இஸ்திகாரா தொழுகையானது ஒருவர் ஒரு விடயத்தை செய்ய நாடி அவருக்கு அதிலே தயக்கம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தொழுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சுன்னத் ஆகும்.
இஸ்திகாரா தொழுகையை நாம் எட்டு விடயங்களை கொண்டு நோக்கலாம். அதாவது :
விளக்கம் : 1 - இஸ்திகாரா தொழுகைக்குரிய விளக்கம்.
2- இஸ்திகாரா தொழுகையின் சட்டம் 3- இஸ்திகாரா தொழுகை பரிந்துரைக்கப்பட்டதற்கான நுட்பம்
4-இஸ்திகாரா தொழுகைக்கான காரணம்.
5-எப்போது இஸ்திகாரா தொழ ஆரம்பிக்க வேண்டும்.
6-இஸ்திகாரா தொழ முன்னர் கலந்தாலோசித்தல்.
7- இஸ்திகாரா தொழுகையில் என்ன ஓத வேண்டும்.
8- இஸ்திகாரா தொழுகையில் எப்போது துஆ செய்ய வேண்டும்.
1- இஸ்திகாரா தொழுகையின் விளக்கம்.
அரபு மொழியில் இஸ்திகாரா என்பது ஒரு விடயத்தில் நலவை வேண்டுதல் ஆகும் அதாவது அல்லாஹ் ஒரு நலவை நாடுதலாகும். மேலும் ஷரியத்தின் அடிப்படையில் இஸ்திகாரா எனப்படுவது வழிகாட்டலை வேண்டுதல் அதாவது தொழுகை மற்றும் இஸ்திகாராவிற்கான பிரார்த்தனைகளைக் கொண்டு அல்லாஹ்வின் வழிகாட்டலை தேர்வு செய்தல் அல்லது அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் வேண்டுதல் என்று பொருள்படும்.
2. இஸ்திகாரா தொழுகையின் சட்டம்.
இஸ்திகாரா தொழுகை சுன்னத் என்பதில் எல்லா அறிஞர்களும் ஏகோபித்த கருத்துக் கொண்டுள்ளனர். இது சரியா தாக்கப்பட்டதற்கான ஆதாரமாக ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக புகாரி பதிவாகிய ஹதீஸ்'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுக்கு குர்ஆனிலிருந்து சூராக்களை கற்றுக் கொடுப்பது போன்று எல்லா விடயங்களிளும் இஸ்திகாரா தொழுகையை கற்றுக் கொடுத்தார்கள் மேலும் அவர் உங்களில் எவரேனும் ஒருவர் ஒரு முடிவை எடுக்க நாடினால் அவர் கடமை அல்லாத இரண்டு ரக்காத்துரை தொழுது கொள்ளட்டும் பின்னர் அவர் அல்லாஹ்வே உனது அறிவை கொண்டு நான் வழிகாட்டுதலில் தேடுகின்றேன் உனது சக்தியின் மூலம் நான் திறனை தேடுகிறேன் உன்னுடைய மகத்துவமான அருளிலிருந்து நான் உன்னிடம் கேட்கிறேன் உன்னிடம் சக்தி உள்ளது என்னால் சக்தி அற்றவன் நீ அனைத்தையும் அறிந்தவன் நான் எதையும் அறியாதவன் நீயே மறைவான விடயங்களை அறிந்தவன் என் இறைவனே இவ்விடயம் (தேவையை குறிப்பிட்டு) எனக்கும் என் மார்க்கத்திற்கும் என் வாழ்வாதாரத்திற்கும் என் அனைத்து விடயங்களுக்கும் நலவானது என நீ அறிந்தால் எனக்கு அதனை நியமித்து விடுவாயாக மேலும் அதனை எனக்கு எளிதாக்கி அதிலே அருள் புரிவாயாக மேலும் இவ்விடயம் எனக்கும் என் மார்க்கத்திற்கும் என் வாழ்வாதாரத்திற்கும் என் அனைத்து விடயங்களுக்கும் அல்லது செயற்பாடுகளுக்கும் தீங்கு என நீ அறிந்தால் என்னை விட்டு அதனையும் அதனை விட்டு எண்ணியும் நீக்கி விடுவாயாக மேலும் எனக்கு சிறந்தது நியமித்து அதில் அருள் செய்திடுவாயாக ' என்று கூறினார்கள் (புகாரி 116)
3- இஸ்திகாரா தொழுகை பரிந்துரைக்கப்பட்டதற்கான நோக்கம் அல்லது நுட்பம்.
இஸ்திகாரா தொழுகை விதிக்கப்பட்டதற்கான நோக்கமானது அது அல்லாஹ்விற்கும் அவனது கட்டளைக்கும் அடிபணிதல் மற்றும் ஒருவருக்கு சொந்தமாக எந்த சக்தியும் பலமும் இல்லை என்பதை நிரூபிப்பதுமாகும். மேலும் இம்மி மர்மின் நலவை இணைக்க அல்லாவின் பால் சரணடைதல் இதன் பொருளாகும். இதனை அடைந்து கொள்வதற்காக ஒருவர் அரசனின் அதாவது அல்லாஹ்வின் கதவை தட்ட வேண்டும் இதற்கு தொழுகை மற்றும் துவாவை தவிர வேறு எதுவும் பயனுள்ளதாக இருக்காது ஏனெனில் அவற்றில் அல்லாஹ்வுக்குரிய மகிமை அவனை புகழ்ந்தல் என்பன காணப்படுகின்றது.
