0 / 0
09/ரபி/1446 , 12/செப்டம்பர்/2024

இஸ்லாத்தில் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்த்து என்ன?

கேள்வி: 10001

இஸ்லாத்தில் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்த்து என்ன? ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் வகிபாகம் யாது? குடும்பத்தை கட்டியெழுப்பி, ஒழுங்கமைத்து, பாதுகாப்பதில் இஸ்லாத்தின் பங்களிப்பு என்ன?

Summary of answer

இஸ்லாத்தில் குடும்பத்துக்கு பாரிய அந்தஸ்த்து உள்ளது. குடும்பத்தை வேரூன்றச் செய்து நிலைநிறுத்துவதிலும் அதை கெடுப்பவற்றிலிருந்து பாதுகாப்பதிலும் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் அவரது வாழ்வில் முக்கிய வகிபாகத்தை வழங்கி அதன் கட்டமைப்பை பேணிப் பாதுகாப்பதிலும் இஸ்லாம் காட்டும் கரிசனை மூலம் இதை விளங்கலாம். இதன் விளக்கத்தை விரிவான பதிலில் பார்க்கலாம்.

Answer

இஸ்லாத்தில் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், குடும்பத்தை கட்டியெழுப்பி, ஒழுங்கமைத்து, பாதுகாப்பதில் இஸ்லாத்தின் பங்களிப்பையும் அறிந்துகொள்வதற்கு முன்னால்| இஸ்லாத்திற்கு முன்பும், சமகாலத்தில் மேலைத்தேய நாடுகளிலும் காணப்படும் குடும்பத்தின் நிலையை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இஸ்லாத்திற்கு முன்பு குடும்பத்தின் நிலை.

இஸ்லாத்திற்கு முன்பு அநியாயத்தின் அடித்தளத்திலேயே குடும்பம் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. அதிகாரம் அனைத்தும் ஆண்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அல்லது ஆண்களில் திடகாத்திரமானவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது என்றும் கருதலாம். பெண் அல்லது மகள் அநீதமிழைக்கப்பட்டவளாகவும் இழிவானவளாகவும் காணப்பட்டாள்.

ஒரு ஆண் மரணித்து அவனது மனைவி உயிருடன் இருந்தால்| அவளை திருமணம் முடிப்பதற்கு அல்லது அவள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு அல்லது அவள் வேறு திருமணம் முடிப்பதை தடுப்பதற்கு அவரது மகனுக்குத்தான் உரிமை வழங்கப்பட்டிருந்தது என்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். வயது வந்த ஆண்கள் மாத்திரம்தான் அனந்தரச் சொத்துரிமை பெற்றனர், பெண்களுக்கோ சிறுவர்களுக்கோ அதில் எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை.

தாயாக இருந்தாலும், மகளாக இருந்தாலும், சகோதரியாக இருந்தாலும் பெண்ணை இழிவாகப் பார்க்கும் நிலையே காணப்பட்டது. ஏனெனில் அவள் யுத்தக் கைதியாகப் பிடிபட்டு குடும்பத்துக்கு இழிவைத் தேடித்தரக்கூடியவளாக கருதப்பட்டாள். இதனால்தான் பால்குடிப் பாலகியாக இருக்கும் தனது மகளையே உயிருடன் புதைக்கும் மனிதர்களாக அவர்கள் இருந்தார்கள்.

 இதையே அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: 'அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை (பிறந்தது) கொண்டு நன்மாராயம் கூறப்பட்டால் முகம் கறுத்து கவலை தோய்ந்தவனாக ஆகிவிடுகிறான், அவனுக்கு கூறப்பட்ட நற்செய்தியின் தீங்கு காரணமாக சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைத்துவிடுவதா? (என்று நினைக்கிறான்). அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். (நஹ்ல்: 58)

கபீலா – கோத்திரம் என்று அப்போது அறியப்பட்ட குடும்பம்| அநீதியான விடயங்களில் கூட ஒன்றை ஒன்று உதவி, ஒத்துழைத்து வாழக்கூடியதாக காணப்பட்டது. ஆனால் இஸ்லாத்தின் வருகையுடன் இவையனைத்தும் இல்லாதொழிக்கப்பட்டு நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட்டது. பால்குடி பாலகன் உட்பட உரியவருக்கு அவரது உரிமை வழங்கப்பட்டது. வயிற்றிலிருந்து மரணித்து வெளியாகும் சிசுவுக்குக் கூட அதனது கௌரவம் பேணப்பட்டு, தொழுகை நடாத்தப்படும் அளவுக்கு உரிமைகள் பேணப்பட்டன.

