0 / 0
07/முகர்ரம்/1446 , 13/ஜூலை/2024

குழந்தையை சீரான வழியில் வளர்ப்பது எவ்வாறு?

கேள்வி: 10016

எனது குழந்தைகளை சரியான முறையில் வளர்ப்பதிலும் அவர்களே சீராக்குவதிலும் நான் பல சிரமங்களை காண்கின்றேன். பெரும்பாலான நேரங்களில் நான் கோபமுற்று அவர்களை அடித்து விடுகிறேன். இது விடயத்தில் எனக்கு நீங்கள் சில வழிகாட்டுதல்களை சொல்லித் தருமாறும் இன்னும் அது தொடர்பான பயனுள்ள நூல்கள் எவை என்பது பற்றியும் கூற வேண்டும் என நான் விரும்புகிறேன்.

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

பெற்றோர் அவசியம் செய்ய வேண்டிய வேலைகளில் குழந்தை வளர்ப்பு என்பது ஒன்றாகும் அது தொடர்பாக இறைவன் தன் திருமறையிலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏவியுள்ளார்கள்.

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்யமாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.

66:6.

இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் இந்த வசனத்திற்கான விளக்கத்தில் பின்வருமாறு  கூறியுள்ளார்கள் .

يا ايها الذين اآمنوا

இறைவனையும் அவனது தூதரையும் உண்மைப்படுத்தியவர்களே!

قوا انفسكم

உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நரக நெருப்பை விட்டும் உங்களைப் பாதுகாக்கும் விடயங்களை உங்களில் சிலர் சிலருக்குக் கற்றுக்கொடுங்கள். அவனுக்குக் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள்.

واهليكم نارا

உங்கள் குடும்பத்தினருக்கு அவர்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்க கூடிய இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கவும் கற்றுக் கொடுங்கள்.

(தப்ஸீர் அத்தபரீ ( 28 / 165 ) )

இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்: .

அறிஞர் முகாதில் கூறினார்.

(விசுவாசிகள்) மீது தன்னையும் தனது குழந்தைகள் குடும்பத்தினர் ஆண் பெண் அடிமைகள் அனைவரையும் நரக நெருப்பிலிருந்து காப்பது கடமையாகும்.

இல்கியா கூறினார்.

எமது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு மார்க்கத்தையும் நல்ல விடயங்களையும் மிக அவசியமான நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொடுப்பது நம் மீது கடமையாகும் இறைவன் தனது திருமறையில் கூறுகிறான் உமது குடும்பத்தினரை தொழுமாறு ஏவுவீராக இன்னும் நீங்களும் அதில் உறுதியாக இருப்பீராக.

(ஸுரா தாஹா:132)

அவ்வாறே இறைவன் தனது நபியை பார்த்து கூறுகிறான்

உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (அஷ்ஷுஅராஉ:214)

இன்னும் ஹதீஸில் அவர்களை (குழந்தைகளை) ஏழு வயதில் தொழுமாறு ஏவுங்கள் என்பதாக வந்துள்ளது.

தப்ஸீர் அல் குர்துபி(196/18)

ஒவ்வொரு முஸ்லிமும் இறைவன் பால் அழைக்கக் கூடிய அழைப்பாளர் ஆவார். அவர் முதன் முதலில் தனது குழந்தைகள் குடும்பத்தினர் மற்றும் தன் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பது அவசியமாகும் இறைவன் தனது தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைப்பு பணியை செய்யும்படி பணித்த சமயத்தில் பின்வருமாறு கூறினான்:

நீர் உமது நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. (அஷ்ஷுஅராஉ:214)

ஏனெனில் அவர்களே மனிதர்களில் இரக்கம் காட்டவும் நலவு செய்யவும் நல்ல முறையில் நடந்து கொள்ளவும் மிக முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவர்களாவர்.

