0 / 0
05/சபர்/1446 , 09/ஆகஸ்ட்/2024

வுழூ செய்யும் முறைமை.

கேள்வி: 11497

பெண்கள் எவ்வாறு ‘வுழூ’ செய்வது என்பதைப் பற்றி எனக்கு அறிவிக்க முடியுமா? எனது மனைவிக்காக இதைக் கேட்கிறேன். அத்தோடு ‘ஆயத்துல் குர்ஸீ’ வசனத்தை ஆங்கில மொழி எழுத்துக்களால் அரபு வார்த்தைகளை எவ்வாறு ஓதுவது என்பதை சொல்லித்தர முடியுமா? அல்லாஹுதஆலா தன்னைப் பற்றி கூறுகின்ற அந்த அழகான வசனங்களைக் கற்றுக்கொள்ள நான் மிகவும் ஆசையாக உள்ளேன். எனது இந்தக் கேள்விக்கு உங்கள் பதிலை எதிர்பார்த்தவனாக இருக்கிறேன். இதற்கான பதிலை என் மனம் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எமது அன்புக்குரிய நபி அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் அல்லாஹுதஆலா அருள்பாலிப்பதற்காக அல்லாஹ்வை வேண்டிக்கொள்கிறேன்.

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

முதலாவதாக : உங்களது உள்ளத்தை விரிவாக்கி, உங்களுக்கு நேர்வழியை இலகுவாக்கித் தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை முதலில் புகழ்ந்து கொள்கிறோம். அவனை வழிப்படுவதில் உங்களையும் எங்களையும் அல்லாஹுதஆலா உறுதியான நிலைப்பாட்டில் வைக்க வேண்டும் என்று அவனிடமே பிரார்த்திக்கிறோம். உங்களுக்குத் தேவையான மார்க்க விடயங்களைப் படித்துக்கொள்வதில் உங்களது முயற்சிக்காக உங்களை நாங்கள் வாழ்த்துகிறோம். உங்களது வணக்க வழிபாட்டை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக்கக் கூடிய கல்வியை நீங்கள் கற்றுக் கொள்வதில் முயற்சிக்க வேண்டும் என்றும் அல்குர்ஆனை ஓதுவதற்கும் அதனை உரிய முறையில் விளங்குவதற்கும் முடியுமான அளவு அரபு மொழியைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் உங்களுக்கு நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். பயன்தரக்கூடிய கல்வியை உங்களுக்கு அல்லாஹுதஆலா அருள்பாலிக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்.

வுழூ செய்யும் முறையைப் பொறுத்த வரைக்கும் இரண்டு முறைகள் காணப்படுகின்றன :

முதலாவது : கட்டாயக் கடமைகளைக் கொண்ட முறை. அதாவது,

  1. முகத்தை முழுமையாக ஒருமுறை கழுவுதல். அதில் வாய் கொப்பளிப்பதும் நாசிக்கு நீர் செலுத்துவதும் அடங்கிவிடும்.
  2. இரண்டு கைகளையும் முழங்கை வரை ஒரு முறை கழுவுதல்.
  3. தலையை முழுமையாக (மஸ்ஹு செய்து) தடவுதல். அதில் இரண்டு காதுகளும் அடங்கிவிடும்.
  4. இரண்டு கால்களையும் கரண்டைக் கால் உட்பட ஒரு முறை கழுவுதல். இதுவரை சொன்ன ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு முறை என்று குறிப்பிடப்பட்டிருப்பது. அந்த குறித்த உறுப்பை முழுவதுமாக கழுவுவதையே உள்ளடக்கும்.
  5. ஒழுங்குமுறையாக அல்லது வரிசைக் கிரமமாகச் செய்தல். அதாவது, முகத்தை முதலாவதாகவும், பின்னர் இரண்டு கைகளையும் அதற்குப் பின்னர் தலையை மஸ்ஹு செய்து, அதற்குப் பின்னர் இரண்டு கால்களையும் கழுவ வேண்டும்.

ஏனெனில் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்த முறையிலேயே வரிசைக் கிரமமாக ‘வுழூ’ செய்துள்ளார்கள்.

  1. தொடராகச் செய்தல். அதாவது, மேலே சொல்லப்பட்ட உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக இடைவிடாது ஒவ்வொரு உறுப்பாக (காலம் தாழ்த்தாது) குறிப்பிட்ட அந்தக் கால அளவில் செய்து முடிக்க வேண்டும். மேலும் ஒரு உறுப்பைக் கழுவியதன் பின்னர் அடுத்த உறுப்பைக் கழுவ வேண்டும்.

இவைதான் ‘வுழூ’ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இன்றியமையாத (ஃபர்ழு) கடமையான விடயங்கள் ஆகும்.

இந்தக் கடமையான விடயங்களுக்குப் பின்வரும் அல் குர்ஆன் வசனம் ஆதாரமாக அமைகின்றது.

            « நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரை உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) ‘மஸஹு' செய்துகொள்ளுங்கள். நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் (கை கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி, நீங்கள் நோயாளிகளாக இருந்தால் அல்லது பயணத்தில் இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால், (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதை)க்கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகிறான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!  (5 :6)

இரண்டாவது முறையானது, விரும்பத்தகுந்த முறையாகும். அதுதான் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவில் வந்திருக்கும் முறையாகும். அது பற்றிய விரிவு பின்வருமாறு :

  1. முஸ்லிமாகவும், சுத்தமாவதையும்,  தொடக்கிலிருந்து விடுபடுவதையும் எண்ணி மனதில்  நிய்யத் வைக்கவேண்டும்.  அந்த எண்ணத்தை அவர் மொழிய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால். ‘நிய்யத்’ இன் இடம் இதயம் ஆகும். இவ்வாறுதான் ஏனைய எல்லா வணக்க வழிபாடுகளிலும் ‘நிய்யத்’ அமைகின்றது.
  2. அடுத்து,பிஸ்மில்லாஹ் என்று சொல்ல வேண்டும்.
  3. பின்பு தனது இரண்டு மணிக்கட்டுக்களையும் மூன்று முறை கழுவ வேண்டும்.
  4. பின்பு மூன்று முறை வாய் கொப்பளித்தல் வேண்டும். வாய் கொப்பளித்தல் என்பது வாய்க்குள் நீரை விட்டு கழுவுவதாகும். அத்தோடு, மூன்று தடவைகள் நாசிக்கு நீரைச் செலுத்தி அதை இடது கையால் சீற வேண்டும். நாசிக்குத் தண்ணீர் செலுத்துவதுவதை ‘இஸ்தின்ஷாக்’ என்ற பதம் குறிக்கிறது. அதாவது, மூக்குக்கு உள்ளே நீரைச் செலுத்துவதாகும். மூக்கிலிருந்து நீரை வெளியேற்றுவதை ‘இஸ்தின்ந்தார்’ என்ற பதம் குறிக்கிறது.
  5. தனது முகத்தை மூன்று முறை கழுவ வேண்டும். முகம் என்பதின் எல்லையானது, நீளத்தால் தலையில் முடி முளைக்க ஆரம்பிக்கின்ற இடத்தில் இருந்து தொண்டைக்குழி வரைக்கும் ஆன எல்லாப் பகுதியையும் உள்ளடக்குகின்றது. அத்தோடு அகலத்தால் வலது காதிலிருந்து இடது காது வரைக்குமான எல்லையையும் உள்ளடக்குகின்றது. அதேநேரம் ஆண்களைப் பொறுத்த வரைக்கும் அவர் தனது தாடியை நன்றாகக் கழுவ வேண்டும். ஏனெனில், தாடியும் முகத்துடன் இணைந்ததாகும். அவரது தாடி மெல்லியதாக இருக்குமாயின் அதனை வெளித் தோற்றத்திலும் உள்ளுக்குள்ளும் கழுவுவது கடமையாகும். அதேவேளை, தோலை மறைக்கக்கூடிய அளவுக்கு அடர்த்தியாக இருக்குமாயின், அதன் வெளிப்பகுதியை மாத்திரம் கழுவினால் போதுமானது.
  6. பின்பு தனது இரண்டு கைகளையும் முழங்கை வரை மூன்று முறை கழுவ வேண்டும். கை என்பதன் எல்லையானது, விரல்களின் நுனியில் இருந்து முழங்கையின் ஆரம்பம் வரையாகும். அதேநேரம், கையில் ஒட்டி இருக்கின்ற, தோலின் மேற்பகுதியில் நீர் படுவதைத் தடுக்கக்கூடிய களிமண், அல்லது பசைகள் போன்றவற்றை முன்னரே நீக்கிவிட்டுத்தான் கழுவ வேண்டும்.
  7. பின்பு தனது தலையையும் இரண்டு காதுகளையும் இரண்டு கைகளையும் கழுவிய ஈரத்திலல்லாமல்  புதிதாக தொட்ட நீரினால் ஒருமுறை தடவ வேண்டும். தலையை நீரினால் தடவுதல் என்பதானது, இரண்டு கைகளையும் தண்ணீரில் நனைத்து எடுத்துக்கொண்டு தலையின் முற்பகுதியிலிருந்து தனது பிடறி வரைக்கும் கையைக் கொண்டு செல்ல வேண்டும். பின்பு தனது கைகளை எங்கு ஆரம்பித்தாரோ அந்த இடத்திற்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். பின்பு தனது இரண்டு சுட்டு விரல்களையும் இரு காதுகளின் ஓரங்களுக்குள்ளும் நுழைக்கும் அதேநேரம் இரண்டு காதின் வெளிப் பாகத்தையும் தனது பெருவிரலால் தடவ வேண்டும். பெண்களின் முடியைப் பொறுத்த வரைக்கும் அது நீளமாக இருந்தாலும் அல்லது கட்டையாக இருந்தாலும் தலையின் முன்பகுதியில் இருந்து பிடறியில் முடி முளைக்கும் பகுதி வரைக்கும் தடவ வேண்டும். அதேநேரம், அவளது முடி நீண்டு இருக்கும் அளவு முழுமையாகத் தடவ வேண்டிய கட்டாயம் இல்லை.
  8. பின்பு தனது இரண்டு கால்களையும் கரண்டைக்கால் வரைக்கும் மூன்று முறை கழுவ வேண்டும். கரண்டைக்கால் என்பது, கணுக்காலின் கீழே இருக்கின்ற இரண்டு மொளிகளைக் குறிக்கிறது.

