவ்விதம்) அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு
சூரா பகரா( 8,9,10)
*எவரொருவர் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் மாத்திரம் என்றும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது தூதர் என்றும், உள்ளத்தால் உண்மைப்படுத்துவாரோ அல்லாஹ் அவருக்கு நரகத்தை ஹராம் ஆக்கி விடுகிறான்..
6. உளத்துமையாய் நடத்தல்.
இஃலாஸ்)
செயல்கள் அனைத்தையும்
ஷிர்க்கின் ( இணைவைப்பின்) எல்லாம் அழுக்குகளிலிருந்தும் நீக்கி அல்லாஹ்வுக்கு மாத்திரம் தூய்மையாக செய்வதாகும்.......
அல் குர்ஆன் கூறும் பொழுது
"பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்"
சூரா ஸுமர் (3)
(மேலும்,) கூறுவீராக: ‘‘அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன், அவனுக்கே என் வணக்கம் அனைத்தும் உரித்தானது''
சூரா ஸுமர் (14)
ஒரு ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாவது.
மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரை மூலம் நட்பேரி பெறுகிறவர் யாரெனில் உளப்பூர்வமாக தூய்மையான எண்ணத்துடன் லா இலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேற யாரும் இல்லை என்று சொன்னவரே ஆவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸை அபூஹூரை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
7. விரும்புதல்.
இந்த கலிமா பொதிந்துள்ளவைகளையும், அதை ஏற்று நடப்பவர்களை விரும்புவதும்,
இந்த கலிமாவை முறிப்பவைகளை வெறுப்பதும் ஆகும்.
மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும், இறை நம்பிக்கையாளர்கள் (இவர்களைவிட) அதிகமாக அல்லாஹ்வை நேசிப்பார்கள்.
சூரா பகரா (165)
இணைவைப்பாளர்கள் தங்களது கடவுள்களை நேசித்ததை போன்றல்லாது, விசுவாசிகள் அல்லாஹ்வை விரும்புவதில் சற்றும் கலப்படம் அற்றவர்களாக அல்லாஹ்வை விரும்பியிருந்தால் தான் , அல்லாஹ் இவ்வசனத்தில் அதிகம் நேசிப்பவர்கள் விசுவாசிகள் தான் என்று குறிப்பிட்டுள்ளான்.
உங்கள் பெற்றோர், பிள்ளைகளை விட உங்களுக்கு நான் மிக விருப்பமா மிக்கவனாக ஆகும் வரை உங்களில் எவரும் பூரண ஈமானை முடியாது என நபி(ஸல்) கூறிய ஹதீஸை அனல்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.