இன்னும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளை கண்காணிக்கும் பொறுப்பை பெற்றோர்களுக்கானது எனக் கூறியுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புஹாரி 853 /முஸ்லிம் 1829)

இன்னும் அவர்களை சிறுவயது முதலே இறைவனையும் அவனது தூதரையும் இஸ்லாமிய நெறிமுறைகளையும் விரும்பக் கூடியவர்களாக உருவாக்குவதும்; இன்னும் இறைவனிடத்தில் சுவனம் மற்றும் நரகம் என்பன உள்ளன. அந்நரக நெருப்பு கடுமையாக சூடேற்றப்பட்ட நெருப்பாகும். அதனது விறகுகளாக மனிதர்களே இருப்பார்கள் என்பதையும் அவர்களுக்கு தெரியப்படுத்துவதும் உமது கடமையாகும்.

உங்களுக்கு படிப்பினையாக அமையக்கூடிய இந்த கதையை கூறுகிறேன்.

இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

மிகச் செல்வந்தரான ஒரு அரசன் இருந்தான். அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு எந்த குழந்தைகளும் இருக்கவில்லை. அவர் அவளை மிகவும் நேசிக்க கூடியவராக இருந்தார். அவளுக்கு பல்வேறு விளையாட்டுக்களையும் வழங்கி மகிழ்வித்தார். இவ்வாறு சிலகாலம் கழிந்தது.

அவ்வரசனின் (வசிப்பிடத்தின்) அருகே ஒரு வணக்கசாலி இருந்தார். ஒரு நாள் இரவு அவர் (முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்)

எனும் இறை வசனத்தை சத்தமாக ஓதுவதை கேட்டு அப்பெண் தனது அருகில் இருந்த  தோழிகளிடம் நிறுத்துங்கள் எனக் கூறினால் ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை.  அந்த வணக்கசாலி அதே வசனத்தை திரும்பத் திரும்ப ஓத அப்பெண்ணும் நிறுத்துங்கள் என தனது தோழிகளிடம் கூறியும் அவர்கள் நிறுத்தவில்லை.

இதனால் அப்பெண் தனது ஆடைகளை கிழித்துக்கொண்டாள். உடனே தோழிகள் அவளது தந்தையிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறினர். அவளை நோக்கி வந்த அவர் எனது அன்பு மகளே! இரவிலிருந்து உனக்கு என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்? என கேட்டு தன்னுடன் அணைத்துக் கொண்டார். அவள் தனது தந்தையிடம் இறைவன் பெயரால்  உம்மிடம்  கேட்கிறேன் மனிதர்களும் கற்களும் விறகுகளாக இருக்கும் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் வைத்துள்ளானா? எனக் கேட்டாள். அதற்கு ஆம் என அவர் பதிலளிக்க அதை எனக்கு ஏன் சொல்லித்தரவில்லை, இறைவன் மீது சத்தியமாக சுவனம் அல்லது நரகில் எனது இடம் எது என நான் தெரிந்து கொள்ளும் வரை நல்ல உணவுகளை உண்ணவோ பஞ்சமெத்தைகளில் உறங்கவோமாட்டேன் எனக் கூறினாள்.

ஸப்வதுஸ்ஸப்வா (437-438).

அவர்களை பாவங்கள் மற்றும் வீணானவை மலிந்து காணப்படும் இடங்களை விட்டும் அவர்களை அப்புறப்படுத்தி வளர்க்க வேண்டும். தொலைக்காட்சி மற்றும் அது போன்ற ஏனைய தீய மோசமான வழிகளில் அவர்கள் வளர்வதற்கு விட்டு விடாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் பின்னர் அவர்களை நல்லவர்களாக மாறுமாறு வேண்டமுடியாது.

முல்லை விதைத்தவனுக்கு திராட்சை அறுவடை செய்ய முடியாது பெரியவர்களானதன் பின்னர் சீரான வழிக்கு கொண்டு வருவதை விட சிறுவயதில் அவர்களுக்கு நல்ல பழக்கங்களை பழக்குவதும் நல்லவற்றை ஏவி தீயவற்றை தடுத்து உமக்கு கட்டுப்பட்ட நடப்பவர்களாக பழக்கப்படுத்துவதுமே இலகுவான வழிமுறையாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உங்களது குழந்தைகள் ஏழு வயதாகும் போது அவர்களை தொழுமாறு ஏவுங்கள் பத்து வயதாகினால் அதற்காக அவர்களை அடியுங்கள், அவர்களை பிரித்து உறங்கச் செய்யுங்கள்.