இதற்கான ஆதாரமாக, உஸ்மான் t அவர்களின் சேவகரான ஹும்ரான் அவர்கள்,  உஸ்மான் t அவர்கள் ஊடாக அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

« உஸ்மான் t  அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் t அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் t அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை செய்தார்கள். (முதலில்) தம்முடைய இரு முன் கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்துத் தமது இடக் கரத்தையும் அதைப் போன்றே (முழங்கை மூட்டுவரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் தலையை (ஈரக் கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள். பிறகு தமது வலக் காலை கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக் காலையும் அதைப் போன்றே (கணுக்கால்வரை மூன்று முறை) கழுவினார்கள்.

பின்னர் நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தாராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று கூறினார்கள் என்றார்கள்.». (முஸ்லிம் /331)

வுழூவின் நிபந்தனைகளாக பின்வருவன காணப்படுகின்றன : இஸ்லாம், பகுத்தறிவு, அறிவு முதிர்ச்சி, பிரித்தறியும் ஆற்றல், எண்ணம்-நிய்யத் ஆகியனவாகும்.  அதேநேரம் இறைநிராகரிப்பாளர் (காஃபிர்)களின் ‘வுழூ’ நிறைவேறமாட்டாது. அதேபோல பைத்தியக்காரனது ‘வுழூ’வும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், முதிர்ச்சி அடையாத சிறுவர்களின் ‘வுழூ’வும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதேபோல, ‘வுழூ’ செய்யும் பொழுது ‘வுழூ’ எடுப்பதாக எண்ணம் (நிய்யத்) கொள்ளாதவரின் ‘வுழூ’வும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. உதாரணமாக, உடலைக் குளிரவைப்பதாக எண்ணிக் கொண்டு ‘வுழூ’ செய்தால் அது ‘வுழூ’வாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் ‘வுழூ’வுக்காகப் பயன்படுத்துகின்ற நீர் சுத்தமானதாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும். அசுத்தமான நீர் மூலம் ‘வுழூ’ச் செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதே போல தோலிலும் நகத்திலும் நீர் சென்றடைவதைத் தடுக்கக்கூடிய, பெண்கள் தமது நகங்கள் மீது போடுகின்ற மேல்பூச்சுக்கள் போன்றவற்றை நீக்கிவிடுவதும் ‘வுழூ’ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையாகக் கொள்ளப்படுகின்றது.

‘வுழூ’ச் செய்யும்போது ‘பிஸ்மி’ சொல்ல வேண்டும் என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் நிலைப்பாடாகும். என்றாலும், அது  கட்டாயக் கடமையா அல்லது ஸுன்னத்தா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. என்றாலும் ‘வுழூ’ச் செய்யும் போதோ அல்லது செய்ய ஆரம்பிக்கும் போதோ நினைவு வந்து விட்டால் அதனைச் சொல்ல வேண்டும்.

‘வுழூ’ச் செய்யும் முறைமையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது.

‘வுழூ’ச் செய்து முடிந்ததும் நபி r அவர்கள் சொன்னதற்கிணங்க     أَشْهَدُ أَنَّ لاَ إِلٰهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدا عَبْدُهُ وَرَسُولُهُ   என்ற ‘துஆ’வைச் சொல்வது விரும்பத்தக்கது.

« உங்களில் யாராவது மிக அழகாகவும் நேர்த்தியாகவும் வுழூ செய்த பின்னர்
‘ அல்லாஹ்வைத் தவிர வணங்கத்தகுதியானவன் யாரும் இல்லை . முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள்

 أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اَللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ, وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُو لُهُ

என்று சாட்சி சொல்கிறாரோ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைந்துகொள்வார் » என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-சுத்தம் /345)

திர்மிதியில் வந்துள்ள அறிவிப்பில், "அல்லாஹ்வே என்னை பாவமன்னிப்புத் தேடுபவர்களில் ஒருவராக ஆக்கிவிடுவாயாக. சுத்தமானவர்களில் ஒருவராகவும் ஆக்கி விடுவாயாக" என்ற வாசகங்கள் மேலதிகமாக இடம்பெற்றுள்ளன.

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

(சுத்தம் /50) இமாம் அல்பானீ அவர்கள் ஸஹீஹ் ஸுனன் அபூதாவூத் 48ம் இலக்கத்தில் ஸஹீஹ் என்று அறிவித்துள்ளார்கள்.

அடுத்து, ‘எங்களது நபிக்கு அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டும் என நான் அல்லாஹ்விடம் கேட்கிறேன்’ என்ற உங்களது வார்த்தையானது, நபி r அவர்களுக்காகக் கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். எமது இரட்சகனான அல்லாஹ் பின்வரும் வசனத்தில் அதனைக் கடமையாக்கியுள்ளான்.

« நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள் ».                                                                                                                   (33:56)

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
வுழூ செய்யும் முறைமை. - Islam Question & Answer