4- இஸ்திகாரா தொழுகைக்கான காரணம்.
இஸ்திகாரா தொழுகைக்குரிய காரணம் (இஸ்திகாரா எதற்காக பயன்படுத்தப்படுகிறது)
ஒரு அடியான் சரியான முடிவை எடுக்கத் தெரியாத சந்தர்ப்பங்களில் இஸ்திகாரா பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதில் நான்கு மதுகபள்ளி உடையவர்களும் ஏகோபித்த கருத்துக் கொண்டுள்ளனர் வணக்க வழிபாடுகள் நல்ல செயல்கள் மற்றும் தீமையான பாவமான காரியங்கள் போன்ற நன்மை தீமையை அறியக்கூடிய விடயங்களுக்கு இஸ்திகாரா தொழ வேண்டிய அவசியம் இல்லை ஆனால் இந்த ஆண்டு ஹஜ் செய்யலாமா?
எதிரி அல்லது இன்னல்களை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் ஒரு குறிப்பிட்ட நபருடன் செல்வதா? இல்லையா? என்பன போன்ற ஏதாவது ஒன்றை செய்ய நேரத்தை அல்லது விடயத்தை ஒருவர் அறிய விரும்பினால் அவர் அதற்காக இஸ்திகாரா செய்யலாம்.
ஆனால் கடமையான ஹராமான அல்லது மக்ரூஹான விடயங்கள் எனும் போது அங்கு இஸ்திகாராவிற்கு இடம் இல்லை மாறாக அது ஆகுமாக்கப்பட்டவைகளிலும் சுன்னத்தானவைகளிலுமே செய்யலாம்.
சுன்னத்தான விடயங்களிலும் இஸ்திகாரா என்பது அதன் அடிப்படை விடயம் அல்ல ஏனெனில் சுன்னத்தான விடயமானது ஒரு தேவை ஆனால் ஒருவருக்கு அதில் மோதல்கள் ஏற்படும் போது அதாவது ஒருவருக்கு இரண்டு விடயங்கள் எதை செய்வது எதை செய்யக்கூடாது என முரண்பட்டால் அது இஸ்திகாரா உண்டு மேலும் ஆக்கமாக்கப்பட்டதை பொறுத்த வரை அதன் வழக்கமான விஷயமாக இஸ்திகாரா செய்யலாம்.
5- எப்போது இஸ்திகாரா தொழ ஆரம்பிக்க வேண்டும். இஸ்திகாரா தொழ விரும்புபவர் ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்காமல் வெறுமையான உள்ளத்துடன் இருக்க வேண்டும் அதாவது ஒரு குறிப்பிட்ட விடயத்தை முடிவெடுத்து இருக்கக் கூடாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள "உங்களில் ஒருவர் சிந்தித்துக் கொண்டிருந்தால்"இந்த சொற்றொடர் ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றி எண்ணும்போது இஸ்திகாரா தொழ வேண்டும் என்பதை குறிக்கிறது. எனவே தொழுகை மற்றும் துஆவின் மூலம் எது சிறந்ததோ அது அவருக்கு தெளிவாகத் தெரியும். அதற்கு நேர் மாறாக குறித்து விடயம் சாத்தியமாகி அவரது உறுதியும் விருப்பமும் அவருக்குள் வலுப்பெற்றால் அவர் ஏற்கனவே செய்ய முடிவு எடுத்து விடியத்தை செய்ய விரும்புவதால் அவ்விடத்தில் இவரது நேரான வழி மறைந்து விடுமோ என அவர் பயப்படுகிறார். ஏனெனில் கடந்து செல்லும் எண்ணம் ஒரு பொருத்தல்ல ஒரு நபர் ஏதாவது செய்ய முடிவு செய்திருந்தால் ஆனால் அதன் மீது உறுதியான விருப்பம் இல்லாத போதே தவிர அவர் இஸ்திகாரா தொழக்கூடாது ஒரு நபர் தனது மனதில் தோன்றும் எல்லா எண்ணங்களுக்கும் இஸ்திகாரா தொழுதால் அவர் ஒருபோதும் அதனை நிறுத்த மாட்டார் மேலும் அவர் அவரது நேரத்தை வீணடிப்பார்.
6- இஸ்திகாரா தொழ முன்னர் கலந்தாலோசித்தல்.
நபவி ( ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ஒருவர் இஸ்திகாரா தொழமுள்ள குறிப்பிட்ட நிலையை அறிந்த அனுபவமுள்ள மார்க்கத்தில் அறிவும் உறுதியும் உடைய ஆலோசனை மற்றும் அனுதாபம் முடிய ஒரு நபருடன் கலந்தாலோசிப்பது விரும்பத்தக்கது (முஸ்தஹபானது).