(அபூதாவூத்-495)

இமாம் அல்பானி இந்த ஹதீஸை ஸஹீஹ் என ஜாமிஉஸ் ஸஹீஹில் குறிப்பிட்டுள்ளார்கள். (5868)

எனினும் குழந்தைகளை திருத்தக்கூடிய நபர் இரக்கமானவராகவும் நிதானமானவராகவும் மென்மையானவராகவும் நெருக்கமானவராகவும் தியநடத்தைகளோ தீய வார்த்தைகளோ பேசாதவராகவம் அழகான வார்த்தைகளால் உரையாடக்கூடியவராகவும் ஏசுதல் அடித்தல் தீய வார்த்தைகளை உபயோகித்தல் என்பவற்றை விட்டும் தூரமானவராகவும் இருத்தல் வேண்டும். ஆனால்  பிள்ளை கட்டுப்படாமல் தனது தந்தையின் ஏவல்களை மதிக்காது அவற்றை விட்டுவிட்டு தடுக்கப்பட்ட விடயங்களை நோக்கி செல்லக் கூடியவராக இருந்தால் பாதிப்பு ஏற்படாத விதத்தில் கண்டிப்பது சிறந்தது.

இமாம் முனாவி கூறுகிறார்கள்:

 ஒரு மனிதர் தனது குழந்தை ஒழுக்கப் பயிற்சியைப் பெறுமளவுக்கு வயதையும் அறிவையும் அவனை நல்லோர்களான விசுவாசிகளின் நற்குணங்களோடு வளர்ப்பதோடு குழப்பக்காரர்களுடன் சேர்வதை விட்டும் தடுக்க வேண்டும். குர்ஆனையும் ஒழுக்கத்தையும் அரபு மொழியையும் கற்றுக்கொடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாக்களையும்  முன்னோர்களின் கூற்றுக்களையும் செவிமடுக்கச் செய்து அத்தியவசியமான மார்க்க சட்டங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். பின்னர் தொழுகை போன்ற விடயங்களுக்காக கண்டித்தும் அடித்தும் சீர்திருத்த முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறாக குழந்தையை திருத்த முயற்சிப்பதானது அவர் ஒரு சாஃ உணவை தர்மம் செய்வதை விட சிறந்தது. ஏனெனில் அவர் அக்குழந்தையை சீர் இருக்கும்போது அதனது செயல்கள் அனைத்தும் நிலையான தர்மம் ஆகிறது. ஒரு சாஃ உணவை தர்மம் செய்வதன் மூலம் கிடைக்கும் கூலியோ முடிவுற்றுவிடும். ஆனால்  குழந்தையை சீர்திருத்துவதன் மூலம் கிடைக்கும் கூலியோ குழந்தையும் அதன் நல்லொழுக்கங்களும் இருக்கும் காலமெல்லாம் தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருக்கும். ஒழுக்கமே ஆன்மாவின் உணவாகும். அதனை மறுமைக்குப் பயிற்றுவிப்பதாகும்.

(முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். (தஹ்ரீம்-6)

நரக நெருப்பிலிருந்து உம்மையும் உமது குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அது பற்றி உபதேசித்து நரகத்திற்கு செல்வதை பற்றி எச்சரிக்க வேண்டும். அறிவுரைகள் ,அச்சுறுத்தல்கள், எச்சரிக்கைகள், அடித்தல் இன்னும் பரிசுகள் அளித்தல், நல்ல விதமாக நடந்து கொள்ளுதல் போன்ற குழந்தைகளை     ஒழுக்கப்படுத்துவதற்குரிய அனைத்து அம்சங்களையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். நல்ல ஆன்மாவை திருத்துவது கெட்ட ஆன்மாவை நிறுத்துவது போன்றதல்ல.