மேற்குலகில் குடும்பத்தின் நிலை.

இன்று மேற்கில் குடும்பக்கட்டமைப்பை அவதானிப்பவர்| சீரழிவுக்குட்பட்ட, சிதைந்து சின்னாபின்னமான குடும்பக் கட்டமைப்பையே அங்கு கண்டுகொள்ள முடிகிறது. பெற்றோர் தமது பிள்ளைகளை சிந்தனை ரீதியாகவோ நடத்தை ரீதியாகவோ கட்டுப்படுத்த முடியாதுள்ளது. மகன் தான் விரும்பிய இடத்துக்குச் செல்லவும், தான் விரும்பியதை செய்யவும் பூரண சுதந்திரத்துடன் இருக்கிறான். அவ்வாறுதான் மகளும்| தனக்கு விருப்பமானவருடன் அமரவும், விரும்பியவருடன் படுக்கவும் உரிமையுள்ளவளாக இருக்கிறாள். இதற்கு சுதந்திரம் என்றும், உரிமை என்றும் பெயராம். சரி.. இப்போது முடிவு என்னவாயிற்று…??

சீரழிந்த குடும்பங்கள், திருமணம் இன்றி பிறக்கும் குழந்தைகள், கவனிப்பாரற்ற தாய்மாரும் தந்தையர்களும், சில புத்திஜீவிகள் சொல்வதைப்போல| 'அவர்களது யதார்த்த நிலையை அறிய விரும்பினால் சிறைச்சாலைகள், வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள் ஆகிய இடங்களுக்கு செல்லுங்கள். பெருநாட்கள், விஷேட வைபவங்கள் போன்ற தினங்களில் மட்டுமே பிள்ளைகள் பெற்றோரை கண்டுகொள்கிறார்கள். எனவே, முஸ்லிமல்லாதோரிடம் குடும்பக் கட்டமைப்பு சிதறி சின்னாபின்னமாயுள்ளது என்பது நிதர்சனமாகும்.

குடும்பத்தில் பெண்ணிற்கு இஸ்லாம் வழங்கியுள்ள முக்கியத்துவம்.

குடும்பத்தின் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தி, அதை சீர்குலைப்பவற்றிலிருந்து பாதுகாத்து, குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் அவரது வாழ்வில் முக்கிய வகிபாகத்தை வழங்கி அதன் கட்டமைப்பை பேணிப் பாதுகாப்பதிலும் இஸ்லாம் கூடிய கரிசனை காட்டியுள்ளது.

ஒரு தாயாக, ஒருமகளாக, ஒரு சகோதரியாக… இஸ்லாம் பெண்ணை கண்ணியப்படுத்தியுள்ளது.

ஒரு தாயாக:

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு மனிதர் வந்து யா ரஸ{லல்லாஹ்! நான் நல்ல முறையில் நடந்துகொள்வதற்கு முதற்தகுதி யாருக்கு இருக்கிறது? என்று கேட்டார். 'உனது தாய்" என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார். 'பிறகும் உனது தாய்தான்" என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார். 'பிறகும் உனது தாய்தான்" என்றார்கள். (நான்காவது தடவையாக) பிறகு யார்? என்று கேட்டதற்கு. 'பிறகு உனது தந்தை" என்று கூறினார். (புகாரி: 5626, முஸ்லிம்: 2548)

ஒருமகளாக:

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'யாருக்கு மூன்று மகள்மார், அல்லது மூன்று சகோதரிகள், அல்லது இரண்டு மகள்மார், அல்லது இரண்டு சகோதரிகள் இருந்து அவர்களுடன் நல்லுறவைப் பேணி, அவர்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து நடந்து கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்." (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்: 2ஃ190)

ஒரு மனைவியாக:

நபி (ரழி) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'உங்களது குடும்பத்துடன் நல்லமுறையில் நடந்துகொள்பவரே உங்களில் சிறந்தவராவார். உங்கள் அனைவரையும் விட நான் எனது குடும்பத்துடன் நல்ல முறையில் நடந்து கொள்கிறேன்." (திர்மிதி: 3895, மேலும் ஹஸன் எனும் தரத்தில் இதை பதிவு செய்துள்ளார்)

அத்தோடு பெண்ணிற்கு இஸ்லாம் அனந்தரச் சொத்துரிமையையும் வழங்கியுள்ளது. ஏராளமான விடயங்களில் ஆணைப்போலவே பெண்ணிற்கும் உரிமைகளை வழங்கியுள்ளது. நபி () அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'பெண்கள் ஆண்களின் உடன்பிறப்புக்களாவர். (ஸ{னன் அபூதாவுத்: 236, இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் ஸுனன் அபூதாவுதில் - 216 இதை ஸஹீஹ் என்ற தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்)

இஸ்லாமிய குடும்ப அங்கத்தவர்களின் வகிபாகங்கள்.

மனைவியருடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுமாறு இஸ்லாம் உபதேசிக்கிறது. அத்துடன் கணவனை தேர்வு செய்யும் உரிமையை பெண்ணிற்கு வழங்கியுள்ளதுடன் குழந்தை வளர்ப்பில் பாரிய பொறுப்பையும் அவள் மீது சுமத்தியுள்ளது.

தமது பிள்ளைகளை வளர்ப்பதில் பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர்களாக தாயும் தந்தையும் காணப்படுகின்றனர். நபி () அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் () அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் அனைவரும் பொறுப்புதாரிகளே! அவரவரது பொறுப்புக்களைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சியாளர் பொறுப்புதாரியாவார், அவர் தனது குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் தனது குடும்ப விடயத்தில் பொறுப்புதாரியாவார், அவர் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தனது கணவரின் வீட்டுக்கு பொறுப்புதாரியாவாள், அவள் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவாள். வேலைக்காரன் தனது முதலாளியின் பொருளாதாரத்திற்கு பொறுப்பாளியாவான், அவர் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்." (புகாரி: 853, முஸ்லிம்: 1829)

தாய், தந்தையை மதித்து நடக்கவும், அவர்களை பராமரிக்கவும், மரணிக்கும் வரை அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவுமான அடிப்படையை விதைப்பதில் இஸ்லாம் கரிசனை காட்டுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: 'அவனையன்றி வேறு எவரையும் நீங்கள் வணங்கக்கூடாது என்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றும் உமது இரட்சகன் விதித்திருக்கிறான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடத்தில் வயோதிபத்தை அடைந்துவிட்டால் அவர்களுக்கு வெறுப்பு வார்த்தைகளை பேச வேண்டாம். அவர்களை விரட்டிவிடவும் வேண்டாம். அவர்களுக்கு சங்கையான வார்த்தைகளை கூறுவீராக!" (அல் இஸ்ரா: 23)

இஸ்லாம் குடும்பத்தின் மானம், ஒழுக்கம், தூய்மை, பரம்பரை ஆகியவற்றை பாதுகாக்கும் அடிப்படைகளை இட்டிருக்கிறது. திருமணத்தை ஊக்குவிக்கும் அதே வேளை| ஆண்-பெண் கலப்பை தடுக்கிறது. மேலும் குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளது. தாய்-தந்தையர் பிள்ளைகளை பராமரித்து இஸ்லாமிய வளர்ப்பில் வார்த்தெடுக்க வேண்டும். பிள்ளைகள்| பெற்றோருக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு, இரக்கம் காட்டுதல், மதித்தல் என்ற அடிப்படையில் பெற்றோரின் உரிமையைப் பேண வேண்டும். எதிரிகள் கூட கண்டுகொள்ளும் அமைப்பிலான குடும்ப ஒருங்கிணைப்பு இதற்கு மிகப்பெரும் சான்றாக உள்ளது.

அல்லாஹு அஃலம் - அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
இஸ்லாத்தில் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்த்து என்ன? - Islam Question & Answer