இன்னும் அல்லாஹ் அல்குர்ஆனில் "மேலும் (விடியத்தில்) காரியத்தில் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக"என்று கூறியுள்ளான். (சூரா ஆல இம்ரான்: 159)
கலந்த ஆலோசனை செய்து அது சீரானது என்பது தெரிய வந்தால் அவ்விடத்தில் அல்லாஹ்விடம் இஸ்திகாரா செய்ய வேண்டும்.
இப்னு ஹஜர் அல்ஹைஸமி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் முரன்பாடு ஏற்பட்டாலும் (அதாவது ஆலோசனை வழங்கப்படுகிறது) ஏனெனில் ஒரு ஆலோசகர் சொல்லும் ஆலோசனையானது சுயமான சிந்தனை அதிஷ்டம் தவறுகள் மற்றும் எண்ணங்களின் சிதைவுகளை விட வலிமையானது. என்றாலும் குறிப்பிட்ட விடயத்தில் அவரது உள்ளம் அவரது நாட்டத்தில் உறுதியாகவும் அமைதியாகவும் இருந்தால் இஸ்திகாரா தொழலாம்.
7 - இஸ்திகாரா தொழுகையில் என்ன ஓத வேண்டும்.
இஸ்திகாரா தொழுகையில் என்ன ஓத வேண்டும் என்பதற்கு மூன்று கருத்துக்கள் காணப்படுகின்றன.
1 : ஹனபியாக்கள் மாலிக்குகள் ஷாபிக்கள் அனைவரும் முதலாவது ரகஅத்தில் சூரா பாத்திஹாவிற்கு பின்னர் சூரா காஃபிரூனும் இரண்டாவது ரக்அத்தில் சூரா பாத்திஹாவிற்கு பின்னர் சூரா இக்லாஸும் ஓதுவது விரும்பத்தக்கது என்று கூறுகின்றனர்.
அன்னபவி (ரஹ்) அவர்கள் இதற்கான காரணத்தை விளக்குவதாக தொழுகையில் இவற்றை ஓதுவது நேர்மை மற்றும் அனைத்து விடயங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்தளையும் மற்றும் இயலாமையை காட்டுவதுமாகும். மேலும் அவர்கள் குர்ஆனிலிருந்து பொருத்தமான விடயங்களை ஓதுவதையும் அனுமதிக்கின்றனர்.
2- சில முன்னோர்கள் இஸ்திகாரா தொழுகையில் முதலாவது ரக்அத்தில் சூரா பாத்திஹாவிற்கு பின்னர்
وَرَبُّك يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ . مَا كَانَ لَهُمْ الْخِيَرَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ . وَرَبُّك يَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ . وَهُوَ اللَّهُ لا إلَهَ إلا هُوَ لَهُ الْحَمْدُ فِي الْأُولَى وَالْآخِرَةِ وَلَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
எனும் வசனத்தையும் இரண்டாவது ரக்அத்தில் சூரா பாத்திஹாவிற்கு பின்னர்
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلا مُؤْمِنَةٍ إذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمْ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلالا مُبِينًا
எனும் வசனத்தையும் ஓத வேண்டும் என்று விரும்புகின்றனர்.
3 : ஹனா பிலாக்கள் மற்றும் இன்னும் சில அறிஞர்களை பொறுத்தவரையில் அவர்கள் இஸ்திகாரா தொழுகையின் போது ஓதுவதற்கு என எந்த ஒரு வசனத்தையும் குறிப்பிட்டு கூறவில்லை.
8- இஸ்திகாரா தொழுகையில் எப்போது துஆ செய்ய வேண்டும்?
இஸ்திகாரா தொழுகைக்கு பின்னர் துவா செய்ய வேண்டும் என ஹனபி மாலிக்கி ஷாபி மற்றும் ஹன்பளி மத்ஹபுகளை உடையவர்கள் கூறுகின்றனர். இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்துள்ளது.(அல் மவ்சூஹ் அல் பிக்ஹியா பகுதி 3 பக்கம் 241)
மேலும் ஷெய்ஹுள் இஸ்லாம் பத்தாவா குப்ரா எனும் நூலில் பகுதி 2, 265ம் பக்கத்தில் இஸ்திகாரா துஆ பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதாவது இஸ்திகாரா துஆவானது தொழுகையில் கேட்கப்பட வேண்டுமா அல்லது சலாத்திற்கு பின்னரா?
இதற்கான பதில்:- இஸ்திகாரா தொழுகையின் போதும்
மற்ற சந்தர்ப்பங்களிலும் துவா செய்வது ஆகுமாக்கப்பட்டுள்ளது (அதாவது தொழுகையில் சலாத்திற்கு முன்னர் ஸலாத்திற்கு பின்னர்) என்றாலும் சலாத்திற்கு முன் துஆ செய்வதே மிகச் சிறந்தது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸலாத்திற்கு முன் நிறைய துவாக்கள் கூறுவார்கள். மேலும் தொழுகையாளி சலாத்திற்கு முன்னர் குறிப்பிட்ட நிலையிலேயே இருப்பார். இதுவே மிகச் சிறந்தது.
யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.