(பைழுல் கதீர்257/5)

அடித்தல் குழந்தையை சீரான வழியில் நிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அன்றி அது சரியான வழிமுறை என்பதல்ல. மாறாக அதன் மூலம் குழந்தை பிடிவாதம் மற்றும் பிழைகளின் பக்கம் திரும்பி விடக் கூடிய நிலைமை தோன்றலாம். இஸ்லாத்தில் தண்டனைக்கு என்று ஒழுங்கு முறைகளை ஷரீஆவாக ஆக்கி வைத்துள்ளது. திருடன், அவதூறு கூறியவன், விபச்சாரி என்பவர்களுக்கான இன்னும் அது போன்ற குற்றங்களுக்கான பல தண்டனைகள் பற்றி இஸ்லாத்தில் வந்துள்ளதன. அவை அனைத்தும் மனிதர்களின் நிலைமைகளை சரிப்படுத்தி அவர்களது தீய விடயங்களை தடுப்பதற்காகவே ஷரீஆவாக ஆக்கப்பட்டுள்ளன.

தந்தைக்குப் பிள்ளையைக் கண்டிப்பதைப் போதிக்கும் விதமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு உபதேசித்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீட்டினர் காணும்படியாக சாட்டையை தொங்க விடுங்கள், அது அவர்களை சீர்திருத்தும். (ஆதாரம்: தபரானி 10/248

இந்த ஹதீஸின் இஸ்னாதை ஹைஸமி மஜ்மஉஸ்ஸவாஇதில் ஹசன் என கூறியுள்ளார்கள்.  ( 8 / 106 )

இமாம் அல்பானி ஸஹீஹ் ஜாமிஇல் (4022) ஸன் என்பதாக குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை வளர்ப்பது ஆர்வமூட்டல் மற்றும் அச்சுறுத்தல் கலந்து காணப்பட வேண்டும். அவை அனைத்திற்கும் மேலாக குழந்தைகளுக்கு நேர்வழியை வழங்கும் காரணிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பிள்ளைகள் வாழும் சூழலைச் சீர்திருத்த வேண்டும். அவர்களை வளர்க்கும் பொறுப்புடைய பெற்றோர்கள் இருவரும் மார்க்கத்தைப் பேணி நடப்பதன் மூலமே அது சாத்தியமாகும்.

வெற்றிகரமான பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுவதற்கான வழிமுறைகள்தான் ஒலிப்பதிவு கருவிகள் (recorder devices), குர்ஆன் ஒலிநாடாக்கள்(Qur'an tapes), அறிஞர்களின் உரைகள் மற்றும் பாடங்கள் என்பவையாகும்.

குழந்தை வளர்ப்பு தொடர்பான விடயங்களைக் கொண்ட நூல்கள்.

1.தர்பியத்துல் அத்பால் பீ ரிஹாபில் இஸ்லாம்.(நூலாசிரியர்: முஹம்மத் ஹாமித் நாவிதர் மற்றும் இல்லா அப்துல் காதர் தர்வீஷ்

2: கைப யுரப்பில் முஸ்லிம் வலதஹூ

நூலாசிரியர்: முஹம்மத் ஸஈத் அல்மவ்லவி

3:தர்பிய்யத்துல் அப்னாஉ பில் இஸ்லாம்.

நூலாசிரியர்: முஹம்மத் ஜமீல் ஸைனூ

4:கைப் நுரப்பீ அத்பாலனா

நூலாசிரியர்:மஹ்மூத் மஹ்தீ அல் இஸ்தான்பூலீ

5:மஸ்ஊலியத்துல் அபில் முஸ்லிம் பீ தர்பிய்யதில் வலத். அத்னான் பா ஹாரிஸ்.

அல்லாஹ்வே அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
குழந்தையை சீரான வழியில் வளர்ப்பது எவ்வாறு? - Islam Question & Answer